Friday, 21 May 2010
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 300 படகு ஓட்டுநர்களைக் கடற்படையினர் அனுப்பிவைத்துள்ளனர்.
இவர்கள் 30 குழுக்களாக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கடற்படைப் பேச்சாளர் கப்டன் அத்துல செனரத் கூறினார்.
கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மாரவிலை ஆகிய பகுதிகளில் கடற்படைப் படகோட்டுனர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் கடற்படைக்குச் சொந்தமான 28 படகுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க நேற்று கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிவாரணப் பணிகளில் ஈடுபடும் கடற்படையினர் குறித்து ஆராய்ந்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 300 படகு ஓட்டுநர்களைக் கடற்படையினர் அனுப்பிவைத்துள்ளனர்.
இவர்கள் 30 குழுக்களாக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கடற்படைப் பேச்சாளர் கப்டன் அத்துல செனரத் கூறினார்.
கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மாரவிலை ஆகிய பகுதிகளில் கடற்படைப் படகோட்டுனர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் கடற்படைக்குச் சொந்தமான 28 படகுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க நேற்று கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிவாரணப் பணிகளில் ஈடுபடும் கடற்படையினர் குறித்து ஆராய்ந்தார்.