Saturday, July 31, 2010

இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம்: மத்திய மந்திரிசபை முடிவு.

Saturday, July 31, 2010
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மூத்த மந்திரிகள் பிரணா? முகர்ஜி, ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, எஸ்.எம். கிருஷ்ணா, சீடு. ராசா மற்றும் கேபினட் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலங்கையில் தமிழர் பகுதியான யாழ்ப்பாணம் நகரில் துணை தூதரகம் அமைப்பது என்று முடிவு எடுத்தனர்.

இதன் மூலம் இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியும் என்பதால் அங்கு துணை தூதரகம் அமைக்க முடிவு செய்தனர்.

ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்துவது என்றும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இலங்கையில் ‘ரூனா’ டின்மீன் தொழிற்சாலை.

Saturday, July 31, 2010
மாலைதீவூ ரூனா’ டின்மீன் தொழிற்சாலை யொன்றை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு மாலைதீவூ அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்த மாலைதீவூ மீன்பிடி மற்றும் விவசாய அமைச்சர் ஷுஹஸைன் ரசீட் ஹசன்இ மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவூடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டது.

மாலைதீவிலுள்ள மூன்று பிரதான டின் மீன் கம்பனிகளில் ஒன்றை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு மாலைதீவூ ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதன் படிஇ மாலைதீவூ அரசின் ஒத்துழைப்புடன் ரூனா டின் மீன் கம்பனி அமைக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

சார்க் நாட்டு மீன்பிடி அமைச்சர்கள் பேச்சு நடத்தி வலய கடற் பரப்பில் மீன் வளத்தை முகாமைத்துவம் செய்யவூம் மீன் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவூம் அவர் குறிப்பிட்டார்.

மேலைத்தேய நாட்டு மீனவர்கள் எமது கடற் பிராந்தியத்தில் சட்ட விரோதமான முறைகளில் மீன் பிடிப்பதை தடுக்க வலய நாடுகள் இணைந்து செயற் பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையிலுள்ள நாரா நிறுவனத்தினூடாக மாலைதீவூ மீன்பிடித்துறை சார் ஆய்வூகளில் தொடர்புபட்டுள்ளவர்களுக்கு பயிற்சி வழங்க எதிர்பார்ப்பதாக மாலைதீவூ அமைச்சர் கூறினார்

Thursday, July 29, 2010

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் ‐ யசூசி அக்காசி ‐ அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் இலங்கை, ஜப்பானுக்கு விளக்கம்.

Thursday, July 29, 2010
இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் என இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அக்காசி தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருடனான பேச்சுவார்த்தையின் போது அக்காசி இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர் மக்கள் நிலைமை, புனர்நிர்மாணப் பணிகள், அவசரகாலச் சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளமை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நியமனம் போன்ற விடயங்கள் குறித்து இரண்டு அமைச்சர்களும், யசூசி அக்காசிக்கு விளக்கமளித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னரான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் எனவும், தற்போதைய சூழ்நிலை மகிழ்ச்சி அளிப்பதாகவும் அக்காசி தெரிவித்துள்ளார்.


அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் இலங்கை இமைச்சர்கள், ஜப்பானிய அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் ஜப்பானிய முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான குழுவினர் தற்போது ஜப்பானில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இயல்பு நிலைமையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஜப்பானிய முக்கியஸ்தர்களுக்கு விளக்கியுள்ளனர்.

தமிழ்க் கட்சிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இட்ட கடிதம் அனுப்பி வைப்பு!

Thursday, July 29, 2010
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்றுபிற்பகல் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான ந.குமரகுருபரன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ப.உதயராசா, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலர் தி.சிறீதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரும், இக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும்; இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் துயரங்களையும், அவலங்களையும் கருத்திற்கொண்டு தமிழ்பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் இணைந்து செயற்பட வேண்டுமென்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது தமிழ்க் கட்சிகள் அனைத்தினது கடமையென்றும், இந்தவகையில் நீண்டகால பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், உடனடியாக எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஆக்கபூர்வமாக உதவுவதற்கும் தமிழ்பேசும் அரசியல் சக்திகள் ஒரு கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டுமென்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும்; ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் கலந்துரையாடி ஒருமித்த நிலைப்பாட்டை அடைய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி இதுவிடயமான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துகொள்ளச் செய்வதற்காக, கூட்டத்தில் பங்கேற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதமொன்றையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Sunday, July 25, 2010

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை.

July 26, 2010
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய விடயங்கள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று எதிர்வரும் மாதம் புதுடெல்லிக் விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுடன் விஜயம் செய்ய உள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இலங்கை உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்திய அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் ஏனைய புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துயாடப்படவுள்ளது. ஆகஸ்ட் மாத நடுப்பகுதியளவில் இந்த விஜயம் நடைபெறலாம் என வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார். பெசில் ராஜபக்ஷ தலைமையிலான இதே இராஜதந்திர குழு கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலும் இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அகதி அந்தஸ்து வழங்குவது குறித்து சர்வதேசத்திற்கு இலங்கை எச்சரிக்கை.

July 26, 2010
துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறோம் என்ற உணர்வு ரீதியான கோரிக்கைகளின் அடிப்படையில் புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கப்படுவது சட்டவிரோத குடியேற்றத்தையே ஊக்குவிக்கும் என சர்வதேச சமூகத்தை இலங்கை அரசாங்கம் எச்சரித்துள்ளது.

வியட்நாமில் நடைபெற்ற ஆசியான் பிராந்திய அமைப்பின் 17 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆழ்கடலில் கடத்தல்களை - குறிப்பாக சிறிய படகுகளில் ஆட்களையும் பொருட்களையும் கடத்துவதை - முறியடிப்பதற்கு இலங்கை கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

துன்புறுத்தப்படுவதான உணர்வின் அடிப்படையில் அகதி அந்தஸ்து வழங்குவது சட்டவிரோத குடியேற்றத்தையே குடியேற்றத்தையே ஊக்குவிக்கும். எனவே பாதுகாப்பு வலையமைப்பு, பிராந்திய கடற்பரப்புகளில் காவலில் ஈடுபடுதல் ஆகியவற்றினால் சட்டவிரோத இடப்பெயர்வுகளையும் சட்டவிரோத வர்த்தகத்தையும் தடுக்க முடியாது எனவும் அவர்பிரதியமைச்சர் குணவர்தன கூறினார்.

பயங்கரவாத அமைப்புகளிடம் எல்லைகளை ஊடறுத்துச் செல்லும் ஆற்றலும் நவீன தொழில்நுட்பங்களும் இருப்பதாகக் கூறிய அவர் புலம்பெயர்ந்தவர்களின் குழுக்கள் மற்றும் அனுதாபிகளின் நிதியளிப்புச் செயற்பாடுகள் உட்பட பயங்கரவாதிகளின் நாடுகடந்த செயற்பாடுகளை தடுப்பதற்கு கூட்டு முயற்சிகள் அவசியம் எனக் கூறினார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை!

July 26, 2010
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய விடயங்கள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று எதிர்வரும் மாதம் புதுடெல்லிக் விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுடன் விஜயம் செய்ய உள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இலங்கை உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்திய அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் ஏனைய புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துயாடப்படவுள்ளது.

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியளவில் இந்த விஜயம் நடைபெறலாம் என வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.

பெசில் ராஜபக்ஷ தலைமையிலான இதே இராஜதந்திர குழு கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலும் இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, July 21, 2010

தோழர் வரதராஐப்பெருமாள் அளவெட்டி கச்சாய் சாவகச்சேரி கிளாலி மக்களோடு மக்களாய்

Wednesday, July 21, 2010

இலங்கைக்கு அளித்த நிதியை கண்காணிக்க குழு.

Wednesday, July 21, 2010
இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு அளித்த நிதி முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதை அறிய அதிகாரிகள் குழு அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தத் தகவலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்க உள்ளது. இதையொட்டி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியதாவது,

இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணியை விரைவாக கால தாமதம் இன்றி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் மறு குடியேற்றத்துக்காக அவர்களுக்கு வீடு கட்டித் தரவும் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு மூலம் ரூ.500 கோடி அளித்ததுடன், 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்திய அரசால் வழங்கப்பட்ட இந்தத் தொகை எந்த அளவுக்கு முறையாக செலவழிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. இலங்கையில் மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமையைக் கண்டறியவும் தூதரகம் மூலமாகவோ அல்லது சிறப்புத் தூதரை அனுப்புவதன் மூலமாகவோ நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று முதல்வர் கருணாநிதி ஆலோசனை கூறியிருந்தார்.

இதை உடனடியாக செயல்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது,

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக வழங்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை அறிந்திட, அதிகாரிகள் குழு நியமிக்கப்படும். இந்தக் குழுவை அங்கு அனுப்புவதற்கு முறைப்படியான அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், அடிப்படை வசதிகள் அற்ற இடைக்கால முகாம்களிலேயே வசிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்குப் பகுதியில் சிங்களர் குடியேற்றத்தை விரைவுபடுத்தவும் மகிந்த ராஜபட்ச அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழர் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையையும் சீனாவுக்கு இலங்கை தாரை வார்த்துள்ளது. இலங்கைக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் சீனா ஆழமாக காலூன்றி வருகிறது. இது எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பேராபத்தாக முடிய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் பிரதமர் மன்மோகன் சிங், முக்கியமான மத்திய அமைச்சர்களை சந்தித்த இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு இந்தியா தலையிட்டால்தான் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா - இலங்கை இரு தரப்பு உறவு பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை.

Wednesday, July 21, 2010
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளெக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற ஜனாதிபதியுடனான ரொபர்ட் பிளெக்கின் சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதில், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் திறைசேரி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோரும் கலந்துகொண்டனர் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.

இதேவேளை, இலங்கை அதிகாரிகளுக்கும் ஏனையோருக்கும் அமெரிக்காவில் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் மேலும் கூறியது.

Saturday, July 17, 2010

அரசாங்கத்திற்குக் கூட்டு ஆலோசனை.

Saturday, July 17, 2010
மலையகப் பெருந்தோட்டங்களில் அரச நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக, தொழிற்சங்க மற்றும் அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்குக் கூட்டு ஆலோசனையொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளன.

பெருந்தோட்டங்களை அரச நிர்வாகத்தின் கீழ் உள்வாங்கும் வகையில் புதிய கிராம சேவையாளர் பிரிவுகளும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் முன்மொழியப் பட்டுள்ளதோடு இது தொடர்பான பொதுவான கூட்டறிக்கை இம்மாத இறுதிக்குள் எல்லை மீள் நிர்ணய குழுவுக்குக் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை கொழும்பிலுள்ள �இலங்கை மன்றக் கல்லூரி�யில் நடைபெறுகிறது.

இதில் மலையகத்தில் இயங்கும் சகல அமைப்புகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக எல்லை மீள்நிர்ணயம் தொடர்பாக மலையக அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளரான பீ. பீ. தேவராஜ் தெரிவித்தார்.

அரசியல் கருத்தியலுக்கு அப்பால் சமூக நலச் சிந்தனையை நோக்காகக் கொண்டு பொதுவான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துச் செயற்படுத்தி வருவதாகக் கூறிய அவர், மலையகத்தின் முன்னணி அரசியல், தொழிற்சங்க அமைப்புகளும் இது விடயத்தில் பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகக் கூறினார்.

காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்து கிராம சபை கட்டமைப்பிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்ட மலையக சமூகம் இதுவரை காலமும் அரச நிர்வாகத்திலிருந்தும் புறந்தள்ளப்பட்டிருக்கின்றது. தோட்ட அதிகாரியே இந்த மக்களின் நிர்வாகியாக இருந்து வருகிறார்.

எனவே, சமத்துவத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் வகையில், யதார்த்த நிலையினின்று புதிய ஆலோசனைகளை வரைந்துள்ளோம். இதில் இனரீதியான சிந்தனைப் போக்கு கிடையாது. நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையிலேயே இந்த ஆலோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது என்று தெரிவித்த தேவராஜ், நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன் தற்காலிக ஏற்பாடாக கிராம சேவையாளர் பிரிவுகள் பலவற்றைப் புதிதாகப் பிரேரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதைய ஏற்பாட்டின்படி 350 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவையாளர் பிரிவொன்றை ஏற்படுத்த வேண்டும். ஆனால், தோட்டங்கள் தற்போது சிறு நகர பிரதேசத்திற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளதால், தோட்டத்திற்கொரு கிராம சேவையாளர் பிரிவை ஏற்படுத்தும் வாய்ப்பு இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைக்கு நுவரெலியாவிலும் கொழும்பு வடக்கிலும், மேலதிக பிரதேச செயலகப் பிரிவுகளைக் கோருவதற்கும் விரிவான ஆய்வுக்குப் பின்னர் சனத்தொகை, நிலத்தொடர்பு முதலான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய ஆலோசனைகள் முன்வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தேவராஜ் மேலும் தெரிவித்தார்.

