Sunday, May 30, 2010

வவுனியாவில் வீதியோரங்களில் உள்ள கடைகள் விரைவில் அகற்றப்படும்.

Sunday, May 30, 2010

வவுனியா நகரில் வீதி அபிவிருத்தி வேலைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காரணத்தினால் வீதியோரங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட திட்ட வரைவின் அடிப்படையிலேயே இந்தக் கட்டிடங்கள் அகற்றப்படவிருப்பதாக வவுனியா செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கட்டிடங்கள் அகற்றப்படுவது தொடர்பில் அவற்றின் உரிமையாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்கள் சிலவற்றில் அமைக்கப்பட்டிருந்த வீதியோர மற்றும் சட்டவிரோத கட்டடங்கள் வீதி அதிகாரசபை அதிகாரிகளால் அகற்றப்பட்டமை குறிபிடத்தக்கது.
Sunday, May 30, 2010

கிளிநொச்சி பிரதேசத்தின் கணேசபுரம் பகுதியில் மலக்குழி ஒன்றில் இருந்து மூட்டை மூட்டையாக பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன. கிளிநொச்சி கணேசபுரத்தில் ஐ.நா அலுவலகம் அமைந்திருந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு மலக்குழி ஒன்றில் ஏராளமான சடலங்கள் காணப்படுகின்றன.
குறிப்பிடப்பபட்டுள்ள இடத்தில் துப்புரவு தொழிலாளர்கள் குழியில் நிரப்பப்பட்டிருந்த மணலை வெளியிலெடுக்க முனைந்தபோது, குழியினுள் கறுப்பு பைகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மூட்டைகள் காணப்பட்டுள்ளன.
அவற்றினை பிரித்துப் பார்த்தபோது பெண்களின் சடலங்கள் இருந்தன. ஐந்து மூட்டைகள் வரை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், இன்னமும் அதிகமான சடலங்கள் அதே குழியினுள் இருக்கலாம் என அங்கு சென்ற மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் இருந்து அனைவரையும் வெளியேறுமாறு மிரட்டியிருக்கின்றனர். ஆனாலும் பெருமளவு மக்கள் திரண்டு அவற்றைப் பார்த்துச் சென்றவண்ணம் உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி மாவட்ட நீதிபதியிடம், யாரும் புகார் கொடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சடலங்கள் இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றப்படலாம் என்ற அச்ச நிலையும் எழுந்திருக்கின்றது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடங்கிய காலப் பகுதியில் இதே கணேசபுரம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Saturday, May 29, 2010

நிவாரணக் கிராமங்களை மூடப் பணிப்பு ,

Saturday, May 29, 2010
வடக்கில் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் மூடிவிட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இடம்பெயந்த சுமார் 3 லட்சம் மக்கள் வடபகுதியில் ஏற்கனவே மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த மக்களின் சொந்த இடங்களின் உட் கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னரே அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கின் வசந்தம்' அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படியில், மீள் குடியேற்ற நடவடிக்கைகள், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றன.
ஏறக் குறைய 4,500 பேர் தொடர்ந்தும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் கூறுகிறது.
இதே வேளை மீள் குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடலொன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உண்ணாவிரதம்! - அகதி அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தல் ?

Saturday, May 29, 2010
அரசியல் புகலிடம் கோரிய இலங்கையர் மலேசியாவின் தடுப்பு முகாமில் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து 61 பேர் உணவு உண்ண மறுத்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் அரசியல் அகதிகள் என்று ஏற்றுக் கொள்வதோடு சர்வதேச உரிமைகளுக்கான அமைப்புக்களைத் தொடர்பு கொள்ள வழிஏற்படும் வரை உண்ணாவிரதத் தைக் கைவிடப் போவதில்லை என்று தெரி வித்துள்ளனர் என மலேசிய மனித உரிமை நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த நளினி ஏழுமலை தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்கள் பின்னர் எவ்வாறு படகிலிருந்து இறங்கினார்கள்? அவர்களுக்கு ஏதாவது உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவரவில்லை. இந்தோனே ´யக் கடலில் கடந்த ஒரு சில நாள்களுக்கு முன் கைதான 26 இளைஞர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் வெளி யாகவில்லை.
இந்தோனே´யாவின் மத்தியயாவா மாகாணத்திலிருந்து தென்கிழக்கில் அமைந் துள்ள இந்து சமுத்திரத்தில் 26ற்கும் மேற் பட்ட இலங்கை அகதிகளை ஏற்றிய படகு என நம்பப்படும் படகொன்று தரித்து நின்ற தாக இந்தோனே´யத் தரப்புத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
இந்தோனே´ய மீனவர்கள் இந்த இலங் கை அகதிப் படகை இனம் கண்டனர். இந்தப் படகு இலங்கை அகதிகளை ஏற்றி வரும் படகாக இருக்கலாம் என இந்தோனே´ய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டனர்.அகதிகள், அதிகாரிகள் ஊடாக தமக்கு உதவுமாறு மீனவர்களிடம் கோரிக் கை விடுத்துள்ள தாக இந்தோனே ´யக் கடலோரக் காவல் படையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

மீள்கட்டுமானப் பணிகளைத் துரிதமாக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் பணிப்பு

Saturday, May 29, 2010

வடக்குக் கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ள இடங்கள் வழமையான நிலைக்குக் கொண்டுவரப்படுதல் வேண்டும். அதற்காக குறித்த பகுதிகளுக்கான மீள்கட்டுமானப் பணிகளை இலங்கை அரசாங்கம் துரிதமாக்க வேண்டும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி யின் தலைவர் ஹருகிகோ குருடா தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற் கொண்டு இலங்கை வந்த அவர் நேற்று மாலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறினார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங் களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இவ்வருடம் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Thursday, May 27, 2010

வெள்ளாமுள்ளிவாய்க்காலில் வெடி மருந்துகள் ,

Thursday, 27 May 2010
முல்லைத்தீவு வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில் துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எல்.ரி.ரி.ஈயினரால் அமைக்கப்பட்ட பதுங்கு குழி ஒன்றில் இவை புதைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
தமோபரக் ரகத்தைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கிகளும், சி 90 ரக துப்பாக்கியொன்றும், ஐந்து ஆர்.பி.ஜி ரக கைக்குண்டுகள், உள்ளிட்ட துப்பாக்கி ரவைகளும் இவற்றுள் அடங்குகின்றன.
எல்.ரி.ரி.ஈயினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு குண்டுகள் மற்றும் ரி 56 ரக துப்பாக்கி என்பனவும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.

