Thursday, August 12, 2010

மோ;வின் சில்;வாவூக்கு எதிரான நடவடிக்கையை கட்சியே தீர்மானித்தது!

Thursday, August 12, 2010
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்டையிலேயே முன்னாள் பிரதியமைச்சா; மோ;வின் சில்வாவூக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக சுற்றாடல் அபிவிருத்தியமைச்சா; அநுர பிரியதாஷன யாப்பா தெரிவிததார்.

அமைச்ரவை முடிவூகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளா; சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளா; ஒருவா; எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவா; இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சா; மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

எவரையூம் திருப்பதிப்படுத்துவதற்காகவோ அல்லது எவரது கோரிக்கையையூம் நிறைவேற்றவோ அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிருவாக உறுப்பினாகள் மேற்கொண்ட தீhமானத்தின்படி அவா; கட்சியிலிந்து நீக்கப்பட்டுள்ளார்

இத்தீ மானத்தின் அடிப்படையிலேயே அவரது பிரதியமைச்சா; பதவியூம் பறிக்கப்பட்டுள்ளது. இவருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவூம் அமைச்சார் கூறினார்.

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (பகுதி 4)

Thursday, August 12, 2010
தனிநாடு என்ற 'உச்சக்கட்ட' த் தீர்வுக்கு முன்பு வேற எந்த அரசியல் தீர்வும் 'சும்மா' என்ற உசுப்பேத்தல் நன்றாகவே தமிழ் மக்கள் மத்தியில் எடுபட்டது. ஏனைய அரசியல் தீர்வுகள் துரோகத்தனமானது காட்டிக் கொடுப்பு என்ற புலிகளின், புலிகளின் மூதாதையரின் பிரச்சார யுக்திகளுக்கு மத்தியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான வேறு எந்த அரசியல் தீர்வும் எடுபடாமல் போனது புலி தவிர்ந்த ஏனைய ஈழவிடுதலை அமைப்புக்களின் அரசியல் முன்னெடுப்புக்களை மக்கள் மத்தியில் பெரியளவில் பிரச்சாரப்படுத்தி செயற்பட முடியாமல் போனதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. கூடவே கருத்துக்களைச் சொல்ல தடை என்ற புலிகளின் ஏகபோக செயற்பாடு மக்களுக்கான உண்மை நிலமைகளையும் சாத்தியமான அரசியல் தீர்வு பற்றி செயற்பாடுகளையும் அவற்றைப் பெறுவதற்கான அணுகு முறமையினையும் இதற்கு புலிகள் தடையாக இருப்பதையும் அம்பலப்படுத்தும் வாய்ப்புக்களை இல்லாமல் செய்திருந்ததும் ஏனைய அமைப்புக்கள் அரசியல் ரீதியாக பலமாக இருந்தாலும் ஆதரவு ரீதியில் பலம் பொருந்திய அமைப்பாக தொடர்ந்தும் தம்மை வளர்தெடுக்க முடியாமல் போனது. கூடவே இவ் அமைப்புக்களின் ஆயுதப் போராட்ட காலத்தில் செயற்பட்ட முறைமைகளில் உள்ள சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் இன்னொரு காரணமாக இருந்திருக்கின்றது. கூடவே தமிழ் சமூகத்திலிருந்த முற்போக்கு புத்திஜீவிகளை புலிகள் இல்லாதொழித்தது இச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு மட்டும் அல்லாமல் செயற்படுத்த முடியாமல் போனதற்கும் பெரும் தடையாக இருந்தன. அதனையே ஏகாதிபத்தியங்களும் விரும்பின. இனவாதிகளும் விரும்பின. இதற்கு செயல்வடிவம் கொடுப்பதில் என்னமோ புலிகள் வெற்றிடைந்ததும் ஏனைய விடுதலை அமைப்புகள் தோற்றுப் போனதும் உண்மைதான். இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் மக்கள் என்னமோ தோற்றுப் போனவர்கள் தான்.