மீண்டும் இலங்கை வருகிறார் நீல் புஹ்னே.

Saturday, July 17, 2010
இலங்கைக்காக ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியும் மனிதத்துவ இணைப்பாளருமான நீல் புஹ்னே கடந்தவாரம் நியூயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனின் விஷேட செய்தியுடன் இலங்கைக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக ஐ.நா.சபையின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனுக்கு இலங்கை நிலைவரம் பற்றியும் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலர்களின் நிலைமை பற்றியும் நீல் புஹ்னே எடுத்துக்கூறியிருக்கிறார். 2009ஆம் ஆண்டு ஐ.நா. சபையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் கலந்தாலோசித்திருக்கிறார்கள்.

திருப்பியழைக்கப்பட்ட நீல் புஹ்னே எதற்காக மீண்டும் இலங்கைக்கு செல்கிறார் என பேச்சாளரிடம் கேட்டபோது… இலங்கையில் இப்பொழுது அரசாங்கத்தின் சாதகமானநிலை தென்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள ஐ.நா. பணியாளர்கள் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் பணிபுரிகிறார்கள். இதனைக் கருத்திற்கொண்டே புஹ்னே மீண்டும் இலங்கை செல்லவுள்ளார் என்று குறிப்பிட்டார்.

மன்னாரில் இலவச மருத்துவ முகாம்.

Saturday, July 17, 2010

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்காக நாற்சதுர சுவிசேஷ சபையின் அனுசரணையில், இலங்கை இராணுவம் - சுகாதார அமைச்சுடன் இணைந்து நடாத்தும் இலவச வைத்திய முகாம் உயிலங்குளம், மல்லாவி, பூனகரி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றது.

மேலும் 19ஆம் திகதி நெடுங்கேணியிலும், 20ஆம் திகதி ஒட்டிசுட்டானிலும், 22 முதல் 24ஆம் திகதிவரை வரை நட்டான்கண்டலிலும் நடைபெறவுள்ளது. இவ் மருத்துவ முகாமிற்காக விசேட மருத்துவ குழு ஒன்று அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, சுவிஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் நமது நாட்டின் மருந்துவர்களும் கலந்துகொள்வர்.

ஏற்கனவே இவ்வமைப்பினர் தமது மருத்துவ முகாம்களை திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் நடத்தியிருந்தனர். நான்காவது முகாமாக மன்னாரில் இப்பொழுது நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது

Wednesday, July 14, 2010

பழம்பெரும் தொழிற்சங்கவாதியும், மேல் மாகாண ஆளுநருமான அல்ஹாஜ் அலவி மௌலானா அவர்களுடனான சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பொருமாள்



Wednesday, July 14, 2010
பழம்பெரும் தொழிற்சங்கவாதியும், மேல் மாகாண ஆளுநருமான அல்ஹாஜ் அலவி மௌலானா அவர்களுடனான சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பொருமாள்

பிரான்சில் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.


Wednesday, July 14, 2010
பிரான்சில் சார்சல் என்னும் இடத்தில் 11.07.2010 அன்று மாலை 4 மணியிலிருந்து மாலை 7.30 மணிவரை தியாகிகள் தின நிகழ்வுகள் நடைபெற்றன. தோழர் ஜோதியின் வரவேற்புரையைத் தொடர்ந்து போராட்டத்தில் இதுவரை காலமும் மரணித்த மக்களுக்காகவும் போராளிகளுக்காகவும் இரண்டு நிமிட அஞ்சலிகள் செலுத்தப்பட்டன. மறைந்த தோழர் புஸ்பராஜா அவர்களின் துனைவியார் மீரா புஸ்பராஜா மங்களவிளக்கேற்றினார். முன்னைநாள் EPRLF அரசியல் செயற்பாட்டாளரும் தோழர் பத்மநாபாவின் நண்பருமான தோழர் கணேசமூர்த்தி தோழர் பத்மநாபாவின் உருவப்படத்திற்கு மாலையணிவித்தார். தொடர்ந்து அஞ்சலிக்கூட்டம் தோழர் கொட்வின் தலைமையில் நடைபெற்றது.

ஜேர்மன் கிளையின் சார்பாக தோழர் அலெக்ஸ் உரையாற்றும்போது 20 வது தியாகிகள் தினத்தினை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வோம். ஏனேனில் அவர்கள் உயரிய இலட்சியங்களுக்காக போராடியவர்கள். அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை முன்னெடுத்து செல்வதே தோழர்களாகிய நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகுமென்று கூறினார்.

EPDP யின் பிரான்ஸ் கிளை சார்பாக தோழர் தமிழ் நேசன் உரையாற்றும்போது நான் தோழர் நாபாவை நேரில் பார்த்ததில்லை ஏனேன்றால் நான் வயதில் மிகவும் சிறியவனாக இருந்தேன். ஆனால் நான் நேசிக்கின்ற தலைவர் அவர்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றார். அதிலிருந்து அவர் எவ்வகையான தலைவராக இருந்திருப்பார் என்பதை என்னால் உணரமுடிகின்றது. கூட்டத்தில் பேசக்கிடைத்தால் ஐக்கியத்தை வலியுறுத்தி பேசுங்கள் என்று எனது தலைவர் கூறினார் என்றும் தெரிவித்தார்.

சுவிஸ் கிளையின் சார்பாக தோழர் பெர்னாண்டோ உரையாற்றும்போது நான் நீண்ட காலமாக தோழர் நாபாவுடனும் ஏனைய மறைந்த தோழர்கள் பலருடனும் அரசியல் பணியில் ஈடுபட்டிருக்கின்றேன். அந்த தோழர்களுடன் இணைந்து பணியாற்றிய காலங்களை என்னால் மறக்க முடியவில்லை. அவர்களை எங்கள் நெஞ்சங்களில் பூஜிக்கின்றோம். அவர்கள் கண்ட தொலைதூரக் கனவுகளை நனவாக்குவோம் என்று கூறினார்.

அரசியல் செயற்பாட்டாளரும், கவிஞருமான தோழர் அருந்ததி உரையற்றும்போது. ஈழப் போராட்ட வரலாற்றில் EPRLF கட்சி மட்டும்தான் ஜனநாயக பண்புகளுடன் சமுகத்திலிருக்கின்ற சாதிரீதியாக, வர்க்கரீதியாக ஒடுக்கு முறைக்கு உள்ளானவர்களை அணிதிரட்டியது. மக்களின் எதிர்காலம் தொடர்பாக தீர்க்கதரிசனத்துடன் முடிவுகளை எடுத்தது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று மேலும் நமது உரிமைகளை படிப்படியாக வெண்றெடுக்க வேண்டுமென்ற தோழர் நாபாவினதும் அவரது கட்சியினதும் முடிவுகள் எவ்வளவு தீர்க்கதரிசனமானது என்பதை இன்றைய நிலமைகளிலிருந்து உணரக்கூடியதாகவுள்ளது. EPRLF கட்சியானது எதிர்காலத்தில் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையையும் விடுத்தார்.


இடதுசாரி செயற்பாட்டாளரான தோழர் லோகநாதன் ஆசிரியர் உரையாற்றும்போது நான் இவ்வருடம் ஜெர்மனி, சுவிஸ், பிரான்ஸ் போன்ற இடங்களில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வுகளில் பங்குபற்றியதில் நான் சந்தோசமடைகின்றேன். ஏனெனில் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் படிப்படியான முன்னேற்றத்தை காணக்கூடியதாகவிருந்தது. அவர்களிடம் காணப்படும் தோழமையும், ஒற்றுமையான செயற்பாடுகளும் தோழர் நாபா எப்படியான தலைமைப் பண்பைக் கொண்டிருந்திருப்பார் என்பதை என்னால் உணரமுடிகின்றது. EPRLF தோழர்களால் உண்மையான ஐக்கியத்தையும் மக்களுக்கான சுபிட்சமான எதிர்காலத்தையும் உருவாக்கமுடியும் என்று தான் நம்புவதாக கூறினார்.

JVP யின் செயற்பாட்டாளர் நந்தன குணசிங்கா உரையாற்றும்போது தோழர் நாபாவை 70 களிலிருந்து அவருடைய செயற்பாடுகளை பார்த்திருக்கின்றேன். அந்தக் காலத்தில் வடகிழக்கில் மட்டுமல்லாது தென்னிலங்கையிலும் இடதுசாரி முற்போக்கு சக்திகள் மத்தியில் சிறு சிறு கூட்டங்களை நடத்தியிருந்தார். அவருடைய சிந்தனையும் செயற்பாடுகளும் அனைத்து இனமக்களின் நலன் சார்ந்ததாகவே இருந்தது என்று குறிப்பிட்டார்.

TBC யின் அரசியல் ஆய்வாளரும், இடதுசாரி செயற்பாட்டாளருமான தோழர் சிவலிங்கம் அவர்கள் நீண்டதொரு சிறப்புரையை ஆற்றியிருந்தார். அவருடைய உரையில் நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை தீர்மானம், அரசியல் தீர்வை புறம்தள்ளிய அபிவிருத்தி, நாடளாவிய ரீதியில் ஜனநாயக விழுமியங்களை சிதைக்கின்ற செயற்பாடுகள், இராணுவ மயமாக்கல் போன்ற விடயங்களை உள்ளடக்கியிருந்தார். இலங்கையில் இவ்வகையான செயற்பாடுகள், அணுகுமுறைகள் அனைத்தும் நாட்டை மேலும் பின்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லும் என்று எச்சரிக்கை தொனியில் குறிப்பிட்டார். இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு , முழு இலங்கைக்குமான சுபிட்சமான எதிர்காலம் என்பதெல்லாம் நாட்டின் சகல துறைகளிலும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதிலேயே தங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். அவருடைய பேச்சுக்கள் சபையிலுள்ளோரை சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்திருந்தது.

கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும், சர்வதேசக் கிளைகளின் பொறுப்பாளருமான தோழர் சாந்தன் உரையாற்றும்போது நாம் இன்று பிரான்ஸில் 20 வது வருட தியாகிகள் தினத்தை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம். தோழர் பத்மநாபா போன்ற பல நூறு ஆற்றல் மிக்க தலைவர்களை இழந்திருக்கின்றோம். இவர்கள் அனைவரும் உயரிய இலட்சியங்களுக்காக தொலைதூரக் கனவுகளுடன் போராடப் புறப்பட்டவர்கள். இந்த மரணித்த தோழர்களுடன் நாம் இரவு, பகலாக கலந்துரையாடிய, விவாதித்த விடயங்களைத்தான் நாம் இலகுவில் மறந்துவிடத்தான் முடியுமா தோழர்களே? இவர்கள் சக மனிதர்களை மனிதனாக மதிக்க வேண்டுமென்று விரும்பியவர்கள். தமிழ் சமுகத்தில் இருக்கின்ற சகலவிதமான பிற்போக்கு தனங்களையும், ஏற்றத் தாழ்வுகளையும் நிராகரித்தவர்கள். எமது கட்சியானது இவ்வகையான விடயங்களில் எந்தவொரு சமரசத்திற்கும் இடம் கொடுக்காது செயற்படும் என்றும் தெரிவித்தார். கடந்த காலத்தில் எமது கட்சியுடன் இணைந்து பணியாற்றிய பல தோழர்களை பார்க்கின்றபோது எனக்கு பழைய நினைவுகளே என் கண்முன்னே வருகின்றன. இத்தோழர்கள் அனைவரினதும் அர்ப்பணிப்புக்களும் உழைப்புக்களும் பதிவு செய்யப்படவேண்டியவை என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் தி.சிறிதரன்(சுகு) அவர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட தியாகிகள் தின செய்தி ஒன்று வாசிக்கப்பட்டது. கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் வட-கிழக்கு மாகாண முதலமைச்சரானதோழர் வரதராஜப்பெருமாள் அவர்களின் தியாகிகள் தின செய்திகள் மற்றும் அரசியல் நிலவரம் தொடர்பான விடயங்கள் தொலைபேசி மூலமாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.

மாவட்ட ரீதியாக மறைந்த தோழர்களின் விபரமும், புகைப்படங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவ்வருடம் இலங்கை, இந்தியா, பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, சுவிஸ் போன்ற இடங்களில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வுகளின் புகைப்படங்களும் மக்களின் பார்வைக்குவைக்கப்பட்டிருந்தன. EPRLF இன் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக நேற்று இன்று நாளை என்னும் தலைப்பில் விபரணப்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறியது.

பத்மநாபா EPRLF (பிரான்ஸ் கிளை.)

ஐ.நா மூவர் குழு அடுத்த வாரத்தினுள் கூடுகிறது,

Wednesday, July 14, 2010
இலங்கை தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கென ஐக்கிய நாடுகள் செயலாளரினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுணர் குழு அடுத்த வாரத்துக்குள் நியூயோர்க்கில் கூட எண்ணியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.

தமது அமைப்பின் இலங்கைக்கான வதிவிட இணைப்பதிகாரி நீல் பூனே தற்போது நியூயோர்க்கில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் ஊடகப் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழு அடுத்த வாரத்துக்குள் நியூயோர்க்கில் கூடவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுவரை உறுதியான திகதி நிர்ணயிக்கப்பட்டவில்லையெனக் கூறினார்.