புலிகளுக்கு சார்பான பிரசாரங்களில் ஈடுபட்டதாக கிழக்கில் இருவர் கைது .

Thursday, 27 May 2010
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு சார்பான பிரசாரங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய இரு பிரதேசங்களையும் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதாகும் போது அவர்களிடமிருந்த கையடக்க தொலைபேசிகளில் விடுதலைப் புலிகளுக்குச் சார்பான வீடியோ காட்சிகள் இருந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
வடக்கின் பாண்டிருப்பு மற்றும் எருவில் போன்ற பிரதேசங்களைச் சொந்த இடமாகக்கொண்ட இவ்விருவர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடுத்தே இந்த கைது இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.
கடந்த வருடம் விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான பிரசாரங்களில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இவ்விருவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று வெசாக் பண்டிகை தினமாகும்! நாடெங்கிலும் கோலாகலம்,

Thursday, 27 May 2010
பௌத்த.மக்கள்.அனைவரும்.இன்று.வெசாக்.பண்டிகையைக் கொண்டாடுகின்றனா;.
புத்தபெருமானின் பிறப்பு இறப்பு மற்றும் ஞானம் பெறல் ஆகிய மூன்று சம்பவங்களும் ஒரே நாளில் சம்பவித்துள்ளதை நினைவூ கூறும் முகமாக பௌத்த மக்கள் இவ்வாறு அநுஷ்டிக்கின்றனா;.
பௌத்த நாடான இலங்கை வாழ் பௌத்த மக்கள் அனைவரும் மிக விமா;சையாக இன்றைய தினத்தை கொண்டாடுகின்றா;.
நாடெங்கிலும் பௌத்த வரவாற்றை சித்தாpக்கும் ஓவியங்களுடனான வண்ண விளக்குளாலான அலங்காரப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறை கொழும்பில் எட்டு அலங்காரப் பந்தல்கள் காட்சிக்கு உள்ளன. மேலும் அலங்கார வெசாக் கூடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு நகாpலும்; மூன்று வெசாக் வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் அலங்கார கூடுகளுக்கான போட்டிகளை நடத்தவூம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடெங்கிலம் பரவலாக பக்தி கீதங்களை இசைக்கவூம் எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நாடு பூராவூம் நாளை மதல் அண்ணதானங்களை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன,

Wednesday, May 26, 2010

கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா

Wednesday, 26 May 2010
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா மிக கோலாகலமாக நேற்று இடம்பெற்றது. சுமார் முப்பதாயிரத்துக்க்கும் அதிகமான பக்தர்கள் ஆலயததை தரிசிக்க வருகை தந்தார்கள்.
கடந்த காலங்களில் வன்னியில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக ஆலயத்தில் பொங்கல் விழா இடம் பெறாமலேயே இருந்து வந்தது.இன்றைய யுத்தம் அற்ற சூழலில் ஆலய பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
வவனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் , வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து ஏனைய இடங்களில் வாழ்பவாகள்,யாழ்ப்பாணம் கிளிநோச்சி வவுனியா மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என நாட்டின் பல பாகங்களிலும் இருந்து மககள் வந்து பொங்கிப் படைத்தனர்.
காவடிகள் எடுத்தனர். நேர்த்திக்கடன்களை மிகவும் பயபக்தியுடன் நிறைவேற்றினர். ஆலய வாசலில் ஆயிரக்கணகான பானைகளில் மககள் அம்மனுக்கு பொங்கி படைத்தனர். அதே நேரம் ஆலய சுற்றாடலில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டு இருந்தார்கள் .

ஜூலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியாகும்.

Wednesday, 26 May 2010
எதிர்வரும் ஜூலை மாத நடுப்பகுதி அளவில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான தொண்டு நடவடிக்கைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணி பூர்த்தியானதன் பின்னர் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விவசாய நிலங்கள் மற்றும் காட்டுப்பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கட்டண மோசடி .

Wednesday, 26 May 2010
இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கான கட்டளைகள் இன்றியும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் முன் அனுமதி இன்றியும் பணம் வசூலிக்கும் நபர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களுக்குக் கிடைக்கும்தொழில் கட்டளைகள் தொடர்பாகப் பணியகத்துக்குத் தகவல் சமர்பிக்க வேண்டும்.
தூதுவராலய மட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்படுமென வெளிநாட்டு வேலைவாயப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
சில முகவர் நிலையங்கள் தூரப் பிரதேச இளைஞர் யுவதிகளிடம் தொழில் கட்டளைகள் இன்றிப் பெருந்தொகைப் பணத்தை வசூலிப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணியகத்துக்குக் கிடைக்கும் சகல முறைப்பாடுகள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படுமென கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எந்த அடிப்படையில் கட்டணம் அறவிடப்படுகின்றது என்பதை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள் தமது பணியகத்துக்கு அறிவிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் அண்மையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்திற்கு அமைய சட்டங்களை மீறி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய முடியுமெனப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் 26 புதிய தபாலகங்கள் தபால் மா அதிபர் தகவல்,

Wednesday, 26 May 2010
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் தபால் திணைக்களம் புதிதாக 26 தபால் நிலையங்களை வடக்கு கிழக்கில் நிர்மாணித்து வருகின்றது.
வடக்கு கிழக்கில் புதிதாக 26 தபால் நிலையங்கள் நிர்மாணிக்கப்படுவதாக தபால் மா அதிபர் எம். கே. பி. திசாநாயக்க கூறினார். இவை நவீன வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்படுவதாகவூம் இவற்றுக்கு தொலைபேசி மற்றும் கணணி; வசதிகள் என்பனவூம் வழங்கப்படவூள்ளன.
யூத்த சு+ழ்நிலை காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தபால் நிலையங்கள் சேதமடைந்தன. யூத்தம் முடிவடைந்த பின்னர் தற்காலிக இடங்களில் தபால் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிலையில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 26 தபால் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தபால் மா அதிபர் குறிப்பிட்டார்

வெசாக் பண்டிகை விஷேட ரயில் சேவை! மூன்று நாட்களுக்கு தொடரும்,

Wednesday, 26 May 2010
வெசாக் பண்டிகையை முன்னிட்டு பக்தா;களுக்கு அநுராதபுரம் செல்வதற்காக விஷேட ரயில் சேவைகளை நடத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று (26) நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களிலும் பிற்பகல் 1.25 க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து அநுராதபுரத்துக்கு விஷேட ரயில் சேவை ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக ரயில்வே ஊடகப் பேச்சாளா; விஜய சமரசிங்ஹ தொpவித்தார்
இவ்வாறு புறப்பட்டுச் செல்லும் ரயில் மாலை 6.02க்கு அநுராதபுரம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
அதேபோன்று குறிப்பிட்ட மூன்று தினங்களிலும் காலை 8.45 க்கு அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் பிற்பகல் 1.40 அளவில் கொழும்பு கொட்டையை வந்தடையூம் என அவா; மேலும் தொpவித்தார்

Tuesday, May 25, 2010

யாழ். ஆஸ்பத்திரிக்கு 200 கோடி ரூபா செலவில் நவீன நான்கு மாடிக் கட்டம்!

