Thursday, March 25, 2010

Thursday, March 25, 2010

தமிழரின் நலன்களுக்காகத் தன்னலமின்றிப் பாடுபடும்எமது கட்சிக்கே உங்கள் வாக்குகள்......ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா)
நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு -கிழக்கில் ஈபிஆர்எல்எவ் (பத்மநாபா). புளொட் ஆகிய அமைப்புக்கள் இணைந்து போட்டியிடுகின்றன.
தன்னை வருத்தி தன்னைத் தாங்கியோருக்கு இருள் போக்கும் மெழுகுதிரி
யாழ்பாணம் திருகோணமலையில் ஈபிஆர்எல்எவ் இன் சின்னம் மெழுகுதிரியிலும் வன்னி மட்டக்களப்பில் புளொட்டின் நங்கூரம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். புலிகளின் பாசிச செயற்பாட்டினால் தலைமறைவாகி மக்களோடு மக்களாய் இருந்த பல ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் தற்போது ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழலைப் பாவித்து மிகத் தீவிரமாக அரசியல் வேலைகளில்

பாராளுமன்றப் பொதுத்தேர்தல்2010 திருகோணமலை
மக்களே! திருகோணமலையில் நீங்கள் கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் அச்சமின்றி வாழ்வதற்காக இணைந்த வடக்கு கிழக்கில் மாகாணசபையை உருவாக்கி திருகோணமலையைத் தலைநகரமாக்கியவர்கள் நாங்கள். அந்த சரித்திரம் படைத்த மாகாண சபையைத் தலைமையேற்ற முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஒரு சிறந்த கல்விமான் என்பதும் புத்திசாலித்தனமும் தீர்க்க தரிசனமும் மிக்க தலைவர் என்பதும் நீங்கள் அறிந்ததே. அவர் எமது பத்மநாபா ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர்களில் ஒருவர்.அறிவும் ஆற்றலும் அர்ப்பண உணர்வும் கொண்ட தோழர்கள் எம்முடன் இருக்கிறார்கள். எதையும் செயலுருவில் செய்து காட்டும் செயல் வீரர்கள்.நீங்கள் சந்;தித்த துன்பங்கள் இழப்புக்கள் எல்லாவற்றுக்குமே ஒரு விடிவு வேண்டும். நீதி நியாயம் வேண்டும்.பாராளுமன்றப்; பொதுத் தேர்தல் 2010மக்களே!மாற்றத்திற்கு தயாராகுங்கள். மாற்றமொன்றே உங்கள் விமோசனத்திற்கு வழிஎமது அன்பிற்கினய திருகோணமலை மக்களே!நீங்கள் பட்ட வேதனைகள் துன்பங்கள் இந்த உலகம் அறியாததல்ல. உங்களுக்கு ஏற்பபட்ட இழப்புக்களும் வேதனைகளும் மனச்சாட்சியை நெருடியவை.மக்களே! திருகோணமலையில் நீங்கள் கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் அச்சமின்றி வாழ்வதற்காக இணைந்த வடக்கு கிழக்கில் மாகாணசபையை உருவாக்கி திருகோணமலையைத் தலைநகரமாக்கியவர்கள் நாங்கள். அந்த சரித்திரம் படைத்த மாகாண சபையைத் தலைமையேற்ற முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஒரு சிறந்த கல்விமான் என்பதும் புத்திசாலித்தனமும் தீர்க்க தரிசனமும் மிக்க தலைவர் என்பதும் நீங்கள் அறிந்ததே. அவர் எமது பத்மநாபா ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர்களில் ஒருவர்.அறிவும் ஆற்றலும் அர்ப்பண உணர்வும் கொண்ட தோழர்கள் எம்முடன் இருக்கிறார்கள். எதையும் செயலுருவில் செய்து காட்டும் செயல் வீரர்கள்.நீங்கள் சந்;தித்த துன்பங்கள் இழப்புக்கள் எல்லாவற்றுக்குமே ஒரு விடிவு வேண்டும். நீதி நியாயம் வேண்டும்.உங்கள் நிலம் ,பொருளாதாரம் ,மனித உரிமை என்பன பாதுகாக்கப்பட வேண்டும். மேம்படுத்தப்படவேண்டும்.இலங்கையின் ஏனைய பகுதிகளில் பாரிய அபிவிருத்திப் பணிகள் நடைபெறும் போது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக எந்த விதமான முன்னேற்றமோ அபிவிருத்தியோ இன்றி திருமலை ஸ்தம்பிதமடைந்து காணப்படுகிறது.எமது பாரம்பரிய தொழில் துறையான விவசாயமும், மீன் பிடியும், சுற்றுலாத்துறையும் புத்துயிர் பெறவேண்டும்.தொழில் துறைநகரமாக திருமலை நிர்மாணிக்கப்படவேண்டும். இளைஞர்கள் பெண்கள் எதிர் நோக்கும் பாரிய வேலை இல்லாப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.கல்விச்சாலைகள் பரவலாக நிர்மாணிக்கப்படவேண்டும்.எமது வீதிகள் வீட்டு வசதிகள் விஸ்தரிக்கப்படவேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக பீதியும் பதட்டமும் இல்லாதொழிக்கப்படவேண்டும்.நிலம், நிதி, காவல்துறை மீது அதிகாரம் கொண்டதாக மாகாணத்திற்கு அதிகாரப்பகிர்வு வேண்டும்.வழமையாக நீங்கள் தெரிவு செய்தவர்கள் உங்களுக்காக என்ன செய்தார்கள். உங்கள் வாக்குகளைப் பெற்று விட்ட திருமலையை எட்டிப்பாக்காதவர்களாகத்தானே அவர்கள் இருந்தார்hகள்.தற்போது உங்களுக்காக உங்கள் இன்பதுன்பங்களில் பங்கெடுத்து வாழ்பவர்களைத் தெரிவு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.மக்களே!மாற்றத்திற்கு தயாராகுங்கள். மாற்றமொன்றே உங்கள் விமோசனத்திற்கு வழிமாற்றத்தை செயற்படுத்த ஆற்றலும், தீர்க்கதரிசனமும், அரசியல் ஞானமும் கொண்ட இந்தியாவின் நட்பை நேசிக்கும் பத்மநாபா ஈபிஆர்எல்எப் இன் தோழர்களுக்கு வாக்களியுங்கள்.எமது சின்னம் மெழுகுதிரிபத்மநாபா ஈபிஆர்எல்எப்