நீல் பூனே தற்போது நியூயோர்க்கில் தங்கியிருப்பதாகவும், அவர் ஐக்கிய நாடுகள் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்றுவருவதாகவும் ஃபர்ஹான் ஹக் குறிப்பிட்டார்.

வைகோ, நெடுமாறன் கைது,

Wednesday, July 14, 2010
சென்னையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழநெடுமாறன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை இதுழாசிரியர் மா நடராசன் உட்பட ஏராளமானோரை தமிழ் நாடு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றமையைக் கண்டித்தும், ஐ.நா நிபுணர் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மறுக்கும் மஹிந்த அரசுக்கு தமிழகத்தில் தூதரகம் இயங்கக் கூடாது என்று தெரிவித்தும் இலங்கை அரசுக்கு எதிராக சென்னை மைலாப்பூர் பகுதியில் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 இற்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர். ஐ.நா விசாரணைக் குழுவை அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசுக்கு தமிழகத்தில் தூதரகம் இயங்கக்கூடாது என்று முழக்கமிட்டவாறு மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவிலிருந்து தூதரகத்தை நோக்கி அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது பொலிஸார் தடுத்தி நிறுத்தி இவர்களைக் கைது செய்தார்கள் என இந்தியாவிற்கான இலங்கை தூதரக பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பேதங்களை மறந்து நாட்டுக்காக உழைக்க முன்வரவேண்டும்,

Wednesday, July 14, 2010
அரசியல் பேதங்களை புறந்தள்ளிவிட்டு நாட்டின் முன்னேற்றத்துக்காக சேவையாற்ற முன்வருமாறு அரசாங்க ஊழியர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார். கிளிநொச்சி படைத்தலைமையகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அரச ஊழியாகளைச் சந்தித்து உரையாடியபோதே இக்கோரிக்கையை அவர் முன்வைத்தார்.

ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில் :-

உங்கள் மத்தியில் பலவித அரசியல் பேதங்கள் இருக்கலாம். விடுவிக்கப்பட்டுள்ள இந்த பூமியை மீளக் கட்டியெழுப்புவதற்காக நீங்கள் அரசியல் பேதங்களை மறந்து நாட்டுக்காக உழைக்க முன்வரவேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்க ஊழியர்களின் சேவை அத்தியாவசியமானதாகும் என்று ஜனாதிபதி கூறினார்.

அரசாங்க ஊழியர்கள் மத்தியில் ஜனாதிபதி தமிழ் மொழிலும் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, July 11, 2010

தலைமைகளிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு வடக்கு கிழக்கின் முன்னாள் முதலைமைச்சர் வரதராஜப்பெருமாள்!

Sunday, July 11, 2010
அவசியமாகும். வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவருமான அ. வரதராஜப்பெருமாள் நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக இந்தியாவில் தங்கியிருந்தார். தற்போது தாயகம் திரும்பி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: பி. வீரசிங்கம்
கேள்வி: யுத்தம் முடிவடைந்து வடக்கு கிழக்கில் சுமுக நிலை ஏற்பட்டு வருகிறது. தற்போதைய அரசியல் நிலைமைகளை நீங்கள் எவ்வாறு பார்க்கிaர்கள்?

பதில்: நிச்சயமாக பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. முன்னர் தமிழர்கள் மத்தியிலிருந்த நியாயமான கோரிக்கைகள் எல்லாம் மறைக்கப்பட்டு பிரிவினைவாதமும், யுத்தமுமே முன்னிலையில் இருந்தன. ஆனால் இப்போது அரசியல் தீர்வு தொடர்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை பற்றி நியாயமான முறையில் பேசவோ கலந்துரையாடவோ உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளவோ முடியாதிருந்த நிலைமை இப்போது இல்லை. மாறாக தமிழர்களின் கட்சிகளுக்கிடையிலே உடன்பாடுகளுக்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் பிரிவினையை அடிப்படையாக கொண்டதல்ல என்பது இப்போது தெளிவாக உலகத்தின் முன்னால் வெளிப்படுத்தப்படுகிறது. இதேவேளை இலங்கையிலுள்ள சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கிடையேயும் உடன்பாடுகள் காணப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம் பெறுகின்றன.

இலங்கை அரசாங்கமும் தனது முயற்சிகள் பற்றி வெளிப்படுத்திக்கொண்டிருக்கி றது. இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கான கலந்துரையாடலில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.

தமிழக தலைவர்களும் இலங்கை தமிழர்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வு இலங்கை அரசினால் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகிறார்கள். இவ்வாறான பல முற்போக்கான நிலைமைகள் ஏற்பட்டிருப்பது அரசியல் தீர்வு பற்றிய விடயத்தில் மேலும் முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கான குறிகாட்டிகளாகும்.

கேள்வி: இனவாத கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தும் கட்சிகளை மீறி அரசினால் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள முடியுமென நீங்கள் கருதுகிaர்களா?

பதில்: இனவாத சக்திகள் எந்த சமூகத்திலும் ஒரு குறிப்பிட்ட சிறிய விகிதாசாரத்தில் இருக்கக்கூடும். அவையே அந்த சமூகத்தின் பெரும்பான்மையான மக்களின் பிரதிநிதிகள் என்று கூற முடியாது. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இனவாத சக்திகளுக்கு சிங்கள மக்களில் ஐந்து சத வீதமானவர்கள் கூட ஆதரவாக இல்லை.

எனவே இலங்கை அரசு அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கு இனவாத சக்திகளை ஒரு தடையாக கருதவோ, கூறவோ முடியாது. இலங்கையின் இரு பெரும் கட்சிகளின் தலைவர்களும், சிறுபான்மை எண்ணிக்கை கொண்ட இனங்களின் கட்சிகளின் தலைவர்களும் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டால் அதனை நடைமுறைக்கு வர முடியாமல் எந்த இனவாத சக்தியாலும் தடுக்க முடியாது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு எனவே இங்கு சட்டங்களை ஆக்கும் மன்றங்களில் இருக்கும் பெரும்பான்மையான பிரதிநிதிகளின் மத்தியில் ஒரு பொது உடன்பாடு ஏற்பட்டால் இலங்கையின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்தத் தடையும் இருக்க மாட்டாது.

கேள்வி: இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகின்றது. இதில் உங்களின் பங்களிப்பு எவ்வாறானதாக அமையும்?

பதில்: தமிழர்களிடையே உள்ள கட்சிகளின் தலைமைகளுக்கிடையில் ஓர் ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்பது பரந்துபட்ட தமிழ் மக்களின் அபிலாஷையாக இன்றுள்ளது.

எனவே தமிழ் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை என்பது அவ் அரசியல் கட்சிகளின் அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் பரந்துபட்ட தமிழ் மக்களின் பொது நோக்காகவும், பொதுத் தேவையாகவும் இன்றைக்கு அவசியப்படுகிறது.

இந்த விடயத்தில் தமிழர்களின் அனைத்து தலைவர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒருவரது ஜனநாயகத்தை மற்றவர் மதித்து பொது விடயங்களில் ஓர் உடன்பாடு காண்பதை நோக்கி இன்று வெவ்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை ஓர் ஆரோக்கியமான விடயமாகும்.

இந்த விடயத்தில் நானோ அல்லது வேறு யாருமோ தனிப்பட்ட ரீதியில் சாதித்துவிட முடியாது. இங்கு கூட்டு முயற்சிகளே சாதனைகளை செய்யும். இதற்கான முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு ஏனையவர்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.

இந்த முயற்சியில் யாரையும் விலக்கிவிட வேண்டும் அல்லது யாரையும் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்ற போக்குகளை கைவிட்டு முடிந்தளவுக்கு விரிந்தளவான ஓர் ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.

இங்கு ஒற்றுமை என்பது கட்சிகள் ஒன்றோடொன்று இணைந்துகொள்ள வேண்டுமென்றோ அல்லது அமைப்பு ரீதியாக எடுத்த எடுப்பில் கூட்டுக்களை உருவாக்க வேண்டுமென்றோ அல்லது எவரும் தத்தமது கட்சிகளின் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றோ அல்ல.

இங்கு வேற்றுமைகளின் மத்தியில் ஒற்றுமை வேறுபாடுகளின் மத்தியில் உடன்பாடுகள் என்பவையே அடிப்படையாகும்.

ஒவ்வொரு கட்சிக்கும் மாற்றுக் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பாக அவற்றின் கருத்துக்கள் தொடர்பாக வேறு அபிப்பிராயங்களும் விமர்சனங்களும் கூட இருக்கக்கூடும். அவற்றை வெளிப்படுத்தாது இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவ்வாறன விடயங்களின்போது ஆரோக்கியமான முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

விமர்சனங்கள் என்பது பொது விடயங்கள் தொடர்பானதாக இருத்தல் வேண்டும். தனிப்பட்ட ரீதியில் யாரையும் இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டதாக அல்லாமல் சமூகத்தில் அரசியல் கருத்து வளர்ச்சிக்கும் முற்போக்கான இயங்குதல்களுக்கும் இடமளிக்கும் வகையாக அவை இருந்தால் வேறுபாடுகளின் மத்தியிலும் உடன்பாடுகள் கண்டு தனித்தனி கட்சிகள் என்கிற நிலையிலும் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையை கண்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்காக மேலும் ஓர் நியாயமான அரசியல் தீர்வை சாதிப்பதற்காக செயற்படுத்த முடியும். அந்த வகையில் என்னாலும் முடிந்த பங்களிப்பை செலுத்த தயாராக இருக்கிறேன்.

எனது பங்களிப்பு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பதனை இப்பொழுது திட்டவட்டமாக கூற முடியாவிட்டாலும் ஏனைய தலைவர்களோடு இணைந்து நின்று மக்களுக்கு பொதுவானவற்றை சாதிக்க வேண்டும் என்பதில் /Zதியாக உள்ளேன்.

கேள்வி:- இவ்விடயத்தில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இதயபூர்வமாக தொடர்ந்து செயற்படுவார்கள் என்று கருதுகிaர்களா?

பதில்:- தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இதயபூர்வமாக செயற்படுவார்களா இல்லையா என்ற சந்தேகத்திலிருந்து நாம் விடயங்களை தொடங்கக்கூடாது என்றே கருதுகிறேன். ஒற்றுமை என்பது நம்பிக்கைகளையே அடிப்படையாக கொண்டதாகும்.

எனவே ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களுக்கிடையேயும் நம்பிக்கையும் பரஸ்பர நலன்களை கண்டறிந்து பொது விடயங்களில் உடன்பாடுகள் கண்டு செயற்படுதல் என அமையுமாயின் ஒற்றுமை முயற்சிகள் நிச்சயம் வெற்றியளிக்கும். இந்த ஒற்றுமை முயற்சிகளில் வெற்றிகளை அடையும் விடயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். சிலவேளைகளில் பின்னடைவுகளும் ஏற்படலாம். இருந்தாலும் முயற்சி திருவினையாக்கும் என்பதற்கிணங்க தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உடன்பாடுகளை ஒற்றுமைகளை நிச்சயம் ஏற்படுத்தும் என நம்புவோம்.

கேள்வி:- யுத்தம் முடிவடைந்த நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமைக்கான வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக கருத்து நிலவுகிறது அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அப்படி பார்த்தால் யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்திலும் அதுதான் நிலைமை. யுத்தத்தின் ஒரு பகுதியினராக இருந்த புலிகள் தான் தமிழர்களின் தலைவர்களாக இருந்தார்கள் என்று கருதுவது தவறானதாகும். அவர்கள் தமிழர்களின் அழிவுக்கே வழிவகுத்தார்கள். தமிழர்களுக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களை எல்லாம் தமிழர்களுக்கு கிடைக்க விடாது செய்தவர்களும் அவர்களே. தமிழர்கள் மத்தியிலிருந்த நல்ல பெரும் தலைவர்களையும் எதிர்காலத் தலைவர்களாக வந்திருக்கக்கூடிய இளந் தலைவர்களையும் யுத்த காலமே கொன்றொழித்தது. யுத்தம் முடிவடைந்துள்ள இன்றைய நிலையில் சமூகத்தில் அரசியல் பொருளாதார செயற்பாடுகள் ஆக்கபூர்வமானவையாகவும் ஆரோக்கியமானவையாகவும் முன்னோக்கி நகர்த்தப்பட்டால் தமிழ் சமூகத்திலிருந்து நல்ல தலைவர்கள் எல்லாம் மேலெழுந்து வருவார்கள். ஆற்றல்மிக்க இளந் தலைவர்கள் உருவாகுவார்கள். ஆயுத வன்முறையை அடிப்படையாக கொண்ட யுத்தமே தமிழ் சமூகத்திற்கு உரிய அளவுக்கு தலைவர்கள் இல்லாதிருக்கச் செய்தது. யுத்தமற்ற சூழல் தலைவர்களை உருவாக்கும்.

