Tuesday, June 1, 2010

எம் மீதான குற்றச்சாட்டுக்கு சர்வதேச விசாரணை அவசியமில்லை : கெஹெலிய,

Tuesday, 01 June 2010
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதால் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான அவசரம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
யுத்தத்தின் பின்னரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியதை அடுத்தே ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு இறைமையுள்ள நாடு. அதன் உள்விவகாரங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் உரிமை அதற்கு இருக்கின்றது.
நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைக்கு சாதகமான கருத்துக்களை வேறு நாடுகளும் தெரிவித்துள்ளன.
தவறுகளை நாங்களாகவே திருத்திக் கொள்வதில் தற்போது அதிக அக்கறை காண்பித்து வருகின்றோம்" என்றார்.

கொழும்பில் 3 முதல் 5 வரை சர்வதேச இந்திய திரைப்பட விழா!

Tuesday, 01 June 2010

கொழும்பில்.நாளை.மறுதினமான.3ஆம்.திகதி.முதல்.5 ஆம்.திகதிவரை சர்வதேச இந்திய திரைப்பட விருது (ஐகுகுயூ) வழங்கும்; விழா கோலாகலமாக இடம் பெறவூள்ளது.
யூனிசெப்பின் சிறுவர்களுக்கு கிரிக்கெட் என்ற திட்டத்துக்கு நிதி சேகரிக்கும் நிகழ்ச்சியாக இந்தியாவின் முன்னணி சினிமா நட்சத்திரங்களுக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் சுனில் ஷெட்டி hpதிக் ரோஷன் ஆகியோரின் தலைமையிலான இரு அணிகளும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்காரவின் தலைமையிலான அணியூம் போட்டியில் குதிக்கின்றன.
சல்மான் கான் டினோ மரியா வினோத் காம்ப்ளி கிரான் மோரே ஆகியோர் இந்திய அணிகளில் இடம்பெறும் அதேவேளை சனத் ஜயசு+ரிய முத்தையா முரளிதரன் மஹேல ஜயவர்தன ஆகியோர் இலங்கை அணியில் விளையாடுகின்றனர்.
இதேவேளை எதிர்வரும் 3 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் பாஷன் மற்றும் மாடலின் நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர்களான மனிஷ் மல்ஹோத்ரா விக்ரம் பட்னிஸ் ஆகியோருடன் உள்ளுhர் ஆடை வடிவமைப்பு கலைஞர்களான காஞ்சனா தல்பாவில யோலன்ட் அலுவிஹாரை ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
அவர்களுடன் சுமார் 15 இந்திய மொடல்கள் இந்திய ஆடை அணிகளை அணிந்து கண்காட்சியில் கலந்து கொள்வர்.
முன்ளாள் இலங்கை அழகுராணியூம் தற்போது இந்தியாவில் பிரபல நடிகையாகவூம் உள்ள ஜெக்குலின் பெர்னாண்டோவூடன் 7 முதல் 10 இலங்கை மொடல்களும் இக்கண்காட்சியில் கலந்துகொள்ளவூள்ளனர்,

Followers

Blog Archive