Friday, January 28, 2011

தொடரும் குற்றச் செயல்களை தடுக்க இராணுவம் ரோந்துயாழ். இராணுவத் தளபதி அறிவிப்பு.

Friday, January 28, 2011
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்காக குடாநாடு முழுவதும் இன்று முதல் இரவு இராணுவ ரோந்து நடைமுறைக்கு வருகின்றது என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்தா ஹதுறுசிங்க அறிவித்துள்ளார்.

அவர் யாழ்ப்பாண செயலகத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

கலந்துரையாடலில், வட பிராந்திய பதில் பொலிஸ் மா அதிபர் சுசில் பெரேரா தகவல் தருகையில், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய யாழ்ப்பாணத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் குற்றச் செயல்களை தடுக்க மூன்று அம்ச செயல் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

சாதாரண உடை தரித்த பொலிஸாரும் பொலிசாரும் இரு பிரிவுகளாக மக்களிடமிருந்து புலனாய்வுத் தகவல்களைப் பெற்று 24 மணித்தியாலத்துக்குள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தரங்க தகவல்களை தமிழில் வழங்க பொலிஸ் நிலையங்களுக்கு பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதி சோதனை, வாகன சோதனை, சந்தேகமானவர்களை விசாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளனர்.

நீதி நேர்மையான தேர்தலுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்-பிரதமர் டி. எம். ஜயரட்ன.

Friday, January 28, 2011
நீதியும், அமைதியுமான தேர்தலை நடத்துவதற்கு சகல அரசியல்வாதி களும் கட்சித் தலைவர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரட்ன கேட்டுக்கொண்டார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் விருப்பத்திற்கு இடமளித்து வன்முறை, ஊழல் மோசடியற்ற தேர்தலொன்றை நடத்துவதற்குச் சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமெனவும் பிரதமர் இதன் போது வேண்டுகோள் விடுத்தார்.

அதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமோக வெற்றியீட்டுவது உறுதி எனவும் பிரதமர் தெரிவித்தார்.

கண்டியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட்ட போதும் அரசாங்கத்துக்கு எந்தவித பாதிப்பும் அதனால் ஏற்படப் போவதில்லை என குறிப்பிட்ட அவர், கண்டியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கண்டியில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் பிரதியமைச்சர் அப்துல் காதர் போன்றோரின் வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடைப்பது நிச்சயம். குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாக்குகளில் எந்த குறையும் இருக்காது எனவும் பிரதமர் தெரிவித்தார்

Monday, January 24, 2011

புலிகளின் உலக தமிழர் அமைப்பின் உடமைகளை முடக்க உத்தரவு-கனேடிய நீதிமன்றம்.

Monday, January 24, 2011
கனடாவின் ஒன்டாறியோ மற்றும் கியூபெக் மாநிலங்களில் செயற்பட்டு வந்த உலகத் தமிழர் அமைப்பின் உடமை களை கனேடிய அரசாங்கத்திடம் கையளிக்குமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகத் தமிழர் அமைப்பின் உடமைகள் பயங்கரவாத அமைப்பினால் பயன்படுத்தப் பட்டவை என்றும் அதன் சொத்துக்களை முடக்குமாறு கனேடிய நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பானது, கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட புலி ஆதரவு நடவடிக்கைகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகத் தமிழர் அமைப்பானது கனடாவில் புலிகளுக்கு மிகவும் முக்கிய மானதொரு அமைப்பாகச் செயற்பட்டு வந்தது என கனேடிய றோயல் பொலிஸ் அதிகாரி ஸ்ரீவ் டப்ரெயுல் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பின் உடமைகளை முடக்கி கனேடிய அரசாங்கத்துக்கு வழங்குமாறு கனேடிய நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவைத் தாம் சாதகமாகவே பார்ப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் கனேடிய றோயல் பொலிஸின் பிரதி ஆணையாளர் கிலிஸ் மிச்சவுட் கனேடிய ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.

பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு தாம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை கனேடிய நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் உறுதிப்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கூட்டணி தொடர்பில் விரைவில் தீர்மானம்.

Monday, January 24, 2011
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எந்தெந்தப் பகுதிகளில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது என்பது தொடர்பில் அடுத்துவரும் ஓரிரு தினங்களில் தீர்மானம் எடுக்கப்படவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளாரும். வர்த்தக மற்றும் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்ச ருமான பiர் சேகுதாவூத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் அரசாங்கத்துடன் இணைந்தும் போட்டியிடுவதற்குக் கட்சி ஏற்கனவே தீர்மானித்திருப்ப தாகவும் கூறினார்.

அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலம் நெருங்கிவரும் நிலையில் தனித்துப் போட்டியிடவேண்டுமென்ற கோரிக்கைகள் கீழ்மட்டத்தில் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கான பட்டியல்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே. வி. பி.யும் தெரிவித்துள்ளன.

Monday, January 17, 2011

கூட்டமைப்பின் சொல் விளையாட்டால் தமிழ் மக்களுக்கு எவ்வித விமோசனமும் இல்லை!
வட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள், உடனான நேர்காணல். நேர் கண்டவர்: சுஐப் எம். காசிம்

Monday, January 17, 2011
பெயர் : அ. வரதராஜப் பெருமாள்
பிறந்த திகதி : 1953 ஜூன் 08
பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
பாடசாலை : கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம் (ஆண்டு 10 வரை)
க.பொ.த. உயர்தரம் (தனியார் நிறுவனம்)
பதவிகள் : யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்
வடக்கு - கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்
கல்வித்தகைமை : யாழ். பல்கலைக்கழகம் (பொருளியல் சிறப்பு)
அரசியல் விஞ்ஞானம் (M. A) டெல்லி பல்கலைக்கழகம்
L. L. B.(டெல்லி)
பிள்ளைகள் : 3 பெண் பிள்ளைகள்
1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றமை.


கேள்வி:- தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்aர்கள்?

பதில்:- கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக இந்நாட்டை உலுக்கி வந்த கோர யுத்தம் முடிவுக்கு வந்திருப்பது மிக நல்ல விடயம்.

யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட அழிவுகள், சிதைவுகள், சீரழிவுகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக நாம் ஒரு முன்னோக்கிய கால கட்டத்தில் போக வேண்டிய சூழல் இன்றுள்ளது.

புனர்வாழ்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. மக்கள் மத்தியில் பீதியற்ற ஒரு சூழல் உருவாக வேண்டும். ஜனநாயகம் என்பது தேர்தலில் மட்டும் நின்றுவிடாது எல்லா விடயங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். போர் சுனாமி மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் மக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நமது நாட்டு மக்களை மீட்கும் துரித வேலைத்திட்டங்கள் தேவை. ஜனாதிபதியும் அரசாங்கமும் இதற்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட்டு வருகின்ற போதும் இன்னும் வேகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

ஆளுங்கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே ஒரு ஜனநாயக பூர்வமான, நாகரீக பூர்வமான ஓர் அச்சமற்ற உறவு வளர்ச்சியடைய வேண்டும். அரசியல் நாகரீகம் மேலோங்கியுள்ள ஒரு நாடு என்ற வகையில் ஒரு மனப்பக்குவம், அரசியல் முதிர்ச்சி ஆகியவை நமக்கிடையில் வளர்ந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இவை படிப்படியாக மாறும் என்றே நான் நம்புகின்றேன்.

கேள்வி:- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கொலைகள், கொள்ளைகள், கடத்தல் என்பவற்றை நீங்கள் எந்தக் கோணத்தில் பார்க்கின்aர்கள்?

பதில்:- இவை மக்கள் மத்தியில் பயபீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. இவற்றை நீக்க வேண்டிய முதற் பொறுப்பு அரசுக்கு உண்டு. குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி மக்களுக்கு ஒரு பயம் ஏற்படாத வண்ணம் கருமங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்தச் சம்பவங்களை வெளியில் கொண்டு வரக்கூடிய பொறிமுறை அரசாங்கத்திடமே இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்களை தொகுத்து பார்க்கும் போது வெறுமனே அரசியலற்றது என்று சொல்வதற்கில்லை. தனிப்பட்ட கொலைகள், கொள்ளைகள் நடந்திருக்கும் அதேவேளை அரசியலும் ஏதோ வகையில் கலந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அங்கு இடம்பெறும் சம்பவங்களை தனிப்பட்ட மோதல்களின் விளைவுகள் என்று கூறுவது சரியானதல்ல. இது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் கூற்றுமல்ல. ஏனெனில் அங்கு வாழும் மக்களுக்கு நடைபெறும் விடயங்கள் தெரியும். மக்கள் மத்தியில் பயப்பீதியை அதிகரிப்பதில் ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. மக்களுக்கு அதிகரிப்பதில் நம்பிக்கை வழங்க வேண்டிய அரசியல்வாதிகள் பயப்பீதியை ஏற்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர். 30 வருடங்களாக யுத்த வெறியர்களுக்குப் பயந்து பயந்து வாழ்ந்த மக்களுக்கு இப்போது இடம்பெறும் சம்பவங்கள் இன்னும் பாதிப்பையே ஏற்படுத்துகின்றது. மீண்டும் பழைய நிலை வந்து விடுமோ என்ற அச்ச உணர்வும் அவர்களிடம் உள்ளது. எனவே இந்த நிலையை மாற்றுவதற்கு அனைவரும் உதவ வேண்டும்.

