Thursday, June 10, 2010

இந்திய தமிழக எம்.பிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூடன் சந்திப்பு!

Thursday, June 10, 2010
இந்திய மக்களவையில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை உயர்மட்ட தூதுக்குழுவினருடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் மவூரியா ஹோட்டலில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கை உயர்மட்டக் குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கநிதி அமைச்சசின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தர ஆகியோரும் பங்குகொண்டனர்.

இந்திய தமிழக குழுவில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கனிமொழிடி.கே.எஸ்.இளங்கோவன் ஏ.கே.எஸ்.விஜயன்.ஜி.சுகவனம ஆதிசங்கர் அப்துல்ரகுமான் ஆர்.தாமரைச்செல்வன்ஜே.கே.ரிதீஷ் எஸ்.ஆர்.ஜெயதுரை ஏ.ஏ.ஜின்னா வசந்தி ஸ்டான்லி ஆகியோரும் காங்கிரஸ் கட்சி சார்பில் மணிசங்கர ஐயர் எம்.கிருஷ்ணசாமி கே.எஸ்.அழகிரி பி.விஸ்வநாதன் மாணிக் தாகூர் ஜெயந்தி நடராஜன் .எம்.சுதர்சன நாச்சியப்பன் பி.எஸ்.ஞானதேசிகன் ஆகியோரும் கலந்து கொண்டனார்

போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியூள்ள மக்கள் விரைவில் மீள்குடியேற்றப்படுவர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ்நாட்டு எம்.பி.க்களிடம் உறுதியளித்துள்ளார்.

வடக்கில் புலிகளால் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதினாலேயே குறித்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமாகின என்றும் ஜனாதிபதி அவர்களிடம் சுட்டிக்காட்டியூள்ளார்.

இலங்கை தமிழர்களின் எதிர்கால நல்வாழ்வூக்காக அரசினால் செயற்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டம் இந்திய உதவியூடன் துரிதமாக நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி இந்திய அமைச்சா;களுக்கு இச்சந்திப்பின்போது விளக்கிக் கூறினார்

No comments:

Post a Comment

Followers

Blog Archive