கேள்வி:- யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கில் திட்டமிட்ட மறைமுகமான குடியேற்றங்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. இது பற்றி என்ன கூறுகிaர்கள்?

பதில்:- யுத்தம் முடிந்து ஓராண்டு ஆகியும் இராணுவ பாதுகாப்பு வலயங்கள் முற்றாக நீக்கப்படவில்லை இறுதிநேர யுத்தத்தின் காரணமாக நிலைகொள்ளப்பட்ட விரிவுபடுத்தப்பட்ட இராணுவ முகாம்களும், இராணுவ நிலைகளும் இன்னும் விலக்கப்படவில்லை. இன்னமும் கணிசமான பகுதிகளுக்கு அந்தந்த இடங்களைச் சேர்ந்த மக்களோ அல்லது இலங்கையின் ஏனைய பிரஜைகளோ சுதந்திரமாக சென்று வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படவில்லை.

இவ்வாறான காரணங்களை அடிப்படையாகக் கொண்டே மறைமுகமான குடியேற்றங்கள் இடம்பெறப் போவதாகவும் ஊகிக்கப்படுகின்றன. அந்த ஊகங்களுக்கு வலு சேர்க்கும் வகையாக அரசாங்கத்தின் சில தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். இவற்றினால் தமிழ் மக்கள் மத்தியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக சந்தேகங்கள் மேலும் வலுக்கின்றன.

ஆனால் இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை. ஊகங்களின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் மீது எனது கருத்தை கூறுவது சரியானதல்ல. அவ்வாறான ஊகங்களை கொள்பவர்கள் அரசியல் தலைவர்களையோ, மற்றும் சமூகத் தலைவர்களையோ அந்தந்த இடங்களுக்கு கூட்டிசென்று நிலைமைகளை கண்டுகொண்டு சரியாக பார்த்து அவ்வாறான இடங்களில் குடியிருப்பவர்கள், வேலை செய்பவர்களுடன் பேசி உண்மைகளை கண்டறிய வேண்டும். ஊகங்களை பரப்பி மக்களை அச்சுறுத்துவது இன்றைய காலத்திற்கு பொருத்தமானதல்ல.

கேள்வி:- இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளையும் இணைத்து செயற்படுவது தொடர்பாக கவனம் செலுத்தப்படுமா?

பதில்:- இது தொடர்பாக கவனம் செலுத்துதல் அவசியமாகும். வெறுமனே தமிழ் கட்சிகளுக்கிடையில் கூட்டு இணைப்பு தமிழ் கட்சிகள் மட்டும் மேற்கொள்ளும் ஒருமித்த குரல் என்னும் போக்கு சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தையும் தமிழர் எதிர்ப்பு போக்கையும் சிங்கள இனவாத சக்திகள் உருவாக்குவதற்கே துணை செய்யும்.

இலங்கையில் ஓர் அரசியல் தீர்வு நிரந்தரமானதாக அடையப்பட வேண்டுமானால் கணிசமான சிங்கள மக்களின் ஆதரவு மிகவும் அவசியமானதாகும். சிங்கள மக்களை மிரட்டியோ அச்சுறுத்தியோ அல்லது சந்தேகம் கொள்ள வைத்தோ தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதை கடந்தகால அனுபவங்கள் நிரூபித்திருக்கின்றன.

தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளின் நியாயங்களை பரந்துபட்ட சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்கு பரப்புவதற்கு தென்னிலங்கை அரசியல் கட்சிகளோடும் இணைந்து செயற்படுவது அவசியமானதாகும். தென்னிலங்கையில் உள்ள இனவாதிகளைவிட இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக முற்போக்கு சக்திகளே அதிக எண்ணிக்கை கொண்டவர்களா வர். அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களின் நியாயங்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு வகையாக தமிழ் கட்சிகள் செய ற்பட வேண்டும். அதுமட்டுமல்லாது ஏனைய சிறுபான்மை இன மக்களின் கட்சித் தலை வர்களோடும் உடன்பாடுகளை கண்டு இணை ந்து செயற்படுதல் வேண்டும். எந்த விடய த்திலும் 100 சதவீதம் என்று சாதிக்க முடியாது. எனினும் முடிந்தளவுக்கு அனைத்து இன மக்களுக்கு இடையேயுள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கிடையில் பரந்தளவில் விரிந்தளவு ஓர் ஒற்றுமை இணைந்து செயற்படுகின்றமை அவசியமானதாகும்.

கேள்வி:- 13 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்த விடயத்தில் உங்களது அபிப்பிராயம் என்ன?

பதில்:- அரசியல் யாப்பின் 13வது திருத்தமே இலங்கையில் மாகாண சபை என்ற அமைப்பு முறையை உருவாக்கியது. அதிலேயே மாகாணங்களுக்கான அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மாகாண அரசுகளுக்கும் இடையேயான உறவுகள் போன்ற விடயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 13வது திருத்தம் தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளை திருப்திப்படுத்தும் ரி(8கி!8 அமையவில்லை என்பதனை தமிழ் தலைவர்கள் மட்டுமல்ல சிங்கள தலைவர்களும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஒத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள். அதன் விளைவே மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற கமிட்டி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்களின் அரசியல் யாப்பு பிரேரணை, அரசியல் யாப்பு நிபுணர்களின் பெரும்பான்மை யானோரின் சிபாரிசு, பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களின் தலைமையிலான பாராளுமன்ற சர்வ கட்சிகளின் குழுவின் பிரேரணைகள் என பல முன்மொழிவுகளை கடந்த 20 வருடகால வரலாறு முன் வைத்திருக்கிறது.

13வது அரசியலமைப்பு சீர்திருத்தம் நடைமுறையில் கடந்த 20 வருடங்களாக தென்னிலங்கையிலும் கடந்த இரு வருடங்களாக கிழக்கு மாகாணத்திலும் செயற்படுத்தப்படுகின்றது. இந்த நடைமுறை அனுபவம் 13வது திருத்தத்தை திருப்தியானதென மக்களோ அரசியல் தலைவர்களோ கொள்ளவில்லை என்பதை காட்டுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் 13வது திருத்தத்துக்கு அப்பால் அதிகார பகிர்வு திட்டமொன்றை முன்வைப்பதாகவும் நடைமுறைப்படுத்தப் போவதாகவும் பல தடவைகள் அறிவித்திருக்கிறார்.

எனவே 13வது திருத்தம் எதிர்வரும் காலத்திற்கு அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்கு அதற்குரிய அரசியல் யாப்பு திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஒரு அடிப்படை அனுபவமாக கொள்ளப்படலாம். 13வது திருத்தம் இப்பொழுது நடைமுறையில் சட்டமாக உள்ளது என்ற வகையில் அதற்கு சிறந்த விளக்கத்தையும் உரிய அமுலாக்கத்தையும் அதிகார பகிர்விற்கான பரந்த மனதுடன் முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தலாம். 13வது திருத்தம் அடிப்படையில் ஒரு பிழையான சட்டம். அது பல ஓட்டைகளையும் அது பல தவறுகளுக்கான வழிவகைகளையும் கொண்டிருக்கிறது. எனவே இலங்கையின் அரசியல் யாப்பில் 13வது திருத்தத்திற்கு மாற்றாக ஓர் அதிகாரப் பகிர்வு சீர்திருத்தம் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்காக சிபாரிசு கமிட்டிகள் ஆலோசனை கமிட்டிகள் என காலத்தை இழுத்தடிக்காமல் முதற் கட்டமாக 13வது திருத்தத்தை அரசாங்கம் நல்ல அணுகுமுறையிலும நல்ல விளக்கத்துடனும் அமுலாக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கேள்வி:- இனப்பிரச்சினை தீர்வில் இந்தியாவின் பங்களிப்பு எவ்வாறானதாக அமைய வேண்டும் என கருதுகிaர்கள்?

பதில்:- இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஓர் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களுக்கிடையேயும் சமாதானமும் சகோதரத்துவமும் நிலவ வேண்டும். இலங்கையில் பொருளாதார ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படவேண்டும் என இந்தியா கருத்துக்கள் கொண்டிருப்பதை நாம் அனுபவத்தில் காண முடிகிறது.

இலங்கையில் ஓர் அரசியல் தீர்வையும் சமாதானத்தையும் நிலை நிறுத்துவதற்காக இந்தியா தனது அரிய போர்வீரர்கள் 1200 இற்கு மேல் உயிர் தியாகம் செய்திருக்கிறது. 4000 பேருக்கு மேல் காயப்பட்டவர்களாகும். வலியை சுமந்திருக்கிறது. பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இலங்கை மக்களுக்காக செலவழித்திருக்கிறது. எனவே இலங்கையின் சமாதானம் நல்லுறவு ஒற்றுமை என்பவற்றிற்கான கொள்கைகளையே இந்தியா கொண்டிருக்கிறது. இலங்கையில் ஓர் பிரிவினை ஏற்படுவதை இந்தியா ஒருபோதும் விரும்பியதில்லை. அவ்வாறான எந்த முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்காது என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. எனினும் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் இந்தியா தொடர்ந்தும் அக்கறையோடு செயற்பட்டு வருகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இலங்கையுடன் இந்தியா பகை வடிவில் அல்லாமல் நட்பின் அடிப்படையில் உரிய பங்களிப்பை செலுத்தும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

கேள்வி:- யுத்தம் முடிவடைந்து ஓராண்டு முடிவடைந்த நிலையில் வடக்கு மக்களின் சமூக பொருளாதார விடயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா?

பதில்:- வடக்கு கிழக்கில் புலிகளின் பயங்கரவாதம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் படிப்படியாக தத்தமது பொருளாதார நடவடிக்கைகளை சுறுசுறுப்புடன் மேற்கொண்டு வருகிறார்கள். வர்த்தகம், போக்குவரத்துக்கள், சுற்றுலாத்துறை போன்ற துறைகளில் பல வளர்ச்சிகள் ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது. மக்கள் மத்தியில் விவாதங்கள், கலந்துரையாடல்கள், வெவ்வேறுபட்ட கருத்துக்களை வெளியிடல், தாம் விரும்பிய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்தல் போன்ற விடயங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

30 ஆண்டுகால யுத்த அழிவுகள் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக போனமை, பொருளாதார உட்கட்டுமானங்கள் எல்லாம் சிதைந்து போய் கிடக்கின்றன. கண்ணிவெடிகள் பெருந்தொகையான நிலங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றமை, எங்கு பார்த்தாலும் இராணுவ முகாம்களும், நிலைகளும் பரந்து கிடக்கின்றமை என உள்ள நிலைமைகளிலிருந்து பொருளாதார முன்னேற்றம் சமூக முன்னேற்றங்கள் அரசாங்க நிர்வாக அமைப்புக்களின் முன்னேற்றங்கள், மக்கள் அரசியல் விடயங்களில் விழிப்பாக செயற்படுதல் ஊழல் இன்மை, மோசடிகள் இன்மை வன்முறையாளர்கள் தொடர்பாக பயமின்மை. இராணுவம் தொடர்பான அச்சமின்மை போன்ற பல விடயங்களில் இன்னமும் பாரிய முன்னேற்றங்கள் ஏற்படுகின்ற சூழ்நிலையிலேயே அங்கு நிலைமைகள் காணப்படுகின்றன.

தற்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் விடயங்களின் வளர்ச்சி வேகம் அழிவுகளிலிருந்து மக்களின் வாழ்வை மீட்டெடுப்பதற்கு போதியதாக இல்லை. எனவே அரசாங்கம் ஒரு விரைவுபடுத்தப்பட்ட புனர்வாழ்வு புனரமைப்பு பொருளாதார அபிவிருத்தி போன்ற விடயங்களை சரியாகவும், முறையாகவும் முன்னெடுப்பதற்கு உரிய அரச கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். எத்தனைதான் போரின் அழிவுகளை சந்தித்த போதிலும் தமிழர்கள் மத்தியிலிருந்த சாதி பாகுபாடுகள், சாதி புறக்கணிப்புக்கள் கொஞ்சமும் குறைந்ததாகத் தெரியவில்லை. பொருளாதார ரீதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும் மனோபாவ ரீதியில் சமூக மாற்றங்கள் நிகழ்ந்ததாக இல்லை. ஒரு புதிய நவீன சமூக பொருளாதார வளர்ச்சிக்கு தமிழர் சமூகம் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டியது இன்றைய அவசியமாகும்.

7 பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை,

Sunday, July 11, 2010
இந்தியாவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு மிகவும் அவசியமானது சிறைச்சாலைகள் அமைச்சர் டி.யூ.குணசேகர தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்களை முன்வைப்பது தொடர்பில் ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும் இந்தியா வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

30 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வீர வசனம் பேசிய சீமானைக் காணவில்லை! நான்கு தனிப்படை அமைத்து பொலிஸார் தேடுதல்!

Sunday, July 11, 2010
வன்முறை , பிரிவினை ஆகியவற்றைத் தூண்டும் வகையில் பேசினார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானைத் தேடி தமிழ் நாட்டு பொலிஸார் வலை வீசி வருகின்றார்கள்.

