Thursday, August 5, 2010

பிரபா கணேசன். திகாம்பரம் அரசாங்கத்துடன் இணைந்தனர்.

Thursday, August 05, 2010
ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து ஆளுங் கட்சியூடன் இணைந்துள்ளனர்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி கண்டிப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினரான அப்துல் காதா; ஏற்கனவே அரசாங்கத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார்

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றுக்கொள்ள இன்னும் மூன்று அங்கத்தவா;களே தேவைப்படுகின்றனா; எனவூம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வரலாற்றில் முதற் தடவையாக 63 நீதிமன்றங்களை புதிதாக உருவாக்கியூளளதாக நீதியமைச்சர் அதாவூத செனவிரத்ன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்¨
Thursday, August 5, 2010
வழக்கு விசாரணைகளை வரலாற்றில் முதற் தடவையாக 63 நீதிமன்றங்களை புதிதாக உருவாக்கியூளளதாக நீதியமைச்சர் அதாவூத செனவிரத்ன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளு மன்றத்தில் நேற்று நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே நீதியமைச்சர் அதாவூத செனவிரட்ன இவ்வாறு தெரிவி த்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

நீதிமன்றங்களில் பெருந்தொகையாகக் குவிந்து கிடக்கின்ற வழக்குகளை இரண்டு வருடத்திற்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலதிக நீதிமன்றங்களை இரண்டு வருடங்களுக்கென மாவட்ட ரீதியில் அமைத்து தேங்கிக் கிடக்கின்ற வழக்குகளின் விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை காலம் உச்ச நீதிமன்றங்களில் மாத்திரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனித உரிமை தொடர்பான வழக்குகளை எதிர்வரும் காலங்களில் மாகாண மேன் முறையீட்டு நீதிமன்றங்களிலும் விசாரிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

வழக்கு விசாரணைகளின் தாமதம் மற்றும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் விசாரணைகளைத் துரிதப்படுத்தும் வகையில் 60 மேல் நீதிமன்ற நீதியரசர்களை நியமிப்பதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

எனினும் இத்தொகையை 75 ஆக அதிகரிப்பதற்கான திருத்தமே இச்சட்டமூலத்தினால் கோரப்படுகிறது. குவிந்து கிடக்கின்ற வழக்குகளைத் தீர்ப்பதற்காக வரலாற்றில் முதற் தடவையாக 63 நீதிமன்றங்களை புதிதாக உருவாககப்பட்டுள்ளது.

தொழில் நியாயாதிக்கச் சபைகளை சகல நகரங்களுக்கும் விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நீதவான்; நீதிமன்றங்கள் தற்போது அரை நாட்களே நடைபெறுகின்றன. இதன் நேரத்தை அதிகரிக்கவூம் நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும் சட்டமா அதிபர் சட்டத்தரணிகள் நீதிபதிகள் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடக்கும் வழங்குகளை இரண்டு வருடங்களுக்குள் முடிவூக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவூம் அமைச்சர் தெரிவித்தார்

Followers

Blog Archive