Tuesday, 25 May 2010
யாழ் ஆஸ்பத்திரி வளாகத்தில் 200 கோடி ரூபா செலவில் நான்கு மாடிகளைக்கொண்ட நவீன வைத்திய வசதிகள் கொண்ட கட்டடம் ஒன்றை அமைக்க ஜப்பான் சா;வதேச ஒத்துழைப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நவீன ஆய்வூகூடம்இ நவீன அறுவை சிகிச்சைப் பிரிவூஇ தீவிர சிகிச்சைப் பிரிவூ என்பன இந்த நான்கு மாடிக் கட்டத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
யாழ் ஆஸ்பத்திரியில் தற்போது 16இ 17இ 18இ 23இ மற்றும் 26 ஆம் வாh;டுகள் அமைந்துள்ள இடத்திலேயே இப்புதிய கட்டம் அமைக்கப்படவூள்ளது. இந்த வாh;டுகள் ஜூன் மாதத்துக்கு முன்னா; அழிக்கப்பட்டு அந்த இடத்தில் இரண்டு வருட காலத்துக்குள் புதிய மாடிக்கட்டடம் அமைக்கப்படவூள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை அமுல்படுத்த பொலிஸாருக்கு உத்தரவு

Tuesday, 25 May 2010
யாழ்.மாவட்டத்தில்,போக்குவரத்து,விதிமுறைகளை,முழுமையாக அமுல்படுத்துமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் அங்கு இடம்பெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
யாழ். மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் காமினி டி சில்வா, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பத்மதேவ ஆகியோருடனான சந்திப்பின் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Monday, May 24, 2010

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கோரிக்கை .

May 24, 2010
இலங்கையின் உள்விவகாரங்களில் ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனை தலையிட வேண்டாம் என இலங்கை, வேண்டுகோள் விடுத்துள்ளது.
இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றியும் ஐக்கிய நாடுகள் சபை சுதந்திரமான விசாரணைக்குழு ஒன்றை நியமித்து உண்மைநிலையை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புலிகளின் துஷ்பிரயோகம் தொடா;பான ஐ.நா.வின் அறிக்கை காலம் கடந்தது!

May 24, 2010
வன்னியில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யூத்தத்தின் போது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்களை சுட்டிக்காட்டியூள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது காலம் கடந்த நடவடிக்கை என்று அராசாங்கம் அறிவித்துள்ளது.
புலிகள் இயக்கமே இந்த போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்றும்இ படையினர் அவ்வாறான குற்றங்களை மேற்கொள்ளவில்லை என்றும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யூத்தத்தின்போது தப்பிச்செல்ல முயற்சித்த பெண்களின் தலைமுடியை விடுதலைப் புலிகள் கட்டையாக வெட்டியூள்ளனர். இதனால் தலைமுடி கட்டையாக வெட்டப்பட்ட பெண்களை புலி உறுப்பினர்கள் என கருதிய இராணுவத்தினர்இ முகாம்களில் அவர்களை வித்தியாசமான முறையில் நடத்தியூள்ளனர் என்றும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இருப்பினும்இ சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை படையினர் முறையாக நடத்தி அவர்களுக்கான மருத்துவ உதவிகளையூம் செய்தனர் என்று தெரிவித்த ஊடக அமைச்சர்இ சரணடைந்த புலிகளிடம் படையினர் தவறுதலாக நடந்துகொள்ளவில்லை என்றும் கூறினார்

கொழும்பு வீதி அபிவிருத்திப் பணிகளில் சிறைக் கைதிகள்

May 24, 2010
கொழும்பு வீதி அபிவிருத்திப் பணிகளில் சிறைக் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவினை முன்னிட்டு வீதி அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
60 வீதமான சிறைக் கைதிகள் நகர அபிவிருத்திப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் நிர்வாக அதிகாரி ஒமர் காமில் குறிப்பிட்டுள்ளார். நகர அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வரும் கைதிகளின் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது நிலவி வரும் மோசமான காலநிலையினால் வீதி அபிவிருத்திப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், திரைப்பட விழாவிற்கு முன்னதாக வீதி அபிவிருத்திப் பணிகள் பூர்த்தியாகும் என நகர நிர்வாகி ஒமர் காமில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Saturday, May 22, 2010

ததேகூ உறுப்பினர்களுக்கு செட்டிக்குளம் முகாம் செல்ல அனுமதி மறுப்பு

Saturday, May 22, 2010
வவுனியா செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கு இன்று தாம் மேற்கொள்ளவிருந்த விஜயத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சற்று முன் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவுகளுக்கு அமைவாகவே இதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கூட்டமைப்பின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மணி நேரம் நடுவீதியில் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் 12 உறுப்பினர்களும் செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கும், வவுனியா பிரதேச தடுப்பு முகாம்களுக்கு இன்று செல்லவிருந்தனர்.
செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, மன்னாரில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் இடங்களுக்கு தாம் தற்போது சென்றுகொண்டிருப்பதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய விமான விபத்தில் 160 பேர் பலி

Saturday, May 22, 2010
தென்னிந்தியாவின் மங்களூர் விமான நிலையத்தில் எயார் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
துபாயிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் கர்நாடக மாநிலத்தின் மங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை 6 மணியளவில் தரையிறங்க முயன்றபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதுடன் தீப்பற்றிக்கொண்டதாக விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ரொய்டர் செய்தி கூறுகிறது.
இந்த விமானத்தில் 163 பயணிகளும் 6 விமானப் பணியாளர்களும் இருந்ததாகவும் இவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாமெனவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 160 என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் வி எஸ் ஆச்சார்யா உறுதிப்படுத்தியுள்ளார்.

