Saturday, May 8, 2010

வன்னி உள்ளூராட்சி ஊழியருக்கு நடமாடும் சேவை

SATURDAY, MAY 08, 2010
முல்லைத் தீவிலும் கிளிநொச்சியிலும் இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்ட உள்ளூராட்சி அலுவலகர்கள் மற்றும் ஊழியர்களின் நன்மை கருதி விசேட நடமாடும் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இம்மாதம் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவையை வடமாகாண உள்ளூராட்சி அமைச்சும் உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
மே 13 ஆம் திகதி முல்லைத்தீவிலும், 14 ஆம் திகதி கிளிநொச்சியிலும் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive