Sunday, June 13, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் புலிகளால் அச்சுறுத்தலா,?

Sunday, June 13, 2010
அடுத்த வாரம் சென்னையில் ஆரம்பமாக இருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு புலிகளுக்கு ஆதரவான சக்திகளால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன என்று பீதி கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பொலிஸார் மாநாட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கோவையில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி இம்மாநாட்டுக்குத் தலைமை தாங்குவார். உலகின் பல நாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள் 7000 பேர்வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈழத் தமிழர்கள் கடந்த வருடம் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் பேரழிவுகளைச் சந்தித்து இன்றும் முட்கம்பி முகாம்களுக்குள் முடக்கி விடப்பட்டிருக்கும் நிலையில் இப்படியொரு மாநாடு இந்நேரத்தில் அவசியம் தானா? என்று ஏராளமான விமர்சனங்கள் பல தரப்பட்ட தமிழர் அமைப்புக்களில்தமிழ்புத்திஜீவிகளிடம்இருந்தும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இம்மாநாட்டில் ம.தி.மு.க பங்கேற்க மாட்டாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இம்மாநாட்டுக்கு புலிகளுக்கு ஆதரவான சக்திகளால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன என்று பீதி கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பொலிஸார் மாநாட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இது குறித்து கோவை நகரப் பொலிஸ் ஆணையாளர் சைலேந்திரா பாபு தெரிவித்தவைவருமாறு:
நாம் எல்லா விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.எமது உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் மிகுந்த கரிசனை எடுத்துச் செயற்பட்டு வருகிறார்கள்.மாநாட்டுக்குப் பூரண பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது”

சட்டவிரோத வேலை வாய்ப்பு நிலையம் மீது நடவடிக்கை,

Sunday, June 13, 2010

வெளிநாட்டு வேலை வாய்ப்புச் சட்டத்தை மீறும் வகையில் குருநாகலில் இயங்கிவந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த முகவர் நிலையம் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இலங்கை மாணவர்களை அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் தமக்குரிய நடவடிக்கைகளைத் தவிர ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அனுமதி இல்லை

தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது தமிழகம்,

Sunday, June 13, 2010

தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளர். விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த நான்கு ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து வருகிறது என்றும், அன்றாடம் கொலை, கொள்ளை ஆகியவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றும், தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றும் நான் பொதுக்கூட்டங்களிலும், எனது அறிக்கைகளின் வாயிலாகவும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன்.

இதற்கேற்றாற் போல், சனிக்கிழமை அதிகாலை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயில் தண்டவாளத்தை மர்ம நபர்கள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். மலைக்கோட்டை ரயில் இப்பகுதி வழியாக வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு தண்டவாளத்தில் குண்டு வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் பெரும் உயிரிழப்பு தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கும், தீவிரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வருகிறது என்பதற்கும் இதுவே எடுத்துக்காட்டு. கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கு பதிலாக சட்ட விரோதிகளின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமைதி கலாசாரம் என்று இருந்த நிலை மாறி, ஆயுதக் கலாசாரம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து நாட்டிலுள்ள ஸ்காட்லாந்து யார்டு போலீஸ�க்கு நிகராக விளங்கிய தமிழகக் காவல் துறை, மற்றவர்கள் பார்த்து கை கொட்டி சிரிக்கும் அளவுக்கு இன்று கேலித் துறையாக செயலிழந்து காணப்படுகிறது.

போலி மருந்து, காலாவதி மருந்து, போலி உணவுப் பொருட்கள், போலி மருத்துவர்கள், கடத்தல், பதுக்கல், தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவைதான் தி.மு.க. ஆட்சியின் நான்கு ஆண்டு கால சாதனைகள். சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கு பதிலாக, சட்ட விரோத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டுள்ளது. தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் தொடருமேயானால், சட்டம்-ஒழுங்கு என்பதே இல்லாமல் போய்விடும்.

எனவே, மத்திய அரசு தனது கடமையை உணர்ந்து, விரைந்து செயல்பட்டு, தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழ்நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளர்.

Followers

Blog Archive