MARCH 20, 2010
எதி;வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தோ;தல் பிரசார 26 பிரதான கூட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்கவூள்ளார்.யாழ்ப்பாணம் வவூ+னியா மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் நடைபெறவூ+ள்ள தோ;தல் பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு உட்பட சகல மாவட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்கும் 26 பிரதான பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படவூ+ள்ளதாக அவா; குறிப்பிட்டாh;.கண்டி மாநகாpல் ஆரம்பமாகும் ஜனாதிபதியின் தோ;தல் பிரசாரக் கூட்டத் தொடாpல் குருநாகல் கம்பஹா கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தலா இரு கூட்டங்கள் நடத்தப்படும் எனவூ+ம் அமைச்சர் குறிப்பிட்டார்

Thursday, March 25, 2010

மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே -ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர் ஸ்ரீதரன்

யாழ்ப்பாணம்,மார்ச் 25
வெறும் வாய்ப் பேச்சுடன் நில்லாது தமிழ் மக்களுக்குக் கிடைத்த சட்ட வலுவுள்ள ஒரு தீர்வான மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே. நாங் கள் அந்த அனுபவங்களைப் பிரயோகித்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெ டுக்க நடவடிக்கை எடுப்போம்.இந்தியாவுடனான எமது உறவு வலுவானதுஇந்தியாவுடனான எமது உறவுகள் வலுவா னவை. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இந் தியாவின் பங்களிப்பு நிச்சயம் தேவை. இந் தியாவின் உதவியின்றி இலங்கைத் தமிழ் மக்க ளின் பிரச்சினைகள் தீர்வு காணப்படமுடியாது.
இந்திய எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்புவதால் தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டாது பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர் ஸ்ரீதரன் கூறுகிறார்இந்தியாவுக்கு எதிராகச் சிலர் கோஷ மிட்டு வருகின்றனர். இதனால் எதுவுமே நடக் கப்போவதில்லை. இந்திய எதிர்ப்புக் கோஷங் கள் எம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உத வப் போவதில்லை.
இந்தியாவுக்கு எதிராகச் சிலர் கோஷ மிட்டு வருகின்றனர். இதனால் எதுவுமே நடக் கப்போவதில்லை. இந்திய எதிர்ப்புக் கோஷங் கள் எம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உத வப் போவதில்லை.இவ்வாறு பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் தி.ஸ்ரீத ரன் கூறினார்.பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் செய்தியாளர் மாநாடு நேற்று முன்தினம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள அமைப்பின் அலு வலகத்தில் இடம்பெற்றது.ஸ்ரீதரன் அங்கு மேலும் பேசும் போது கூறியதாவது:இலங்கை சிங்களவருக்கு மட்டும் சொந்த மான நாடல்ல. இங்கு வாழும் தமிழர்கள், முஸ் லிம்கள் உட்பட அனைத்துச் சிறுபான்மை மக் களுக்கும் இந்நாடு சொந்தமானது. இங்கே தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின் றன. சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரா னவர்கள் அல்லர். அதேபோன்று தமிழ் மக்க ளும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர்.நேர்மையான இனவாதம் அற்ற தலை வர்கள் இந்த இரு சாராரிடமும் இல்லாமை தான் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம். இப்போது காணப்படும் தலைவர்கள் தங்கள் சுகபோக வாழ்வுக்காக இனவாதம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.எமது பிரதிநிதிக ளாக எப்படி ஏற்றுக் கொள்வது?தமிழ்த் தலைவர் கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெளி நாடுகளில் தங்கள் குடும்பங்கள் சொத் துக்களைப் பாதுகாப் பாக வைத்துக் கொண்டு நாடாளுமன்றப் பதவி களுக்காக தமிழ் மக் களிடம் அவ்வப்போது பிரச்சினைகள் குறித் துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இப்படியா னவர்களை எமது பிரதி நிதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா?இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் நிம்மதியாகவாழ வேண்டும். இராணுவ மயமற்ற சூழலில் சகல மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும். வலி.வடக்குப் பகுதியில் உள்ளமக்கள் தமது சொந்த வீடுக ளில் குடியமர நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்க்கை மேம்படுத்தப்படவேண் டும். வேலைவாய்ப் புக்கள் வழங்கவேண்டும்.