Monday, November 15, 2010

சுதந்திரம்”கண்காட்சி குறித்து அமைச்சா; கெஹலிய!

Monday, November 15, 2010
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப் பிரமாணம் மற்றம் பிறந்த தினத்தையொட்டி கொழும்பில் நடத்தப்படும் கண்காட்சி அந்த சொல்லுக்கே புது அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்று ஊடக தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தொpவித்தார்.
இந்தக் கண்காட்சி கடந்தகாலம் நிகழ்காலம் மற்றம் எதிர்காலம் ஆகிய மூன்றையூம் உள்ளடக்கயதாகவே இருக்கம் என்றும் குறிப்பிட்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திரம் என்ற புதிய கலாசாரத்தின் அடிப்படையிலான கண்காட்சி தொடர்பாக தகவல் திணைக்களத்தில் இன்று காலை ஊடகவியலாளா;களுக்கு விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தக் கண்காட்சி எல்லை கடந்த ஒரு கண்காட்சியாக இருக்கும் என்றும் இதனூடாக நாட்டு மக்களுக்கு பல தரப்பட்ட விடயங்கள் குறித்து அறியக் கிடைப்பதுடன் புது அனுபவங்களையூம் ஏற்படத்தும் என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் சுதந்திரம் என்ற பெயரில் புதிய கலாசாரத்தின் அடிப்படையிலான கண்காட்சியொன்றை சுதந்திர சதுக்கத்தில் நடத்தவூள்ளது.

நாளை மறுதினமான 17 முதல் 20 ஆம் திகதி வரை நடை பெறவூள்ள இந்தக் கண்காட்சி பி. ப. 2 மணி முதல் இரவூ 10 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.

இக்கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்திற்கு மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்வின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

அடுத்து வரும் நாட்களில் பிரதமா; டி.எம்.ஜயரத்ன அமைச்சா;களான மைத்திhpபால சிறிசேன பஸில் ராஜபக்ஷ ஆகியோர்; பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

சிறந்ததொரு கலாசாரத்திற்கான முன்மாதிரி என்ற தொனிப் பொருளில் நடை பெறும் ‘சுதந்திரம்’ கண்காட்சியில் புதுவகையிலான களியாட்டங்களைக் கண்டுகளிக்கவூம் அனுபவிக்கவூம் மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படவூள்ளது.

பொருட்களை மீள பெற உதவும்படி கோரிக்கை!

Monday, November 15, 2010
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களினால் கைவிடப்பட்ட பொருட்களை சென்று பார்வையிடுவதற்கும் அவற்றை மீள எடுத்துவருவதற்கும், இராணுவம் அனுமதி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வன்னி இராணுவ கட்டளை தலத்தில் மேஜர் ஜெனரல் ராஜகுருவை நேரயொக உரையாடிய போது, அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியேரும் நிலையில் அவர்களது பொருட்களை மீள பெறுவதன் அவசியம் குறித்து தனது கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தமது வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கைவிட்ட நிலையில் வெளியேறியிருந்தனர்.

இந்த நிலையில் மீளகுடியேறியவர்கள் தமது வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இது மிகவும் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இராணுவ கட்டளை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

தேசிய அடையாள அட்டைகளை வீட்டு முகவரிக்கே அனுப்ப நடவடிக்கை!

Monday, November 15, 2010
ஜனவரி முதலாம் திகதி முதல் வீட்டு முகவரிக்கே தேசிய அடையாள அட்டைகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர தெரிவித்துள்ளார்.

இதுவரைகாலமும் பிரதேச செயலகத்துக்கு அனுப்பி வைக் கப்பட்டு, அங்கிருந்து கிராம உத்தியோகத்தர் ஊடாகவே தேசிய அடையாள அட்டை உரியவருக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இதில் ஏற்படும் தாம தத்தை தவிர்க்கும் வகையிலேயே இந்த புதிய முறை மேற்கொள் ளப்படவுள்ளது.

எதிர்காலத்தில் தேசிய அடை யாள அட்டை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்போர் விண்ணப் பத்துடன் முகவரியிட்டு முத்திரை ஒட்டிய தபாலுறையை இணைத்து அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

க. பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை இம்மாத முடிவுக்குள் பெற்றுக் கொடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ரூ. 50 கோடியில் அபிவிருத்தி:

Monday, November 15, 2010
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐம்பது கோடி ரூபா செலவில் உள்ளூராட்சி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக் கப்பட்டு வருவதாக வட மாகாண ஆளு நர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யுத்தத்தின் போது கடுமையாக பாதிக்கப் பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வெகு விரைவில் முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் பொருட்டும், மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகளை புனரமைக்கும் திட்டத் திற்கு 393 மில்லியன் ரூபாவும், பிரதேச சபைகளை நிர்மாணிப்பதற்கான ஒன்பது கட்டுமான பணிகளுக்கு 71 மில்லியன் ரூபாவும், ஏனைய நிர்மாண பணிகளுக்கு 36 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்துள் ளதாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.உதயராஜா தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம், வட மாகாணத்துக்கான அவசர புனரமைப்பு திட்டம் (ரினிஞிரிஜி) ஆகியவற்றின் ஊடாக வட மாகாண சபை இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன் னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் முல் லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகள் முழுமையாக புனரமைக்கப்பட வுள்ளதுடன் புதுக்குடியிருப்பு, துணுக்காய், கரைத்துறைப்பற்றும் மற்றும் பாண்டியன் குளம் ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான அலுவலகங்களும், செம்மாலை கொக்கிளாய் பிரதேசத்திற்கான உப பிரதேச சபை அலுவலகங்களும் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.

துணுக்காய் பிரதேச சபைக்கு 2 கோடி 80 இலட்சம் ரூபாவும், கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு ஒரு கோடி 80 இலட்சம் ரூபாவும், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு ஒரு கோடி 20இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

துணுக்காய்

11 மில்லியன் ரூபா செலவில் துணுக்காய் பிரதேச சபை அலுவலகமும், 16 மில்லியன் ரூபா செலவில் துணுக்காய் பஸ் தரிப்பு நிலையம் மற்றும் கடைத் தொகுதியும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

மாந்தை கிழக்கு

5.5 மில்லியன் ரூபா செலவில் பாண்டியன் குளம் பிரதேச சபை அலுவலகமும், 6.5 மில்லியன் ரூபா செலவில் பொன்னகர் கிராமிய சந்தையும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

கரைத்துறைப்பற்று (மரிடைன்பற்று)

14 மில்லியன் ரூபா செலவில் கரைத்துறைப்பற்று பிரதேச சபை அலுவலகமும், 2 மில்லியன் ரூபா செலவில் செம்மாலை பிரதேச சபை உப அலுவலகமும் 2 மில்லியன் ரூபா செலவில் கொக்கிளாய் பிரதேச சபை உப அலுவலகமும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

புதுக்குடியிருப்பு

ஆறு மில்லியன் ரூபா செலவில் ஒட்டுச் சுட்டானில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப அலுவலகமும், முத்தையன் கட்டு சந்தையும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.உதயராஜா மேலும் தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தின் உள்ளூராட்சி மேம்பாட்டுத்திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற் கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Followers

Blog Archive