அவர் தலைமறைவாகி உள்ளார் எனப் பொலிஸார் நம்புகின்றார்கள். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றமையைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்தியாவில் உள்ள சிங்களவர்களுக்கு படுகொலை அச்சுறுத்தல் விடுத்து சீமான் அதில் பேசியிருந்தார்.

இதையடுத்து அவர் மீது வன்முறை, பிரிவினையை ஆகியவற்றைத் தூண்டும் வகையில் பேசினாரென சீமான் மீது வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சீமானைக் கைது செய்கின்றமைக்காக விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குப் பொலிஸார் சென்றனர். ஆனால் சீமான் அங்கு இல்லை. அவரது செல்போனும் செயலிழந்த நிலையில் உள்ளது. இதையடுத்து பொலிஸார் நான்கு தனிப்படைகளை அமைத்து சீமானைக் கைது செய்ய தேடி வருகின்றனர்.

Friday, July 9, 2010

வன்னி மக்களின் வாழ்;வில் உடனடி முன்னேற்றங்களைக் கொண்டுவர தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் உள்ளது,.வரதராஜப்பெருமாள்!

Friday, July 9, 2010
Friday, July 09, 2010
வன்னி மக்களின் வாழ்;வில் உடனடி முன்னேற்றங்களைக் கொண்டுவர தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் உள்ளது.

உதயன் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் அவர்கள் வழங்கிய நேர்காணல்

கேள்வி : தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் போது தோற்றம் பெற்ற இயக்கமொன்றின் தலைமைத்துவப் பதவியில் இருந்த நீங்கள் விடுதலைப் போராட்டம் தொடர்பான ஈர்ப்பு எவ்வாறு உங்களுக்கு ஏற்பட்டது?

பதில்.: என்னைச் சூழ நான் கண்ட நான் கேட்ட நான் வாசித்த புற விடயங்கள் கருத்துக்கள் சிறு வயதில் இ;ருந்தே எனக்குள் ஒரு சமூக அரசியல் உணர்வுகளை வளர்த்து விட்டதன் விளைவு என்றே கருதுகின்றேன். சிறு வயதிலேயே எனது அயலில் நடைபெற்ற அரசியற் கூட்டங்களில் பேச்சுக்களையெல்லாம் ஆர்வமாகச் சென்று கேட்பேன். எனது ஏழு வயதிலிருந்தே எம்ஜிஆரின் படங்களை முதல்நாளிலேயே நான் தனியாகச் சென்று பார்ப்பவனாக இருந்திருக்கிறேன்;. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே எனது மாமனார் தமிழ்ப் பண்ணை புத்தகசாலையிலிருந்து வாங்கி வரும் தமிழக தினந்தந்தி, தினமணிப் பத்திரிகைகளை வாசிப்பவனாக இருந்திருக்கிறேன் அந்த வகையில் அண்ணா கலைஞர் போன்றவர்கள் மீதான ஈர்ப்பும் என்னிடத்தில் சிறுவயதிலேயே ஏற்பட்டது. நான் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியின் தமிழரசுக் கட்சித் தலைவரான சீவரத்தினம் அவர்களுடன் எனது பத்து வயதிலிருந்தே நெருக்கமாகப் பழகும் சூழல் இருந்தது. எனது பள்ளிக்கூட வாத்தியார்கள் ஒருவரான புதுமைலோலன் அவர்கள் தமிழரசுக் கட்சியின் பிரதம மேடைப்பேச்சாளர்களில் ஒருவராவார். 1965ம் ஆண்டு; 12 வயதாக நான் இருந்த போது எனது சட்டையில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை தைத்து, ~~தந்தை செல்வா வாழ்க! என்று நானே தைத்துப் போட்டிருந்தவன்தான். வீட்டுப் படலையில் எம்ஜிஆர் வாழ்க என்று எழுதி வைத்திருந்தவன் நான். அவருடைய படங்களைப் பார்த்து அவரை ஒரு லட்சிய புருஷராகக் கொண்டேன்;. இவ்வாறாக ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சி மற்றும் திமுக வளர்த்த தமிழ் இன அரசியல்;; சமூக உணர்வுகளே எனது அரசியற் கருத்துக்களின் ஆரம்பமாகும்..இலங்கைத் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியும் தேர்தற் காலங்களில் நடாத்திய மோதல் அரசிலைக் கண்டிருக்கிறேன்.. 1970ம் ஆண்டு மதிமுகராசா என்பவருடன் எனக்கேற்பட்ட நட்பு தமிழரசுக் கட்சியில் என்னை உறுப்பினனாக்கியது. 1970ம் ஆண்டு மாணவர் பேரவையின் போராட்டங்களின் போது நான் ஒரு பார்வையாளன் மட்டுமே. 1972ம் ஆண்டிலிருந்துதான் எனது அரசியல் ஈடுபாடு ஆரம்பமானது.

கேள்வி : நீங்கள் அரசியல் போராட்டங்களின் போது சிறைக்குச் சென்றதாக அறிகிறோம். எதற்காக அச்சம்பவம் நிகழ்ந்தது?

பதில் : 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக்கப்பட்ட போது தமிழருக்கான உரிமைகள் எல்லாம் அதன் புதிய அரசியல் யாப்பில் பறிக்கப்படுகின்றன என்ற விடயத்தை முன்வைத்து சகல இடங்களிலும் தமிழர் ஐக்கிய கூட்டணி சார்பாக சுவர்களில் எதிர்ப்புக் கோசங்களை எழுதுதல், கறுப்புக் கொடி ஏற்றுதல், ஹர்த்தால் அனுஸ்டித்தல் என எதிர்ப்பைக் காட்டும் போராட்டங்கள் நிகழ்ந்தன. இதில் நானும் கலந்துகொண்டபோது கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டி ஏற்பட்டது. பின்னர் தமிழ் இளைஞர் பேரவை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியவற்றில் இருந்த எனது தீவிர அரசியல் ஈடுபாடு காரணமாக 1975ல் கைது செய்யப்பட்டு இருபத்திரண்டு மாதங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டேன். பின்னர் 1983ம் ஆண்டு கார்ல் மார்க்ஸின் 100வது நினைவையொட்டிய கூட்டமொன்றில் மட்டக்களப்பில் பங்குபற்றிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டு கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் நான்கு மாதங்களும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சுமார் இரண்டு மாதங்களும் வைக்கப்பட்டேன்.

கேள்வி : 1970களின் பிற்பகுதியில் பல இயக்கங்கள் தமிழினத்தின் விடுதலைக்காகத் தோற்றம் பெற்றன. அவை அனைத்தும் இன்று ஒரு வெற்றுப் புள்ளியிலேயே இயங்கவேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. ஆயுதப் போராட்டம் தோற்றுப் போன நிலையில் அரசியல் போராட்டத்தை மட்டும் நம்பியதாகவே தமிழர்களின் நிலை உள்ளது. இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

பதில் : எங்களுடைய இன அடிப்படையிலான போராட்டத்தின் அனுபவத்தில் மற்றும் என்னுடைய அனுபவங்கள் தொடர்பான எனது மீளாய்வின் அடிப்படையில் நான் கூறுவது எமது சமூகத்துக்கும் எமது தேசிய மற்றும் பிராந்திய சூழலுக்கும் எமது போராட்ட இலக்குகளுக்கும் ஆயுதங்கள் தாங்கிய போராட்டமுறைமை பொருத்தமானது அல்ல. சோவியத் புரட்சி, சீனப் புரட்சி, கியூபாப் புரட்சி மற்றும் வியட்னாம் புரட்சி என்பவற்றின் போது ஆயுதந் தாங்கிய போராட்டங்கள் வெற்றியளித்திருக்கின்றன. ஆனால் எங்களுடைய அரசியல் சமூக இலக்குகளுக்கு வன்முறை அரசியல் பொருத்தமானது அல்ல என்பதே எனது முடிவாகும்..

கேள்வி : ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்ட நாடுகளில் வெற்றியளித்த ஆயுதப் போராட்டம் எங்கள் சூழலில் ஏன் பொருத்தமற்றது?

பதில் : அதைத்தான் நேரடி அனுபவமாக நாம் அனைவரும் கண்டு கொண்டோமே, முப்பது வருட போராட்டம் எவ்வாறு முடிவுற்றது, அது எவ்வாறான பாதகங்களையெல்லாம் எமது சமூகத்துக்கு விளைவித்திருக்கிறது என்பதை சரியாக மீளாய்வு செய்தால் நான் கூறுவதைப் புரிந்து கொள்ள முடியும். சோவியத் புரட்சி, சீனப் புரட்சி, வியட்நாம் புரட்சி போன்றன வர்க்கப் புரட்சிகள் அதனாலேயே அவை வெற்றிபெற்றன. எமது போராட்டம் சில வேளைகளில் காலணித்துவத்துக்கு எதிரான ஒரு தீர்க்கமான தேசிய விடுதலைப் போராட்டமாக இருந்திருந்தால் கூட குறிப்பிட்ட அளவில் ஆயுதங்கள் தாங்கிய போராட்ட முறைமைக்கு கணிசமானதொரு பங்கு இருந்திருக்கும். ஆனால் இலங்கையில் நடந்தது ஒரு நாட்டுக்குள் எண்ணிக்கை ரீதியில் சிறுபான்மையான தேசிய இனத்தினுடைய போராட்டம். இதனுடைய கோஷங்கள், இதைக் கொண்டு நடத்தியவர்கள், இதன்; பரிணாமம், இதற்கும் சமூக சக்திகளுக்கும் இடையிலான தொடர்பு ஆகியவற்றைப் பார்த்தால் வன்முறைப் போராட்ட முறை எங்களுக்குப் பொருத்தமானது அல்ல என்பது தெளிவாகவே புரியும்.

கேள்வி : 1989ஆம் ஆண்டுவரையும் நீங்களும் ஆயுதப் போராட்டத்தை நம்பியவர்தானே?

பதில் : ஆமாம் ஒரு காலகட்டத்தில் ஆயுதந் தாங்கிய அரசியலின் மூலம்தான் எமது மக்களின் விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நானும் நினைத்திருக்கிறேன். ஆனால் அதை தவறு என உணர்கிறேன் 1990ல் வட இந்தியாவில் அதாவது இந்த மண்ணிலிருந்து இருந்து சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் போயிருக்க வேண்டிய கட்டாய நிலைமை எனக்கு ஏற்பட்டது. அது எமது போராட்டத்தின் கடந்த காலம் பற்றிய ஒரு ஆழமான மீளாய்வுக்கு எனக்கு வாய்ப்பளித்தது. அதில் நான் உணர்ந்துகொண்டவைகள் பல. ஒரு விடயத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருக்கும் ஒருவன் அதிலிருந்து சற்று விடுபட்டு ஆற அமர தனது கடந்த காலம் பற்றி தன்னுணர்ச்சிகளுக்கும் பொய்களுக்கும் இடமளியாது புறநிலையாக ஆய்ந்து பார்த்தால் தன்னைப் பற்றி தனது கடந்த காலம் பற்றி பல தெளிவான சிந்தனைகளை அடைய முடியும். ஏன் ஓய்வாக இருக்கும் போது தான் அதைப்பற்றி உணர முடியும். போராட்டத்தின் போது நிகழ்ந்த பல விடயங்களில் எது சரி? எது தவறு ஒரு பொது உண்மையே. இது ஒரு சுய பரிசோதனை மூலமான புரிந்துணர்வே

கேள்வி : ஆயுதப் போராட்டம் தவறு என்றால் வேறு எவ்வகையான போராட்டம் எமக்குச் சாத்தியமான வழிமுறையாக இருக்கலாம்?