புலிகளின் யுத்தமானது நாளுக்கு நாள் தனது நண்பர் வட்டத்தை குறுக்கி எதிரி வட்டத்தை பெருக்குவதில் பெருவெற்றி கண்டே வந்தது. இதனைப் பற்றி புலிகள் எப்போதும் கவலைப்பட்டதும் இல்லை. வெற்றிகரமான இராணுவத் தாக்குதல் மூலம் எல்லாவற்றையும் சரிகட்டிவிடலாம் என்ற மமதையும் புத்திசாதுர்யம் அற்ற நிலையும் தொடர்ந்து வந்தன. புலிகளால் நிகழ்த்தப்பட்ட இராணுவத்தாக்குதல் மூலம் மாங்குளம் இராணுவ முகாமின் வீழ்ச்சியும், முல்லைத்தீவு இராணுவமுகாமின் விழச்;சியும், யாரும் எதிர்பாராத ஆனையிறவு இராணுவமுகாமின் வெற்றி கொள்ளலும் வெறும் எண்ணிக்கையைக் காட்டி உண்டியல் குலுக்க உதவியதே ஒழிய அரசியல் ஆதரவுத் தளத்தை மக்கள் மத்தியிலும், சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் பலப்படுத்திக் கொள்ள உதவவில்லை என்பதை புலிகளுக்கு உணர்த்தவில்லை. சர்வதேச சமூகத்திடம் தமது போராட்டத்திற்கான தார்மீக ஆதரவை புலிகள் எப்போதும் வளர்த்துக் கொள்ளவில்லை. மாறாக தமது மக்கள் விரோத செயற்பாட்டினால் பயங்கரவாதிகள் என்ற முத்திரையை தாராளமாக குத்திக்கொண்டனர்.

இதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் தலைவரின் வழிகாட்டலில் இராணுவ வெற்றியீட்டப்பட்டது என்ற தனிநபர் சாகச வணக்கத்தை மேலும் வளர்த்து அவரை வெல்ல முடியாத அழிக்க முடியாத கடவுளாக சிருஷட்டிக்க வைத்தது. ஆனால் நிஜத்தில் பிரபாகரன் அப்படியொன்றும் சிறந்த இராணுவ வியூக வகுப்பாளராகவோ அல்லது செயற்பாடாளராகவோ இருக்கவில்லை. ஏன் மாவீரராகவோ இருக்கவில்லை. மாறாக கோழையாக இருந்தார். இதுதான் செட்டியை கல்வியங்காட்டில் முதுகில் சுட்டுக் கொன்றதில் ஆரம்பித்து, முள்ளிவாய்காலில் இறுதி நாட்களில் பதுங்கு குழிக்குள் மட்டும் பதுங்கி இருந்து தனது மேற்குல மீட்போனை மட்டும் எதிர்பார்த்திருந்த நிகழ்வும் கழுத்தில் எந்நேரமும் கட்டியிருந்து புலுடா விட்ட சயனைற் குப்பியை கடிக்காமல் முழம் தாள் இட்டு மட்டியிட்ட செயற்பாடுகளும் ஆகும். புலித்தலைவர் யாராலும் ஏமாற்றப்படவில்லை தன்னாலே தானே ஏமாற்றப்படார். முட்டாள் ஆக்கப்பட்டார். முடமாகவே என்றும் இருந்தார் என்பதே உண்மை நிலை. புலிகள் அமைப்பும் கறையான் பிடித்த கிடுகு வேலியைப் போல் பலமற்ற மறைப்பு மாயத் தோற்றத்தைக் கொண்டிருந்ததே உண்மை. அதுதான் தொடர்ந்து மகிந்த தட்ட வெளிக்கிட பொலு பொலுவென்று கொட்டுப்பட்டதற்கு காரணம். வான் தரை, கடல், ஈருடகம் என்பவை பிரச்சார யுக்திக்கு உதவியனவேயொளிய மாறாக இலங்கை இராணுவத்தை அடித்து கலைக்க, ஏன் தடுத்து நிறுத்த போதுமானவையாக இருக்கவி;ல்லை என்பதே புலிகளின் பரிதாப நிலை.

