Monday, May 24, 2010

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கோரிக்கை .

May 24, 2010
இலங்கையின் உள்விவகாரங்களில் ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனை தலையிட வேண்டாம் என இலங்கை, வேண்டுகோள் விடுத்துள்ளது.
இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றியும் ஐக்கிய நாடுகள் சபை சுதந்திரமான விசாரணைக்குழு ஒன்றை நியமித்து உண்மைநிலையை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புலிகளின் துஷ்பிரயோகம் தொடா;பான ஐ.நா.வின் அறிக்கை காலம் கடந்தது!

May 24, 2010
வன்னியில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யூத்தத்தின் போது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்களை சுட்டிக்காட்டியூள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது காலம் கடந்த நடவடிக்கை என்று அராசாங்கம் அறிவித்துள்ளது.
புலிகள் இயக்கமே இந்த போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்றும்இ படையினர் அவ்வாறான குற்றங்களை மேற்கொள்ளவில்லை என்றும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யூத்தத்தின்போது தப்பிச்செல்ல முயற்சித்த பெண்களின் தலைமுடியை விடுதலைப் புலிகள் கட்டையாக வெட்டியூள்ளனர். இதனால் தலைமுடி கட்டையாக வெட்டப்பட்ட பெண்களை புலி உறுப்பினர்கள் என கருதிய இராணுவத்தினர்இ முகாம்களில் அவர்களை வித்தியாசமான முறையில் நடத்தியூள்ளனர் என்றும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இருப்பினும்இ சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை படையினர் முறையாக நடத்தி அவர்களுக்கான மருத்துவ உதவிகளையூம் செய்தனர் என்று தெரிவித்த ஊடக அமைச்சர்இ சரணடைந்த புலிகளிடம் படையினர் தவறுதலாக நடந்துகொள்ளவில்லை என்றும் கூறினார்

கொழும்பு வீதி அபிவிருத்திப் பணிகளில் சிறைக் கைதிகள்

May 24, 2010
கொழும்பு வீதி அபிவிருத்திப் பணிகளில் சிறைக் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவினை முன்னிட்டு வீதி அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
60 வீதமான சிறைக் கைதிகள் நகர அபிவிருத்திப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் நிர்வாக அதிகாரி ஒமர் காமில் குறிப்பிட்டுள்ளார். நகர அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வரும் கைதிகளின் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது நிலவி வரும் மோசமான காலநிலையினால் வீதி அபிவிருத்திப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், திரைப்பட விழாவிற்கு முன்னதாக வீதி அபிவிருத்திப் பணிகள் பூர்த்தியாகும் என நகர நிர்வாகி ஒமர் காமில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Followers

Blog Archive