Friday, May 21, 2010

நிவாரணப் பணிகளில் கடற்படையினர்

Friday, 21 May 2010
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 300 படகு ஓட்டுநர்களைக் கடற்படையினர் அனுப்பிவைத்துள்ளனர்.
இவர்கள் 30 குழுக்களாக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கடற்படைப் பேச்சாளர் கப்டன் அத்துல செனரத் கூறினார்.
கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மாரவிலை ஆகிய பகுதிகளில் கடற்படைப் படகோட்டுனர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் கடற்படைக்குச் சொந்தமான 28 படகுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க நேற்று கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிவாரணப் பணிகளில் ஈடுபடும் கடற்படையினர் குறித்து ஆராய்ந்தார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் என்கிறார் அமைச்சர்

Friday, 21 May 2010
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ எச் எம் பௌசி தெரிவித்துள்ளார்.
வெள்ளம் வடிந்தோடியதன் பின்னர் இந்த நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்படுமென அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லையெனச் சிலர் வதந்திகளைப் பரப்புவதாகவும் இது உண்மையல்லவெனவும் அவர் சொன்னார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் முயற்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தினால் உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் பௌசி கூறினார்.
அத்துடன் நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 25 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதெனவும் மேலும் 55 மில்லியன் ரூபா நிதி அமைச்சிடம் உள்ளதாகவும் அமைச்சர் பௌசி தெரிவித்தார்.
முற்றாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
சேதமடைந்த வீடுகளைப் புனரமைக்கவும் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
நிலைமை வழமைக்குத் திரும்பியதன் பின்னர் பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அது குறித்து அமைச்சிடம் முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாமென அமைச்சர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மூன்று கட்டங்களாக 50 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மரினா மொஹமட் கூறினார்,
இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகப் பிரதேச செயலாளர்களும் கிராம உத்தியோகத்தர்களும் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

Thursday, May 20, 2010

புலி சந்தேக நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

Thursday, May 20, 2010
கொழும்பு நகரில் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் வெடி பொருட்களைக் கொண்டுவந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுக்களை சந்தேக நபர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் லிங்கம்பத்மநாதன் என்ற சந்தேக நபருக்கே இந்த கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2008 செப்டம்பர் மாதம் 27ம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினமொன்றில் ரி.என்.ரி மற்றும் சி 4 ரக வெடிமருந்துகளைக் கொண்டுசென்றார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டார்

பணிப்பாளர் தேர்வில் கலந்து

Thursday, May 20, 2010

செலிங்கே இன்ஷூரன்சின் அடுத்த பணிப்பாளருக்கான தெரிவு இடம்பெறும் போது தான் கலந்துக்கொள்ளப் போவதில்லை என லலித் கொத்தலாவல தெரிவித்துள்ளார். லலித் கொத்தலாவலவின் தற்போதைய பதவிக்காலம் மே மாதம் 28ம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது

Wednesday, May 19, 2010

சீரற்ற காலநிலை! சுமார் 4 லட்சம் பேர் பரிதவிப்பு!!

Wed, 19/05/2010
பாதிப்படைந்துள்ளன சீரற்ற கால நிலை காரணமாக 89,725 குடும்பங்களைச் சேர்ந்த 392,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கிறது.
சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இயற்கை அனர்த்தம் காரணமாக 1,555 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிகமாக வேறு இடங்களில் தங்கியுள்ளனர்.
மிக மோசமாகப் பாதிப்படைந்த கொழும்பு மாவட்டத்தில் 142,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகிறது.
கம்பஹா மாவட்டத்தில் 115,031 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 37,605 பேரும், காலி மாவட்டத்தில் 94,971 பேரும் சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்துள்ளதாக நிலையம் தெரிவிக்கிறது.
இம்மாவட்டங்கள் தவிர காலி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், புத்தளம், திருகோணமலை, மாத்தறை, மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களும்

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

Wed, 19/05/2010
மழை வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க, குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வு எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டபோதே இது தொடர்பான தீர்மானமெடுக்கப்பட்டதாக அமைச்சர் ஏ எச் எம் பௌஸி தெரிவித்தார்.
நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சொன்னார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 தினங்களுக்குச் சமைத்த உணவு வழங்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மரீனா மொஹமட் தெரிவித்தார்.
இதன் பின்னர் அவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்படுமென அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகக் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரால் ஆய்வுசெய்யப்படவுள்ளது.
ஆகக் கூடுதல் நிவாரணமாக 50 ஆயிரம் ரூபா வரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகள் இயக்கம் இன்னமும் மிரட்டல்: இந்தியா

Wed, 19/05/2010
புலிகள் இயக்கம், இந்தியாவுக்கு இன்னமும் மிரட்டலாக உள்ளதாகப் புதுடெல்லி தெரிவித்துள்ளது.
இலங்கையில் சென்ற ஆண்டில் புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டதற்கு இந்தியத் தலைவர்களே காரணம் என்று புலிகள் அமைப்பு குறைகூறி வருகிறது என்று இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பு தெரிவிக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவின் இறை யாண்மைக்கு இன்னமும் தொடர்ந்து ஒரு மிரட்டலாகவே இருந்து வருகிறது,” என்று அந்த அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.
புலிகள் அமைப்பை இலங்கை ராணுவம் ஒழித்துவிட்டது என்ற போதிலும் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் மீண்டும் ஒன்று திரள்கிறார்கள்.
தனித் தமிழ் ஈழத்தை அமைக்க அவர்கள் மறுபடியும் ஒன்று கூடுகிறார்கள்” என்றும் அந்த அரசு இதழ் தெரிவிக்கிறது.
இலங்கைப் போரில் உயிர் தப்பிய புலிகள் இயக்கத்தினர், தங்களைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் என்றே இந்திய அரசாங்கத்தைக் கருதுகிறார்கள்.
இந்திய அரசையும் இலங்கை அரசையும் விரோதிகளாக நினைக்கும் அவர்கள் பழிக்குப் பழி வாங்க விரும்புகிறார்கள்” என்றும் அந்த அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அத்தகைய போராளிகள், இந்தியாவைக் குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பயன்படுத்தி மறுபடியும் ஒன்று திரண்டு தாக்குதலைத் தொடங்கக்கூடிய சாத்தியத்தை மறுக்க முடியாது,” என்றும் அந்த அறிவிப்பு கூறியது.
புலிகள் அமைப்பின் தலைவர்களும் போராளி களும் ஆதரவாளர்களும் இந்தியாவின் இலங்கை கொள்கையை வெறுக் கிறார்கள் என்றும் இந்திய அரசிதழ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டதை அடுத்து, அதற்கு அடுத்த ஆண்டான 1992ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இந்தியா தடை செய்தது.
அந்தத் தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவையாக இதுவரை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன் புலிகளுக்கு எதிரான தடையை நீட்டித்து இந்திய அரசு அறிக்கை வெளி யிட்டது. அதையொட்டி இப்போதைய அரசு இதழ் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையே இலங்கையில் அவசரகால பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவர் என இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Tuesday, May 18, 2010