உண்மையில் புலிகளின் ஓரளவு பலமான இராணுவப்பிரிவு கடற்புலிகள் தான். அதுதான் போரை மாவிலாற்றில் முடுக்கிவிட முன்பே இலங்கை அரசு கடல் புலிகளைப் பலவீனப்படுத்தி கடற் புலிகளை கட்டிப்போடும் செயற்பாட்டையே முதலில் கன கச்சிதமாக இந்திய இராணுவத்தின் ஆசீர்வாதத்துடன் செய்து முடித்தனர். கூடவே சர்வதேச சமூகத்திடம் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம், நம்பத் தகுந்தவர்கள் அல்லர், அரசியல் தீர்விற்கு ஓத்து வரமாட்டார்கள் போன்றவற்றை புலிகளாலேயே நிறுவிவிட்டு போருக்கு புறப்பட்டனர். இதற்கு புலிகளின் ரணில் - பிரபா இன் நோர்வே அனுசரணை காலத்து சமாதான காலத்து செயற்பர்டுகளும், சந்திரிகா அம்மையார் காலத்து சர்வதேசங்களுடனான இராஜதந்திர செயற்பாடுகளும் பெரிதும் உதவின. சர்வதேச சமூகத்திடம் புலிகள் தமது தலையில் தாமே மண்ணைவாரிப் போடுவது போல் அம்பலப்பட்டுகொண்டன.

புலிகளினால் பெரும் நிலப்பரப்பு கட்டுபாட்டிற்குள் இருந்த காலத்திலும் விவசாயம், கடற்தொழில். கால்நடை வளர்ப்பு போன்ற எம் மண்ணிற்கு ஏற்ற சுயபொருளாதாரத்தை கட்டியெழுப்புதலில் புலிகள் எப்போதும் எவ் முன் முயற்சிகளையும் எடுத்திருக்கவில்லை. சரி கடலுக்குதான் செல்ல முடியாது இலங்கை இராணுவம் அனுமதிக்கவில்லை நிலப்பரப்பெங்கும் வியாபித்திருந்த குளங்கள் குட்டைகள் நீரேரிகளில் மீன்வளர்ப்பு திட்டங்களை ஊக்கிவித்திருக்கலாம்தானே. விவசாயத்தை தன்னியல்பாக செய்வதற்கு அனுமதித்து இருக்கலாம்தானே. இவற்றிற்கு எல்லாம் பெரிய நவீன உபகரணமோ அல்லது பொருட்களோ தேவையில்லை. சரி இவர்கள்தான் முன்னெடுக்கவில்லை என்றாலும் இயல்பாகவே எம்மக்களால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த இவ் தொழில் முயற்சிகளை ஊக்கிவிக்காவிட்டாலும் பறவாய் இல்லை குழப்பாமல் இருந்திருக்கலாம். மாறாக உற்பத்திப் பொருட்களை அடிமாட்டு விலைக்கு தமக்கு மட்டுமே விற்க வேண்டும் என்ற நிர்பந்தம் போட்டனர். தாம் கொள்வனவு செய்து அதே மக்களுக்கு கொள்ளை இலாபத்தில் விற்றனர். முதலாளித்துவம் செய்யும் தரகு வேலைகளிலும், வரிகளிலும், கப்பத்திலும் உழைப்பு, உற்பத்தியில் ஈடுபடாத பணம் ஈட்டும் பொருளாதாரக் கொள்கை(ள) களையே புலிகள் கொண்டிருந்தனர்.

இதனால் விரக்தி அடைந்த மக்கள் உற்பத்தியில் ஈடுபடுவதில் மெது மெதுவாக விலத்தி யாரிடமாவது தங்கியிருத்தல் என்ற நிலைக்கு தள்ளப்பட்டன ர், மிகச்சிலர் வெளிநாடுகளில் உள்ள தமது உறவுகளிடத்தும், இன்னும் சிலர் அரசு கொடுக்கும் நிவாரண பொருட்களிலும் இன்னும் சிலர் புலி உறுப்பினர்களாக தம்மை காட்டிக்கொண்டு உயிர்வாழ பழகிக் கொண்டனர். மொத்தத்தில் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை என்ற சோம்பேறித்தனமான சமூகத்தை கட்டியெழுப்புவதில் புலிகளின் பங்கு மகத்தானதாக இருந்தது. புலிகளின் ஆயுதப் போராட்டத்தில்தான் புலிகளின் தலைவன் தான் சாப்பிடும் தோசை மாவிற்கு கூட தனது எதிரி இலங்கை அரசிடம் கையேந்தி நிற்கும் நிலமையில் இருந்தான். இதனையும் இலங்கை அரசே வழங்கிக்கொண்டு அவனுக்கு எதிரான யுத்தத்தை தொடர்ந்தது. இந்த யுத்தம் ஒரு வலிமை மிக்க உழைக்கும் மக்களை சோம்பேறிகளாக ஆக்கியும் விட்டுச் சென்றிருக்கின்றது என்பது போரின் பின்னான நிகழ்வுகளில் கிராமங்கள் தோறும் உணரப்படுகின்றது.
(தொடரும்...)

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (பகுதி 3)

Thursday, August 12, 2010
நாச்சிக்குடா வீழ்ந்தவுடன் புலித்தலைவன் பிரபாகரன் ஓட வெளிக்கிட்டதுதான் உண்மையான விடயம். ஆனால புலித் தலைவனின்; தாமதமான தீர்மானத்தால் தப்பி ஓடமுடியாமல் மறிக்கப்பட்டது தான் இலங்கை அரசுபடைகளின் வியூகம். மாவிலாற்றில் போர் தொடங்கப்படுவதற்கு முன்பு இலங்கை அரசபடைகள் செய்த போர் வியூகங்களில் முதன்மையானது கடல் பகுதியில் உள்ள புலிகளின் செயற்பாட்டை முற்று முழுதாக தடுத்து நிறுத்தல். இடைவிடாது தொடர்ந்து யுத்தத்தை புலிகளுக்கு எதிராக தொடர்தல் என்ற தாக்குதல் வியூகம். முந்திய அரசுகள் செய்த அடிதல் பின்பு பேசுதல் மீண்டும் அடித்தல் மீண்டும் பேசுதல் என்ற கண்ணாம் பூச்சி விளையாட்டை செய்வதில்லை என்ற தீர்மானத்துடன் தான் மாவிலாற்றில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்தது மகிந்த அரசு.

புலிகளால் பொதுமக்கள் முள்ளிவாய்கால்வரை வலுக்கட்டாயமாக சாய்த்துச் செல்லப்பட்டதுதான் உண்மை நிகழ்வு. இதில் சிறிய பகுதி மக்கள் விரும்பியே தவிர்க்க முடியாமல் அவர்களுடன் சென்றார்கள். தம் பிள்ளைகள் புலிகளிடம் உள்ளனர். சிலர் விருப்புடன், பலர் விருப்பின்மையுடன் செல்லவேண்டிய சூழ்நிலைப் பொறியில் இருந்தனர். யுத்தத்தின் போது கிழக்கு மக்கள் செய்த புதிசாலித்தனமாக புலிகளின் பிடியிலிருந்த பிரதேசத்திலிருந்து அரசு விடுவித்த பிரதேசங்களுக்கு இடம் மாறுதல் என்பதை மாவிலாறு தொடக்கம் வெருகல் ஊடாக மட்டக்களப்பு ஐத் தொடர்ந்து அம்பாறை வரை கடைப்பித்து வந்தனர். இவ்விடயத்தில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் சமயோசித புத்திசாலித்தனமான செயற்பாட்டைக் கொண்டிருந்தனர். இதனால் தான் 50 இற்கும் குறைவான பொது மக்களின் உயிர் இழப்புடன் கிழக்கு மாகாணம் புலிகளின் கைகளில்? இருந்து இலங்கை அரசின் கைகளுக்கு முழுமையாக மாறியமைகான முக்கிய காரணியாக அமைந்தது. வேறு பல விடயங்களும் காரணமாக அமைந்திருந்தன. சிறப்பாக கருணாவின் வெளியேற்றமும் முஸ்லீம்மக்கள், தமிழ் மக்களுடன் இணைந்த இடம்பரம்பலுமாகும். இதனை வன்னி மக்கள் செய்யவில்லை, செய்யமுடியவில்லை.