கேள்வி:- மீள்குடியேற்றம் தொடர்பாக?

பதில்:- யுத்தத்தினால் சுமார் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். எல்லாமே அழிந்தன. அனைத்தையும் இழந்தனர். மாற்று உடுப்புக்களின்றியே அகதி முகாம்களுக்கு வந்தனர். தற்போது 90 சதவீதமானவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு சென்றுள்ளனர். ஜனாதிபதியும் அரசாங்கமும் இந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்தில் அக்கறை காட்டி வருவது வரவேற்கத்தக்கதே. எனினும் அங்கு குடியேறியுள்ள மக்களுக்கு போதிய உதவிகள் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமூகத்தொண்டு நிறுவனங்களின் கடந்தகால நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளபோதும் தற்போதைய சூழலில் அவர்களை அங்கு அனுமதிப்பதால் நஷ்டம் ஏற்படாது. ஏனெனில் புலிகள் அங்கு இல்லை. எனவே தொண்டு நிறுவனங்களை சில கட்டுப்பாடுகளுடன் பணிபுரிய அனுமதித்தால் மக்கள் இன்னும் நன்மை பெறுவர்.

கேள்வி:- தமிழ்க் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு பற்றி நீங்கள் கருதுவது என்ன?

பதில்:- ஜனநாயக அரசியலில் இருக்கும் ஒரு கட்சி அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டுமென வலியுறுத்துவது சரியல்ல. ஜனநாயக அம்சங்களில் பலமான எதிர்க்கட்சியும் அவசியமான விடயம். அதற்காக எதிர்க்கட்சிகள் வெறுமனே எதிர்ப்பு அரசியல் நடத்துவதும் மக்களுக்கு நல்லதல்ல. இந்த வகையில் ஒரு சமநிலையை எதிர்க்கட்சிகள் கையாள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கம் மேற்கொள்ளும் புனர்வாழ்வு, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதாக அறிவித்துள்ளனர். அதற்கான சமிக்ஞைகளையும் காட்டியுள்ளனர். இதற்கான நல்லெண்ணத்தைக் காட்டும் வகையில் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் வாக்களிப்பிலும் பங்குபற்றவில்லை. இது இக்கட்சியின் நிலைப்பாடு. ஆனால் இதற்குப் பெயர்தானா ஒத்துழைப்பு. இவ்வாறான ஒத்துழைப்பை எதிர்பார்த்தா அரசு இருக்கிறது. அபிவிருத்தி, புனர்வாழ்வு நடவடிக்கைகளை எதிர்ப்பதென்று ஒன்றில்லை. புலிகள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்தனர். ஆனால் தமிழ்க் கூட்மைப்புக்கு அவ்வாறு முடியுமா? அபிப்பிராயத்தை மட்டும்தான் அவர்களால் கூற முடியும். கூறவும் வேண்டும். ஆளுங்கட்சி தனக்கிருக்கும் வருமானம், வளங்களுக்கு ஏற்றவகையில் தான் அபிவிருத்தியை மேற்கொள்ளும். தம் வசமிருக்கும் திட்டங்களை செயல்படுத்தும். அந்தவகையில் தமிழ்க் கூட்மைப்பின் ஒத்துழைப்பு, ஒத்துழைக்காமை என்ற பதங்கள் எனக்குப் புரியவில்லை. எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு என்று சொல்வதன் அர்த்தம் நமக்கு விளங்கவில்லை. இந்த விடயங்களை தமிழ்க்கூட்டமைப்பு விமர்சித்தாலும் அரசுக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லையே.

கேள்வி:- அவ்வாறெனின் அக்கட்சியினரின் உள்நோக்கம் என்ன?

பதில்:- அவர்களின் உள்நோக்கமும் தெரியவில்லை. அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதுவும் விளங்கவில்லை.

பொதுமக்களுக்கு சொல் விளையாட்டுக்களால் பயன் ஏற்படப்போவதில்லை என்பதே என் எண்ணம்.

கேள்வி:- தமிழ் அரங்கத்தின் செயற்பாடுகள் பற்றி கூறுவீர்களா?

