Wednesday, May 19, 2010

சீரற்ற காலநிலை! சுமார் 4 லட்சம் பேர் பரிதவிப்பு!!

Wed, 19/05/2010
பாதிப்படைந்துள்ளன சீரற்ற கால நிலை காரணமாக 89,725 குடும்பங்களைச் சேர்ந்த 392,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கிறது.
சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இயற்கை அனர்த்தம் காரணமாக 1,555 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிகமாக வேறு இடங்களில் தங்கியுள்ளனர்.
மிக மோசமாகப் பாதிப்படைந்த கொழும்பு மாவட்டத்தில் 142,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகிறது.
கம்பஹா மாவட்டத்தில் 115,031 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 37,605 பேரும், காலி மாவட்டத்தில் 94,971 பேரும் சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்துள்ளதாக நிலையம் தெரிவிக்கிறது.
இம்மாவட்டங்கள் தவிர காலி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், புத்தளம், திருகோணமலை, மாத்தறை, மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களும்

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

Wed, 19/05/2010
மழை வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க, குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வு எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டபோதே இது தொடர்பான தீர்மானமெடுக்கப்பட்டதாக அமைச்சர் ஏ எச் எம் பௌஸி தெரிவித்தார்.
நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சொன்னார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 தினங்களுக்குச் சமைத்த உணவு வழங்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மரீனா மொஹமட் தெரிவித்தார்.
இதன் பின்னர் அவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்படுமென அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகக் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரால் ஆய்வுசெய்யப்படவுள்ளது.
ஆகக் கூடுதல் நிவாரணமாக 50 ஆயிரம் ரூபா வரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகள் இயக்கம் இன்னமும் மிரட்டல்: இந்தியா

Wed, 19/05/2010
புலிகள் இயக்கம், இந்தியாவுக்கு இன்னமும் மிரட்டலாக உள்ளதாகப் புதுடெல்லி தெரிவித்துள்ளது.
இலங்கையில் சென்ற ஆண்டில் புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டதற்கு இந்தியத் தலைவர்களே காரணம் என்று புலிகள் அமைப்பு குறைகூறி வருகிறது என்று இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பு தெரிவிக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவின் இறை யாண்மைக்கு இன்னமும் தொடர்ந்து ஒரு மிரட்டலாகவே இருந்து வருகிறது,” என்று அந்த அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.
புலிகள் அமைப்பை இலங்கை ராணுவம் ஒழித்துவிட்டது என்ற போதிலும் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் மீண்டும் ஒன்று திரள்கிறார்கள்.
தனித் தமிழ் ஈழத்தை அமைக்க அவர்கள் மறுபடியும் ஒன்று கூடுகிறார்கள்” என்றும் அந்த அரசு இதழ் தெரிவிக்கிறது.
இலங்கைப் போரில் உயிர் தப்பிய புலிகள் இயக்கத்தினர், தங்களைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் என்றே இந்திய அரசாங்கத்தைக் கருதுகிறார்கள்.
இந்திய அரசையும் இலங்கை அரசையும் விரோதிகளாக நினைக்கும் அவர்கள் பழிக்குப் பழி வாங்க விரும்புகிறார்கள்” என்றும் அந்த அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அத்தகைய போராளிகள், இந்தியாவைக் குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பயன்படுத்தி மறுபடியும் ஒன்று திரண்டு தாக்குதலைத் தொடங்கக்கூடிய சாத்தியத்தை மறுக்க முடியாது,” என்றும் அந்த அறிவிப்பு கூறியது.
புலிகள் அமைப்பின் தலைவர்களும் போராளி களும் ஆதரவாளர்களும் இந்தியாவின் இலங்கை கொள்கையை வெறுக் கிறார்கள் என்றும் இந்திய அரசிதழ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டதை அடுத்து, அதற்கு அடுத்த ஆண்டான 1992ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இந்தியா தடை செய்தது.
அந்தத் தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவையாக இதுவரை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன் புலிகளுக்கு எதிரான தடையை நீட்டித்து இந்திய அரசு அறிக்கை வெளி யிட்டது. அதையொட்டி இப்போதைய அரசு இதழ் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையே இலங்கையில் அவசரகால பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவர் என இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Followers

Blog Archive