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பாவித்த இந்த தந்திரோபாய இடம்பெயர்வை வடக்கு மக்கள் சிறப்பாக வன்னி மக்கள் தன்னக்தே கொண்டிருக்கவில்லை. யாழ்பாணத்து மக்கள் 1995ம் ஆண்டு நடைபெற்ற தமது முதலாவது புலிகளுடனான வலிந்த இடம் பெயர்வில் கிடைத்த அனுபவத்தில் இருந்து கற்ற பாடத்தினால் இப் பொறியினுள் தடக்கி விழாமல் தப்பிக் கொண்டனர். மன்னார் மக்களில் ஒரு பகுதியினரும் இது போன்ற நிலமையில் இருந்தமையினால் தம்மை காத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் துணுக்காயில் ஆரம்பித்து இதனைத் தொடர்ந்த பிரதேசங்கள் ஊடாக கிளிநொச்சி வரையிலான மக்கள் இது போன்ற செயற்பாட்டை கொண்டிருக்கவில்லை. கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பின்பு விழித்தெளிந்த மக்கள் புலிகளின் பொறிக்குள் தாம் முழுமையாக வீழ்ந்து விட்டதை உணர்ந்து சுதாகரித்து தப்பிக்கும் செயற்பாட்டை செய்யமுடியாதவாறு புலிகளாலும், இலங்கை அரசாங்கத்தின் படைகளினாலும் பின்னப்பட்ட வலைப்பின்னலுக்குள் வீழ்ந்து விட்டதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.

ஏ 9 பாதைக்கு கிழக்காக புலிகளால் இழுத்துச் செல்லப்பட்ட நிலமைகள் ஏற்பட்டதும் பொதுமக்கள், புலிகள், புலி ஆதரவாளர்கள் யாபேருக்கும் தெரியும் பொறிக்கும் மாட்டிவிட்ட நிலமை ஏற்பட்டு விட்டது என்று. இந் நிலையில் புலிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் தப்பி வர முடியாது. ஆனால் பொது மக்கள் அவ்வாறு செய்ய முற்பட்டனர். ஆனால் புலிகள் பொது மக்களை அவ்வாறு செயற்பட அனுமதிக்கவில்லை என்பதே முதன்மையானது. இதற்கு எவ்வளவோ குறைந்த அளவிலேயே இராணுவத்தின் பகுதிக்கு வந்தால் தாம் எவ்வாறு இலங்கை இராணுவத்தால் கையாளப்படுவோம் என்ற பயப்பிராந்தியம் பொதுமக்களிடம் இருந்தன. புலிகளின் துப்பாக்கிகள் இக்காலப்பகுதியில் துப்பாக்கி வைத்திருந்த இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டதை விட துப்பாக்கி இல்லாத பொதுமக்களுக்கு எதிராக பலமாக செயற்பட்டது. மே 18 இற்கு பின்னான மக்கள் வாக்கு மூலங்கள் இவற்றை மேலும் நிறுவி நிற்கின்றன.

இதேவேளை புலிகளின் தலைமை மேற்குலக மீட்போன் தம்மை பிணை எடுப்பான் என்பதில் மட்டும் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த சரணாகதி நிலையில் இருந்தனர். சரணாகதி நிலையில் மட்டும் இருந்து கொண்டு புலம் பெயர் மக்ளின் துணையுடன் புதிக் குடியிருப்பு ஒரு லெனின் கிராட்டாக மாறும் என்ற வரையிலான வீரதாபங்களை பரப்புரை செய்து வந்தனர். மேற்குலகம் ஆகாயத்திலிருந்து குதித்து தம்மை மரியாதையுடன் மீட்கும் என புலம் பெயர் புலித் தலைமைகளும், புலம் பெயர் புலி ஆதரவாளர்களும் ஏற்படுத்தியே இருந்தனர். இதனை நம்பும் அளவிலேயே நிலத்தில் உள்ள புலிகள் சிறப்பாக பிரபாகரன் நம்பி இருந்தான். இதனைத் தவிர வேறு மார்க்கம் அவர்களுக்கு இருக்கவில்லை என்பதுவும் இங்கு உண்மைதான். புலிகளின் இராணுவ பலம் அவ்வாறே இருந்தது. ஆனால் புலிகளின் அரசியல் பலம் சர்வ தேசத்தில் வேறுவிதமாக இருந்தது. புலிகள் தமது ஆயுத நடவடிக்கைகளுக்கான தார்மீக ஆதரவை சர்வதேசத்தில் இழந்தே இருந்தனர். புலிகளுக்கு அரசியல் பலம் எப்போதுமே சர்வ தேச சமூகத்திடம் இருந்தது இல்லை. இதனால் சர்வ தேசம் பொது மக்களை காப்பாற்றும் காத்திரமான புத்திசாலித்தனமான செயற்பாட்டை இறுதிக்கட்டப் போரில் கொண்டிருக்கவும் இல்லை, செயற்படுத்த முயலவும் இல்லை என்பதே இறுதித் தினங்களில் பொது மக்களின் பரிதாப நிலைகளுக்கு காரணமாக இருந்தன.

வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதைவிட இல்லாமல் செய்யப்படவேண்டும் என்பதை இந்தியா மட்டும் அல்ல சோசலிச நாடுகளும் ஏன் மேற்குலக நாடுகளும் விரும்பின. ஆனால் இலங்கை அரசை தமது செ(h)ல்வாக்கிற்குள் உள்ள நாடாக வைத்திருப்பதற்காக பொதுமக்கள் பாதிப்பு, போர்நிறுத்தம் போன்றவற்றைத் தூக்கிப்பிடித்தன மேற்குலக நாடுகள். இன்றும் தூக்கிப் பிடிக்கின்றன. மற்றபடி யாரும் புலிகளை காப்பாற்றத் தயாராக இருக்கவில்லை. புலிகள் வேண்டப்படாத சக்தி, நம்ப முடியாதவர்கள், பயங்கரவாதிகள் என்பதில் எல்லேர்ருக்கும் ஒருமித்த கருத்தே இருந்தது. அப்படியொரு அனுபவத்தை புலிகள் தமது செயற்பாடுகளினூடாக சிறப்பாக ரணில் பிரபா சமாதான ஒப்பந்த காலத்தில் தோலுருத்திக் காட்டிவிட்டனர். அப்படியொரு அரசியல் சாணக்கியம் பிரபாகரனுக்கும் அவர் குழுவிற்கும்.

கிட்லர்; பாவித்த தேசியம் என்ற அரசியல் தந்திரோபாயத்தைத் தவிர வேறு எந்த அரசியல் தந்திரோபாயத்தையும் புலிகள் கொண்டிருக்கவில்லை மக்களில் ஒரு பகுதியினர் வெறித்தனமாக புலிகளை அன்றும் ஏன் இன்றும் நம்புவதற்கு இது ஏதுவாக இருந்திருக்கின்றது, இன்றும் இருக்கின்றது. இதுவே கிட்லருக்கு ஏற்பட்ட எழுசிக்கும் தோல்விக்கும் காரணமாக அமைந்ததைப் போல் ஒரு படிமேல் போய் புலிகளுக்கும் எற்பட்டிருக்கின்றது. இனியும் ஏற்படப் போகின்றது.

1980 களின் நடுப்பகுதியில் புலிகள் தன்னோடு கை கோர்த்து நின்றவர்களின் ஒவ்வொரு கரமாக அறுக்க முற்பட்டபோதே பொது மக்கள் விழித்திருக்க வேண்டும். சோடா உடைப்பதற்கு பதிலாக விழித்திருந்க் வேண்டும் அன்று விழித்திரந்தால் முள்ளிவாய்காலில் நடைபெற்ற மனிதப் பேரலவலங்ளை தவிர்திருக்க முடியும். நாம் இங்கு கூறுவது புலிகளுக்கு நடைபெற இருந்த பேரவலத்தை அல்ல. பொது மக்களுக்கு ஏற்பட்ட பேரவலத்தை. புலிகளுக்க எற்பட்ட பேரவலம் தவிர்கப்படமுடியாததும், தவிர்கப்பட வேண்டியதும் அல்ல.

ஒடுக்கு முறைக்குள்ளாகும் எந்த ஒரு இனமும், இனக் குழுமமும் அது தேசிய இனமாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் தனது உரிமைகளை நிலைநாட்ட, நிறுவிக் கொள்ள போராடும் உரிமை உண்டு. அவை மறுக்கப்படும் போது அதற்கான தீர்வை முன்வைத்து போராடுவது இயல்பானது, தார்மீகமானதும் ஆகும். அந்த வகையில் இலங்கை தமிழ் மக்களின் போராட்டமும் 50 இற்கு 50, சமஷ்டி, தனிநாடு, ஆயுதப் ஆயுதப் போராட்டம், மாகாணசபை என்ற பரிமாணத்திற்கூடதாக பயணித்ததற்கு நியாயங்கள் நிறையவே உண்டு.
(தொடரும்...)

Followers

Blog Archive