Friday, June 4, 2010

ஐஃபா விழாவில் சில நடிக நடிகையர் இல்லை,அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.

Friday, June 4, 2010
இலங்கையில் நடைபெறும் ஐஃபா விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் சில நடிக நடிகைகள் பங்கேற்கவில்லையென அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் ஊடகவியலாளர்கள் இது குறித்து வினவினர்.

இந்தியாவில் எல். ரீ. ரீ. ஈ க்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
உயர் மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள்மூலம் இலங்கைக்கு நன்மைகள் கிடைக்கின்றன.
பயங்கரவாதம் நிலவியபோதும் இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

அந்தப் பிரச்சினைகளை எதிர்நோக்கியதைப் போன்று தற்போதைய பிரச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் மேலும் தகவல் தருகையில் அமிதாப்பச்சன் நாட்டிற்கு வருகைதரமாட்டார் எனும் விடயத்தை எவ்வாறு எதி்ர்நோக்குவது என்பது தொடர்பில் தற்போது கூறமுடியாது என அவர் சுட்டிக்காட்டினார்

முதலமைச்சர்கள் மாநாடு மாரவிலையில்,

Friday, June 4, 2010
மாகாண முதலமைச்சர்களின் மாநாடு புத்தளம் மாவட்டத்தின் மாரவில நகரில் இன்று ஆரம்பமாகின்றது.
இந்த மாநாட்டில் மாகாணங்களில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் பொதுவாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படுமென வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நீண்டகால இடைவெளியின் பின்னர் மாகாண முதலமைச்சர்களின் மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

வட கிழக்கில் தென்பகுதி மீனவர் மீன்பிடிக்கத் தடை,

Friday, June 4, 2010
வடக்குக் கிழக்கில் கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்கான பல திட்டங்கங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் இங்கு அப்பகுதியைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மீனவர்களுக்கு மட்டுமே கடற்றொழிலுக்கு அனுமதி வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. வட கிழக்கு மாகாணங்களில் அவ்வப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மாத்திரமே மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடமுடியுமெனக் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.
தென் பகுதி மீனவர்களுக்கு வட கிழக்குப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்படமாட்டாதென அமைச்சர் தெரிவித்தார்.
தென் பகுதி மீனவர்களுக்கு இதற்கான அனுமதி வழங்கினால் அனாவசியப் பிரச்சனைகள் உருவாகலாமென அவர் சுட்டிக் காட்டினார்.

Followers

Blog Archive