பதில்:- தமிழ் அரங்கம் மிகத் தெளிவான கண்ணோட்டத்திலேயே உருவாக்கப்பட்டது. தமிழ்க் கட்சிகளின் அரங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிகளின் அரங்கமில்லை. அது ஒரு திறந்த முன்னணி. அதிலே அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் பங்கேற்க வேண்டும். தமிழ் அரங்கம் ஓர் அணி. தமிழ்க் கூட்டமைப்பு இன்னொரு அணி என்றில்லை. மொத்தத்தில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் என்பது ஓர் அணியே இல்லை - தேர்தலுக்கானதுமல்ல. கொள்கை அடிப்படையிலானதுமல்ல. வேறுபாடற்ற கூட்டுமல்ல. அதன் ஒரே நோக்கம் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற உடனடிப் பிரச்சினைகள் தொடர்பாக ஓர் ஒருமித்த சூழலை வெளிப்படுத்தினால் அந்தக் கோரிக்கைக்கு வலுவாகவிருக்கும். அந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் நிலை ஏற்படும். இதற்காகவே இது உருவாக்கப்பட்டது. ஏற்கனவே அரங்கம் 12 விடயங்களை நிரற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக ஆராயும்.

கேள்வி:- தீர்வு தொடர்பாக உங்கள் கட்சி என்ன நிலைப்பாட்டில் உள்ளது?

பதில்:- இந்த நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சரியான உபாயம் சமஷ்டித்தீர்வாக இருந்த போதும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அதற்கு உடனடிச் சாத்தியமில்லை. 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவ்வாறான நிலையொன்று உருவாகியபோதும் அது இடம்பெறாது போய்விட்டது. எனினும் எவ்வாறான தீர்வொன்று தமிழ் பேசும் மக்களுக்கு உதவும் என்பதைத் தீர்மானிக்கும் பிரதான ஒருவராக ஜனாதிபதியே விளங்குகின்றார். அந்த வகையில் அரசு என்ன தீர்வை வைத்திருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது. எனினும் 13வது திருத்தத்தின் அடிப்படையில் தீர்வு சாத்தியம் எனக் கூறப்படுகின்றது.

எல்லோரினதும் விருப்பு, வெறுப்புக்களுக்கு அப்பால் அரசியல் யாப்பில் கடந்த 22 வருடங்களாக இந்நாட்டில் இருக்கின்ற ஒரு விடயமே. ஆனால் அது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அது சரியாகவும் நிறைவேற்றப்படவில்லை. இல்லையென்றால் அதன் அர்த்தம் புரிகின்றதல்லவா?

எந்தத் தீர்வானாலும் இந்த நாட்டிலிருந்துதான் வரவேண்டும். இந்தியாவோ மேற்கத்தேய வல்லரசுகளோ யாரும் எதையும் திணிக்க முற்பட்டாலும் அது வெற்றிகரமாக அமையாது. இந்நாட்டில் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு சரியான முறையில் முன்னேறிச் செல்லும் அம்சமாக நடக்க வேண்டும் என்றால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தம் வசம் வைத்துள்ள ஜனாதிபதியும் அவரது அமைச்சரவையும் தமக்கு சரியென்று எண்ணுவதை அதனைச் சரியாகவும் முழுமையாகவும் நிறைவேற்ற வேண்டும்.

கேள்வி:- நீங்கள் 13வது திருத்தம் பற்றி முன்னர் விமர்சித்திருந்தீர்களே?

பதில்:- அடிப்படையில் 13வது திருத்தம் ஒரு பிழையான சட்டம். அந்தச் சட்டத்தின் கட்டமைப்பே பிழையானது.

ஜே.ஆர். ஜயவர்தன எந்த நோக்கத்தில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாரோ தெரியாது. ஆனால் அவர் பிழையான முறையில் அதனை அமைத்தார். இந்தியாவின் நெருக்குதலினால் அவசர அவசரமாக தெரிந்து கொண்டே பிழையான ஒன்றை அந்தச் சந்தர்ப்பத்தில் தயாரித்தார். அந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் இன்று நிரந்தரமாக மாறிவிட்டன. வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல ஏனைய மாகாணங்களில் இயங்கும் சபைகள் கூட தமக்கு அதிகாரம் இல்லை என்றுதான் கூறி வருகின்றன. எனவே இந்த மாகாணங்களுக்கு மத்தியில் இருந்து அதிகாரங்களைப் பகிர வேண்டும்.