பயணிகளுக்கு வேண்டுகோள்

May 18, 2010
கொழும்பு பிரதேசத்திற்கும் கட்டுநாயக்க விமான நிலைய பாதைக்குமிடையில் ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கின் காரணமாக பயணிகள் விமான நிலையத்தை வந்தடைய தாமதமடைவதாகவும், அவர்களை பயண நேரத்தின் நான்கு மணித்தியாலயங்கள் முன்பு விமான நிலையத்தை வந்தடையுமாறும் ஸ்ரீ லங்கா எயர் லைன்ஸ கேட்டுக் கொண்டுள்ளது.

கீழ் குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு விமான சேவைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீ லங்கா எயர் லைன்ஸ பொது இலக்கம் : 019733 5555



விமான சேவை விபரம் : 019733 2377

பாராளுமன்ற கூட்டத்திலும் காலநிலை செல்வாக்கு

Tuesday, May 18, 2010
இன்று பாரளுமன்ற கூட்டத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டதற்கிணங்க இன்று மாலை 1.55 மணியளவில் பாராளுமன்ற கூட்டம் நிறுத்தப்பட்டு. நாளை காலை மீண்டும் கூடயிருப்பதாக உதவி பாரளுபமன்ற சபாநாயகர் பிரியங்கரா அறிவித்துள்ளார்.

Sunday, May 16, 2010

பிரான்ஸ் உதவியூடன் இலங்கையில் சேலைன் உற்பத்தி!

Sunday, 16 May 2010
இலங்கையில் சேலைன் உற்பத்தி செய்யூம் நடவடிக்கைகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட்டு விடுமென்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சேலைன் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை ஆரம்பிப்பதற்கான சகல அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு விட்டதாகவூம் அடுத்த ஆறு மாத காலத்தினுள் பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிடுமென்றும் அமைச்சர் சிறிசேன தெரிவித்தார்.
சேலைன் உற்பத்திக்கென பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து 6.4 மில்லியன் யூ+ரோ கடனாகக் கிடைக்கப்பெற்றுள்ளது. தேவையான இயந்திர உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்க பிரான்ஸ் அரசாங்கம் முன்வந்துள்ளது.
இதன்படி ஒரு வருடத்திற்குத் தேவையான 7.2 மில்லியன் சேலைன் போத்தல்களை உற்பத்தி செய்வதே சுகாதார அமைச்சின் இலக்காகும். இதுவரை சேலைன் போத்தல்களை இறக்குமதி செய்யவென வருடாந்தம் 260 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டு வருகிறது.
இதேவேளை அரசாங்க வைத்தியசாலைகளில் சேலைன் பற்றாக்குறையை நிவர்த்திக்கவென விமானப்படை விமானம் மூலம் 37 ஆயிரம் கிலோ சேலைன் இந்தியாவிலிருந்து தருவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காவல்துறை மா அதிபரின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

Sunday, 16 May 2010
காவல்துறை மா அதிபரின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறை மா அதிபரின் பதவிக் காலம் ஒரு வருடத்தினால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 3ம் திகதி ஆறு மாத கால அடிப்படையில் மஹிந்த பாலசூரிய காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
சேவை நீடிப்பு வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து நடமாடும் காவல்துறை சேவையொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

Sunday, 16 May 2010
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிறைன் எட்கின் தலைமையிலான குழுவினருக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி மற்றும் அரசாங்க அதிபர் கே.கணேஷ் ஆகியோருடன் சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன.
அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போத அரசாங்க அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதி அதிகாரிகளின் விஜயம் வழமையானதென மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்த போதிலும், இலங்கை;கு மூன்றாம் கட்ட கடனை வழங்குவது தொடர்பிலான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் நடைபெறுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Saturday, May 15, 2010

உலகில் பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் நாமே : இராணுவத் தளபதி

Saturday, May 15, 2010
உலகில் எந்தவொரு நாடும் பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததில்லை. நாம் அதனைச் செய்திருக்கிறோம். பயங்கரவாதத்தை தோற்கடித்தமை தொடர்பில் எமது அனுபவங்களை வேறு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளவும் நாம் தயாராக இருக்கிறோம் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் உடல் அவயங்களை இழந்த இராணுவ வீரர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்து இராணுவத்தினரின் பங்களிப்பினாலும் நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது. தாய்நாட்டுக்காகத் தமது உடற்பாகங்களை இழந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துமுகமாக இத்திட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம்" என அவர் மேலும் கூறினார்.
பிரேவ் ஹார்ட்' செயற்திட்டத்தின் மூலம் அநுராதபுரத்திலுள்ள அங்கவீனமுற்ற 200 இராணுவ வீரர்களுக்கு இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்

நுவரெலியா தோட்டத்தில் ரோனடோ சு+றாவளி!

Saturday, May 15, 2010
நுவரெலியா நெஸ்லி தோட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட ரோனடோ சு+றாவளியினால் ஆறு வீடுகள் சேதமடைந்ததோடு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 36 வயதுடைய உதயகுமார் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இலேசான மழை பெய்து கொண்டிருந்தது. நண்பகல் இரண்டு மணியளவில் திடீரென ரொனடோ சுழல்காற்று ஏற்பட்டது. இதில் வீடுகள் தூக்கி வீசப்பட்டதோடு மின்கம்பங்களும் பாதிக்கப்பட்டன.
இந்த வேளையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த உதயகுமார் மீது வீட்டுச் சிதைவூகள் மோதி வெட்டியதிலேயே உயிரிழந்தாரென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
நுவரெலியா மாவட்ட எம்.பி. வே. இராதாகிருஷ்ணன் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமைகளை ஆராய்ந்ததோடு பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவூ வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்,