வெறும் வாய்ப் பேச்சுடன் நில்லாது தமிழ் மக்களுக்குக் கிடைத்த சட்ட வலுவுள்ள ஒரு தீர்வான மாகாணசபையை நிறுவி நடைமுறை யில் செயற்படுத்தியது எமது கட்சியே. நாங் கள் அந்த அனுபவங்களைப் பிரயோகித்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெ டுக்க நடவடிக்கை எடுப்போம்.இந்தியாவுடனான எமது உறவு வலுவானதுஇந்தியாவுடனான எமது உறவுகள் வலுவா னவை. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இந் தியாவின் பங்களிப்பு நிச்சயம் தேவை. இந் தியாவின் உதவியின்றி இலங்கைத் தமிழ் மக்க ளின் பிரச்சினைகள் தீர்வு காணப்படமுடியாது.சிவாஜிலிங்கம் போன்றவர்களின் இந்திய எதிர்ப்புக் கோஷங்கள் எமது மக்களின் பிரச்சி னைகளைத் தீர்க்க உதவாது. இந்தியா பெரிய ஜனநாயகநாடு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.அடிப்படைத் தேவைகளுக்காக அரசியல் வாதிகளிடம் கையேந்தாமல் உரிமையோடு பெறக்கூடியதாகவும் மக்களின் நிலை மேம் படவும் அதனை நடைமுறைச் சாத்தியமான தாக்கவும் மக்கள் எமது கட்சிக்கு தமது முழு மையான ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார் ஸ்ரீதரன்

THURSDAY, MARCH 25, 2010

தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா சிரத்தையுடன் செயற்பட்டு வருகிறது அந்நாட்டின் உதவி, ஒத்தாசைகள் என்றும் எமக்குத் தேவை

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி யின் பொதுச் செயலாளரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் இக்கட்சி சார்பாகப் போட்டி யிடும் முதன்மை வேட்பாளருமாகிய திருநாவுக்கரசு ஸ்ரீதரன் வழங்கிய செவ்வி இது.
தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் 30 வருட காலத்துக்கும் மேலாக போராடிவரும் அமைப்பே பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. இது ஆரம்ப காலத் தில் ஒரு போராட்ட இயக்கமாகப் பரிண மித்துப் பின்னர் அரசியல் இயக்கமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் இம்முறை புளொட் அமைப்பினருடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்கின்றது.
அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் உதயனுக்காக வழங்கிய நேர்காணல் இது:
கேள்வி: ஆரம்பகாலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தாங்கள் பின் அதனைக் கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொண்டு செயற் படுகிறீர்கள்? இந்நிலையில் இத்தேர்தலை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறீர்கள்?
பதில்: 30 வருடகாலமாக தமிழ் மக் களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கூட்டாட்சி முறைஎமது பிராந்திய நலன், புவிசார் அமைவிடம் என்பவற்றைக் கவனத்திற்கொண்டு இந்தியாவே எமது பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டி ருப்பதுடன் அந்நாட்டுடன் நல்லுறவையும் பேணி வருகின்றோம்.எமது பிரச்சினையின் தீர்வுக்கு இந்தியா வில் இருப்பது போன்ற கூட்டாட்சி முறையே பொருத்தமானது என்றும் நம்புகின்றோம். வடக்கு, கிழக்கு தாயகத்தில் எமது சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துகின்றோம். நாம் படிப்படியாக எம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்துவோம். இவற்றுக்காகவே நாம் புளொட் அமைப்பினருடன் இணைந்து இத் தேர் தலை எதிர்கொள்கின்றோம்.
கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்: எமது மக்களுக்கான தீர்வு விட யமாக ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களும் சுதந்திரமாக, சமத்துவமாக வாழ வேண்டும். இந்த நாடு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைவருக் கும் பொதுவானது.தனி ஓர் இனம் இதனைச் சொந்தம் கொண்டாட முடியாது. பல்லினங்களும் ஒற்றுமையாக வாழும் பல்லின நாடாக இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். மாகாணசபைகள் பலப்படுத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங் கள் இணைக்கப்பட வேண்டும். இதற்காக கிழக்கில் இருந்தும் பலமான குரல் ஒலிக்க வேண்டும்.
கேள்வி: அப்படியானால் நீங்கள் ஒஸ்லோ பிரகடனத்தை வலியுறுத்தவில்லையா?
பதில்: ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படுமாக இருந்தால் நாம் மகிழ்ச்சியடைவோம். ஆனால் சிங்களத் தலைமைகள் இதனைச் செய்ய முன் வருவார்களா என்பது சந்தேகமே. இன்றைய யதார்த்த களச் சூழலுக்கு எது பொருத் தமானதோ அதனை நாம் கவனத்தில் கொள்வதுடன் இந்தியாவின் அனுசரணையையும் பெற வேண்டும்.
