Friday, June 4, 2010

ஐஃபா விழாவில் சில நடிக நடிகையர் இல்லை,அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.

Friday, June 4, 2010
இலங்கையில் நடைபெறும் ஐஃபா விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் சில நடிக நடிகைகள் பங்கேற்கவில்லையென அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் ஊடகவியலாளர்கள் இது குறித்து வினவினர்.

இந்தியாவில் எல். ரீ. ரீ. ஈ க்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
உயர் மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள்மூலம் இலங்கைக்கு நன்மைகள் கிடைக்கின்றன.
பயங்கரவாதம் நிலவியபோதும் இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

அந்தப் பிரச்சினைகளை எதிர்நோக்கியதைப் போன்று தற்போதைய பிரச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் மேலும் தகவல் தருகையில் அமிதாப்பச்சன் நாட்டிற்கு வருகைதரமாட்டார் எனும் விடயத்தை எவ்வாறு எதி்ர்நோக்குவது என்பது தொடர்பில் தற்போது கூறமுடியாது என அவர் சுட்டிக்காட்டினார்

No comments:

Post a Comment

Followers

Blog Archive