பதில் : யாருக்கும் இம்சைகள் செய்யாத, யாரையும் நோகப் பண்ணாத யாருக்கும் விரோதத்தையோ வெறுப்பையோ ஏற்படுத்தாத தன்னை ஒறுத்த தனது உண்மைகளையும் நியாயங்களையும் வெளிப்படுத்தி மற்றவர்களின் மனச்சாட்சிகளின் கண்களைத் திறக்கும் அகிம்சை வழி முறைப் போராட்டங்களே நாம் கைக்கொண்டிருக்க வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால் இதுவரையும் நாங்கள் அகிம்சைப் போராட்ட முறைகளைச் சரியாகவோ முறையாகவே கடைப்பிடிக்கவில்லை. அதற்கான பயிற்சியும் துணிச்சலும் எம்மிடம் இருக்கவில்லை. ஆயுதப் போராட்டத்தை நாம் சுருக்கமான குறுக்கு வழியாகவே கருதினோம். அகிம்சை முறையில் இரகசியங்கள் இல்லை, அந்த முறையானது நேர்வழிகள் கொண்டது, அது பரந்துபட்ட மக்களின் மனச்சாட்சிகளோடும் தியாக உணர்வுகளோடும் சம்பந்தப்பட்டது. அது போராடுபவர்களுக்கு பக்குவத்தையும் முதிர்ச்சியையும் தருகின்ற ஒன்று. அறிவும் நேர்மையும் கொண்ட தலைவர்களை முன்னணிக்குக் கொண்டு வரும். அது பல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் பல்வேறுபட்ட கருத்துக்களுக்கும் இடமளிக்கும். அஹிம்சைவழியானது யாரையும் துரோகியென்றோ காட்டிக் கொடுபவன் என்றோ முத்திரை குத்தாது. யாரைக்கண்டும் அது சந்தேகம் கொள்ளாது யாருக்கும் அது அச்சம் கொள்ளாது. அது சமூகத்தை ஒன்றிணைக்கும் சக்தியாகும், சமூகத்தை அகதிகளாகவோ புலம் பெயர்ந்தவர்களாகவோ சீரழிக்காது. அகிம்சை வழியைக் கடைப்பிடிக்கும்; தலைவர்களுக்கு மக்களை மாயையில் வைத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது அவர்கள் தங்கள் தங்கள் சொந்தந் திரவியங்களையும் உழைப்பையும் தியாகம் செய்பவர்களாக இருப்பார்கள். மக்களை அவர்கள் அன்பாலும் உண்மையாலும் வெல்லும் தலைவர்களாக இருப்பார்கள்.. எமது அனுபவத்தில் ஆயுதங்களை மட்டும் நம்பிய குழுக்களும் தலைவர்களும் மேலே குறிப்பிட்ட ஒவ்வொன்றிற்கும் எதிர்மாறானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். உண்மையில் மேலே குறிப்பிடப்பட்டவற்றிற்கு எதிர்மாறான போக்குகள் ஆயுதக் கலாச்சாரத்தின் அடிப்படைகளாக அமைகின்றன என்றே நாம் காணமுடிகின்றது.

எமது போராட்ட வரலாற்றில் அகிம்;சை – சத்தியாக்கிரக போராட்டமுறைகளை 1970 வரை கடைப்பிடிக்கப்பட்டதாகக் கூறுவது தவறாகும். கச்சேரியை மறித்து தமிழ்த் தலைவர்கள் மக்களைத் திரட்டி 1961ம் ஆண்டு ஒரு தடைவை சத்தியாக்கிரகம் செய்தது உண்மைதான். ஆனால் அப்போது தமிழரசுக் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு சில மாதங்கள் சிறை சென்று வந்த பின்னர் அத்தகைய அகிம்சை முறைப் போராட்டங்களை அவர்கள் தொடரவில்லை. ஆனால் காந்தியோ, நேருவே அவ்வாறில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் அகிம்சைப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். அவர்;கள் தமது சுயதியாகத்தாலும் மக்கள் சக்தியை வெளிப்படுத்தியும் காலனித்துவ வெள்ளைக்காரர்களை தம் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து ஒத்துக் கொள்ள வைத்தார்கள் அவர்களுடைய போராட்டத்துக்குச் செவிசாய்த்த வெள்ளைக்காரர்களை விட எங்கள் சிங்களச் சகோதரர்கள் நல்லவர்கள் கூடுதலாகவே மனச்சாட்சி உடையவர்கள். எமக்கு முந்தைய தலைமுறை தமிழ்த் தலைவர்கள் விடாது தொடர்ந்து அகிம்சை வழியைக் கடைப்பிடித்து தொடர்ந்து மக்களைத் திரட்டிப்; போராடியிருந்தால் எப்போதோ இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கலாம். இலங்கையில் தமிழினம் இவ்வளவு இழப்புகளையும் சீரழிவுகளையும் அனுபவிப்பதிலிருந்து தவிர்த்திருக்கலாம்.

கேள்வி : ஆனால் 1990ஆம் ஆண்டளவில் சிங்கள இனத்துக்கெதிராகக் கடுமையான கருத்துக்ளை நீங்கள் முன்வைத்தீர்களே?

பதில் : அது தவறு! சிங்கள இனத்தவர்களுக்கு எதிரான கருத்துக்கள் எதனையும் நானோ என்னைச் சேர்ந்தவர்களோ எந்த வேளையிலும் கொண்டிருந்ததோ அல்லது பரப்பியதோ கிடையாது. சிங்கள இனவாதத் தலைவர்களை நாம் விமர்சித்து வந்திருக்கிறோம். அதையே நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன்.

கேள்வி : எதற்காக நீங்கள் ஈழப் பிரகடனம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது?

பதில் : உண்மையாக அது ஈழப்பிரகடனம் அல்ல. 19 அம்ச கோரிக்கைளைக் கொண்ட ஒரு பிரகடனம் தான். அன்றைய சூழலில் தமிழர்கள் மத்தியில் தனிஈழம் என்ற புலிகளின் பிரச்சாரம் தான் செல்வாக்கு செலுத்தியது. நாங்கள் மாகாணசபை மூலமான ஒரு தீர்வினை பரிசோதனையாக முயற்சித்தோம். எங்களால் அதனை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை எங்களின் நியாயமான கோரிக்கைகளை மற்றைய சிங்களத் தலைவர்களும் காது கொடுத்துக்; கேட்கவில்லை. இந்தியாவில் 1989ம் ஆண்டு தேர்தலில் பிரதமரான வி.பி.சிங் இந்திய இராணுவத்தை மீள எடுப்பதிலேயே அக்;கறை காட்டினார்.; மாகாணசபையைக் கலைக்குமாறு தூது விட்டார். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களும் புலிகளுக்கு ஆதரவாக இருந்து மாகாண சபையைக் கலைக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். புலிகள் தமிழர்களைக் காப்பாற்றுவார்கள் தமிழர்களின் உரிமைகளை வெல்வார்கள் என்றார். மொத்தத்தில் அன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான வட்டத்திற்குள் ஒரு தீர்வு எந்தக் கோணத்திலிருந்தும் கிடைக்கவி;ல்லை. நியாயமான நடைமுறைச் சாத்தியமான தீர்வுக்காக உழைத்த எங்களுக்குத் துணையாக ஒரு அரசியற் சக்தியும் அன்று இருக்கவில்லை. அதைவிட எம்மை எதிர்த்தவர்களும் எம்மை அழிக்க முனைந்தவர்களுமே மிக அதிகமாக இருந்தனர். நாம், ஈழப்போராட்டத்துக்குப் பதிலாக இந்தியா ஒரு நீதியான தீர்வை ஏற்படுத்தித் தரும் என்பதற்காகவே மாகாண சபை முறைக்கு ஒத்துக்கொண்டோம். ஆனால் நியாயமான தீர்வெதையும் இந்தியாவும் தரவில்லை, இலங்கையும் தரவில்லை. இலங்கை அரசாங்கமோ புலிகளின் உதவியுடன் எல்லாவற்றையும் மோசமாக சீரழிப்பதிலேயே கடுமையாக இருந்தது. எனவேதான் வேறு வழியின்றி நாங்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போகிறோம் என்பதைச் சொல்ல வேண்டியாயிற்று. அந்த ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்;டிய கட்டாயம் ஏற்பட்டது. நாம் அன்று முன்வைத்த பத்தொன்பது அம்சங்களில் பெரும்பாலானவை இன்றைக்கும் பொருத்தமானவை நீங்கள் இப்போதாயினும் படித்துப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.

1986 ஆண்டிலேயே ஈழவிடுதலைப் போராட்டம். தொடர்ந்து சரியான பாதையில் பயணிக்க முடியாத ஒரு கட்டத்தை அடைந்து விட்டது. ஆனால் நாம் மீண்டும் ஈழப்பிரிவினையை வலியுறுத்தியாவது எமக்கான நியாயத்தை நிலைநாட்டுவோம் என முயற்சித்தோம்;.

1985ஆம் ஆண்டில் நாம் ஒற்றுமையாக இருந்தபோது இந்தியாவின் உதவியோடு மெதுமெதுவாக எமது ஈழவிடுதலை என்னும் இலக்கை நோக்கிச் சென்று விடலாம் என்று நம்பினோம். எப்போது விடுதலைப் புலிகள், ரெலோ இயக்கத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தார்களோ அன்றைக்கே எமது ஈழப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே ஈழ விடுதலைப் போராட்டத்தை உண்மையில் தோற்கடித்தவர்கள் புலிகள்தான். அவர்கள் யுத்த மோதல்களைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மேற்கொண்டாலும் அவர்கள் 1986ம் ஆண்டே இலங்கை அரசை ஈழ விடுதலைக்கான யுத்தத்தில் வெற்றிபெற வைத்துவிட்டார்கள்.. புலிகள் சக இயக்கங்கள் மீது தாக்கத்தொடங்கிய போதே தமிழர்களின் தனிஈழக் கோரிக்கையின் தோல்வி நிச்சயமாகிவிட்டது. அதற்குப் பிந்திய 24 ஆண்டுகால யுத்தமும் அழிவுகளுக்கும் இழப்புக்களுக்குமென நடத்தப்பட்ட யுத்தவெறியர்களின் சண்டைகளே தவிர வேறொன்றுமில்லை.

கேள்வி : இனி எவ்வாறானதொரு அரசியல் மாற்றம் தமிழர்கள் தொடர்பாக நிகழும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பதில் : உலகில் முன்னர் இல்லாத நாடுகள் பல இப்போது தோற்றம் பெற்றிருக்கின்றன. ப+மிப் பந்தில் நாடுகளின் அரசியல் அமைப்புக்கள் மாறிக்கொண்டே வருகின்றன. அரசியல் எல்லைகளும் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கின்றன. நாடுகள் ஒவ்வொன்றிலும் அவற்றின் உள்ளாட்சி உறவுகளிலும் மாற்றங்கள் காலத்துக்குக் காலம் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்;றன. இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களிலும் சிங்களத் தலைவர்கள் அவ்வப்போது தமிழர்களின் நியாங்களை ஓரளவாயினும் ஏற்று அரசியற் தீhவுகளுக்கு முன்வந்ததை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் நிலைமைகளும் நாளை மாறும் என்று நம்புவோம். சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று செயற்படும் நாள் விரைவில் வரும.; என எதிர்பார்த்து நாம் செயற்பட இங்கு வாய்ப்புகள் நிறையவே உண்டு. மாற்றம் ஒன்று தான் உலகில் மாற்றமில்லாத ஒன்று. 30 வருடங்களாக ஓர் உள்நாட்டு யுத்தப் போரழிவுகளையும் சொல்லொணா இழப்புகளையும் இந்த நாடு சந்தித்து இருந்தாலும் இலங்கை இன்னமும் ஜனநாயக அடிப்படைகளை இழந்துவிடாத ஒரு நாடு. இந்த நாடு இராணுவ ஆட்சிமுறையைக் கொண்ட சர்வாதிகார நாடு அல்ல. எனவே நிச்சயமாக இந்த நாட்டின் அரசியல் ஒரு சுமுகமான அரசியற் தீர்வினை நோக்கி நகரும் என்ற நம்பிக்கையோடு முன்னேறுவோம்;.

கேள்வி : வடக்கு கிழக்கு மாகாணங்களின் முதலாவது முதலமைச்சராகப் பதவி வகித்தவர்கள் நீங்கள். இந்த மாகாணங்களில் முதலமைச்சரின் அதிகார எல்லை வரம்பு பற்றிக் கூறமுடியுமா?

பதில் : நான் அதிகாரப் பகிர்வுக்காக போராடுகின்ற ஒரு முதலமைச்சராக இருந்N;தனே தவிர அதிகாரங்களைக் கொண்ட ஒரு முதலமைச்சராக இருக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 13வது திருத்தச் சட்டமானது ஒரு பிழையான சட்ட அமைப்பு. அது சரியான வகையில் அமைக்கப்படாத ஒரு சட்டம். அதற்குள்ளேயே ஒன்றுக்கொன்று எதிரான முரணாண இணக்கம் காணப்பட முடியாத சரத்துக்கள் பல காணப்படுகின்றன. இச் சட்டத்தினை நல்ல விதமாகத் திருத்தி அமைத்தால் நல்ல விடயங்கனைச் செய்ய முடியும். இதே வேளை தவறான வகையில் கையாளக்கூடிய ஓட்டைகள் அதில் நிறைந்து காணப்படுகின்றன. ஆவ்வாறானவற்றை மாற்றியமைக்க வேண்டும்;. இப்போது அதனைப் பயனுடையதாக செயற்படுத்த வேண்டுமாயின் தவறான வகையில் இட்டுச்செல்லக் கூடிய விடயங்கள் தொடர்பாக தெளிவான வரையறைகளை விளக்கங்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும். இச்சட்டத்தினை அடிப்படையாகப்; பார்த்தால் ஏறத்தாழ இந்தியாவின் அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ளவற்றை ஒத்ததாக இருக்கும். மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இங்கு இந்தியாவின் அரசியலமைப்பைப் போலவே அதிகாரப்பகிர்வு வழங்கப்பட்டிருக்கின்றது என்ற தோற்றமே கொடுக்கப்பட்டிருக்;கிறது. ஆனால் உண்மை நிலைமை அதுவல்ல. உதாரணமாக நில அதிகாரத்தை எடுத்துக்கொண்டால் அது பின்னிணைப்புக்கு உட்பட்டது என்றே கூறப்பட்டிருக்கும். பின் இணைப்பை எடுத்துப் பார்த்தால் முன்ணிணைப்பில் கூறப்பட்ட விடயங்கள் எல்லாம் பறிக்கப்பட்டிருக்கும். இந்த 13வது திருத்தச் சட்டம் 1985ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு டிசம்பர் வரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்றே இந்திய இலங்கை சமாதான உடன்பாடு கூறுகிறது. ஆனால் 13வது திருத்தம் அவ்வாறு ஆக்கப்படவில்லை.

