Thursday, June 10, 2010

இந்திய தமிழக எம்.பிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூடன் சந்திப்பு!

Thursday, June 10, 2010
இந்திய மக்களவையில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை உயர்மட்ட தூதுக்குழுவினருடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் மவூரியா ஹோட்டலில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கை உயர்மட்டக் குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கநிதி அமைச்சசின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தர ஆகியோரும் பங்குகொண்டனர்.

இந்திய தமிழக குழுவில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கனிமொழிடி.கே.எஸ்.இளங்கோவன் ஏ.கே.எஸ்.விஜயன்.ஜி.சுகவனம ஆதிசங்கர் அப்துல்ரகுமான் ஆர்.தாமரைச்செல்வன்ஜே.கே.ரிதீஷ் எஸ்.ஆர்.ஜெயதுரை ஏ.ஏ.ஜின்னா வசந்தி ஸ்டான்லி ஆகியோரும் காங்கிரஸ் கட்சி சார்பில் மணிசங்கர ஐயர் எம்.கிருஷ்ணசாமி கே.எஸ்.அழகிரி பி.விஸ்வநாதன் மாணிக் தாகூர் ஜெயந்தி நடராஜன் .எம்.சுதர்சன நாச்சியப்பன் பி.எஸ்.ஞானதேசிகன் ஆகியோரும் கலந்து கொண்டனார்

போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியூள்ள மக்கள் விரைவில் மீள்குடியேற்றப்படுவர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ்நாட்டு எம்.பி.க்களிடம் உறுதியளித்துள்ளார்.

வடக்கில் புலிகளால் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதினாலேயே குறித்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமாகின என்றும் ஜனாதிபதி அவர்களிடம் சுட்டிக்காட்டியூள்ளார்.

இலங்கை தமிழர்களின் எதிர்கால நல்வாழ்வூக்காக அரசினால் செயற்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டம் இந்திய உதவியூடன் துரிதமாக நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி இந்திய அமைச்சா;களுக்கு இச்சந்திப்பின்போது விளக்கிக் கூறினார்

இந்திய வர்த்தகரைத் தாக்கிய 3 பேருக்குப் பிணை,

Thursday, June 10, 2010
சிலாபம் ஆராச்சிக்கட்டுவப் பகுதியில் இந்திய வர்த்தகர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இம்மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆராச்சிக்கட்டுவப் பிரதேசத்தில் தும்பு சார்ந்த வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த இந்திய வர்த்தகரைக் கடத்திச்சென்று தாக்கியதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்தே பொலிசார் இவர்களைக் கைது செய்தனர்.
ஆராச்சிக்கட்டுவப் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட குழுவினர் குறித்த வர்த்தகரை நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கடத்திச்சென்று தாக்கி அச்சுறுத்தியுள்ளனர்.

ஊழியர் பிரச்சனையை மையமாகக் கொண்டே இத்தாக்குதல் நடத்தப்ப்ட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த இந்திய வர்த்தகர் ஆராச்சிக்கட்டுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகப் பொலிசார் கூறினர்.

ஜனாதிபதி – சோனியா சந்திப்பு!

Thursday, June 10, 2010
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழுவினரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

புதுடெல்லி மயூ+ரா ஹோட்டலில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கை உயர்மட்டக் குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கஇ நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தர ஆகியோரும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும் பங்கு கொண்டனர்.

இந்தியாவூக்கும் இலங்கைக்குமிடையில் மிக நீண்டகாலமாக நிலவூம் நல்லுறவை மேலும் பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இங்கு திருமதி சோனியா காந்தி குறிப்பிட்டார்

இலங்கை சகல துறைகளிலும் அபிவிருத்தியடைந்து வருவதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையிலான உல்லாசப் பிரயாணத்துறையை மேலும் முன்னேற்ற நல்ல தருணம் உருவாகியூள்ளதென்றம் அவா; கூறினார்

ஜனாதிபதி இரண்டாவது முறையாகவூம் மக்களால் தெரிவூ செய்யப்பட்டமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திருமதி சோனியா காந்தி இரு நாட்டுத் தலைவா;களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியத்தையூம் வலியூறுத்தினார்

Followers

Blog Archive