Wednesday, March 09, 2011ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று மன்னாரில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கலந்துகொண்டார்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திர சிறி, அமைச்சர்கலான றிஸாட் பதியுதீன், மில்றோய் பேணாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கலான உவைஸ் பாரூக், உள்ளிட்டோரும்; கலந்து கொண்டனர்.
சகல அரச திணைக்கலங்களில் இருந்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