சாதாரண சட்டங்கள் வழியாகவும் மற்றும் நிர்வாக ஆணைகள் மூலமாகவும். தற்போதைக்கு குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் 13வது திருத்தச் சட்டத்தை உடனடிப் பயனுடைய வலுவுள்ள ஒன்றாக அதனை நிறைவேற்ற முடியும். ஆனால் தென் மாகாணங்களில் கடந்த இருபது ஆண்டுகளாகவும்;, கிழக்கு மாகாணத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் அதை நடைமுறைப்படுத்துவது போலவேதான் தொடர்ந்தும் செய்வது என்றால் அது பயனற்றதாகும். அப்படி நிறைவேற்றுவதை விட அதை இல்லாமலே செய்து விடலாம். அரசாங்கம் 13வதை விட மேலும் அதிக அதிகாரங்களுக்காக ஆலோசனைக் கமிட்டிகளைக் கூட்டுகிறது. ஆனால் கையில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை நல்ல மனதோடும், பரந்த மனதோடும் நிறைவேற்றாமல் இருப்பது விசனத்துக்குரிய ஒன்றாகும்

கேள்வி : 13வது திருத்தச் சட்டம் நடைமுறையின் போது எவ்வாறு இருந்தது?

பதில் : நான் முதலமைச்சராக இருந்தபோது 13வது திருத்தத்தில் உள்ள குளறுபடிகள் தொடர்பான சிலவற்றிற்கு தெளிவுதரும்படி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றோம். எங்களுக்கு அன்று மாகாணசபையைக் கூட்டுவதற்கே இடமில்லை. அப்போது மாகாண அமைச்சின் செயலாளராக இருந்த திஸ்ஸ ஜெயக்கொடி என்பவர் ஏதாவது ஒரு பாடசாலையில் மாகாணசபை கூட்டங்களை நடத்துங்களேன் என்று கூறுமளவிற்கு மாகாணசபைக்கான அடிப்படைக் கட்டமைப்பு எதுவுமே இல்லாமல் இருந்தது. நாங்கள் திருகோணமலை நகரசபையை தற்காலிகமாக எடுத்து அதனை மாகாணசபைச் செயலகம் ஆக்கினோம்; அங்கு சபைக்கூட்டங்களை நடத்தினோம். வடக்கு-கிழக்கின் ஆட்சி அமைப்புக்கான கட்டமைப்புக்களை உருவாக்கினோம். அரசாங்கம் மாகாண ஆட்சிக்கென ஒரு சிறிதளவு பணத்தொகையே ஒதுக்கியது. ஆனாலும் ஒரு விரிந்த அளவில் வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம். அன்றைக்கு எமக்கு இந்தியாவும் இந்தியப்படைகளும் பின்பலமாக இருந்தன. இன்றைக்கு அந்த நிலைமை இல்லை. இங்குள்ள மாகாண சபை அமைப்பை பலப்படுத்துவதும் பாதுகாப்பதுவும் இலங்கை அரசாங்கத்தின் கடமையே. அந்த ஒத்துழைப்பு எனக்கு இருக்கவில்லை. மாறாக எதிராகவே அரசாங்கம் செயற்பட்டது. இப்போதும் மாகாண ஆட்சிமுறை அர்த்தமுடையதாக இருக்க வேண்டுமாயின் அது இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்தையும் முயற்சியையும் பொறுத்தே அமையும்.

கேள்வி : நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : அதை ஓர் ஏமாற்று போலி நாடகமாகவே பார்க்கிறேன். வெளிநாடுகளிலுள்ள புலியை வைத்து முன்னர் வசதிகளையும் சொத்து வளங்களையும் பெருக்கிக் கொண்டதோடு சண்டித்தனம் பண்ணிக்கொண்டு இருந்தவர்களுக்கு இப்போது புலி இல்லாததால் தமது பழைய பணம் திரட்டும் தொழிலுக்கு ஒரு புதிய வித்தை தேவைப்படுகிறது. நாடுகளைக் கடந்த ஒரு நாடு அமைப்பை தென்னாபிரிக்கர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் உலக நாடுகள் பல சேர்ந்துதான் ஏற்படுத்தினவே தவிர அவை அந்நதந்த நாடுகளைச் சேர்ந்த சிலரால் நடாத்தப்பட்ட வேடிக்கை நாடகமல்ல. நாடு கடந்த தமிழீழம் என்பது தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றி சிலர் பணம் திரட்டுவதற்குப் பயன்படுமே தவிர உலகநாடுகள் எதுவும் அந்தக் கருத்துக்கு இடமளிக்கவில்லை. அதுமட்டுமல்லாது இவ்வாறான புரளிகள் இலங்கை அரசாங்கம் இராணுவத்தின் கட்டுப்பாடடில் தொடர்ந்தும் வடக்கு கிழக்கு மாகாணத்தை வைத்திருப்பதற்கும் அரசாங்கம் தனது இராணுவ பலத்தை மேலும் அதிகரிப்பதற்குமான நியாயங்களை வலுப்படுத்தவே உதவும். அப்படிக் கூறுபவர்கள் வேறு எந்த நாட்டிலாவது கனடாவிலோ இங்கிலாந்திலோ அல்லது பிரான்ஸிலோ தமிழீழம் அமைப்பார்களாயிருந்தால் நாங்கள் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம். அப்படி அமைத்து விட்டு அவர்கள் எங்களையும் அங்கு அழைக்கட்டும் நாங்கள் விருந்தாளிகளாகப் போய்வருவோம். இப்படியான பயனற்ற விடயங்களில் புலம் பெயர் தமிழர்கள் ஈடுபடுவதை விடுத்து போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு பணத்தை அனுப்புங்கள். நீங்கள் இங்குள்ள உங்கள் உறவினர்களுக்கு பணத்தை அனுப்பி அவர்கள் மூலம் வன்னி மக்களுக்கு உதவி செய்யுங்கள். இதுநாள் வரையும் புலிகள் போரிடுவதற்காக அவர்களுக்கு பணத்தை வாரியிறைத்த புலம் பெயர் மக்கள் இப்போது வன்னி மக்களின் துயர் துடைக்கவும் பணத்தை அனுப்பலாம் தானே. அதைவிடுத்து வணங்கா முடிக்காரர்கள் நாடு கடந்த தமிழீழக்காரர்களுக்கு புலம் பெயர்ந்த மக்கள் தங்கள் பணங்களை வாரியிறைத்து வீணாக்கக் கூடாது இங்கே துன்பத்திலும் துயரத்திலும் வாழும் மக்களுக்கு மேலும் துன்பங்கள் அளிக்கும் வேலைகளுக்கு உதவக் கூடாது என்பதே எனது கருத்தாகும்.

கேள்வி : போர் முடிந்த பின்னர் தொடர்ச்சியாக பல தேர்தல்களை தமிழ் மக்கள் சந்திக்க நேர்ந்திருக்கிறது இது பற்றி?

பதில் : ஜனநாயக ரீதியில் மீண்டும் மீண்டும் தேர்தல்கள் வருவது நன்மையான ஒன்றுதான் 1982 ஆம் ஆண்டு இடம்பெற வேண்டிய நாடாளுமன்றத் தேர்தலை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நடத்தியிருந்தால் 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் நடந்திருக்க மாட்டாது. அந்த தேர்தல் நடைபெற்றிருப்பின் பலமானதொரு எதிர்க்கட்சி அமைந்திருக்கும். அத்தகைய சூழலில் ஜே.ஆர்.ஜெயவர்தனா இவ்வாறானதொரு தலைதெறித்த போக்கை செய்திருக்க முடியாது. அதைப்போல் இங்கும் கடந்த மாநகரசபை தேர்தலின் போது குறைந்தளவு மக்கள் வாக்களித்திருந்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் அதற்குச் சற்று அதிகமானோர் வாக்களித்திருந்தனர். இனிவரும் பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் மாகாணசபைக்கான தேர்தலில் முன்னரைவிட அதிகம் பேர் வாக்களிப்பார்கள். மக்கள் வாக்குகளின் வாக்குகள் மூலமே மக்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் தாங்கள்தான் தனிப்பிரதிநிதிகள் என்னும் ஜனநாயக விரோத கருத்துக்களுக்கு இடமிருக்காது. பல கருத்துக்களின் மோதலில் புதிய சரியான கருத்துக்களின் வளர்ச்சி, பரந்துபட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் ஆட்சி என்பன ஜனநாயகத்தின் பண்புகளாகும் இதுவே அரசியல் நாகரீக வளர்ச்சியின் முன்னேறிய ஒரு கட்டமாகும்.

கேள்வி : மாகாண சபையில் உங்கள் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக தமிழ் தேசிய ராணுவத்திற்குப் பலாத்காரமாக தமிழ் இளைஞர்களைச் சேர்த்து அவர்களை ஆயுத கலாச்சாரத்துக்குள் தள்ளியதாக உங்கள் மீதுள்ள குற்றிச்சாட்டு பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : அத்தகைய அன்றைய நடவடிக்கை ஒரு பெரும் தவறுதான். இதுபற்றி நான் ஏற்கனவே பல தடவைகள் ஒப்புக்கொண்டிருக்கிறேன். இதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த நடவடிக்கையை மாகாணசபை என்ற அமைப்பின் மூலம் மேற்கொள்ளவில்லை. பிரேமதாசாவும் பிரபாகரனும் எமது மாகாண ஆட்சி மீது பழிபோடும் வகையாக மேற்கொண்ட ஒரு சதிப்பிரச்சாரமே அது.. இளைஞர்களைத் திரட்டி ஜனநாயகரீதியான கட்சிகளின் பாதுகாப்பையும் பலத்தையும் அதிகரிக்கும் நோக்கில் கட்சிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவே தமிழ் தேசிய இராணுவம். இளைஞர்களை விரைவாக இணைப்பதில் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட போட்டியானது இளைஞர்களைக் கட்டாயமாகப் பிடித்து பயிற்சி அளித்து ஒரு இராணுவமாக்குதல் என மாறியது. ஆவ்வாறான முடிவை எடுத்ததிலோ அதை நடைமுறைப்படுத்தியலோ எனக்கு நேரடியான பங்கு எதுவுமில்லை. எனினும் நான் அவ்வாறாக செயற்பட்ட கட்சிகளில் ஒன்றின் ஒரு முக்கியஸ்தன் என்ற வகையில் அக்கட்சி விட்டிருக்கும் தவறுக்கு நானும் பொறுப்பேற்றே ஆகவேண்டும். எமது கட்சி ஒரு தற்பாதுகாப்பு நோக்குடனேயே அவ்வாறானதொரு தமிழர் இராணுவ விரிவாக்கத்தை உருவாக்க முனைந்தது. இன்றைக்கும் அதைப்பற்றிப் பேசுபவர்கள் கடந்த இருபது ஆண்டுகளில் புலிகளால் வலுக்கட்டாயமாகப் பிடிக்கப்பட்டு கொலைக்களங்களுக்கு அனுப்பப்பட்டு பலியிடப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை இருபதாயிரத்தையும் தாண்டும். அந்தச் சந்தர்ப்பங்களில் எங்களது பத்திஜீவிகள் அவ்வாறான தவறுகளுக்கெல்லாம் தெரிந்தே வக்காலாத்து வாங்கினார்கள் வாழ்த்துக்களும் தெரிவித்தார்கள். புலிகள் பிள்ளைகளைப் பிடித்துப் போனதால் எத்தனை பெற்றோர்கள் மனநோயாளிகளாகிப் போனார்கள், தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதைப்பற்றி எமது புத்திஜீவிகளோ பத்திரிகையாளர்களோ எந்தவேளையிலும் அசை போட்டுப் பார்ப்பதில்லை என்பது ஒருபுறம் வேடிக்கையாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருக்கிறது.

கேள்வி : நீங்கள் தேர்தல் காலங்களிலேயே இலங்கைக்கு வருவதாகவும் - இப்போது கூட வட மாகாண சபை தேர்தலைக் மனதில் கொண்டே வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ஒரு தேர்தல் காலப் பறவை போல நீங்கள் கருதப்படும் நிலை பற்றி...?

