Saturday, August 21, 2010

இலங்கை மீனவர் 42 பேர் இந்தியாவிலிருந்து திரும்பினர்,

Saturday, August 21, 2010
தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கைக் கடற்றொழிலாளர் 42 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் பயணித்த 9 படகுகள் இதுவரை இலங்கையை வந்தடைந்துள்ளதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

26 கடற்றொழிலாளர்களை ஏற்றிய 5 படகுகள் நேற்றுப் பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக அமைச்சு கூறுகிறது.

ஏற்கனவே 16 கடற்றொழிலாளர்கள் 4 படகுகளில் கடந்த 16 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

தமிழகக் கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள ஏனைய மீனவர்களையும் விடுவிப்பதற்குத் தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு கூறுகிறது.

Followers

Blog Archive