கேள்வி: மாற்று அரசியல் தொடர்பாகத் தங்களுடைய நிலைப்பாடு அல்லது கருத்து என்ன?
பதில்: மாற்று அரசியல் என்பது எமது இனத்துக்கு இன்று கட்டாயம் தேவையா னது. இம்மாற்று அரசியலில் வெவ்வேறு கருத்துக்கள் உடையவர்கள் பங்கேற்க வேண்டும். ஆனால் எமது சமூகத்தில் இன்று இந்நிலைமை இல்லை. வெவ்வேறு கருத்துக்களுடன் நாகரிகமான அரசியல் உறவு நிலை ஒன்று உருவாக வேண்டும். அரசில் தமிழர்கள் பங்காளிகளாக வேண்டும் மக்களுக்கு அரசியல் போதை ஏற்றும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது. இலங்கை அரசில் தமிழ் மக்கள் பங்காளி கள் ஆக வேண்டும்.
கேள்வி: இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக என்ன நினைக் கிறீர்கள்?
பதில்: இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் அவர்களின் சொந்தக் காணிகளில் குடியமர்த்தப் படவேண்டும். அவர்களுக்கான உள்ளகக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.உயர்பாதுகாப்பு வலயங்கள் அனைத் தும் நீக்கப்படுவதுடன் 1980 ஆம் ஆண்டளவில் இராணுவ முகாம்கள் எந்நிலையில் இருந்தனவோ அந்நிலைக்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இவைதவிர மே 18 இன் பின்னர் பயங்கரவாதச் சட்டம் தேவையில்லை எனவே அச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினை போன்று இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினைகள் உண்டு. அவர்களுக்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?
பதில்: முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் உண்டு. அதனை நாம் மறுக்க வில்லை. முஸ்லிம் மக்களுடன் நாம் இணைந்து செயற்படுவோம். முஸ்லிம் மக்கள் தாம் பெரும்பான்மையாக வாழும் அம்பாறையை கேட்டால் அதனை நாம் வழங்கத்தயார். அவ்வாறு இல்லாது அம்பாறையை தலைமையகமாகக் கொண்டு பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை உதாரணமாக கல்முனை, யாழ்ப்பாணத்தின் சில பகுதிகள் போன்றவற்றின் அதிகாரங்களையும் நாம் வழங்கத்தயார்.
கேள்வி: எமது தாயகப் பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்...?
பதில்: இது ஓர் உணர்வு பூர்வமான விடயம். நாம் தடுக்கக்கூடிய சில சந்தர்ப்பங்களை நாம் தவற விட்டுள்ளோம். இதனைத் தடுப்பதற்கு இந்தியாவின், சர்வ தேசத்தின் உதவியை நாம் பெறவேண்டும். இராணுவ மயப்படுத்தப்பட்ட இந்த சூழல் ஆபத்தானது. சிங்கள மக்கள் கிழக்கில் ஒரு சில இடங்களில் ஆரம்பத்தில் இருந்தனர். அதனை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் பெரும்பான்மையாக இருந்த தமிழினத்தை சிறுபான்மையாக்கும் செயல்களை நாம் தடுத்தாக வேண்டும்.
கேள்வி: வன்னியுத்தத்தின் பின் பெரும்பாலான தமிழ் மக்களிடம் இந்திய விரோதப் போக்கு அதிகமாக உள்ளது. ஆனால் தாங்கள் இந்தியாவின் நலனில் அக்கறை கொண்ட அமைப்பாக உள்ளீர்கள். இந்தியா தனது பிராந்திய நல னைக் கைவிட்டு இலங்கைப் பிரச்சினையில் உண்மையான அக்கறைகாட்டுமென நம்புகிறீர்களா?
பதில்: மக்களிடம் இந்திய விரோதப் போக்கு உள்ளது என்பதை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது. தவிர, இந்தியாவின் பங்களிப்புடன் தான் எமது பிரச்சினையை நாம் தீர்க்க முடியும்.இந்தியா சர்வதேச நாடுகளில் முக்கி யத்துவம் பெற்ற நாடாக உள்ளது. இந்தியாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன.எமது போராட்டம் பயங்கரவாதமாக நோக்கப்படுவதற்கு இந்தியாவின் இளம் தலைவர் அதுவும் பிரதமரை கொலை செய்ததால் தான் என்பதையும் நாம் உணர வேண்டும். அதற்கான பழிவாங்கல் தான் இவ் அழிப்பே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா சிரத்தையுடன் உள் ளது. இதனை இந்தியாவின் இராஜதந்திர உயர் அதிகாரிகள் எம்மிடம் கூறியுள்ளனர்.
கேள்வி: தமிழ் மக்களின் நம்பிக்கையான தலைமையாக இருந்த விடுதலைப் புலிகளின் இயங்கு நிலை இன்று இல் லாமல் போய்விட்டது. இந்நிலையில் தமிழ் மக்களை வழிநடத்திச் செல்லும் தலை மையாக யாரைக் கருதமுடியும்?
பதில்: வரலாற்றில் தலைமைகள் இல்லாமல் போனது கிடையாது. தலைவர்கள் பலரை விடுதலைப் புலிகள் அழித்து விட்டனர்.அவர்களில் அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், பத்மநாபா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்றைய அரசியலில் நேர்மையான இளம் அரசியல் தலைமைகள் தேவை. இதற்கு நாம் அரசியல் ரீதியான கற்பித்தல், எழுச்சி, போராட்டம் என்பவற்றின் ஊடாக இளம் சமுதாயத்தைக் கொண்டு புதிய தலைமை உருவாக்கப்பட வேண்டும். அத்தலைமை சமூகப்பிரக்ஞையுடையதும் நேர்மையானதாகவும் இருத்தல் வேண்டும். இன்று தாமே தலைமைகளாகவும், ஏகப்பிரதிநிதிகளாகவும் வேண்டும் எனும் நினைப்பில் தமிழ்த்தேசியக் கூட் டமைப்பு செயற்பட்டு வருகிறது. இவர்கள் கபடத்தனமாக வந்தவர்கள். இவர்களை மக்கள் தூக்கி வெளியில் போடவேண்டும். பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பிரதி நிதிகளாக தெரிவாக வேண்டும். ஏகப் பிரதிநிதித்துவம் என்னும் சொல்லையே இல்லாது செய்யவேண்டும்.
கேள்வி: விகிதாசாரத் தேர்தல் சிறு பான்மை இன மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்றும் இம்முறையைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றதே....?
பதில்: யாழ்.மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இம்முறைமையினாலோ அல் லது தொகுதி ரீதியிலான தேர்தலைக் கொண்டு வருவதாலோ பாதிப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால் கிழக்கு மாகாணத் திலும் மலையகத்திலும் தொகுதி ரீதியான தேர்தல் முறைமை தமிழ்மக்களின் பிரதி நிதித்துவத்தை இல்லாது செய்துவிடும். இத்தேர்தல் முறைமையிலும் மாற்றம் அவ சியம். இதற்காக ஜேர்மனியில் உள்ளது போன்று தொகுதியும் விகிதாசாரமும் கலந்த தேர்தல் முறைமையைக் கொண்டு வரவேண்டும்.
கேள்வி: ஈழத்தமிழர்களின் பிரச்சி னைக்கான தீர்வில் புலம்பெயர் சமூகம் தவிர்க்க முடியாத சக்தி. அவர்கள் தொடர் பில் என்ன கருதுகின்றீர்கள்.
பதில்: நிச்சயமாக அவர்கள் தவிர்க்கப் பட முடியாதவர்கள். நாட்டைவிட்டு வெளியேறிய அவர்கள் மீண்டும் இங்கு வரவேண்டும். இங்கு முதலீடுகளைச் செய்யவேண்டும். ஆனால் அவர்களில் பலர் கனவுலகில் உள்ளனர். அவற்றி லிருந்து அவர்கள் விடுதலை பெறவேண் டும். இளம் தலைமுறைக்கும் இம் மண் ணுக்குமான உறவு விட்டுப் போய்க்கொண்டு இருக்கிறது. அந்த இடைவெளியை நாம் நிரப்பவேண்டும். புலம்பெயர் இலக்கியமே இன்று அழிந்துபோய்க் கொண்டுள் ளது. அங்குள்ள கலைச்செல்வங்கள் இங்கு கொண்டு வரப்படவேண்டும்.
கேள்வி: புலம்பெயர் சமூகத்துடன் தங் களுடைய உறவுநிலை எவ்வாறு உள் ளது?
பதில்: நாங்கள் அம்மக்களுடன் தொடர்ச்சியான உறவைப் பேணி வருகின் றோம். அங்குள்ள மாற்றுக் கருத்துடையவர் களையும் சந்திக்கின்றோம். அங்கு நடை பெறும் இலக்கியச் சந்திப்புக்கள், பெண் கள் வட்ட சந்திப்புக்கள் என்பவற்றில் எமது பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். அங்கிருந்தும் புதிய தலைமைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.
கேள்வி: தங்களுடைய தலைவர் வரதராஜப்பெருமாள் குறித்து தகவல்களை அறியமுடியவில்லையே? இலங்கையின் அரசியலில் அவர் மீண்டும் வருவாரா?
பதில்: அவர் இப்போது இந்தியாவில் உள்ளார். இணைந்த வடக்கு, கிழக்கின் முதலாவது முதல்வராக இருந்தவர். அவர் விரைவில் இங்கு வந்து அரசியல் பணி களை முன்னெடுப்பார். அவரின் பொருளி யல் அறிவு தமிழ் மக்களின் பொருளா தாரத்தை கட்டியெழுப்ப துணைநிற்கும்.
கேள்வி: உதயன் ஊடாக மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்.
பதில்: மக்கள் தமது தலைமைகளைத் தேர்ந்தெடுப்பதில் தெளிவாக இருத்தல் வேண்டும். தவிர அனைவருமே தமது வாக்குரிமையைப் பயன்படுத்தவேண்டும். வெறுமனே வாய்ப்பந்தல் போட்டு மக்களை ஏமாற்றும் தலைமைகளை விரட்டியடிக்க வேண்டும். மக்கள் யதார்த்த பூர்வமான, நடைமுறைச் சாத்தியமான தீர்வு குறித்து சிந்திக்கவேண்டும். தாம் பழக்கப்பட்ட கட்சிக்குப் போடாது சிந்தித்துப் போடவேண்டும். ஒரே கட்சியில் பலரை அனுப்புவது மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். இம்முறை மக்கள் அனைத் துக் கட்சிகளில் இருந்து பிரதிநிதிகளைத் தேர்வு செய்யவேண்டும். அப்போதுதான் பிழைகள் விடமாட்டார்கள். வெளிநாடு களுக்குச் செல்லாது தொகுதியிலேயே இருப்பார்கள்.
