Tuesday, May 11, 2010

நாட்டின் அபிவிருத்திக்கு அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியம்

TUESDAY, MAY 11, 2010
யுத்தமற்ற அமைதிச் சூழலை வாய்ப்பாக்கிக் கொண்டு நாட்டை பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமென பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
ஆசியாவின் முன்னோடி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பை நிதியமைச்சின் மூலம் வழங்குவதாக தெரிவித்த அவர் நாட்டின் பொருளாதார கேந்திரமாகவுள்ள நிதியமைச்சின் செயற்பாடுகளை பாமர மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக் கைகளை மேற்கொள்ளப் போவ தாகவும் தெரிவித்தார்.
புதிய பிரதிநிதியமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம நேற்று நிதியமைச்சில் தமது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாகக் கையேற்றார்.
நேற்றுக்காலை சுபவேளையில் மத அனுஷ் டானங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய பிரதியமைச்சர் மேலும் தெரி வித்ததாவது,
நாட்டில் நிலவிய யுத்த சூழல் கார ணமாக சர்வதேச நாடுகள் எமக்கு உதவு வதற்கு முன்வராத காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
யுத்தம் நிலவிய காலத்தில் அரச அதிகாரிகளின் மனநிலையும் சரியானதாக இருக்கவில்லை. தற்போது சிறந்த சூழல் உருவாகியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கான வழி வகுத்துள்ளார்.
இன்றைய சூழல் நாட்டைப் பொரு ளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டி யெழுப்ப மிகவும் உகந்ததாகவுள்ளது. அரச அதிகாரிகள் தம் அர்ப்பணிப்புடனான சேவையினால் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர நாட்டின் பொருளாதார ஏற்றத்தை நிர்ணயிக்கும் நிதியமைச்சில் சரத் அமுனுகம போன்ற நிர்வாகத்திறன் மிக்க அமைச்சர்கள் பங்கேற்பது மிகச் சிறந்ததொன்றாகும்.
நாடு சுனாமி பேரழிவினால் சிக்கித்தவித்த வேளையில், அப்போதும் பிரதி நிதி யமைச்சராகவிருந்து தேசிய சர்வதேச ரீதியில் உதவிகளைப் பெற்றுக்கொள்ள தமது திறமையைப் பயன்படுத்தியவர் அமைச்சர் சரத் அமுனுகம.
நிர்வாகத்திறன் கொண்ட அமைச்சர்களில் இவர் முக்கியம் பெறுபவர் எனவும் தெரிவித்தார்.

செனற்சபை, தேர்தல் முறை மாற்றம் 17வது திருத்தத்துக்குத் திருத்தம்

TUESDAY, MAY 11, 2010
அரசியல் யாப்பில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான திருத்த மசோதா இரு வாரங்களுக்குள் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும். ஒரு மாதத்தினுள் அரசியல் யாப்பு திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் மேலும் கூறியதாவது,
பொருளாதாரத்தை பலப்படுத்தவும் மஹிந்த சிந்தனை தொலைநோக்கின் பிரகாரம் ஆசியாவின் முன்னோடியாக இலங்கையை அபிவிருத்தி செய்யவும் ஏற்றவாறு அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அமைச்சர் ஜீ. எல். பீரிஸின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறையில் மாற்றம், 17 ஆவது திருத்த சட்டத்தில் திருத்தம், செனட் சபை அடங்கலான பல திருத்தங்கள் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள் ளன. அரசியலமைப்பு திருத்த மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. திருத்த மசோதா இரு வாரங்களில் அமைச்சரவை யின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும். ஜூன் மாதத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.
பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இந்த திருத்த மசோதா சமர்ப்பிக்கப்படும்போது சட்ட திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சி களுக்கு தமது யோசனைகளை முன்வைக்க முடியும். தற்பொழுதுள்ள தேர்தல் முறை யினால் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் தெரிவாவதில்லை. விருப்பு வாக்கு முறையினாலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிரா மத்திற்கு ஒரு உறுப்பினர் தெரிவாகும் வகையில் மாற்றப்படும். 17ஆவது திருத் தச் சட்டத்தை பலப்படுத்தவும் அதனூடாக சுயாதீன ஆணைக் குழுக்களை திறம்பட இயங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
செனட் சபைக்கு 9 மாகாணங்களில் இருந்தும் ஒரு பிரதிநிதி தெரிவாக உள் ளார். குறைந்த பட்சம் 25 உறுப்பினர்கள் செனட் சபையில் அங்கம் வகிப்பர்.
இன ரீதியான பிரச்சினைகள், அர சியலமைப்பு அடிப்படையிலான பிரச் சினைகள் தொடர் பில் மாகாண சபைக் கும் மத்திய அரசாங்கத்திற்குமிடையில் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் செனட் சபை செயற்படும் என்றார்.
அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் கூறிய தாவது, ஏதும் இனத்தை பாதிக்கும் விடய த்தை அடிப்படையாகக் கொண்ட சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும் செனட் சபையில் அது குறித்து ஆராயப்பட்டு அதில் திருத்தம் செய்ய முடியும்.

Followers

Blog Archive