அபிவிருத்தி, அதிகாரப்பகிர்வு, ஜனநாயக மயமாக்கம் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. அதிகாரப்பகிர்வு நடக்காது உண்மையான ஜனநாயகம் வரப்போவதில்லை. அபிவிருத்தி இடம்பெறாது. அந்தவகையில் அபிவிருத்தியில் முன்னேற்றம் ஏற்பட ஜனநாயகம் மேலோங்க அதிகாரப் பகிர்வு அவசியமாகின்றது. சிங்கள மக்கள் மத்தியில் அதிகாரப் பகிர்வு தொடர்பான விருப்பம் எவ்வளவுக்கு விரிவடைகின்றதோ அதனைப் பொறுத்தே இதில் முன்னேற்றம் காணமுடியும்.

கேள்வி:- யுத்த வெற்றியை நீங்கள் எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கின்aர்கள்?

பதில்:- ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் யுத்தத்தில் வெற்றி கிடைத்துள்ளது. அதற்கு முன்னர் இருந்த எந்த ஒரு அரச தலைவருக்கும் யுத்தத்தின் மூலம் வெற்றிபெற முடியுமென்ற நம்பிக்கை இருக்கவில்லை. அவர்கள் அதற்கு முயற்சிக்கவுமில்லை. அந்தத் துணிவும் இருக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி மஹிந்த துணிகரமாக இறங்கினார். மாவிலாறு விடயத்தில் மக்கள் பாதிப்புக்குள்ளாகியபோதுதான் அவர் இந்த நடவடிக்கையை தீவிரமாக எடுத்தார். மாவிலாறில் ஏற்பட்ட வெற்றியின் மூலம் புலிகளின் பலம், பலவீனத்தை கண்டு கொண்டனர். அதற்கு முன்னர் எல்லோரும் புலிகளை ஓர் அசாத்தியமான, அதீதமான சக்தி என்று நினைத்திருந்தனர். இந்தியா, நோர்வே, மற்றும் ரணில் விக்கிரமசிங்க உட்பட இலங்கைத் தலைவர்கள் புலிகளுடன் பேசி விரக்தி கொண்டவர்கள் தான்.

நாங்கள் உட்பட தமிழ்க்கட்சிகளில் சில புலிகள் பற்றி நன்கு அறிந்திருந்தமையால் அவர்களைப் பற்றி அறிந்திருந்தோம். அவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ற தீர்க்கமான நிலைப்பாட்டுடன் நாம் இருந்தோம்.

அந்த வகையில் ராஜபக்ஷவின் காலகட்டத்தில் உள்நாட்டில் நிலைமை கனிந்திருந்தது. சர்வதேச ரீதியாகவும் நல்ல நிலை இருந்தது. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சர்வதேச நிலைமைகளை சாவதானமாகக் கையாண்டார். அரச அமைப்பு முழுவதையும் ஒன்றாகக் கொண்டு செல்லும் அவரது திறமையும் யுத்த வெற்றிக்கு இன்னுமொரு காரணம்.

ஒருவன் வெற்றிகரமாக இருக்க வேண்டுமெனின் அவன் முதலில் தன்னைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அடுத்து எதிரியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் புலிகள் இவையிரண்டையும் பற்றி அறியவில்லை. அரசியல் இராஜதந்திரத்தில் ஏற்பட்ட குறைபாடு மட்டுமல்ல உலக நாடுகள் தங்களுக்கு கைகொடுக்கும் என்ற நினைப்புத்தான் அவர்களின் பிழைப்பைக் கெடுத்தது.

கேள்வி:- நாடு கடந்த தமிbழம், புலம் பெயர் தமிழர்களின் எதிர்ப்புக்கோஷங்கள் பற்றி நீங்கள் என்ன கூறப் போகின்aர்கள்?

பதில்:- எட்டு இலட்சம் புலம்பெயர் தமிழர்கள் வாழுகின்றார்கள். இவர்களில் எண்ணூறு பேரே எதிர்ப்பில் ஈடுபடுகின்றனர். முன்னர் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், புலிகளின் தீவிர அபிமானிகள் மற்றும் ‘சனல் - 4’ வெளியிட்ட காட்சிகளால் பாதிக்கப்பட்டவர்களே இவர்கள். அத்துடன் இவர்களில் சிங்கள எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களும் அடங்குகின்றனர்.

இவர்களின் எதிர்ப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதுவுமே செய்யப்போதில்லை.

