Saturday, May 8, 2010

விசாவின்றி 28 பேர் பிடிபட்டனர்

SATURDAY, MAY 08, 2010
நாட்டில் தங்கியிருப்பதற்கு உரிய விசாக்கள் இன்றி நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு டாம் வீதி, வாழைத் தோட்டம் ஆகிய பகுதிகளிலுள்ள விடுதிகளிலிருந்து கைதுசெய்யப்பட்ட இவர்கள் விசாவின்றி நாட்டில் நீண்டகாலம் தங்கியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களுள் இந்தியர்களும் நேபாளியர்களும் அடங்குகின்றபர் எனப் பொலிசார் தெரிவித்தனர்.

வன்னி உள்ளூராட்சி ஊழியருக்கு நடமாடும் சேவை

SATURDAY, MAY 08, 2010
முல்லைத் தீவிலும் கிளிநொச்சியிலும் இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்ட உள்ளூராட்சி அலுவலகர்கள் மற்றும் ஊழியர்களின் நன்மை கருதி விசேட நடமாடும் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இம்மாதம் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவையை வடமாகாண உள்ளூராட்சி அமைச்சும் உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
மே 13 ஆம் திகதி முல்லைத்தீவிலும், 14 ஆம் திகதி கிளிநொச்சியிலும் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

Followers

Blog Archive