Friday, October 8, 2010

ராதாகிருஷ்ணன் மலையக மக்கள் முன்னணியில் இணைந்தார்.

Friday, October 8, 2010
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் கங்கிரஸின் உப தலைவருமான வீ. ராதாகிருஷ்ணனுக்கும் தமக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிந்ததாக மலையக மக்கள் முன்னணியின்; தலைவர் சாந்தினி தேவி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இந்த பேச்சு வார்த்தை இன்று இடம்பெற்றது.

இதன் போது, உயர் பதவி ஒன்றுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணனை தமது கட்சியில் இணைத்துக் கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மலைகய மக்கள் முன்னணியின் தலைவி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்படவுள்ள பதவி குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளாh.

இதேவேளை இது தொடர்பாக எமது செய்தி சேவை நாடாளுமன்ற உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணனை வினவிய போது, பேச்சுவர்த்தை வெற்றியளித்ததாக தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியால் வழங்கப்பட போதும் உயர் பதவியை ஏற்றுக் கொள்ள தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருதலைப்பட்சமான தமிழ் ஈழப் பிரகடனம் என்னால் மேற்கொள்ளப் படவில்லை–முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள்.

Friday, October 8, 2010
ஒருதலைப்பட்சமான தமிழ் ஈழப் பிரகடனம் என்னால் மேற்கொள்ளப் படவில்லை–முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள்.

நேர்காணல் :

முதலாவதாக வடகிழக்கு மாகாணசபைக்கு என்ன நேர்ந்தது? அபகீர்த்தியான ஒருதலைப் பட்ச சுதந்திரப் பிரகடனத்துக்கு வழி கோலியது எது?

முதலில் மாகாணசபைகளின் உருவாக்கத்துக்கு வழியமைத்தது எது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவை இந்திய - ஸ்ரீலங்கா உடன்படிக்கைப் பிரகாரம் இன மோதல்களுக்கு ஒரு தீர்வு காண்பதற்காக 13 வது திருத்தத்தின் மூலமாக நிறுவப் பட்டவை. ஆனால் மாகாணசபைகளின் தேர்தல்கள் தெற்கில் மட்டுமே நடத்தப் பட்டன. நாங்கள் தேர்தல் எங்களுக்கும் தேவை என வற்புறுத்தினோம். ஏனெனில் மக்களால் தெரிவு செய்யப் பட்ட பிரதிநிதிகள் இங்கு இல்லாதபடியால் அதைப் பயன் படுத்தி புலிகள் தாங்கள் மட்டுமே மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனத் தெரிவித்தார்கள்.

நான்அரசாங்கத்திடம் தெரிவித்தேன்,மக்கள் மற்றொரு குழவினரை அதிகாரத்துக்கு தெரிவு செய்தால் அவர்களால் அப்படிச் சொல்ல முடியாது என்று.இறுதியாக ஜே.ஆர்.1988 நவம்பரில் தேர்தல்களை நடத்துவதற்குச் சம்மதித்தார். எனது அரசாங்கம் 1988 டிசம்பரில் உருவாக்கப் பட்டது.இதன் சில மாதங்களின் பின்னர், ஜே.ஆர். இன் பதவிக் காலம் முடிவடைந்து பிரேமதாஸ பதவிக்கு வந்தார்.

பிரேமதாஸ 13 வது திருத்தத்தைப் பலப்படுத்தப் போவதாகச் சொன்ன போதிலும், ஜனாதிபதியாகப் பதவி ஏற்றவுடனேயே மாகாணசபை முறைகளுக்குக் குழி பறிக்கத் தொடங்கினார்.அ ரசாங்கத்துடனும், எதிர்கட்சித் தலைவர்களுடனும், இந்திய அரசு அதிகாரிகளுடனும் அதிகாரப் பரவலை முன்னகர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த என்னால் இயன்ற மட்டும் முயற்சித்தேன். ஆனால் எவருமே அதிகாரப் பரவலாக்கத்தில் ஆர்வம் காட்டவில்லை.அத்துடன் பிரேமதாஸ தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கூட்டுச் சேர்ந்து மாகாணசபை முறைகளுக்குக் குழி பறிக்க ஆரம்பித்தார். புலிகளும், ஸ்ரீலங்கா இராணுவமும் ஒருவருக்கொருவர் உதவத் தொடங்கினார்கள்.எங்கள் இயக்கத் தோழர்கள் கொலை செய்யப்படலானார்கள்.எங்கள் இயக்கம் வெட்டிக் குறைக்கப் படலாயிற்று.எங்களின் நாட்கள் முடிவுக்கு வரத்தொடங்கி இருப்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். அதனால் ஒரு போராட்டத்துடனேயே வெளியேறுவதற்கு முடிவு செய்தோம்.

1987க்கு முன்பு நாங்கள் ஆயதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.ஆனால் இந்தோ-லங்கா உடன்படிக்கையின்படி நாங்கள் எங்களின் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு வன்முறையற்ற நீரோட்டத்தில் கலந்து கொண்டோம்.ஆனால் எங்களுக்கு இந்திய ஸ்ரீலங்கா அரசுகளால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காப்பாற்றப் படவில்லை.எனவே இறுதியாக எனது கட்சியும், மாகாணசபையின் பெரும்பான்மையோரும் எங்கள் இறுதிக் கோரிக்கைகளை முன்வைக்க யோசித்தோம். நாங்கள் 19 அம்சக் கோரிக்கைகளை உருவாக்கி அதை மாகாணசபையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றினோம்.மேலும் இதை இந்திய ஸ்ரீலங்கா அரசுகளுக்கும் அனுப்பி வைத்தோம்.ஆனால் யாரும் எங்கள் 19 அம்சக் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கவில்லை.இந்தக் கோரிக்கைகள் பெடரலிசம் எனப்படும் கூட்டு ஒருங்கிணைப்பைக் கூட கொண்டிருக்கவில்லை எல்லாமே ஒற்றையாட்சி முறைக்குள் அடங்கியிருந்தன. 19 அம்சக் கோரிக்கைகளுக்கு பலம் சேர்ப்பதற்கு வேண்டி நாங்கள் ஒரு எதிர்க்கோரிக்கையையும் இணைத்திருந்தோம்.அரசாங்கம் எங்களின் இந்தக் கோரிக்கைகளை ஏற்று ஒரு வருடத்துக்குள் நடைமுறைப் படுத்தாவிட்டால்,நாங்கள் பிரிந்து போகத் தீர்மானித்துள்ளோம் என்பதே அது.

தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தைப் பற்றி நாங்கள் நன்கு அறிந்திருந்த போதிலும் 19 அம்சக் கோரிக்கைகள் பற்றி எதுவும் அறிந்திருக்க வில்லை.எப்படியாயினும் பார்வையின் பின்னணியில் அந்த எதிர்க் கோரிக்கை ஒரு பாரதூரமான தவறு…..?

நல்லது. என்ன நடந்ததென்றால் நாங்கள் செய்ததைப் பற்றி மிகத் தீவிரமான ஒரு விரிவரன விளம்பரப் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது.ஜனாதிபதி பிரேமதாஸ மற்றும் பிரபாகரன், இந்த இரண்டு ‘பிக்களும் சேர்ந்து மிகவும் திறமையாகவும் கூர்மதியுடனும் பெருமாள் தன்னிச்சையாக ஈழத்தைப் பிரகடனப் படுத்தி விட்டார் என வெளியுலகிற்கு பரப்பினார்கள்.அது உண்மையில்லை.எனது பிரகடனம் 19 அம்சக் கோரிக்கைகளே.இன்றும் முழுச் சிங்கள தேசமும் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தில் என்னைக் கூட்டுச் சேர்க்கிறதேயன்றி எனது 19 அம்சக் கோரிக்கைகளைப் பற்றி எவரும் பேசுவதில்லை.

நான் நினைக்கிறேன் சரித்திரம் உங்களின் கேள்விக்கு ஏற்கனவே பதில் சொல்லி விட்டது என்று. பிரேமதாஸவும் புலிகளும் சேர்ந்து எங்களை நாட்டை விட்டு வெளியே வீசுவதில் வெற்றிகண்டிருந்த போதிலும் நாங்கள் வெளியேறும் முன் அரசாங்கத்தை எச்சரித்திருந்தோம்,இரத்தம் சிந்துவதற்கும் துன்பம் பெருகுவதற்குமான ஒரு அத்தியாயத்திற்கு அவர்கள் கட்டியம் கூறுகிறார்கள் என்று.பயங்கரவாதிகள் பக்கம் சார்ந்து ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி மீது தாக்குதல் நடைபெறக் காரணமாக இருந்த அரசாங்கம் ஒரு தீய உதாரணத்தைத் தந்தது. எப்படியாயினும் பிரீமதாச புலிகளுடனான தேனிலவு நீண்டகாலம் நிலைத்திருக்கவில்லை. நான் ஒன்றைப் பற்றி மிகவும் மனவேதனைப் படுகிறேன் பிரேமதாஸ ஒரு சிறிய அளவிலேனும் எங்களுடன் ஒத்துழைத்திருந்தால் 1990 களுக்குப் பிறகு நாங்கள் இழந்த மிக அதிகளவிலான 200,000 உயிர்களையும் இந்த நாடு காப்பாற்றி இருக்கலாம்.இது சிங்களத் தலைவர்களின் தெiலை நோக்கப் பார்வையின் குறைவினால் ஏற்பட்டது.

19 அம்ச பிரேரணைகளைப் பற்றி விபரிக்க முடியுமா?

இந்திய - ஸ்ரீலங்கா உடன்படிக்கையின் நறுமணம் அரசியலமைப்பில் எதிரொலிக்க வேண்டுமென நாங்கள் கூறினோம்.13 வது திருத்தம் ஒரு நல்ல சட்டவாக்கம் அல்ல.அது முறையான அதிகாரப் பகிர்வினைத் தடைசெய்து மத்தியினை நோக்கியே சகலதையும் வழி நடத்துகிறது.மற்றோர் முக்கிய அம்சம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஆயதப் படைகளில் இணைத்து நாட்டின் மக்கள் தொகையியலை அதில் பிரதிபலிக்கச் செய்தல்.அப்போது ஒரு விகிதத்திலும் குறைவான தமிழர்கள் கூட பாதுகாப்புப் படையில் இருக்கவில்லை. அதே நிலமைதான் இன்றும் கூட. நாங்கள் மேலும் வடக்கு கிழக்கினை மீள் எல்லை வரையறை செய்ய விரும்பினோம்.மாகாணங்களின் பல மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இருந்தன.அவர்கள் தங்கள் பாதுகாப்பில் கவலை கொண்டிருந்தார்கள்.அவர்களின் கவலை சட்டபூர்வமானதென்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.அவர்களின் அச்சத்தைப் போக்க எல்லை வரையறைகள் அவசியம் என்பதை உணர்ந்தோம். வடக்கு கிழக்கு மாகாணங்களின் எல்லைப் பகுதிகளில் அமைந்திருக்கும் அதிகளவான சிங்களக் குடியேற்றங்கள் அருகிலிருக்கும் சிங்கள மாகாணங்களுடன் இணைக்கப் படவேண்டும் அதாவது திருகோணமலையிலுள்ள சிங்களக் குடியேற்றங்கள் பொலன்னறுவையுடனும் அம்பாறையிலுள்ளவை, மொனராகலையுடனோ அல்லது அம்பாந்தோட்டையுடனோ இணைக்கப் படுதல்.எனவே பெரியளவு சிங்கள மக்கள் தொகை சிங்கள மாவட்டங்களுடன் இணைக்கப் பட்டு விடும்.

நீங்கள் 1990 களில் நாட்டை விட்டு வெளியேறினீர்கள்.இந்த 20 வருடங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.எது உங்களைத் திரும்பி வரத் தூண்டியது?

நான் 1990 ம் ஆண்டில் நாட்டைவிட்டு வெளியேறினேன்.ஏனெனில் இங்கு வாழ்வது பாதுகாப்பாக இருக்கவில்லை. அத்தோடு பிரேமதாஸவின் மரணத்தின் பின்பு ஐக்கிய தேசியக் கட்சியின் கீழில் என்னால் திரும்பி வரமுடியவில்லை.பிறகு சந்திரிகா பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்தார் நான் அவருடன் பேசினேன் ஆனால் அங்கிருந்து சாதகமான ஒரு மறுமொழி கிட்டவில்லை.1998லேயே அவர் சம்மதம் தெரிவித்தார்.இங்கு நான் கருதுவது என்னவென்றால் எந்தவிதமான சட்டக் காரணங்களும் எனது வருகையை தடை செய்யவில்லை, ஆனாலும் அங்கு புலிகளிருந்தார்கள். எனக்கு பாதுகாப்பு தேவையாகவிருந்தது. பாதுகாப்பு அதை அரசாங்கத்தினால் மட்டுமே வழங்க முடியும்.1999 ஜனவரியில் நான் திரும்பி வந்தேன். அதிகாரப்பரவலாக்கத்தை சந்திரிகா பண்டாரநாயக்கா வெளியிடுவார் என நான் நினைத்தேன்,அவரது மறுசீரமைப்புகளுக்கு நாம் ஆதரவாகவிருந்தோம்.ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி,மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன அதை எதிர்த்தன.