Friday, May 14, 2010

ஜீ-15 மாநாட்டின்; தலைமைப் பதவி இலங்கைக்கு

Friday, 14 May 2010

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறும். ஜீ- 15 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இரான் பயணமாகவூள்ளாh;.
ஜனாதிபதியின் தலைமையில் விஷேட குழு ஒன்றும் பங்குபற்ற உள்ளது.
இன்று முதல் 17 ஆம் திகதி வரை ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைக்குழு இன்று தெஹ்ரான் பயணமாகவூள்ளது.
ஜீ- 15 நாடுகளின் தலைமைப் பதவி இம்முறை இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. தற்பொழுது ஜீ-15 நாடுகளின் தலைமைப் பதவியை ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் வகிப்பதோடு மேற்படி தலைமை பதவி நாளைஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்க ப்படவூள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
ஜனாதிபதியூடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அடங்கலான உயர்மட்டக் குழு தெஹ்ரான் செல்ல உள்ளது. இலங்கை ஜனாதிபதி ஈரான் உட்பட பல நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாகவூம் அவர் கூறினார்

தேசிய நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது

Friday, 14 May 2010

படித்த படிப்பினைகளைக் கொண்டு பிரச்சினைகளின் அடிப்படையைக் கண்டறிவதற்காக ஏழுபேர் கொண்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் குழுவில் அங்கம் வகிப்போரின் பெயர்கள் அடங்கிய மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.
பிரச்சினையின் அடிப்படையைக் கண்டறிந்து தீர்வு காணும் பொருட்டே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய தீர்வினை எட்டாவிடில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே மீண்டும் பிரச்சினையைத் தோற்றுவித்து விடும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2011 ஆம் ஆண்டிற்காகக் குறைநிறப்பு ஒதுக்கீட்டுப் பிரேரணை ஜுலை மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் எனவும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பொலிஸ் சேவைக்கு வடக்கிலிருந்து 500 பேர்!

Friday, 14 May 2010

வடக்கின் யாழ். மாவட்டத்திலிருந்து பொலிஸ் சேவைக்கு 500 சேர்த்துக்கொள்ளப்படடுள்ளதுடன் அவா;களுக்கு களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி வழங்கவூம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.
ஆதன்படி பயிற்சிக்காக 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா;. அடுத்த கட்டப் பயிற்சிக்கு எஞ்சியவா;கள் அனுப்பி வைக்கப்படவூள்ளனா;.
பயிற்சிகளின் பின்னா; இவர்கள் வடமாகாண பொலிஸ் நிலையங்களில் கடமையில் அமர்த்தப்படவூளளனா;.
வடபகுதியிலிருந்து சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் முதல் முறையாக பொலிஸ் சேவைக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்திலிருந்து தகுதிவாய்ந்த இளைஞர்களை பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கடந்தாண்டு கோரப்பட்டிருந்தன.
இதன்படி சுமார் 6000 விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்திருந்தன. குறிப்பிடப்பட்ட வயதெல்லையையூம் விஞ்சிய வயதையூடையவர்களும்இ விவாகமானவர்களும் விண்ணப்பித்திருந்தனர். 6000 விண்ணப்பங்களுள் தகுதிவாய்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட 1500 பேர் மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
2009ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 26ஆம் திகதி நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் பயனாக 500 பேர் மட்டுமே பொலிஸ் சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனரென பொலிஸ் தலைமையக ஆட்சேர்ப்பு பிரிவூ பொறுப்பதிகாரி ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்

Thursday, May 13, 2010

ஆலோசனைக் குழுவை ஐ.நா. சபை நியமிக்காது - இலங்கை அரசு நம்பிக்கை

Thursday, May 13, 2010
ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழு வை ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் ஒரு போதும் நியமிக்க மாட்டார் என ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித ஹோகன்ன தெரிவித்துள்ளார். ஐ.நா. சபை போர்க் குற்றங்களுக்கான சாத்தியப்பாடு தொடர்பாக தனக்கு ஆலோ சனை வழங்குவதற்கு நிபுணர்கள் குழு ஒன் றை அமைக்கப் போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்திருந்து இரு மாதங்களின் பின்னரும் இதுவரை நிபுணர் குழு அமைக்கப்படவில்லை.
இப்போது இலங்கை அரசாங்கம் தனது சொந்த பொறிமுறை தொடர்பாக அறிவித் திருக்கின்றது என்று நியூயோர்க்கில் ஐ.நாவைத் தளமாகக் கொண்ட இன்னர் சிற்றிப் பிறஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இன்னர் சிற்றிப் பிறஸ் தெரிவித்திருப்பதாவது,
பொறிமுறை தொடர்பாக பிரசுரிக்குமாறு கொழும்புக்குத் தான் ஆலோசனை தெரிவித் ததாக ஐ.நாவுக்கான இலங்கையின் தூதுவர் பாலித ஹோகன்ன இன்னர் சிற்றிப் பிறஸ் ஸுக்குக் கூறியுள்ளார். உண்மையில் குழுவொன்றைப் பான் கீ மூன் ஒருபோதும் நியமிக்க மாட்டார் என்று அவர் எதிர்வு கூறியுள்ளார். மே 7 இல் குழு தொடர்பாகப் பான் கீ மூனின் பேச்சாளரிடம் இன்னர் சிற்றிப் பிறஸ் கேட்டது.
அத்துடன் பான் கீ மூனின் உயர் மட்ட மனிதாபிமான அதிகாரி ஜோன் ஹோம்சிடம் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பா டுகள் தொடர்பாகக் கேட்கப்பட்டது. ஐ.நாவின் மனிதாபிமான செயற்பாட்டு பொதுத் திட்டத் தை நிராகரித்த விடயமும் இதில் உள்ளடக்கப் பட்டிருந்தது. வவுனியாவில் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதற்குத் தடையாக இது உள்ளது. அரசாங்கத்துடனான உறவுகள் மிகக் கடினமாக இருப்பதாக கவன மான முறையில் பல தடவைகள் ஹோம்ஸ் பதிலளித்திருந்தார்.
அதனைச் சிறப்பானதாக இப்போதும் முயற்சிப்பதாகத் தோன்றுகின்றது. செஞ்சிலு வைச் சங்கத்தை நாட்டின் பல பகுதிகளிலி ருந்தும் அரசாங்கம் வெளியேற்றி விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் திரும்பிச் செல்ல முடியும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். புனர் வாழ்வு முகாம்களில் 11 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் பேர் வரை இருப்பதாகக் ஹோம்ஸ் கணிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 80 ஆயிரம் பேர் இருப்பதாகவும் 2 இலட்சத்து 20 ஆயிரம் பேர் திரும்பிச் சென்று விட்டதா கவும் அவர் கூறியுள்ளார். அவர்களில் சிலர் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்பது பற்றி அவர் குறிப்பிட்டிருக்கவில்லை.

