Friday, June 18, 2010

யாழ்ப்பணத்தில் தியாகிகள் தினம்==லண்டனில் தியாகிகள் தினம்=ஜேர்மனியில் தியாகிகள் தினம்== கனடாவில் தியாகிகள் தினம்==சுவீஸில் தியாகிகள் தினம்=சென்னையில்

Friday, 18 June 2010
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் நிறுவனர் தோழர் பத்மநாபா உட்பட கொல்லபட்ட தோழர்களை நினைவு கூறும் நிகழ்வு
20 வருடங்களுக்கு முன்னர் சென்னை சூளைமேட்டில் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் செயலாளர் நாயகம் க.பத்மநாபா உள்ளிட்ட 12 பேரின் நினைவுதினம் எதிர்வரும் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப் படவில்லை வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமள் தெரிவித்துள்ளார்.

Friday, 18 June 2010
இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள போதிலும், 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமள் தெரிவித்துள்ளார்.
13 அவது திருத்தச் சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து ஆராய்வதற்கு நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரே பாய்ச்சலில் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ள முடியாது எனவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வலுவான மக்கள் ஆணை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரப் பகிர்வினை மேற்கொள்வதற்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றமை இயல்பான நிலைமையே, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலேயே மாற்றுக் கருத்துக்கள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பிலான முனைப்புக்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் எனவும், அதற்கு தமிழ் மக்கள் சரியான முறையில் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் முன்னாள் தலைவர் பத்மநாபாவின் 20 ஆவது நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளும் நோக்கில் வரதராஜ பெருமாள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

படை வீரா;கள் போன்று நாட்டுக்காக தியாம் செய்ய அரசாங்க ஊழியா;களும் முன்வர வேண்டும்!

Friday, 18 June 2010
தேசிய வெற்றி விழா வைபவத்தில் ஜனாதிபதி கோரிக்கை
இரண்டு இலட்சம் படை வீரா;கள் கடந்த 4 வருடங்களாக ஊணின்றி உறக்கமின்றிச் செய்த தியாகத்தின் காரணமாகவே நாம் கொடிய பயங்கர வாதத்தைத் தேற்கடித்து உலக அரங்கில் நிமிh;ந்து நிற்கிறௌம்.
இதேபோன்றதொரு தியாகத்தை எமது அரசாங்க ஊழியா;களும் செய்வாh;களானால் ஆசியாவிலேயே ஆச்சரிய நாடாக எமது இலங்கையை மாற்றியமைக்க முடியூம் என்பது எனது நம்பிக்கை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடித்ததன் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வெற்றி விழா மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு இன்று கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே அவா; இவ்வாறு கூறினாh;. இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது.

வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட யூத்தத்தின்போது ஆயூதங்களைக் களைந்துவிட்டு வெள்ளைக்கொடியூடன் சரணடைந்த புலிகளை இராணுவத்தினர் கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு நாட்டிற்கு இழைக்கப்படும் பாரிய துரோகமாகும்
எமது தாய் நாட்டை பழிவாங்கும் கொடூர எண்ணம் படைத்தவா;களே எமது படை வீரா;கள் மீது இவ்வாறான அபாண்டத்தைச் சுமத்துகின்றனா;.
எமது உள்நாட்டுப் பிரச்சினைகளை நாமே தீh;த்துக்கொள்வோம். இதில் வெளிநாட்டவார்கள் தலையிட நாம் அனுமதியோம்.
பயங்கரவாதத்தின் கொடூரத்தை அனுபவித்த நாடுகளில் இலங்கையா;களின் பங்கு துயரம் மிக்கது. பயங்கரவாதத்துக்கு எந்த நாடுகள் துணைபோகின்றனவோ அந்த நாடுகளே பயங்கரவாதத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன.

படையினரின் உயித்தியாகங்கள் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் அடைந்த வெற்றியின் பிரதிபலன்களை வடபகுதி மக்கள் அடைந்து மகிழ்வடையவேண்டும். அதற்கான ஆக்கபூHவ நடவடிககைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இவ்வருட இறுதிக்குள் யூத்தத்தால்; சிதைவடைந்த வடக்குப் பகுதி முழுவதும் வழமைக்குத் திரும்பிவிடும் என எதிபார்க்கிறேன்.
கடந்த 30 வருட காலப் போராட்டத்தின் காரணமாக நாம் நாட்டைப் பரிவினையில் இருந்து விடுவித்துள்ளோம். இனியூம் இந்த நாட்டைப் பிளவூபடுத்த எவருக்கும் இடமளியோம்.

எமது நாட்டு மக்கள் யூத்தம் காரணமாக இழந்த அனைத்தையூம் மீண்டும் பெற்றுக்கொள்ள மஹிந்த சிந்தனை மூலம் வழியேற்படுத்தியூள்ளோம்.
வீரம் என்பது வெளிநாடுகளிலிருந்து தருவிக்கும் பொருளல்ல. அது எமது சரித்திரத்துடனும் எமது சம்பிரதாயத்துடனும் பிண்ணிப் பிணைந்தது.