2002ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கா பிரபாகரனோடு ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தார் அத்தோடு இந்த நாடு பயங்கரவாதிகளின் பிடியிலானது.எனது பாதுகாப்பு நீக்கப் பட்டது, எனது வீட்டைச்சுற்றிலும் புலிகளின் ஆதரவு பாராளுமன்ற அங்கத்தவர்கள் குடியிருந்தனர். புலி அங்கத்தினர்கள் எவ்வித தடையுமின்றி அடுக்கு மாடிவீடுகளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இந்தியாகூட எனது பாதுகாப்பைக் குறித்து எனக்கு எச்சரிக்கை செய்தது,திரும்பவும் நான் நாட்டைவிட்டு 2003ல் வெளியேற வேண்டியதாயிற்று.போர் முடிவடைந்த பின்பு பாதுகாப்பு பற்றிய பிரச்சனை அவ்வளவாக முக்கியம் பெறவில்லை.நான் இங்கேயே வேலை செய்யமுடியும் என நினைக்கிறேன்.ஆனால் நான் அரசாங்கத்துடனோ எதிர்கட்சியுடனோ சேரப்போவதில்லை.நான் திரும்பவும் எனது சொந்தப் பாதையைச் செதுக்குவேன்.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மிக முக்கியமான பிரச்சனை மீள்குடியேற்றம்.மக்கள் முறையாக மீள்குடியமர்த்தப் படவில்லை. மககளிடம் எதுவுமே இல்லாதிருக்கும் போது,ஒரு சில கூரைத்தகடுகளும் சிறிதளவு பங்கீட்டு உணவுப் பொருளும் மக்களுக்கு போதுமானதாக இல்லை.அரசாங்கமும் சர்வதேச சமூகங்களும் அவர்கள் தங்கள் வாழ்க்கையும் தொழில்களையும் மீளக்கட்டி எழுப்புவதற்கு தாராளமனமுள்ள உதவிகளைச் செய்யவேண்டும்.

அரசாங்கத்துக்கும் குடியியல் அமைப்பு நிறுவனங்களுக்கும் இடையில் கூட்டுச் செயற்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது.அரசாங்கம் தனது சொந்தப் பொறிமுறைகளைக் கொண்டே சகலதையும் செய்வதற்கு எத்தனிக்கிறது, ஆனால் அவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளும் தேவை, ஏனெனில் அவர்களுக்கு மக்களுடன் நல்ல தொடர்புகள் இருக்கின்றன.அரசாங்கம் அவைகளைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.தனது சொந்த நிருவாகப் பொறிமுறையில் மட்டும் தங்கியிருக்கக் கூடாது, ஏனெனில் அது கடந்த 20 வருடங்களாக புலிகளினால் சீரழிக்கப் பட்டு விட்டது.பல நிருவாக அலுவலர்களும் பிரபாகரனின் புகைப்படத்தை தங்கள் அலுவலகங்களில் தொங்கவிட்டு புலிகளுடன் இணைந்து வேலை செய்தவர்கள்தான்.அவர்கள் இப்போது அதை மறுபக்கமாகத் திருப்பி விட்டிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அதே ஆட்கள்தான்.

வரப்போகும் வடமாகாணசபைத் தேர்தல்களில் அல்லது உள்ளுராட்சித் தேர்தல்களில் போட்டியிடும் திட்டம் ஏதாவது உங்களிடம் உள்ளதா?

