Wednesday, March 31, 2010

பாராளுமன்றத் தேர்தல் 2010 – தோழர் மோகன்

தோழர் மோகன் -கந்தையா சிவராசா இல-2

1980 களின் ஆரம்பத்தில் சமூக அரசியல் களத்தில் பிரவேசித்தவர்
ஈழமாணவர் பொதுமன்றத்தினூடாக அவர் தனது சமூகப் பணிகளை முன்னெடுத்தவர்.
1980 களின் முற்பகுதியில் மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது அங்கு சென்று இடம்பெயர்ந்த மக்கள் மத்தியல் பணியாற்றியவர்.
தோழர் பத்மநாபாவின் வழிகாட்டலில் அரசியல் களப்பயிற்சிப் பட்டறைகளில் பங்குபற்றியவர்.
ஜனநாயக உரிமைகளுக்காகவும் சமூகபொருளாதார விடுதலைக்காகவும் இடையறாது பாடுபட்டு வருபவர்.
ஈபிஆர்எல்;எப் அமைப்பின் வெகுஜனங்களை அணிதிரட்டிய எழுச்சிகரக்கால கட்டம் - இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக உருவாகிய மாகாண அரசாங்க கால கட்டம் - இழப்புக்களும் மரணங்களும் இருண்ட யுகம் - ஜனநாயகத்திற்கான போராட்ட காலகட்டம் – எல்லாவற்றினூடாகவும் செயற்பட்டவர்.
1980 களின் ஆரம்பத்தில் சமூக அரசியல் களத்தில் பிரவேசித்தவர். ஈழமாணவர் பொதுமன்றத்தினூடாக அவர் தனது சமூகப் பணிகளை முன்னெடுத்தவர்.குறிப்பாக தென் மராட்சிப் பகுதியி;லும் பொதுவாக யாழப்;பாணத்திலும் விழிம்பு நிலை மக்கள் மத்தியில் அரசியல் விழப்புணர்ச்சியை ஏற்படுத்துவதிலும் அவர்களை அணிதிரட்டவதிலும் பணியாற்றியவர்.யாழ் குடாநாட்டில் மாத்திரமல்ல 1980 களின் முற்பகுதியில் மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது அங்கு சென்று இடம்பெயர்ந்த மக்கள் மத்தியல் பணியாற்றியவர்.தோழர் பத்மநாபாவின் வழிகாட்டலில் அரசியல் களப்பயிற்சிப் பட்டறைகளில் பங்குபற்றியவர்.ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணியின் பல்வேறு வெகுஜன கிளர்ச்சி அமைப்புக்களில் பணியாற்றியவர்.தமிழ் மக்கள் மத்தியில் சகோதரப் படுகொலைகளின் காரணமாக ஜனநாயக இடைவெளி இல்லாதொழிக்கபட்டதன் பின்னர் கடந்த 20 வருடங்களுக’கு மேலாக ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்துவதற்கு போராடி வந்தவர்.துமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் சமூகபொருளாதார விடுதலைக்காகவும் இடையறாது பாடுபட்டு வருபவர்.ஈபிஆர்எல்;எப் அமைப்பின் வெகுஜனங்களை அணிதிரட்டிய எழுச்சிகரக்கால கட்டம், இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக உருவாகிய மாகாண அரசாங்க கால கட்டம், அதனைத் தொடர்ந்து இழப்புக்களும் மரணங்களும் இருண்ட யுகம் ஜனநாயகத்திற்கான போராட்ட காலகட்டம் எல்லாவற்றினூடாகவும் செயற்பட்டவர்.தற்போது சுயநிர்ணய உரிமையின் அடிபடையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எமது செய்றபாடுகளில் அவர் பங்களித்து வருகிறார்.கடந்த கால்நூற்றாண்டுகளில் இனப்பிலச்சனைக்கு தீர்வுகாண வாராது வந்துற்ற சந்தர்ப்பங்கள் எல்லாம் இழக்கப்பட்டன.இப்போது உயிர் உடைமை இழப்புக்களைச் சந்தித்து அகதிகளாகவும் வறுமையில் உழல்பவர்களாகவும் தமிழ் மக்களில் பெருவாரியானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இவர்களின் வாழ்வில் வெளிச்சம் வரவேண்டும்.என்னதான் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும் அரசியல் அதிகாரம் இல்லாமல் மக்களின் வாழ்வில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்ட விடப்போவதில்லை.எனவே இலங்கையின் அரசியல் முறைமையில் நாம் பங்கு தாரர்கள்.நாம் ஆர்க்கும் குடியல்லோம் என்று கருதும் அளவிற்கு சமத்துவமான வாழ்க்கை வேண்டும்.இவற்றையெல்லாம் செயற்படுத்துவதற்கு எமது அண்டை நாடு நட்பு நாட இந்தியாவின் அனுசரணை வேண்டும்.இந்த அனுசரணையைப் பெற்றுக் கொள்வதற்கான ஆற்றலும் திறனும் பத்மநாபா ஈபிஆர்எல்எப் இற்கு இருக்கிறது.கூட்டதில் கூடி நின்று கூடிப்பிதற்றலன்றி நாட்டதில் கொள்ளாதவர்களுக்கு வாக்களிப்பது வீண் விரயம்.நாம் வாய்ப்பந்தல் போடுபவர்கள் அல்ல. செயலாற்றல் உள்ளவர்கள்.எமது சின்னம் மெழுகுவர்த்திஇல-2 பத்மநாபா ஈபிஆர்எல்எப்

