Saturday, May 29, 2010

நிவாரணக் கிராமங்களை மூடப் பணிப்பு ,

Saturday, May 29, 2010
வடக்கில் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் மூடிவிட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இடம்பெயந்த சுமார் 3 லட்சம் மக்கள் வடபகுதியில் ஏற்கனவே மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த மக்களின் சொந்த இடங்களின் உட் கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னரே அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கின் வசந்தம்' அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படியில், மீள் குடியேற்ற நடவடிக்கைகள், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றன.
ஏறக் குறைய 4,500 பேர் தொடர்ந்தும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் கூறுகிறது.
இதே வேளை மீள் குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடலொன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உண்ணாவிரதம்! - அகதி அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தல் ?

Saturday, May 29, 2010
அரசியல் புகலிடம் கோரிய இலங்கையர் மலேசியாவின் தடுப்பு முகாமில் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து 61 பேர் உணவு உண்ண மறுத்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் அரசியல் அகதிகள் என்று ஏற்றுக் கொள்வதோடு சர்வதேச உரிமைகளுக்கான அமைப்புக்களைத் தொடர்பு கொள்ள வழிஏற்படும் வரை உண்ணாவிரதத் தைக் கைவிடப் போவதில்லை என்று தெரி வித்துள்ளனர் என மலேசிய மனித உரிமை நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த நளினி ஏழுமலை தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்கள் பின்னர் எவ்வாறு படகிலிருந்து இறங்கினார்கள்? அவர்களுக்கு ஏதாவது உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவரவில்லை. இந்தோனே ´யக் கடலில் கடந்த ஒரு சில நாள்களுக்கு முன் கைதான 26 இளைஞர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் வெளி யாகவில்லை.
இந்தோனே´யாவின் மத்தியயாவா மாகாணத்திலிருந்து தென்கிழக்கில் அமைந் துள்ள இந்து சமுத்திரத்தில் 26ற்கும் மேற் பட்ட இலங்கை அகதிகளை ஏற்றிய படகு என நம்பப்படும் படகொன்று தரித்து நின்ற தாக இந்தோனே´யத் தரப்புத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
இந்தோனே´ய மீனவர்கள் இந்த இலங் கை அகதிப் படகை இனம் கண்டனர். இந்தப் படகு இலங்கை அகதிகளை ஏற்றி வரும் படகாக இருக்கலாம் என இந்தோனே´ய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டனர்.அகதிகள், அதிகாரிகள் ஊடாக தமக்கு உதவுமாறு மீனவர்களிடம் கோரிக் கை விடுத்துள்ள தாக இந்தோனே ´யக் கடலோரக் காவல் படையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

மீள்கட்டுமானப் பணிகளைத் துரிதமாக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் பணிப்பு

Saturday, May 29, 2010

வடக்குக் கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ள இடங்கள் வழமையான நிலைக்குக் கொண்டுவரப்படுதல் வேண்டும். அதற்காக குறித்த பகுதிகளுக்கான மீள்கட்டுமானப் பணிகளை இலங்கை அரசாங்கம் துரிதமாக்க வேண்டும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி யின் தலைவர் ஹருகிகோ குருடா தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற் கொண்டு இலங்கை வந்த அவர் நேற்று மாலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறினார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங் களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இவ்வருடம் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Followers

Blog Archive