மிகவும் முக்கியமான விடயம் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (PநுPசுடுகு.) கட்சியினைப் புனரமைப்பதே. இக் கட்சி வரப்போகும் தேர்தல்களில் போட்டியிடும் ஆனால் நான் போடடியிடுவது பற்றி இன்னமும் தீர்மானிக்க வில்லை,அது சார்ந்திருக்கிறது. எனது முக்கிய கவனம் யாவுமே எனது கட்சியும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அதிகாரப் பரவலாக்கத்தையும் அடித்தளமாகக் கொண்டு எல்லாத் தமிழ் கட்சிகளிடையேயும் ஒருமனதான ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதுமே.நாங்கள் அதிகளவில் இன்னமும் சோஸலிஸ வாதிகள்தான் ஆனால் அது உடனடி நிகழச்சி நிரலில் இல்லை.இந்த நாட்டுக்கு முதல்தேவை இன்னமும் தீர்க்கப் படாதிருக்கும் இனமோதல்களை தீர்த்து வைப்பதே அது தீர்வடையும் போது சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமான இடையிலான புரிந்துணர்வு நிச்சயம் வளரும். அது ஐக்கியமான கட்சியினை உருவாக்கும் தளமாக அமையும்.

ஸ்ரீலங்காவில் தற்போதுள்ள அரசியல் விவகாரங்களைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்களா?

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதிகாரப் பரவலாக்கத்தை தனது நிகழச்சிநிரலின் மிக அடியில் போட்டு விட்டார். அவர் நினைக்கிறார் அவர் ஏற்கனவே நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி விட்டதால் அபிவிருத்தி மட்டுமே எல்லாவற்றுக்குமான தீர்வினைத் தந்து விடும் எனறு. அந்த எண்ணம் தவறானது.அபிவிருத்தியானது ஜனநாயகத்துடனும் அதிகாரப் பரவலாக்கத்துடனும் கையோடு கை சேர்;த்து நடைபோட வேண்டும். அதிகாரப் பரவலாக்கமில்லாது மக்களின் ஜனநாயக அபிலாசைகள் நிறைவடைந்து விடாது. அதிகாரப் பரவலாக்கமில்லாது அபிவிருத்தியை அடைந்து விட முடியாது,ஏனெனில் அரசியல் ஐக்கியம் அதிகாரப் பரவலாக்கத்திலேயே தங்கியுள்ளது எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதிகாரப் பரவலாக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சமமான பங்களிப்பை வழங்க வேண்டும்.

நீங்கள் சொல்கிறீர்கள் நாட்டுக்கு இன்னும் அதிகளவிலான அதிகாரப் பரவலாக்கல் தேவை என்று,ஆனால் அரசியலமைப்பின் 18வது திருத்தம் அதிகாரங்களை ஒருமுகப் படுத்துவதற்கே வழி நடத்துகிறதே?

ஆம். எல்லா அதிகாரங்களும் ஒரு ஆளையே மையமாகக் கொண்டு சுற்றி நிற்கின்றன. இது எல்லா அதிகாரங்களையும் ஒரு மந்திரி சபைக்கு ஒருமுகப்படுத்துவதை விட மோசமானது. குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு இவ்வளவு அதிகாரங்களையும் ஒரு ஆளிற்கே வழங்குவது, மிகவும் ஆபத்தானது.ஆனால் நாங்கள் காலவரையின்றி இதை ஒருவருக்கே வழங்கியுள்ளோம். அப்படிப்பட்ட மனிதர் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதில் ஒருபோதும் மகிழ்ச்சியடைய மாட்டார். எனவே 18வது திருத்தம் அதிகாரத்தைப் பன்முகப் படுத்துவதற்கும் பரவலாக்குவதற்கும் முட்டுக்கட்டை போடுகிறது.

என்ன சாதகங்களை நீங்கள் காண்கிறீர்கள்? போர் முடிவடைந்து விட்டது.நீங்கள் மீண்டும் அரசியற்களத்தில் இறங்க முடியும் இதையிட்டு நீங்கள் மகிழச்சியடைகிறீர்களா?

எங்களிடம் இன்னமும் ஜனநாயகம் இருக்கிறது. நம்பகமாக சீக்கிரத்தில் அது ஒரு இராணுவ ஆட்சியாக முறுக்கடைந்து விடாது.அத்துடன் தமிழர்கள் யாருக்கும் பிரிவினை தேவையில்லை.பிரிவினைக்கான அவா முடிவடைந்து விட்டது. ஆனால் அது ஒரு சாதகமான அரசியல் முறையாக மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது.ஆனால் அரசியல் முறைகள் விருத்தி செய்யப் பட வேண்டும்.ஏதோ தேர்தல்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து விடுவதால் மட்டும் அரசியல் நாகரிகம் ஜனநாயகமாகி விட்டது என்கிற கருத்தாகி விடாது.இந்தப் பிரச்சனைகளில் எம்மை ஈடுபடுத்திக் கொள்ளாவிட்டால் வருங்காலங்களில் அதிகப் பிரச்சனைகள் தோன்றக் கூடும்.

