Saturday, March 12, 2011

தமிழகத்தில் புலிகள் அமைப்பின் இரகசிய பயிற்சி முகாம் இயங்குவதாக வெளியிடப்பட்ட கருத்தை இந்தியா நிராகரிப்பு!

Saturday, March 12, 2011
தமிழகத்தில் புலிகள் அமைப்பின் இகரசிய பயிற்சி முகாம்கள் இயங்குவதாக இலங்கை அரசாங்கம் வெளியிட்ட கருத்துக்களை இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளது.

புலிகள் அமைப்பின் முகாம்கள் உள்ளதாக இலங்கை பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களை திட்டவட்டமாக நிராகரிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.

ஊடகவியாளர் சந்திப்பொன்றில் எழுப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தை இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள இந்த கருத்துக்கள் துரதிஷ்டவசமானலை எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இத்தனைய ஊகங்கள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோருவதாகவும் விஷ்ணு பிரகாஷ் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை தமிழகத்தில் புலிகளின் முகாம்கள் செயற்படுவதற்கு எந்தவித ஆதராங்களுக்கும் இல்லையென தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் லத்திக்கா சரண் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Followers

Blog Archive