Monday, October 4, 2010

முப்பது வருடங்களின் பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும் எம்வசம்-பொலனறுவையில் ஜனாதிபதி!

Monday, October 4, 2010
முப்பது வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும் தற்போது எம் வசம் உள்ளன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொலனறுவைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலதிஸி மண்டபத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில் மக்களுக்கான சேவையை நிறைவேற்றும் போது நாம் கட்சி நிறம் என பேதம் பார்ப்பதில்லை.

வட மத்திய மாகாணத்தை உள்ளடக்கும் அனுராதபுரம் பொலனறுவை மாவட்டங்களின் மக்கள் தேவையை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இம்முறை வரவூ செலவூ திட்டத்தில் நிதி ஒதுக்குவதற்குத் தயாராகிவருகின்றௌம்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு மாவட்டத்தில் ஒரே கட்சியின் உறுப்பினர்கள் மட்டும் பாராளுமன்றத்தில் அமரும் காலம் இது. பொலனறுவை மாவட்டத்தில் ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த ஏர்ள் குணசேகரவூம் இப்போது எம்முடன் உள்ளார்.

முப்பது வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும் தற்போது எம் வசம் உள்ளன. பொலனறுவை மாவட்ட மக்கள் புலிகளிடமும் காட்டு யானைகளிடமும் சிக்கித் தவித்த காலகட்டங்களை நாம் மறக்கவில்லை. சிங்கப்பூரைப் போன்று 20 மடங்கு பிரதேசத்தைப் புலிகள் தம் வசம் வைத்திருந்தனர்.

கடற் பரப்பில் 3ல் இரண்டு அவர்களிடம் இருந்தது. இப்போது சகலதும் இணைக்கப்பட்டு ஒரே ஆட்சியின் கீழ் ஒரே கொடியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியாகவூம் ஐக்கியமாகவூம் வாழக்கூடிய சு+ழலை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது.

இந்த நிலைக்கு நாட்டைக் கொண்டு வருவதற்கு மதத் தலைவர்களும் மக்களும் வழங்கிய பங்களிப்புகள் அளப்பரியவை. அதற்காக அவர்களுக்கு நாம் நன்றிகூறுகின்றௌம்.

இப்போது எல்லைக் கிராமங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இம் மாவட்டம் அரசர்கள் ராஜதானிகளைக் கொண்டிருந்த மாவட்டமாகும். இங்கிருந்து முழுநாட்டிற்கும் அரிசி வழங்க முடியூம்.

விவசாய சமூகத்தின் சகல தேவைகளையூம் நிறைவேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தமது பிள்ளைகள் விடயத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.

பொலனறுவை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்குச் செல்வோரின் தொகை குறைவடைந்துள்ளதாக அறிய முடிகிறது. பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியை வழங்குவதில் பெற்றௌர் உரிய பங்களிப்பையூம் அர்ப்பணிப்பையூம் வழங்குவது அவசியமாகும்.

நாம் எத்தகைய அபிவிருத்திகளை மேற்கொண்டாலும் பிள்ளைகளை கல்வியிலும் ஒழுக்கத்திலும் முன்னேற்றாவிடில் பயனில்லை. பிள்ளைகள் போதைக்கு அடிமையாகாமல் நல்வழியில் செல்ல பெற்றௌர்களும் அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படவேண்டும். குறிப்பாக பெற்றௌர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகத் திகழவேண்டும் எனவூம் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

விடிவின் இன்னுமொரு பரிமாணம்!

Monday, October 4, 2010
இற்றைக்கு சுமார் ஒரு வருட காலத்துக்கு முன்னர் தலை நகரில் நடமாடுவதென்பது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடுவதற்கு ஒப்பானது. எந்த நேரத்தில் எந்த இடத்தில் என்ன மாதிரியான குண்டு வெடிக்கும் என்ற பீதி மக்களை ஆட்கொண்டிருந்த காலம் அது. தலை நகரில் மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் எந்தப் பாகத்தையும் இந்தப் பீதி விட்டுவைக்கவில்லை. குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நடமாடும்போது ஒன்றில் கால்களை இழக்க நேரிடும் நிலை அல்லது உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையே காணப்பட்டது.

சுமார் மூன்று தசாப்தங்கள் நீடித்த இந் நிலையை முற்றாக மாற்றி மக்கள் இன்று எந்தப் பீதியுமின்றி பருத்தித் துறை முதல் தேவேந்திர முனை வரையான முழு இலங்கைத் தீவிலும் சுதந்திரமாகவும் உயிருக்கான உத்தரவாதத்துடனும் நடமாடக் கூடிய நிலையை மிகக் குறுகிய காலத்துக்குள் வெற்றிகரமாகத் தோற்றுவித்து இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து நிற்கும் உதாரண புருஷரான நம் நாட்டின் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலப் பகுதி இந் நாட்டு வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காலப்பகுதியாகும்.

அத்தோடு மட்டும் நின்று விடவில்லை நமது ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்து உலகுக்கு ஆச்சரியமூட்டும் பல நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார். அவ்வகையான ஒரு நிகழ்வுதான் அன்மையில் வவுனியா கலாசார மண்டபத்தில் நடந்தேறியது. அதாவது உலகின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கம் என்று வர்ணிக்கப்பட்ட எல்ரீரீஈ இயக்கத்தின் முன்னாள் அங்கத்தவர்களை போர்க் கைதிகளாகப் பிடித்து சித்திரவதைக்குட்படுத்துவதற்கு மாறாக புனர்வாழ்வு நிலையங்களில் அவர்களுக்கு துறைசார் தெழிற் பயிற்சிகளை வழங்கியது மாத்திரமன்றி தொழிற் சந்தையில் இலகுவாக அவர்கள் தொழில் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் சுய தொழில் செய்ய இருப்பவர்களுக்கு இலகு வட்டியுடனான கடனாக இரண்டரை லட்சம் ரூபாக்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு புனர்வாழ்வு நிலையங்களில் தொழிற் பயிற்சி பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சுமார் 403 பேர் கடந்த 30ஆம் திகதி காலை பத்து மணியளவில் வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் அவர்களது பெற்றௌர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வாறான நிகழ்வொன்று இடம்பெற்றது உலகிலேயே இலங்கையில்தான் முதன்முறையாகும்.

இவ்வாறு தம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் எல்ரீரீஈ அங்கத்தவர்கள் பலர் கருத்து வெளியிடுகையில் “தாங்கள் புது மாத்தளனில் வைத்து கைது செய்யப்பட்டபோது இதன் பிறகு எமக்கென்றொரு எதிர்காலமில்லை மரணம்தான் எமது முடிவாக அமையப் போகிறது என்று நினைத்த எமக்கு ஆச்சரியமூட்டும் வகையில் எந்தவிதமான சித்திரவதைகளும் செய்யாமல் சிறைகளில் கூட எம்மை அடைத்து வைக்காது புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைத்து தொழிற் பயிற்சிகள் வழங்கியது மாத்திரமன்றி தொழிற் சந்தையில் இலகுவாக தொழில்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தந்ததுடன் சுய தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு கடன் வழங்கி ஒளிமயமான எதிர்காலமொன்றை எமக்கு ஏற்படுத்த இந்த அரசாங்கத்துக்கு என்றென்றும் நன்றிக்குரியவர்களாக இருக்க நாங்கள் கடமைப்பட்டவர்கள்” என்று தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ குணசேகர பிரதியமைச்சர், விஜிதமுனி சொய்சா ,அரச மற்றும் இராணுவ உயரதிகாரிகள் பெற்றோர்கள் பொது மக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Followers

Blog Archive