மக்களே! நீங்கள் எம்மை மாத்திரம் தெரிவு செய்யுமாறு நான் கூறவில்லை. எங்களிலும் சிலரைப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யுங்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க எமக்கும் ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். இத்தேர்தலில் போட்டியிடும் பத்மநாபா ஈழமக்கள் புரட் சிகர விடுதலை முன்னணியின் சின்ன மான மெழுகுதிரிக்கு உங்கள் வாக்கை இட்டு உங்கள் வாழ்வில் ஒளியேற்றுங்கள்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது
பாராளுமன்றத் தேர்தல் 2010 தேர்தல் விஞ்ஞாபனம்

இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் சிறுபான்மையினர்கள் என்பதால் காலம்காலமாக பற்பல இனரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அடிப்படை உரிமைகள்; ரீதியாகவும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லொணாத் துன்பங்களாலும் இழப்புக்களாலும்; வாழ்வில் மிகவும் நொந்து போயிருக்கிறார்கள்; விரக்தியின் எல்லைகளுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, கடந்க பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் பட்ட துன்பங்களும் இழப்புக்களும் வேதனைகளும், சோதனைகளும் கணக்கலடங்காது.தமிழ்மக்களின் உடனடித் தேவைகள்இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டு விட்டது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை மீளமைய வேண்டும். அதற்கான அவர்களுக்கு உடனடி அடிப்படைத் தேவைகளாக:• சீரான இல்லம் வேண்டும்;;;• வேண்டிய உடைகள் வேண்டும்;.• சுகாதாரமான சூழல் வேண்டும்;• வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு உரிய தொழில் வேண்டும்.• பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வேண்டும்,• இலங்கையில் எங்கும் செல்ல இலகுவான போக்குவரத்தும் மற்றும் சர்வதேச தொடர்பு வசதிகளும் வேண்டும்;.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(பத்மநாபா)யின் நிலைப்பாடுஎமது கட்சியாகிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(பத்மநாபா)யின் நிலைப்பாடானது, தமிழ்பேசும் மக்களின் தேவைகள் நிறைவேறி, இலங்கைவாழ் சமூகங்கள் அனைத்தும் சமாதானத்துடனும், சமூக, கலாச்சார, பொருளாதார மேம்பாட்டுகளுடனும் வாழும் உயர் நிலைமையை அடைய வேண்டுமாயின்: ;• வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சுய நிர்ணய அதிகாரங்கள் கொண்ட அரசியற் தீர்வு வேண்டும்.• அங்கு உண்மையான ஜனநாயகச் சூழல் நிலவி, ஜனநாயக அரசியல் பேணப்படவேண்டும்., • அப் பிரதேசங்களில்; விரைவான பொருளாதார அபிவிருத்திகள் நடைபெற வேண்டும்.• மனித உரிமைகள் மதிக்கப்படும் சுதந்திரமான சூழல்கள் வேண்டும்;.• மனித உரிமை தனி மனித சுதந்திரம் ஜனநாயகம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான சுயாதீனமான நிறுவனங்கள் சமூகத்தில் அனுமதிக்கப்படவும், ஊக்குவிக்கப்படவும் வேண்டும்.• இனம் சாதி மத பேதங்களற்ற சமாதானமும் சமத்தவமும் காக்கப்பட வேண்டும்.• அமைதியும், சமாதானமும் மகிழ்ச்சியும் தவழும் தேசம் நிர்மாணிக்கப்பட வேண்டும்.இவை கிட்ட வேண்டுமாயின்:-• தமிழ் மக்கள் தமது பகுதிகளில் தமது அலுவல்களை தாமே பார்த்துக் கொள்வதற்கு உரிய வகையில் நிலம், கல்வி, சுகாதாரம், பொருளாதார அபிவிருத்திகள், பொலிஸ் விடயங்கள், நகர விருத்திகள், கிராம முன்னேற்றங்கள் போன்ற விடயங்களில் சுயநிர்;ணய உரிமைகள் கொண்டிருக்க வேண்டும்;.– இந்த அடிப்படையில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.• இலங்கையின் மத்திய அரசாங்க முறைமையில் தமிழர்களும் உரிய பங்காளர்களாக ஆக்கப்பட வேண்டும்.• இனவாதங்கள் மதவாதங்கள் அற்ற ரீதியில் இலங்கையில் கல்வியும், அரசாங்க உத்தியோகங்களும் வழங்கப்பட வேண்டும்.• தமிழர்களின் பகுதிகளில் சிங்களவர்களை திட்டமிட்டுக் குடியேற்றி தமிழர்களின் பொருளாதார வாழ்வை அச்சுறுத்தும் நிலை இல்லாதொழிய வேண்டும்:• இலங்கையின் அரச படைகள் சிங்களப்படைகள் என்ற நிலை மாறி அனைத்து இனத்தவர்களையும் உரிய அளவு கொண்ட உண்மையான தேசியப்படைகளாக ஆக்கப்படுதல் வேண்டும்.தமிழர் அரசியலில் ஈபிஆர்எல்எவ் இன் பங்களிப்பு• 1988ல் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு அரசியல் அதிகார பகிர்வு முறையை நடைமுறை சாத்தியமாக்கினோம்.