
Friday, October 7, 2011
புதிதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்களாகவும், தூதுவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ள நால்வர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று தங்கள் நியமனக் கடிதங்களைக் கையளித்தனர்.
இலங்கைக்கான நியூஸிலாந்தின் புதிய உயர்ஸ்தானிராக எவ்ரில் ஹெண்டர்சனும், மலேஷியாவின் புதிய உயர்ஸ்தானிகராக அஸ்மி நஸவுந்தின் ஆகியோர் தங்கள் நியமனக் கடிதங்களை இன்று கையளித்தனர்.
இலங்கைக்கான துருக்கி நாட்டின் புதிய தூதுவராக புரக் அக்பார் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஜோர்ஜியாவின் புதிய தூதுவராக சுரப் கட்ஷ்விலி நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளின் நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

Friday, October 7, 2011
இந்தியாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மீன்பிடி நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.
தேவேந்திரமுனை, மிரிஸ்ஸ, சிலாபம், பேருவளை பிரதேசங்களை சேர்ந்த இந்த கடந்த ஜூலை மாதம் 25 ஆம் 26 ஆம் திகதிகளில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக நாட்டில் இருந்து சென்றிருந்தனர்.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, இந்திய அதிகாரிகளினால் அவர்களை கைதுசெய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டுள்ள இந்த மீனவர்கள் தற்போது, இந்தியாவின் மகாபோதி மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.