விசா மோசடிக்காரர்கள் 14 பேர் கைது

Thursday, May 13, 2010
சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகைதந்து தொழில்களில் ஈடுபட்ட 14 இந்திய பிரஜைகள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 11 பேர் வத்தளைப் பிரதேசத்தில் இரும்பு உருக்கும் நிலையமொன்றில் தொழில்புரிந்து கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டதாகத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் விலியம் தேவேந்திரராஜா தெரிவித்தார்.
ஏனைய மூவரும் செட்டியார் தெருவில் நகைக் கடையொன்றில் தொழில்புரிந்து கொண்டிருக்கும்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்
இந்தியப் பிரஜைகளின் விசா காலாவாதியாகியுள்ளதாகக் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டார்.
அவர்களை மிரிஹானவில் உள்ள திணைக்களத்தின் தடுப்பு முகாமுக்கு அனுப்பி இந்தியாவுக்கு திருப்பியனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு குடிவரவு குடியகல்வுச் சட்டங்களை மீறித் தொழில்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் மீண்டும் இலங்கைக்கு வரமுடியாதவாறு தடைசெய்யப்பட்டோர் பட்டியலில் அவர்களது பெயர்களைச் சேர்த்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டது.

Wednesday, May 12, 2010

மேலதிக பாதுகாப்புடன் சரத் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் : நீதிமன்றம் உத்தரவு

Wednesday, May 12, 2010
அவசரகால சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜெனரல் பொன்சேக்காவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.
யுத்தம் வெற்றிக்காக உழைத்த இராணுவ வீரர்களில் சரத் பொன்சேகாவும் ஒருவர் என்பதால் இவ்விசாரனணயை துரிதப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிபதி சம்பா ஜானகி ராஜரட்ன, தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கெதிரான இறுதிக் கட்டப் போரின் போது வெள்ளைக்கொடிகளை ஏந்தி இராணுவத்தினரிடம் சரணடையவந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய சுட்டுக்கொன்றதாக சண்டேலீடர் ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் ஜெனரல் பொன்சேக்கா தெரிவித்திருந்தார்.
இந்தத் தகவல் தொடர்பான முறைப்பாட்டில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள அவர் இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Tuesday, May 11, 2010

நாட்டின் அபிவிருத்திக்கு அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியம்

TUESDAY, MAY 11, 2010
யுத்தமற்ற அமைதிச் சூழலை வாய்ப்பாக்கிக் கொண்டு நாட்டை பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமென பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
ஆசியாவின் முன்னோடி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பை நிதியமைச்சின் மூலம் வழங்குவதாக தெரிவித்த அவர் நாட்டின் பொருளாதார கேந்திரமாகவுள்ள நிதியமைச்சின் செயற்பாடுகளை பாமர மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக் கைகளை மேற்கொள்ளப் போவ தாகவும் தெரிவித்தார்.
புதிய பிரதிநிதியமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம நேற்று நிதியமைச்சில் தமது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாகக் கையேற்றார்.
நேற்றுக்காலை சுபவேளையில் மத அனுஷ் டானங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய பிரதியமைச்சர் மேலும் தெரி வித்ததாவது,
நாட்டில் நிலவிய யுத்த சூழல் கார ணமாக சர்வதேச நாடுகள் எமக்கு உதவு வதற்கு முன்வராத காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
யுத்தம் நிலவிய காலத்தில் அரச அதிகாரிகளின் மனநிலையும் சரியானதாக இருக்கவில்லை. தற்போது சிறந்த சூழல் உருவாகியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கான வழி வகுத்துள்ளார்.
இன்றைய சூழல் நாட்டைப் பொரு ளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டி யெழுப்ப மிகவும் உகந்ததாகவுள்ளது. அரச அதிகாரிகள் தம் அர்ப்பணிப்புடனான சேவையினால் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர நாட்டின் பொருளாதார ஏற்றத்தை நிர்ணயிக்கும் நிதியமைச்சில் சரத் அமுனுகம போன்ற நிர்வாகத்திறன் மிக்க அமைச்சர்கள் பங்கேற்பது மிகச் சிறந்ததொன்றாகும்.
நாடு சுனாமி பேரழிவினால் சிக்கித்தவித்த வேளையில், அப்போதும் பிரதி நிதி யமைச்சராகவிருந்து தேசிய சர்வதேச ரீதியில் உதவிகளைப் பெற்றுக்கொள்ள தமது திறமையைப் பயன்படுத்தியவர் அமைச்சர் சரத் அமுனுகம.
நிர்வாகத்திறன் கொண்ட அமைச்சர்களில் இவர் முக்கியம் பெறுபவர் எனவும் தெரிவித்தார்.

செனற்சபை, தேர்தல் முறை மாற்றம் 17வது திருத்தத்துக்குத் திருத்தம்

TUESDAY, MAY 11, 2010
அரசியல் யாப்பில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான திருத்த மசோதா இரு வாரங்களுக்குள் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும். ஒரு மாதத்தினுள் அரசியல் யாப்பு திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் மேலும் கூறியதாவது,
பொருளாதாரத்தை பலப்படுத்தவும் மஹிந்த சிந்தனை தொலைநோக்கின் பிரகாரம் ஆசியாவின் முன்னோடியாக இலங்கையை அபிவிருத்தி செய்யவும் ஏற்றவாறு அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அமைச்சர் ஜீ. எல். பீரிஸின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறையில் மாற்றம், 17 ஆவது திருத்த சட்டத்தில் திருத்தம், செனட் சபை அடங்கலான பல திருத்தங்கள் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள் ளன. அரசியலமைப்பு திருத்த மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. திருத்த மசோதா இரு வாரங்களில் அமைச்சரவை யின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும். ஜூன் மாதத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.
பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இந்த திருத்த மசோதா சமர்ப்பிக்கப்படும்போது சட்ட திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சி களுக்கு தமது யோசனைகளை முன்வைக்க முடியும். தற்பொழுதுள்ள தேர்தல் முறை யினால் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் தெரிவாவதில்லை. விருப்பு வாக்கு முறையினாலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிரா மத்திற்கு ஒரு உறுப்பினர் தெரிவாகும் வகையில் மாற்றப்படும். 17ஆவது திருத் தச் சட்டத்தை பலப்படுத்தவும் அதனூடாக சுயாதீன ஆணைக் குழுக்களை திறம்பட இயங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
செனட் சபைக்கு 9 மாகாணங்களில் இருந்தும் ஒரு பிரதிநிதி தெரிவாக உள் ளார். குறைந்த பட்சம் 25 உறுப்பினர்கள் செனட் சபையில் அங்கம் வகிப்பர்.
இன ரீதியான பிரச்சினைகள், அர சியலமைப்பு அடிப்படையிலான பிரச் சினைகள் தொடர் பில் மாகாண சபைக் கும் மத்திய அரசாங்கத்திற்குமிடையில் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் செனட் சபை செயற்படும் என்றார்.
அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் கூறிய தாவது, ஏதும் இனத்தை பாதிக்கும் விடய த்தை அடிப்படையாகக் கொண்ட சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும் செனட் சபையில் அது குறித்து ஆராயப்பட்டு அதில் திருத்தம் செய்ய முடியும்.

