Tuesday, May 25, 2010

யாழ். ஆஸ்பத்திரிக்கு 200 கோடி ரூபா செலவில் நவீன நான்கு மாடிக் கட்டம்!

Tuesday, 25 May 2010
யாழ் ஆஸ்பத்திரி வளாகத்தில் 200 கோடி ரூபா செலவில் நான்கு மாடிகளைக்கொண்ட நவீன வைத்திய வசதிகள் கொண்ட கட்டடம் ஒன்றை அமைக்க ஜப்பான் சா;வதேச ஒத்துழைப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நவீன ஆய்வூகூடம்இ நவீன அறுவை சிகிச்சைப் பிரிவூஇ தீவிர சிகிச்சைப் பிரிவூ என்பன இந்த நான்கு மாடிக் கட்டத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
யாழ் ஆஸ்பத்திரியில் தற்போது 16இ 17இ 18இ 23இ மற்றும் 26 ஆம் வாh;டுகள் அமைந்துள்ள இடத்திலேயே இப்புதிய கட்டம் அமைக்கப்படவூள்ளது. இந்த வாh;டுகள் ஜூன் மாதத்துக்கு முன்னா; அழிக்கப்பட்டு அந்த இடத்தில் இரண்டு வருட காலத்துக்குள் புதிய மாடிக்கட்டடம் அமைக்கப்படவூள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை அமுல்படுத்த பொலிஸாருக்கு உத்தரவு

Tuesday, 25 May 2010
யாழ்.மாவட்டத்தில்,போக்குவரத்து,விதிமுறைகளை,முழுமையாக அமுல்படுத்துமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் அங்கு இடம்பெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
யாழ். மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் காமினி டி சில்வா, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பத்மதேவ ஆகியோருடனான சந்திப்பின் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Followers

Blog Archive