Friday, November 18, 2011

சாதனையாளரான இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்!

Friday, November 18, 2011
சாதனை வீரரும் இலங்கை மக்கள் தலைவருமான மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஓரா ண்டு நிறைவு விழாவும் ஜனாதிபதி அவர்களின் பிறந்த தினமும் இன்று நாட்டு மக்களால் நன்றி உணர்வுடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஜனாதிபதி அவர்கள் 2005ம் ஆண்டில் ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்ட போது அவரை இரண்டு பாரிய பிரச்சினைகள் எதிர்நோக்கியிருந்தன. ஒன்று சுனாமியினால் ஏற்பட்ட மனித மற்றும் கட்டிடங் களுக்கும், தேசிய பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட அழிவு. இரண்டா வதாக எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதம்.

சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவை ஓரிரு வருடங்களில் ஜனாதிபதி அவ ர்கள் தன்னுடைய ஆளுமைத்திறன் மூலம் வெளிநாடுகளில் இருந் தும், சர்வதேச அமைப்புகளில் இருந்தும் பெற்ற பொருளாதார, தொழி ல்நுட்ப உதவிகளைப் பயன்படுத்தி அழிவினால் சீர்குலைந்து போயி ருந்த நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த ஏழை மக்களின் கண்ணீரை துடைத்து, அவர்களுக்கு புதிய வீடுகளை நிர் மாணித்துக் கொடுத்தும், அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இருந்த சுனாமியினால் தரைமட்டமாகிய பாடசாலைக் கட்டிடங்கள், ஆஸ்பத் திரிகள், அரசாங்கத் திணைக்களங்கள் ஆகியவற்றை மீள் நிர்மாணம் செய்தும், சுனாமியினால் கணவன்மார்களையும், சம்பாதித்து கொடுக் கக்கூடிய இளம் பிள்ளைகளையும் இழந்து அல்லல்பட்டுக் கொண்டி ருந்த அபலைப் பெண்களுக்கும் வாழ்வாதாரங்களை மிகக் குறுகிய காலத்தில் பெற்றுக் கொடுத்தார்.

அடுத்த, எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தை சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்த முயற்சிகளை எல்.ரி. ரி.ஈ. தலைவர்கள் அகங்காரப் போக்கில் உதறித்தள்ளிய காரணத்தி னால் வேறு வழியின்றி மாவில்லாறு வான் கதவுகளை எல்.ரி.ரி.ஈ. மூடி யதை அடுத்து ஜனாதிபதி அவர்கள் எல்.ரி.ரி.ஈ.யை அடக்குவதற்கான இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.

மிகக் குறுகிய காலத்தில் எல்.ரி.ரி.ஈ., அதாவது 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியன்று போர் முனையில் அடக்கி, நாட்டு மக்களுக்கு பயங்கரவாதம் என்ற புலிகளின் கொடிய அரக்கனிடம் இருந்து விடுதலையை பெற்றுக் கொடுத்தார்.

இவ்விரு சாதனைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்த ஜனாதிபதி அவர்கள், அதையடுத்து திவிநெகும திட்டத்தின் மூலம் 13லட்சத்து 56ஆயிரத்து 594 வீட்டுத் தோட்ட அலகுகள் மற்றும் 94ஆயிரத்து 11 கால்நடை அலகுகளை ஏற்படுத்தி மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

கமநெகம திட்டத்தின் கீழ் இலங்கையின் நாலாபக்கங்களில் உள்ள 4 ஆயிரத்து 699 கிராமங்களில் சிறிய நீர்ப்பாசன திட்டங்களை பூர்த்தி செய்ததன் மூலம் 7லட்சத்து 14 ஆயிரத்து 438 விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 87ஆயிரத்து 960ஏக்கர் காணிகளுக்கு பயிர்ச்செய்கைக்கான நீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அது போன்று 14ஆயிரத்து 341 வாழ்வாதார திட்டங்களின் கீழ் ஊக்கு விப்பை அளிப்பதன் மூலம் 2லட்சத்து 83ஆயிரத்து 876 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் கூடுதலான வருமானத்திற்கு பங்களிப்பை செய்தார்.

7 ஆயிரத்து 785 கிராமிய மின்சார திட்டங்களை செயற்படுத்தியதன் மூலம் 4லட்சத்து 467 வீடுகளுக்கு மின்சார இணைப்பைப் பெற்றுக் கொடுத்தார். வறியவர்களுக்கான தரமான வீடுகளை திரிய பியஸ திட் டத்தின் கீழ் 18ஆயிரத்து 950 வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தார்.

தரமான வீதி வசதிகளை செய்து கொடுத்து, 7 லட்சம் வீடுகள் பயனடை யக்கூடிய வகையில் கொங்கிaட் சாலைகள், சிறுபாலங்கள் மற்றும் கிராமப்புறங்களில் விவசாய சாலைகளைக் கொண்ட 61ஆயிரத்து 226 திட்டங்களை பூர்த்தி செய்தார்.

சமூக நீர் விநியோகத் திட்டங்களின் கீழ் ஒவ்வொன்றுக்கும் 5ஆயிரம் லீற்றர் கொள்ளளவைக் கொண்ட 2ஆயிரத்து 864 நீர் விநியோகத் திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. இதன் மூலம் 5லட்சத்து 4ஆயிர த்து 200 மக்களுக்கு தரமான குடிநீருக்கான அணுகு வழியையும் ஜனாதிபதி அவர்கள் செய்து கொடுத்தார்.

இவற்றை விட நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. துறைமுகங்கள் அபி விருத்தி செய்யப்பட்டன. சுகாதார வசதிகள் அதிகரிக்கப்பட்டு, கடந்த காலத்தில் மூடப்பட்டிருந்த ஆஸ்பத்திரிகள் மீண்டும் நல்ல வசதிகளுடன் திறக்கப்பட்டன.

இவ்விதம் ஜனாதிபதி அவர்கள் தனது சிறந்த ஆளுமைத்திறனைப் பய ன்படுத்தி நாட்டு மக்களுக்கு பொருளாதாரத் துறையில் விடிவை ஏற் படுத்திக் கொடுப்பதில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இனப்பிரச்சினைக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துவதற்கான சகல அரசியல் கட்சிகளும் அங்கத்துவம் வகிக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் இதற்கான எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் முடிவை தான் நன்கு பரிசீலனை க்கு எடுத்துக் கொண்ட பின்னர் நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந் தரத் தீர்வை ஏற்படுத்துவேன் என்று ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்துள்ளார்.

இவ்விதம் இந்நாட்டு மக்களுக்காக பல்வகையிலும் அதியுன்னதமான சேவையை செய்துவரும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் இரண் டாவது பதவிக்காலத்தின் ஓராண்டு நிறைவுக்காகவும் பிறந்த தினத்திற் காகவும் நாமும் நாட்டு மக்களுடன் இணைந்து இனிய நல்வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பொன்சேகாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்!

Friday, November 18, 2011
பொன்சேகாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டமையடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Followers

Blog Archive