நாட்டிலுள்ள சகல இன மக்களையூம் ஐக்கியப்படுத்தும் நோக்குடனேயே இந்த தேசிய விழா கொண்டாடப்படுகின்றது. வெளிநாடுகளின் நிபந்னைகளுக்கு அடிபணிந்து எமது சுதந்திரங்களைப் பறிகொடுத்து உதவிகளைப் பெற நாம் தயாரில்லை.
நாட்டுக்காக நாம் இரத்தமும் கண்ணீரும் சிந்துவதைத் தவிக்க முடியாது. இவ்வாறான தியாகங்கள் மூலம் இந்த நாட்டில் அண்மைக் காலத்தில் சூரஇவீர சரித்திரம் படைத்தவா;கள் எமது படையினா;. அவார்கள் மரணித்த பின்னா; ஏனையவார்களைப்போல் சமாதிகளில் உறங்க மாட்டாகள்ர் இந்த நாட்டு மக்களின் இதயங்களில் வாழ்வார்கள் என்றும் ஜனாதிபதி கூறினார்,

இலங்கையில் ஒப்பந்த ஊழியர்களாக சீன கைதிகளே வருகை,

Friday, 18 June 2010
இலங்கையில் நெடுஞ்சாலைப் பணிகளையும், ரயில்வே பணிகளையும் மேற்கொள்வதற்காக, சிறைக் கைதிகளாக இருந்த 25,000 தொழிலாளர்கள் சீனத்தில் இருந்து வந்துள்ளது குறித்து இந்திய அரசு விழிப்போடு இருக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை,

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்க இந்தியா ரூ.1,000 கோடி அனுமதித்துள்ளது. ஆனால் இந்த மறு சீரமைப்பிற்கான ஒப்பந்தத்தை சீனாவிடம் இலங்கை அரசு அளித்திருக்கிறது. இதிலிருந்து, இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக அனுப்பப்பட்ட இந்திய மக்களின் வரிப் பணம் சீனாவை சென்றடைகிறது என்பது தெளிவாகிறது.

இந்தியாவின் பணம் சீனாவிற்கு செல்கிறதே என்பது தற்போது எனது முக்கிய கவலை இல்லை. இதுவரை பாதுகாப்பாக உள்ள இந்தியாவின் தெற்குப் பகுதியில், இந்தியாவிற்கு எதிரான வேவு பார்க்கும் பணிகளை தொடங்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் சீன ஒற்றர்களும், உளவுத் துறையினரும் சீனத் தொழிலாளர்களுடன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் தெற்கு கடலோரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் இலங்கை உள்ளது.

1962 ஆம் ஆண்டைய சீன ஆக்கிரமிப்பு இந்திய தேசத்தையே உலுக்கியது. அப்போதிருந்த இந்திய அரசு சகோதரத்துவத்து மனப்பான்மையுடன் சீனாவோடு அபரிமிதமாக உறவாடிக் கொண்டிருந்த போதுகூட, சீனா இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது. குறுகிய நோக்குப் பார்வையும், தவறான முடிவுமே அந்த சமயத்தில் இந்தியா தோல்வியுற்றதற்கு காரணம்.

அதே வரலாறு மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வட இலங்கையில் சீனர்கள் பெருமளவில் குவிந்திருக்கிறார்கள் என்ற ஊடகங்களின் தகவல் உண்மையாக இருக்குமேயானால், இந்தியாவிற்கு ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. அண்மையில் ராஜபட்ச இந்தியாவிற்கு வந்த போது, இந்த பிரச்சினையை இந்தியா உறுதியுடன் முன் வைத்திருக்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்

குடும்பங்களுக்கு ஆபத்து

வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மற்றுமொரு கடுமையான ஆபத்து ஏற்கெனவே மிக மோசமாக உருக்குலைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு காத்திருக்கிறது. 27 ஆண்டு கால இனப் போர் பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. பெரும்பாலான ஆண்கள் இந்த இனப் போரில் உயிரிழந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தற்காத்துக்கொள்ளும் சக்தியற்று பலவீனமாக உள்ள முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அடங்கிய மீதமுள்ள தமிழர்களை சீனாவிலிருந்து வந்துள்ள 25,000 சிறைக் கைதிகள் தங்களுடைய அத்துமீறல்களுக்கு உட்படுத்த ஆரம்பித்தால், அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமை மேலும் விபரீதமாகும்.

இந்தப் பிரச்சினையில் காலதாமதமின்றி இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் கடுமையாகப் பேச வேண்டும்; கடினமாக நடந்து கொள்ள வேண்டும்.

தமிழக முதலமைச்சர், தமிழ்நாட்டின் பாதுகாப்பு மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் இனத்தின் பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்க முடியாத காரணத்தினால், இந்திய அரசாங்கத்திற்கு இந்த வேண்டுகோளினை நான் விடுக்கின்றேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Followers

Blog Archive