• குறுகிய காலமாக இருப்பினும் அதுவொரு நம்பிக்கை தரக்கூடிய வெற்றிகரமான முயற்சியாக நாங்கள் முன்னெடுத்தோம்.• எமது கட்சியைச் சார்ந்த சிறந்த கல்விமானும் புத்திசாதுரியமும் தீர்க்கதரிசனமும் மிக்க தோழர் வரதராஜபெருமாள் அவர்கள் இணைந்த வடக்கு கிழக்கின் முதல் தமிழ் முதலமைச்சராகப் பணியாற்றினார். அந்த மாகாண அரச முறைமை சீர்குலைக்கப்படாது இருந்திருந்தால் — தமிழர்களின் சக்திகள் ஒற்றுமையாக அதனை அன்று செயற்படுத்தியிருந்தால் — இன்று இந்த நிலைமை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்காது: 20 வருடங்களுக்கு முன்னரே இழப்புக்களையும் அழிவுகளையும் தவிர்த்திருக்கலாம். தமிழர்களின் ஒற்றுமை, தமிழக மக்களின் அரவணைப்பு, இந்தியாவின் அதரவு, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அகியவற்றுடன் தமிழர்கள் இன்று தலை நிமிர்ந்து நின்றிருப்பார்கள்.தமிழர்களால் இன்று மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்கள்கடந்த காலத்தில் கிடைத்த வாய்ப்புக்கள் அனைத்தும் தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத தலைவிதியால் தவறிப் போய்விட்டன. எனினும், இனியாவது எதிர்காலத்தைக் குறித்து தமிழர்கள் அனைவரும் கீழ்க்காணும் தீர்மானங்களை உறுதியாகவும், நிதானமாகவும், சரியாகவும் மேற்கொள்ள வேண்டும்:-• வாக்கில் உண்மையும் நடத்தையில் நேர்மையும் அரசியலில் வல்லமையும் கொண்டவர்களையே தமிழர்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும்.• தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக வன்முறையற்ற பாதைகளில் மக்களை நேரடிப் பங்காளர்களாக அணி திரட்டிப் போராடக் கூடியவர்களையே தலைவர்களாகக் கொள்ள வேண்டும்.• தமிழர்கள் மத்தியில் இருந்து மீண்டும் சுயநலமற்ற, சுய தியாகங்கள் செய்யும் தலைவர்கள் உருவாக தமிழர்கள் அங்கீகாரம் வழங்குதல் வேண்டும்.• கடந்த தேர்தலில் பணம் பதவி சுகபோகங்களுக்காக ஆசை கொண்ட ஒரு சுயநலக் கூட்டத்தினரை புலிகள் பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவர்களோ சிங்களத் தலைவர்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக் கொண்டார்களே தவிர தமிழ் மக்களின் எந்த நம்பிக்கைக்கும் உரியவர்களாக நடந்து கொள்ளவில்லை என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். இப்போது அவர்கள் நாலு குழுக்களாகப் பிரிந்து நின்று ஆளுக்காள் பாராளுமன்றப் பதவிக்காக குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டள்ளனர். இவர்களா தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றப் போகிறார்கள்? இவர்கள் அனைவரும் தமிழர்கள் மத்தியில் வீராவேசமாகப் பேசுவார்கள். அளவற்ற ஆசை வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும் கொழும்பு சென்று தமிழர்களின் உரிமைகளை மறந்து விடுவார்கள், அல்லது விற்று விடுவார்கள். இப்படிப் பட்டவர்களை தமிழர்கள் தெரிவு செய்ய மாட்டார்கள் என்னும் நிலையை இனியாவது ஏற்படுத்த வேண்டும்.• இனப்பிரச்சினைக்கு இந்தியாவினதும், மற்றைய உலகநாடுகளினதும் உதவியுடன் தீர்வு காண கிடைத்த பல சந்தர்பங்களை நாம் தவற விட்டுவிட்டோம். இனிமேலும் அத்தகைய தவறுகளுக்கு நாம் இடமளிக்கப் படாது.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரலாறு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர்:• தமிழ் மக்கள் இந்த நாட்டில் சுய நிர்ணய உரிமைகளுடன் வாழவேண்டிய ஒரு தேசிய இனம் என்பதை நிலைநாட்டுவதற்காகக் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருபவர்கள்.• இலங்கை சிங்களமக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்பேசும் அனைத்து மக்களுக்கும் சமஉரிமை கொண்ட நாடு என்பதை நிலைநாட்டுவதில் உறுதியாகச் செயற்பட்டு வருபவர்கள்.• தமிழர்கள் மத்தியில் சாதி, மத பேதங்களை இல்லாதொழிப்பதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் விடாது போராடி வருபவர்கள்.• தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் அரசியற் சக்திகள் மத்தியில் உண்மையான ஒற்றுமை ஏற்படுவதற்காக நேர்மையாக உழைத்து வருபவர்கள.;ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ்மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகள்தமிழ்மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் உயரிய இலட்சியங்கள். தமிழ் மக்களின் உடனடித் தேவைகளையும் நீணடகாலக் கனவுகளையும் நடைமுறையாக்க நாம் உரிய உபாயங்களை முன்னெடுப்போம். அந்த வகையில்- • நாம் தமிழ் மக்களின் தேசிய அரசியல் உரிமைகளுக்காகத் தொடர்ந்து மக்களை அணி திரட்டிப் போராடுவோம். • தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகளின் ஆதரவைத் திரட்டுவோம்;• தமிழர்களின் அபிலாஷைகளை நிலைநாட்டுவதற்கு தமிழக மக்களின் உண்மையான ஆதரவையும் இந்திய அரசின் சரியான அனுசரணையையும் மீண்டும் உறுதிப்படுத்துவோம்;• தமிழர்களின் நியாயமான அரசியற் கோரிக்கைகளுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைத் திரட்டுவோம்.• யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களினதும் வாழ்வாதாரங்கள் மறு நிர்மாணம் செய்யப்படவும், வீடுகள், வீதிகள், பாடசாலைகள, ஆஸ்பத்திரிகள், ஆலயங்கள், நீர்ப்பாசனக் குளங்கள் துறைமுகங்கள் என அனைத்தும் செப்பனிடப்படவும் வேண்டி அரசை உரிமையோடு வலியுறுத்துவோம். • எமது தேசத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்கள் மீண்டும் நவீன நுட்பங்களோடு உயிரோட்டம் பெறவும், பல்வகைப்பட்ட தொழிற் துறைகள் மற்றும் வர்த்தகத் தறைகள் செழிப்படையவும் அத்துடன் எமது கடற்கரைகள் எங்கும் சுற்றுலாத்துறை விரிவுகொள்ளவும் ஆவன செய்வோம்.• சிறப்பு முகாம்களிலும் சிறைகளிலும் உள்ள அப்பாவி இளைஞர்களை விடுவிக்க நாம் வேண்டிய கோரிக்கைகளை முன்னெடுப்போம்.வடக்கு வலிகாமம் மக்கள் கடந்த 20 வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்: பெருந்தொகை குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் இராணுவ பாதுகாப்பு வலயங்களாக இன்னமும் உள்ளன. அவை உடனடியாக நீக்கப்படவும் அகதிகளான மக்கள் மீண்டும்; குடியேறவும் வேண்டியன செய்வோம்.• தமிழர் பிரதேசங்களின் முன்னேற்றங்களுக்காகவும் தமிழர்களின் வாழ்வில் செழிப்பு எழுச்சி பெறவும் மேலைத்தேச நாடுகளில் உள்ள இலட்சக்கணக்கான எமது சகோதரர்களின் வளங்கள் வந்தடைய வழிகள் செய்வோம். • இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் உதவிகள் எமது மக்களையும் பிரதேசங்களையும் தவறாது வந்தடைய அனைத்தும் செய்வோம்.• இலங்கை மக்கள் ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமைகளை தவறாது அங்கீகரிப்போம். ஆனால் தமிழர் தேசத்தில் அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கான முயற்சிகளை அங்கீகரிக்க மாட்டோம்.• தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் மீண்டும் ஒருங்கிணைந்து ஒரே மாநிலமாக நிமிர்ந்து நிற்க அனைத்து சக்திகளினதும் ஆதரவை அணிதிரட்டுவோம்;.• இலங்கை அரசு தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் பகிர்வு திட்டத்தை செயற்படுத்துவதற்கு இந்தியா காத்திரமான பங்களிப்பும், ஒத்தாசையும் வழங்க முடியும். அவற்றினை பெறுவதற்கு நாம் ஆவன செய்வோம்.• தமிழர்கள் மத்தியில் இன்னமும் நிலவும் சாதி ஒடுக்குமுறைகளை இல்லாதொழிக்கப் போராடுவோம்: சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்துக்காக அனைத்து முயற்சிகளையும் செய்வோம்.• தமிழர்கள் மத்தியில் உண்மையான ஒற்றுமை உருவாகுவதற்க உரிய முயற்சிகள் அனைத்தையும் மக்களின் ஆதரவோடு நேர்மையாக மேற்கொள்வோம்.• இலங்கையின் அனைத்து முற்போக்கு ஜனநாயக சமூக சக்திகளின் மத்தியில் புதிய ஐக்கிய முன்னணியொன்று எழுச்சி பெற அனைத்தும் செய்வாம்.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ்மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்; எனவே, இவ்வாறான எமது கட்சியின் வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை எமது கட்சியின் தேர்தற் சின்னமான மெழுகுதிரிக்கு நேரே அளித்து அவர்களை நீங்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தமிழர் வாழ்வில் விடிவுகள் பிறக்கமெழுகுதிரிக்கு உங்கள் புள்ளடிகள்ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு உங்கள் வாக்குகள்

Followers

Blog Archive