WEDNESDAY, MARCH 31, 2010

















ஐ.ம.சு.மு 65% வாக்குகளால் வெற்றியீட்டும்; களனி பல்கலை கருத்துக்கணிப்பில் தகவல்

WEDNESDAY, MARCH 31, 2010
களனி பல்கலைக்கழக தொடர்பாடல் ஆய்வுப் பிரிவு, நாடளாவிய ரீதியில் நடத்திய கருத்துக்கணிப்பின் பிரகாரம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 65 வீத வாக்குகளையும் ஐக்கிய தேசிய முன்னணி 28 வீத வாக்குகளையும் பெறும் என அறிவிக்கப்படுகிறது.
கருத்துக்கணிப்பின் பிரகாரம் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டமைப்பு எந்தவித ஆசனங்களையும் பெறாது என களனி பல்கலைக்கழக தொடர்பாடல் ஆய்வுப் பிரிவு கலாநிதி ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,வடக்கு, கிழக்கு உட்பட சகல தேர்தல் தொகுதிகளிலும் நடத்திய சுயாதீனமான கருத்துக் கணிப்பில் பல்வேறு வயது மட்டங்களைச் சேர்ந்த 16 ஆயிரம் பேர் உட்படுத்தப்பட்டனர். நாடு முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினை வெற்றிபெறும் கட்சி எது என்பது உட்பட 12 கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நடத்திய கருத்துக்கணிப்பை விட இம்முறை தேர்தலில் மக்களின் ஆர்வம் குறைவாகக் காணப்பட்டது. நாடு முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் மக்கள் திருப்தி தெரிவித்தனர்.
நாம் நடத்திய கருத்துக் கணிப்பின் படி ஐ.ம.சு.முன்னணி 129 ஆசனங்களையும் ஐ.தே. முன்னணி 55 ஆசனங்களையும் வடக்கு, கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் 12 ஆசனங்களையும் பெறும். இதன்படி ஐ.ம.சு.முன்னணி 16 அல்லது 17 தேசியப் பட்டியல் ஆசனங்களை பெறலாம். இந்தக் கணிப்பு தேர்தல் தினமாகும் போது 1-5 வீதங்களினால் கூடிக் குறையலாம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாம் நடத்திய கணிப்பீடுகள் பெருமளவு ஒத்ததாக அமைந்தன.
இந்தப் பெறுபேறுகளின்படி ஐ.ம.சு. முன்னணி சுமார் 145 ஆசனங்களைப் பெற்று 2/3 பெரும்பான்மை பலத்திற்கு நெருக்கமான அதிகாரத்தை பெறும்.
ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறும் தேர்தல் முடிவுகளின் சரியான பிரதியாக இந்த முடிவு அமையாது. 95 வீதம் இதனை ஒத்ததாகவே முடிவு அமையும்.

தேர்தல் பாதுகாப்பில் பொலிஸ், முப்படை: 6ம் திகதி முதல் 78,000பேர் கடமையில்

WEDNESDAY, MARCH 31, 2010

* 58,700 பொலிஸ்
*19,500 முப்படைகள் + அதிரடிப்படை
* 7584 நடமாடும் பாதுகாப்புப் பிரிவு
* 5ம் திகதி நள்ளிரவுடன் பிரசாரம் நிறைவு

போதுத் தேர்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழுவதும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மற்றும் முப்படையைச் சேர்ந்த 78,200 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தலா 5 பேர் கொண்ட 7584 நடமாடும் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவும் இயங்கும் என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சகல பிரசார நடவடிக்கைகளும் 5 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக கட்அவுட்டுகள், பெனர்கள், போஸ்டர்களை அகற்றும் நடவடிக்கைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் தாமாகவே முன்வந்து தமது கட்அவுட்டுகள், பெனர்கள், போஸ்டர்களை அகற்றிக்கொள்ள வேண்டும் இல்லையேல் பொலிஸார் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் விதத்தில் 413 பொலிஸ் நிலையங்களின் பிரிவுகளுக்குள் நிறுவப்படும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதுடன் தேர்தலின் போது 58,700 பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவு ள்ளனர்.
பொலிஸாருக்கு மேலதிகமாக எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் நாடுமுழுவதும் 19,500 முப்படையினரும், விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நாடு முழுவதும் நீதியும், நியாயமுமான ஒரு தேர்தலை நடத்துவதற்காக சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் எடுத்துள்ளதுடன் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்கு நேரகாலத்துடன் வாக்களிக்கக்கூடிய விதத்தில் சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள் ளன என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
வாக்குச் சாவடியிலிருந்து 500 மீற்றர் தொலைவிற்குள் வேட்பாளர்களின் கட்அவுட்கள், பெனர்கள், போஸ்டர்கள், அலுவலகங்கள் அமைக்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதுடன் வேட்பாளரின் பிரதான அலுவலகம் ஒன்றில் மட்டுமே கட்டவுட், போஸ்டர், பெனர் வைக்க அனுமதி உண்டு. வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் போது தேவையேற்படும் வாக்குச் சாவடி களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்படும்.
வேட்பாளர்கள் அனைவரும் ஏப்ரல் 6 ஆம் திகதி நள்ளிரவுடன் தமது பிரதான கட்சி அலுவலகத்தை தவிர ஏனைய கட்சி அலுவலகங்களை முடிவிடவேண்டும்.
நடமாடும் பாதுகாப்புப் பிரிவில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும், இரண்டு முப்படை அல்லது விசேட அதிரடிப்படை வீரர்கள் கடமையிலீடு படுத்தப்படுவர்.
நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்க ளிக்குமாறும், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் நீதியான, நியா யமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டார்.

Followers

Blog Archive