Wednesday, June 9, 2010

அமைச்சர் றிசாத் பதியுதீனைச் சந்தித்தார் வியட்நாம் பிரதி அமைச்சர்.

Wednesday, 09 June 2010
கைத்தொளில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை, வியட்நாம் நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில் பிரதி அமைச்சர் டொன் லீ குஆங் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள மேற்படி அமைச்சில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள சூழலையடுத்து தமது நாடு இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆர்வத்துடன் உள்ளதாக பிரதி அமைச்சர் டொன் லீ குஆங், அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வணிகத்துறையில் இலங்கை, வியட்நாம் இருதரப்பு நாடுகளினதும் உறவை வலுப்படுத்தும் வகையில் எதிர்காலத்திலும் செயல்படுவது வரவேற்கக் கூடியதாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு தெரிவித்தார்.

கைத்தொழில், வர்த்தகம், கல்வி மற்றும் ஏனைய துறைகளில் வியட்நாம் தனது முதலீடுகளை செய்வதைத் தாம் பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஜனாதிபதி - தமிழக எம்பிக்கள் இன்று சந்திப்பு

Wednesday, 09 June 2010

டில்லி சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இன்று மாலை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கின்றனர். இதன்போது போரினால் இடம் பெயர்ந்துள்ள தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்துவர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ராஜபக்ஷ மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். இலங்கை பிரச்சினை குறித்து முக்கிய தலைவர்களைச் சந்தித்து அவர் பேசுவார்.

கடந்த 6ஆம் திகதி முதல்வர் கருணாநிதி, இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கும் வகையில், அவர்களைச் சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ராஜபக்ஷவிடம் வலியுறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்.

மேலும் இதுதொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டில்லி சென்று, ராஜபக்ஷவை நேரில் சந்தித்து வலியுறுத்த நடவடிக்கை எடுக்குமாறு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு அவர் உத்தரவிட்டார்.

முதல்வர் கருணாநிதியின் கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்த டி.ஆர்.பாலு, நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, ராஜபக்ஷவிடம் இலங்கை தமிழர்களை விரைவில் அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்த வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் முதல்வர் கருணாநிதி உத்தரவுபடி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கவிஞர் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், இ.ஜி.சுகவனம், ஆதிசங்கர், அப்துல்ரகுமான், ஆர்.செந்தாமரைச் செல்வன், ஜே.கே.ரித்தீஸ், எஸ்.ஆர்.ஜெயதுரை, ஏ.ஏ.ஜின்னா, வசந்தி ஸ்டாலின், மணிசங்கர் அய்யர், எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, பி.விஸ்வநாதன், மாணித்தாகூர், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், ஞானதேசிகன் ஆகியோர் இலங்கை அதிபர் ராஜபக்ஷவைச் சந்தித்து இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை தீர்க்குமாறு வலியுறுத்துவர் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசியல் தலைவா;கள் பலா; கைது!

Wednesday, 09 June 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்புத தொpவித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவா;கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரை தமிழ்நாடு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனா;.

தென்னிந்திய அரசியல்வாதிகளான வைகோ பழ. நெடுமாறன் தொல். திருமாவளவன் உட்பட திரைப்பட நடிகர்கள் இயக்குநர்கள் அடங்கலாக நூற்றுக் கணக்கானோர் நேற்று தமிழ் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டிருப்பவர்களில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சீமான் டி.ராஜேந்தர் மகேந்திரன் நல்லகண்ணு போன்றௌரும் அடங்குகின்றனர்.

தமிழகத்தில் சென்னையிலுள்ள இலங்கை உதவி உயர்ஸ் தானிகராலயம் இலங்கை வங்கி போன்ற பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இவ்வீதிகளும் மூடப்பட்டிருந்தன.

தமிழகத்தின் திருப்பூர் மயிலாடுதுறை சிவகங்கை கோவை காந்திநகர் நாகர்கோவில் கரூர் சென்னை ஓசு+ர் தேனி நாமக்கல் போன்ற பகுதிகளிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன,

Followers

Blog Archive