எல்லா மக்களும் நித்திரைக்குச் சென்ற பின்னர் இரவு நேரத்தில் இரண்டு பேர் கடைபோட்டிருப்பது போன்றதற்கு ஒப்பானதே நாடு கடந்த தமிbழம். யாராவது ஒருவர், இருவர் வருவார்கள். அவர்களுக்கு வியாபாரம் நடத்தலாம் என்று இவர்கள் எண்ணுவது போன்று புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வெளிநாடுகளில் பணம் திரட்ட மேற்கொண்ட முயற்சி. இப்போது புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டுவது பெருமளவில் குறைந்துள்ளபோ தும் இன்று ஒரு புதிய இரவுக்கடை திறக்கப்பட் டுள்ளது.

Sunday, January 16, 2011

இந்திய உறவை பாதிக்கும் வகையில் இலங்கை கடற்படை செயற்படுவதில்லை-புதிய கடற்படைத் தளபதி சோமதிலக்க திஸாநாயக்க!

Sunday, January 16, 2011
இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான உறவில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் கடற்படையினர் எந்த விதத்திலும் செயற்படுவ தில்லை என்று புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாக கூறப்படும் குற்றச்சாட் டுக்களில் எந்த விதமான உண்மைகளும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிப்பதுடன் முற்றாக மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் 17 வது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க நேற்று கடற்படைத் தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண் டார். இதன்போது, அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போதைய நவீன யுகத்தில் ராடார், செய்மதி போன்ற தொழில்நுட்ப வசதிகள் நிறைந்து காணப்படும் நிலையில் அவ்வாறன குற்றஞ்சாட்டுக்களை இவற்றை பயன்படுத்தி நிரூபிக்க முடியும். ஆனால் அவ்வாறான எந்த சாட்சிகளும் கூட இல்லை என்று சுட்டிக்காட்டினார்.

தளபதி உட்பட உயர் அதிகாரிகளின் எந்தவொரு உத்தரவுமின்றி கடற்படையினர் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதில்லை. அவ்வாறான தேவைகள் அவர்களுக்கு இல்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் தனது தளபதிகளை மீறி கடற்படையினர் எந்தவொரு தாக்குதல்க ளையும் நடத்துவதில்லை.

அவ்வாறு நடந்துகொள்வது தாய் நாட்டுக்கு செய்யும் துரோகமாக கருதப்ப டும். அவ்வாறு மீறி நடக்கும் எந்த ஒரு கடற்படையினரையும் நாங்கள் பாதுகாக்கப் போவதில்லை என்றும் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

Wednesday, January 12, 2011

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமே; புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு துன்பம் தரக் கூடாது-வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!

Wednesday, January 12, 2011
நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமே; புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு துன்பம் தரக் கூடாது!

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமானது. இதனைத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். பணத்துக்காகவும் பதவிக்காகவும் வர்த்தக நோக்கங்களுக்குமாகவே இந்தத் தமிழீழ அரசு செயற்படுகிறது.

கடந்த 30 வருடங்களாக புலிகள் பண பலத்தையும் ஆயுத பலத்தையும் வைத்துப் போராடித் தோற்றுப் போன நிலையில் இந்த நாடு கடந்த தமிழீழ அரசினால் எதனைத்தான் சாதிக்க முடியுமெனக் கேள்வி எழுப்புகிறார்.

வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் தலைவருமான வரதராஜப் பெருமாள். இன்றைய அரசியல் நிலை தொடர்பில் எமது இணையத்தளத்துடன் இன்று கருத்துப் பரிமாற்றம் செய்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது,

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் இன்று அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதனை நாம் வரவேற்கிறோம். ஆனால், ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் பேசினால் நன்றாகவிருக்கும்.


அதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேசக் கூடாது என்பதல்ல கருத்து. யார் குற்றினாலும் அரிசியானால் சரியே. இன்றைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுமா என்று நாம் கேட்டபோது, அரசியலில் சாத்திரம் சொல்வது சரியல்ல.. என்று பதிலளித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபைகள் ஊடான ஆட்சி முறை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக அமையுமா என்று நாம் கேட்போது, இல்லை எனப் பதிலளித்த அவர், நிறைந்த அதிகாரத்தைக் கொண்ட மாநில சுயாட்சி அமைப்பே இங்கு உருவாக்கப்பட வேண்டும் எனப் பதிலளித்தார்.

மாகாண சபை மூலமான அதிகாரப் பகிர்வு போதாது என்பது கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் செயற்படும் மாகாண சபைகளின் செயற்பாடுகள் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. தமிழர்கள் மட்டுமல்ல.