Sunday, May 9, 2010

பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய அரசாங்கத்துடன் இருத்தரப்பு உறவுகள் குறித்து விரைவில் பேச்சு ‐ இலங்கை

Sunday,May09, 2010

இலங்கை தொடர்பில் நட்பார்ந்த ரீதியில் செயற்படும் பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய அரசாங்கத்துடன் இருத்தரப்பு உறவுகள் குறித்து விரைவில் பேச்சு நடத்த எண்ணியுள்ளதாக பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவர் நிஹால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாதிற்கு எதிரான கொள்கைகளை கொண்டுள்ள கன்சர்வேட்டிவ் கட்சியுடன் தூதரகம் ஏற்கனவே தொடர்புகளை உறுதிப்படுத்தி கொண்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சு நடத்த விரிவான அதிகாரங்களை கொண்டு தூதுக் குழுவொன்றை அனுப்பி வைக்குமாறு தான் ஜனாதிபதியிடமும் வெளிவிவகார அமைச்சரிடமும் கேட்டுக் கொள்ள உள்ளதாகவும் ஜயசிங்க கூறியுள்ளார்.

புலிகளின் சர்வதேச பிரச்சாரங்களை முறியடிப்பதே வெளிவிவகார அமைச்சின் முதன்மை கடமையாகும் ‐ ஜீ.எல.பீரிஸ்

Sunday,May09, 2010
புலிகளின்சர்வதேச பிரச்சாரங்களை முறியடிப்பதே தமது அமைச்சின் முதன்மைக் கடயைமாக அமைந்துள்ளதென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களை விடவும் புலிகளின் சர்வதேச பிரச்சார வலயமைப்பு வலுப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், இலங்கைக்கு எதிரான புலிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர், நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றும் ராஜதந்திரிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு, புலிகளின் வலையமைப்பை முறியடிப்பது குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.
புலி ஆதரவாளர்களின் வெளிநாட்டு செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இனங்களுக்கு இடையில் காணப்படும் தவறான புரிந்துணர்களை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றியின் பின்னர் சகல இன மக்களினதும் இதயங்களை வென்றெடுக்கக் கூடிய பல்வேறு நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Saturday, May 8, 2010

விசாவின்றி 28 பேர் பிடிபட்டனர்

SATURDAY, MAY 08, 2010
நாட்டில் தங்கியிருப்பதற்கு உரிய விசாக்கள் இன்றி நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு டாம் வீதி, வாழைத் தோட்டம் ஆகிய பகுதிகளிலுள்ள விடுதிகளிலிருந்து கைதுசெய்யப்பட்ட இவர்கள் விசாவின்றி நாட்டில் நீண்டகாலம் தங்கியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களுள் இந்தியர்களும் நேபாளியர்களும் அடங்குகின்றபர் எனப் பொலிசார் தெரிவித்தனர்.

வன்னி உள்ளூராட்சி ஊழியருக்கு நடமாடும் சேவை

SATURDAY, MAY 08, 2010
முல்லைத் தீவிலும் கிளிநொச்சியிலும் இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்ட உள்ளூராட்சி அலுவலகர்கள் மற்றும் ஊழியர்களின் நன்மை கருதி விசேட நடமாடும் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இம்மாதம் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவையை வடமாகாண உள்ளூராட்சி அமைச்சும் உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
மே 13 ஆம் திகதி முல்லைத்தீவிலும், 14 ஆம் திகதி கிளிநொச்சியிலும் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

Friday, May 7, 2010

சா;வதேச தரத்தில் ஊடகவியலாளா;களுக்கான பயிற்சி நிலையம்!

May 7, 2010
இலங்கை ஊடகவியலாளா;களுக்கு நவீன பயிற்சிகள் வழங்குவதற்கு சா;வதேச மட்டத்திலான நிலையமொன்றை இன்னும் ஆறு மாத கலத்துக்குள் இலங்கையில் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு யூனெஸ்கோ தூதுக் குழுவிடம் ஊடகத்துறை மற்றும் பெருந்தெருக்கள் பிரதியமைச்சா; மோ;வின் சில்வா கோரிக்கை விடுத்தாh;.
நேற்று யூனெஸ்கோ பிரதிநதிகள் குழுவை அமைச்சா; சந்தித்துப் பேச்சுவாh;த்தை இச்சந்திப்பின்போதே பிரதியமைச்சா; இக்கோரிக்கையை முன்வைத்தாh;. நடத்தினாh;.
அரச மற்றும் தனியாh; வேறுபாடுகளின்றி சகல ஊடகவியலாளா;களுக்கும் இங்கு பயிறிசியளிக்கப்படவேண்டும் என பிரதியமைச்சா கோரியதுடன் அதற்கான கட்டடத்தை தாம் பெற்றுத் தருவதாகவூம் வாக்குறுதியளி;த்தாh;.
இதனைத்தொடா;ந்து பயிற்சியாளா;களையூம் தொழில்நுட்ப உதவிகளையூம் யூனெஸ்கோ வழங்கும் எனவூம் இச்சந்திப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது

புலம்பெயர் புலிவிசுவாச தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை – வரதராஜ பெருமாள்

May 7, 2010
புலம்பெயர் புலிவிசுவாச தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய
அவசியமில்லை என முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்கள் அநாவசியமானவை எனவும், அவர்கள் ஒருபோதும் நாடு திரும்பப் போவதில்லை எனவும் வரதராஜா பெருமாள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சமாதான முனைப்புக்களில் புலம்பெயர் தமிழர்கள் பங்களிக்கப் போவதில்லை என இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரதேசங்களை ஸ்திரமற்றத் தன்மையும், யுத்தமும் நிலவ வேண்டும் என்றே புலம்பெயர் சமூகம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வாழ் தமிழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டள்ளார்

Followers

Blog Archive