Sunday, May 30, 2010

வவுனியாவில் வீதியோரங்களில் உள்ள கடைகள் விரைவில் அகற்றப்படும்.

Sunday, May 30, 2010

வவுனியா நகரில் வீதி அபிவிருத்தி வேலைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காரணத்தினால் வீதியோரங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட திட்ட வரைவின் அடிப்படையிலேயே இந்தக் கட்டிடங்கள் அகற்றப்படவிருப்பதாக வவுனியா செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கட்டிடங்கள் அகற்றப்படுவது தொடர்பில் அவற்றின் உரிமையாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்கள் சிலவற்றில் அமைக்கப்பட்டிருந்த வீதியோர மற்றும் சட்டவிரோத கட்டடங்கள் வீதி அதிகாரசபை அதிகாரிகளால் அகற்றப்பட்டமை குறிபிடத்தக்கது.
Sunday, May 30, 2010

கிளிநொச்சி பிரதேசத்தின் கணேசபுரம் பகுதியில் மலக்குழி ஒன்றில் இருந்து மூட்டை மூட்டையாக பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன. கிளிநொச்சி கணேசபுரத்தில் ஐ.நா அலுவலகம் அமைந்திருந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு மலக்குழி ஒன்றில் ஏராளமான சடலங்கள் காணப்படுகின்றன.
குறிப்பிடப்பபட்டுள்ள இடத்தில் துப்புரவு தொழிலாளர்கள் குழியில் நிரப்பப்பட்டிருந்த மணலை வெளியிலெடுக்க முனைந்தபோது, குழியினுள் கறுப்பு பைகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மூட்டைகள் காணப்பட்டுள்ளன.
அவற்றினை பிரித்துப் பார்த்தபோது பெண்களின் சடலங்கள் இருந்தன. ஐந்து மூட்டைகள் வரை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், இன்னமும் அதிகமான சடலங்கள் அதே குழியினுள் இருக்கலாம் என அங்கு சென்ற மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் இருந்து அனைவரையும் வெளியேறுமாறு மிரட்டியிருக்கின்றனர். ஆனாலும் பெருமளவு மக்கள் திரண்டு அவற்றைப் பார்த்துச் சென்றவண்ணம் உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி மாவட்ட நீதிபதியிடம், யாரும் புகார் கொடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சடலங்கள் இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றப்படலாம் என்ற அச்ச நிலையும் எழுந்திருக்கின்றது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடங்கிய காலப் பகுதியில் இதே கணேசபுரம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Followers

Blog Archive