ஒருகாலத்தில் வடகிழக்கு மாகாணசபையில் உங்களின் கீழ் அமைச்சராக இருந்த தயான் ஜயதிலகா உடன் இன்னமும் நீங்கள் தொடர்புகளை பேணி வருகிறீர்களா?

அவர் ஒரு அரை நாள் அமைச்சர். அவர் மதியம் அமைச்சராகச் சத்தியப் பிரமாணம் செய்தார்,பிற்பகலில் வடகிழக்கை விட்டுப்புறப்பட்டார்,பின்பு திரும்பி வரவேயில்லை.ஆனால் அவர் அந்தப் பதவியை மதிப்புக்காக இன்னமும் பயன் படுத்துகிறார்.அவர் வடகிழக்கை விட்டுப் புறப்பட்ட போது விஜயகுமாரதுங்கவின் சித்தாந்தத்துக்கமைவான வேலைகளைத் தொடரப்போவதாக கூறிச் சென்றார்;. ஆனால் கொழும்பை அடைந்ததும் ஜனாதிபதி பிரேமதாஸ உடன் இணைந்து கொண்டார்

எனக்கு அவருடன் தனிப்பட்ட எதிர்ப்பு எதுவுமில்லை.ஆனால் நாங்கள் வடகிழக்கில் செய்தவைகளை அவர் விமர்சிக்கும் விதத்தில் எனக்கு அத்தனை மகிழச்சியில்லை. அந்த நாட்களில் நாங்கள் செய்தவைகளை எல்லாம் புகழ்ந்து தள்ளியவர் 10 வருடங்களின் பின் சொல்கிறார் நாங்கள் செய்தவைகள் எல்லாம் பிழையானவை என்று.அவர் இதை ஏன் செய்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் அவைககளை அப்போதே ஏன் எதிர்க்கவில்லை.அவர் ஒரு செழுமையான எழுத்தாளர்,எந்தக் கருத்தரங்கிலும் ஆர்வத்துடன் பஙகு பற்றுபவர். ஆனால் அவர் பார்வையின் தெளிவு மிகக் குறைவு.

(நன்றி: லக்பிம நியூஸ்) தமிழில்: எஸ்.குமார் (தேனீக்கான மொழிபெயர்ப்பு)

பொன்சேகாவின் எம்.பி. பதவி வெற்றிடம்; பாராளுமன்ற செயலாளர் அறிவிப்பு.

Friday, October 8, 2010
ஜனநாயகத் தேசிய கூட்டமை ப்பு கொழும்பு மாவட்ட எம். பி. சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம்மிக தசனாயக்க நேற்று (7) தேர்தல் ஆணை யாளருக்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 66-டீ சரத்தின் பிரகாரம் இந்த பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். மேற்படி சட்டத்தின்64-ளி சரத்தின் படி பாராளுமன்ற பதில் செயலாளர் இதனை அறிவித்து ள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவு க்கு 30 மாத கடூழிய சிறைத்தண் டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதற்கு முப்படைகளின் தளப தியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் 29ம் திகதி அங்கீகாரம் வழங்கினார். இதனடிப்படையில், பொன்சேகாவுக்கு எதிரான தண்டனை 30 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டதோடு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சரத் பொன்சேகாவின் வெற்றிடத்திற்கு கொழும்பு மாவட்டத்தில் இருந்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு பட்டியலில் அடுத்ததாக உள்ள லக்ஷ்மன் நிபுனஆரச்சி நியமிக்கப்பட உள்ளதாக அறியவருகிறது.

இதேவேளை, சரத் பொன்சேகாவின் எம். பி. பதவி வெற்றிடமாக இருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் அறிவித்திருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் பிரியங்கா ஜயரட்ன, அரசியலமைப்பின் பிரகாரம் சட்டபூர்வமாகவே பாராளு மன்ற செயலாளர் அறிவித்துள்ளதாகக் கூறினார்.

Followers

Blog Archive