சிங்களவர்களும் இதனையே இன்று தெரிவிக்கின்றனர். ஆகவே, தமிழ் மக்களுக்கான தீர்வாக மட்டுமல்லாது சிங்கள மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாகவும் நிறைந்த அதிகாரத்தைக் கொண்ட மாநில சுயாட்சி அமைப்பே இலங்கைக்கு இன்று தேவை. என்றார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பில் நாம் எழுப்பிய வினாவுக்குப் பதிலளித்த வரதராஜப்பெருமாள், அவர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்குத் துன்பம் தரக் கூடியவர்களாகச் செயற்படக் கூடாது.

இங்கு வாழும் தமிழ் மக்களுக்குப் பலமானவர்களாகவும் வளம் சேர்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார். புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானோர் இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்படுகிறார்களே எனக் கேட்டபோது பதலளித்த அவர், அது அவர்களின் ஜனநாயக உரிமையல்லவா? எனப் பதிலளித்தார்.

இலங்கையில் எத்தனையோ கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுகின்றனவே எனக் கூறினார். ஆனால், நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமானது.

இதனைத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பணத்துக்காகவும் பதவிக்காகவும் வர்த்தக நோக்கத்துக்குமாகவே இந்தத் தமிழீழ அரசு செயற்படுகிறது எனவும் குற்றஞ்சாட்டினார்

இலங்கை விமானப்படையின் காற்றாடி விமானங்கள்(Helicopters) அனர்த்த நிவாரனப்பணிகளில்.

Wednesday, January 12, 2011
இலங்கை விமானப்படையின் 'பெல்212' காற்றாடி விமானம் மூலம் மட்டக்களப்பில்
வெள்ளத்தினால் சிக்குண்ட 54 நபர்கள் காப்பாற்றப்பட்டனர் இவர்களில் 32 நபர்கள் தம்பிடிய பிரதேசத்தையும்,ஏனையோர் போகம்யாய, ரம்புக்கன் ஒய,வாழைச்சேனை போன்ற
பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

அதேநேரம் விமானப்படையின்' எம்.ஐ.17' எனும் காற்றாடி விமானம் மூலம் தொப்பிகல பிரதேசத்திற்கு இன்று காலை ஒரு தொகை உலர் உணவுப்பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டதுடன்,மேலும் 'பெல் 212' காற்றாடி விமானம் மூலம் கற்பினித்தாயொறுவர் வாழச்சேனையில் இருந்து பொலந்நறுவைவைத்தியச்சாலைக்கு
அழைத்துச்செல்லப்பட்டார் என்பதும் விஷேட அம்சமாகும்.இப்பணியானது நேற்று மதியம்
தொடக்கம் இன்று காலை வரை மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் பல நிவாரணப்பணிகளை
மேற்கொள்ள விமானப்படையானது தயார்நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க
விடயமாகும்.

Sunday, January 9, 2011

மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைச் சிதைக்க சர்வதேசம் பகீரதபிரயத்தனம்.

Sunday, January 9, 2011
தம்மீது மக்கள் வைத் துள்ள நம்பிக்கையை சிதைப்பதற்கு சர்வதேசம் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டை அபிவி ருத்தியில் கட்டியெ ழுப்பும் நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சிப் பவர்கள் தம்மை ஓர் ஏகாதிபத்தியவாதியாக வெளிநாடுகளுக்குக் காட்ட விளைகின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களுக்கு அர்ப்பணிப்புள்ள சேவைகளை வழங்கியமைக்காக 17 பிரதேச செயலகங்கள் மற்றும் மூன்று மாவட்டச் செயலகங்களுக்கு சர்வதேச தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. சம்பந் தப்பட்ட பிரதேச மாவட்டச் செயலா ளர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற் றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். சிரேஷ்ட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கை யில் :-

தற்போது நாட்டில் பலமுள்ள அரசாங்கம் உள்ளது. தேர்தலில் எனக்கெதிராக வாக்களித்தவர்களும் எமது செயற்பாடுகளைக் களைந்து எம்முடன் இணைந்து செயற்படுகின்றனர். என் மீது முழுமையான நம்பிக்கையை வைத்துள்ளனர்.

இந்த நம்பிக்கையை சீர்குலைப்பதற்கு சர்வதேச சமூகம் பகீரத பிரயத்தனம் செய்கிறது. விக்கிலீக்ஸ் போன்றவற்றினை உபயோகப்படுத்தி இச்சதி முயற்சிகள் நடைபெறுகின்றன. இதற்குச் சில சக்திகள் துணை போகின்றன.

நாம் நாட்டின் பொருளாதாரத்தைச் சிறந்த முறையில் கட்டியெழுப்பி வருகிறோம். ஜீ. எஸ். பி. வரிச் சலுகை கிடைக்காவிட்டாலும் ஆடைத் தொழில் துறை பெரும் வருமானம் ஈட்டி வருகிறது. மேலும் தொழிற்சாலைகள் தேவைப்படு கின்றன.

ஜீ. எஸ். பி. சலுகைக்கு எதிராக செயற்படுபவர்கள் நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் மக்களின் முன்னேற்றத்தின் மீதும் சம்மட்டியால் அறைகிறார்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்:சிறுபான்மைக் கட்சிகள் தீவிரம்; அரசுடன் இணைவதில் ஆர்வம்.

Sunday, January 9, 2011
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்களைத் தேடிப் பிடிப்பதில் சிறுபான்மைக் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

பிரதான கட்சிகள் வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ள நிலையில் சிறிய கட்சிகள் கிராமங்களிலும், நகரங்களிலும் செல்வாக்குள்ளவர்களை நோக்கி வலைவிரித்துள்ளன. இதில் சிறுபான்மைத் தமிழ் கட்சிகள் தமது கொள்கைக்குச் சாதகமானவர்களைத் தேடி வருகின்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட கட்சிகள் பெரிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்துக் களமிறங்குவதா என்பதைப் பற்றி இன்னமும் முடிவெடுக்காமல் இழுபறி நிலையில் உள்ளன.

தமிழ்க் கட்சிகள் ஓரணியாக இணைந்து போட்டியிடுவதற்காக மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.

இதனால், தமிழ்க் கட்சிகள் தனித்துக் களமிறங்குவதற்காக வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கூட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் ஆளுந் தரப்புடன் இணைந்து போட்டி யிடுவதற்கும் பெரும்பாலான கட்சிகள் ஆர்வமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, மாகாண சபை நிர்வாகம் இவை அனைத்து விடயங்களையும் சிந்தித்து சில தமிழ்க் கட்சிகள் அரசாங்கக் கட்சியுடன் இணைந்து போட்டியிடு வதெனத் தீர்மானித்துள்ளன.

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பில் ஒன்று கூடல்.

Sunday, January 9, 2011
சர்வதேச தமிழ் எழுத்தாளர்களின் மாநாடு கொழும்பில் கடந்த வியாழன் முதல் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இலங்கையில் முதன்முதலாக நடைபெறும் இம்மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் கோலாகலமாக கண்கவரும் வண்ணமும், ஆழமான தமிழாற்றல் கொண்டதாகவும் அமைந்துள்ளன.

இம்மாநாட்டில் உலக நாடுகள் பலவற்றிலுமிருந்தும் புகழ்பெற்ற தமிழ் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்து நம்நாட்டு ஆர்வலர்களுடன் ஒன்றிணைந்துள்ளமை எம்மவரை நிச்சயம் உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை.

இயந்திரமயமாகிவரும் உலகில் இலக்கியத்திற்கும் இடமளித்து அதனை எழுத்து வடிவில் எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாத்து ஆவணப்படுத்த உதவி புரியும் இந்த மாநாட்டுக் குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள். இலங்கையில் இம்மாநாட்டினை நடத்த அவர்கள் தீர்மானித்தமை எமக்குப் பெருமையளிக்கிறது.

மூன்று தசாப்த காலமாக இலங்கையில் இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இத்தகைய முக்கியமான மாநாடு இங்கு நடைபெறுவது பாதிக்கப்பட்டிருந்த தமிழ்பேசும் சமூகத்திற்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது என்றால் அது உண்மை.

அதிலும் இதுபோன்ற மாநாடுகள் யாழ்ப்பாணத்தில் அல்லது கிளிநொச்சியில் நடைபெற்றால் அந்தப் பலன் தமிழ் மக்களை முழுமையாகச் சென்றடையும். யுத்த வடுக்கள் தற்போதுதான் அப்பகுதிகளில் ஆற்றுப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே எதிர்காலத்தில் இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இடம்பெறும்போது அது நிச்சயம் கிளிநொச்சியில் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

இத்தகைய சிறந்த மாநாடுகள் எங்கு நடந்தாலும் அவற்றில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உரியவாறு நிறைவேற்றப்பட வேண்டும். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் உதித்த செம்மொழிகளில் ஒன்றான எமது தாய்மொழியாம் தமிழ் மொழியை வளர்க்கும் எவரையும் நாம் எங்கிருந்தாலும் உற்சாகப்படுத்த வேண்டும். நாமும் எமது பங்களிப்பை நல்கி அவர்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். வாழ்க தமிழ், வளர்க தமிழ்.

Followers

Blog Archive