பதில் : தமிழர் மத்தியில் இப்போது அரசியல் செய்யும் பெரும்பாலானோர் தேர்தல் காலப் பறவைகள் தான். கடந்த காலத்தின் சூழ்நிலைகள் அப்படித்தான் இருந்தன. நான் கடந்த சில தடவைகள் தேர்தல்களின் இங்கு வந்தேன் என்றாலும் நான் தேர்தல் போட்டிகளில் நிற்பதற்காக வரவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தேர்தற் காலங்களில் பலர் மக்கள் மத்தியில் வருவதற்கு அச்சந்தர்ப்பங்களின் போதுதான் அரசியற் தலைவர்கள் மக்களிடையே சென்று பிரச்சாரம் செய்வதற்கு போதிய பாதுகாப்பை அரசபடைகள் வழங்கத் தயாராக இருந்தமையும் காரணமாக இருக்கலாம். எவ்வாறாயினும் நான் இப்போது இங்கே வந்திருப்பதோ மக்களைச் சந்தித்து வருவதோ தேர்தல் தொடர்பான எந்த நோக்கங்களையும் கொண்டதல்ல என்பதோடு இப்போது இங்கு நிலவுவது தேர்தற் காலம் அல்ல என்பதுவும் உங்களுக்குத் தெரியும.

கேள்வி : தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு பற்றி இப்போது அதிகமாகப் பேசப்படுகிறது. இதுதொடர்பாக சில செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கிறன. இந்த ஒன்றிணைப்பு பற்றி என்ன கருதுகிறீர்கள்?

பதில் : தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக பொது உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது இன்றைய அவசியமாகும். வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையான ஆசனங்களை மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கியுள்ளனர். எனவே அவர்கள் தமிழர் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையாக மிக அவசியமான பொதுவிடயங்களில் உடன்பாடுகளை உருவாக்கி தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை ஒன்றுபட்ட குரலாக ஆக்குவதற்கு அவர்களுக்கு ஓர் ஆணையை வழங்கியுள்ளார்கள் என்றும் கூறலாம். குறிப்பிட்ட அடிப்டையான ஒரு சில விடயங்களை நோக்கியாவது தமிழ்க் கட்சிகள் ஒருமுகப்பட வேண்டும். வேறுபாடுகளின் மத்தியில் ஒற்றமையைக் கண்டு தமிழக்கட்சிகள் அனைத்துக்குமிடையில் உடன்பாடுகள் எட்டப்பட வேண்டும்.

அந்தவகையில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அவ்வாறானதொரு கடமையைச் செய்வதற்கான ஆணையை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் எனலாம். திரு.சம்பந்தர் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகிய இருவரும் தமிழ்க்கட்சிகளுக்கிடையில் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு முயற்சித்தால் அதுவே முழுப்பலனை அளிப்பதாக இருக்கும். அதில்லாதபட்சத்தில் திரு. டக்ளஸ் மேற்கொண்டுள்ள முயற்சியாவது அவ்வாறான பலனை அளிக்க வேண்டும் என்று விருப்புகிறேன். என்னைப் பொறுத்த வரையிலும் எனது கட்சியினரைப் பொறுத்தவரையிலும் நாங்கள் அவ்வாறான முயற்சிகளை யார் செய்தாலும் எங்களால் முடிந்த அளவு ஒத்துழைப்பு வழங்குவோம்;. பல கட்சிகளுடனும் நட்புடன் பேசி ஒற்றுமை ஏற்பட எம்மாலான முயற்சிகளையும் மேற்கொள்வோம். எமது ஈழத் தமிழ் மக்களின் இன்றைய நிலையைக் கருத்திற் கொண்டு இந்த உடன்பாடு ஒற்றுமை எட்டப்பட வேண்டும். குறிப்பாக வன்னி மக்களின் வாழ்;வில் உடனடி முன்னேற்றங்களைக் கொண்டுவர தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் உள்ளது.

கேள்வி : ஆரம்ப காலகட்டங்களில் இருந்த ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா?

பதில் : நாங்கள் இளையவர்களாக இருந்த போது பெரியவர்களாக இருந்தவர்கள் தமிழர் போராட்ட இயக்கங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தத் தவறி விட்டனர். 1984ல் நாம் எடுத்த முயற்சியால் ஈழத் தேசிய விடுதலை முன்னணி உருவாக்கப்பட்டது. அதுவே திம்புப் பேச்சுவார்த்தையின் போது ஒரு பலமாக இருந்தது. ஆனால் புலிகள் அதனை நீடிக்க விடாது செய்துவிட்டனர். அந்தத் தவறு தொடரக் கூடாது. புலிகள்தான் தமிழர்களிடையே ஒற்றுமை ஏற்படுவதற்குத் தடையாக இருந்தார்கள் இப்போது புலிகள் இல்லாதபடியினால் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று திரு சம்பந்தர் அவர்கள் பகிரங்கமாக அறிவித்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். எனவே கடந்தகாலத் தவறுகளைத் தொடராமல் தமிழ் மக்களுக்கான அடிப்படை விடயங்களிலாயினும் ஒற்றுமைப்பட முயற்சி செய்வோம். அவ்வாறு முயற்சி செய்யாவிட்டால் அடுத்த தலைமுறை எம்மை நிச்சயம்; குற்றஞ்சாட்டும். மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை இல்லாது போகும். இந்த ஒற்றுமைக்காக ஊடகங்களும் பாடுபட வேண்டும். ஒற்றுமைக்கு எதிரான போக்குகளை ஊடகவியலாளர்கள் வளர்த்து விடக்கூடாது.

கேள்வி : இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய அதிகாரப்பகிர்வு பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில் : தமிழ்க்கட்சிகள் அடிக்கடி ஒன்றிணைந்து சந்தித்து ஒரு குறைந்த பட்சமாயினும் சில விடயங்களில் உடன்பாடு காண வேண்டும். அதன் மூலம் ஒரு தீர்வுத் திட்டத்தை உருவாக்கி அதனை தமிழர்களின் அரசியற் கோரிக்கையின் ஒரே குரல் என வெளிப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஒரு தீர்வுத் திட்டத்தை ஏற்கனவே வைத்திருப்பார்களாயின் அதனை அனைத்துத் தமிழ்க் கட்சிகள், சமூகத் தலைவர்கள்; மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்களுக்கும் அபிப்பிராயங்களுக்கும் வெளிப்படுத்தி முன்வைக்க வேண்டும். அதன் மூலம் அவ்வாறான ஒன்று அனைத்துத் தமிழர்களினதும் கோரிக்கையென வெளிப்படும.;. அதை உலக நாடுகளிடம் சமர்ப்பித்து எமது நியாயத்தை எடுத்துக் கூறவேண்டும். தெற்கில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் எத்தனையோ சிங்களக் கட்சிகள் இருக்கின்றன. ஏன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் அதிகாரப்பகிர்வுக்கு ஆதரவான அமைச்சர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் எமது ஒற்றுபட்ட கோரிக்கையை முன்வைத்து அதுபற்றி அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் சாதகமான அபிப்பிராயங்களை உருவாக்க வழிவகுக்க வேண்டும். நாங்கள் பிரிவினைவாதிகள் அல்லர் எமது கோரிக்கைகள் நியாயமானவை என்று சிங்கள மக்களுக்கு முதலில் நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். இவ்வாறான முன்னெடுப்புகளே ஒரு நிலையான அரசியற் தீர்வுக்கு நிலைமைகளை இட்டுச் செல்லும்.

கேள்வி : தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நிகழவுள்ளதாக ஒரு அச்ச நிலை தோன்றியுள்ளது. இது பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?

பதில் : தெற்கில் எமது மக்கள் இருக்கிறார்கள். அதேபோல சிங்களவர்களும் 30 வருட யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் உள்ள அவர்களின் நாகவிகாரையிலும் நயினாதீவிலுள்ள பௌத்த விகைரையையும் தரிசிக்கவும்;, சுற்றுலா நோக்கிலும் இங்கு வருகின்றனர். இவ்வாறு வருகின்றவர்களை எமது நிலத்தில் குடியேறுவதற்காகவே வருகிறார்கள் என குற்றம் சாட்டுவது சரியானது அல்ல. வன்னியில் என்ன நடக்கிறது என்பது தொடர்பாக தமிழர்களின் மத்தியில் பலஅச்சங்கள் தோன்றியிருப்பது இயல்பானது. அவை தொடர்பாக அரசாங்கம் மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். ஊகங்களின் அடிப்படையில் எதனையும் என்னால் கூறமுடியாதுள்ளது. ஆனால் இவ்வாறான செயலுக்கு அரசே பெரும் பொறுப்பாகும். அதேவேளை ஆதாரமற்ற ஊகங்களை எமது மக்கள் மத்தியில் விதைக்கக் கூடாது என்பதில் நாமும் சமூகப் பொறுப்புணர்வுடன் கவனமாக இருக்க வேண்டும்.

மனிதாபிமான பணிகளில் பாதிப்பு ஏற்படாது!

Friday, July 9, 2010
ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் மூடப்படுகின்றமை இலங்கைக்கான ஐ.நாவின் மனிதாபிமானப் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புக்னே தெரிவித்தார். ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் உத்தரவின் பேரில் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான கொழும்பு அலுவலகத்தை மூடப்படுகிறது.

வதிவிடப் பிரதிநிதியான நெய்ல் புக்னேயும் நியூயோர்க்கு திரும்பி வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் புக்னே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐ.நாவால் இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு நடவடிக்கையிலும் தடங்கல் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் வைத்தியர் கைது!

Friday, July 9, 2010
பிறந்து 3 நாள்களேயான குழந்தையொன்றை விற்பனை செய்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்திய ஒருவர் நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி 75,000 ரூபாவிற்கு குறித்த குழந்தையை விற்பனை செய்வதற்கு அந்த வைத்தியர் முயற்சித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

டபிள்யூ.ஏ.சாந்த லொக்கு பண்டார என்ற வைத்திய அதிகாரியே ஜா எல பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபராவார்.

குழந்தைகளை விற்பனை செய்வது தொடர்பில் குறித்த வைத்தியருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஐ.நா அலுவலகப் பணியாளHகளின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம்!

Friday, July 9, 2010
கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா வூக்கு அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருப்பதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளா; சந்திப்பொன்றில் அமைச்சா; இதனைத் தெரிவித்தாh;. இங்கு அமைச்சா; மேலும் கூறியதாவது-

கொழும்பிலுள்ள ஐ நா அலுவலத்திற்கு சிக்கலின்றி சென்றுவரவூம் ஐ நா அலுவலர்கள் சுமுகமாக தங்களது பணிகளை மேற்கொள்ளவூம் தேவையான பாதுகாப்பை அரசாங்கம் முழுமையாக உறுதிப்படுத்தியூள்ளதென்பதை நிவ்யோக்கிலுள்ள ஐ நா தலைமையகத்திற்கும் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கும் அரசாங்கம் தௌpவாக எடுத்துக்கூறியிருக்கிறது.

ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டங்கள் ஒன்றுகூடல்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமை இருக்கிது. அந்த வகையில் எம்மைப் பொருத்தவரையில் ஜானநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கும் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய தேசிய கடப்பாடு எமக்கு இருக்கிறது.

அதேபோல் ராஜதந்திர பிரதேசத்தின் துhய்மையைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் எமக்கு இருக்கிறது. இந்த இரண்டு கடப்பாடுகளையூம் நாம் நிறைவேற்றியூள்ளோம் என அமைச்சH தெரிவித்தாH.

ஐ நா செயலாளர் நாயகமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்ட கூட்டு அறிக்கையே ஐ நா நிபுணர்குழு நியமனத்திற்கு அடிப்படையாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்து குறித்து கேட்கப்பட்டபோது - அது முற்றிலும் தவறு. யூத்த முடிவடைந்த சிலநாட்களில் அதாவது 2009 மே மாதம இந்த கூட்டறிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த கூட்டறிக்கையில் வெளிநாட்டு பொறிமுறை எதுவூம் பற்றி குறிப்பிடப்பட்டவில்லை என அமைச்சH குறிப்பிட்டாH.

இந்த கூட்டறிக்கையில் இலங்கை அரசாங்கத்தினால் தகுந்த பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படுவது பற்றியே குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கமையவே ஜனாதிபதியினால் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

எனவே ஐ நா செயலாளர் நாயகம் ஜனாதிபதி கூட்டறிக்கைக்கும் இலங்கை தொடர்பான ஐ நா வின் விசேட நிபுணர்குழு நியமனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கூட்டறிக்கையின் மூலம் இந்த நிபுணர்குழுவூக்கான எந்த அடிப்படையோ அடித்தளமோ ஏற்படுத்தப்படவூம் இல்லை எனவூம் அமைச்சர் தெரிவித்தார்,

Sunday, July 4, 2010

அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தைச் சரியான முறையில் செயற்படுத்துவதற்கு தேவைப்படுவது-- முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள்,

Sunday, July 4, 2010
அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தைச் சரியான முறையில் செயற்படுத்துவதற்கு உடனடியாகத் தேவைப்படுவது ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவாகும். இந்த அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவில் அரசியல் யாப்பு சம்பந்தமான விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள், விடயங்களைத் திறமையாக நிர்வகிக்கக் கூடிய திறமையாக நிர்வகிக்கக் கூடிய நிர்வாகத் திறன் மிக்க நிபுணர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளடங்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கள் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்று இணைந்த வட கிழக்கு மாகாண சபைகளின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கேசரி வார இதழுக்குத் தெரிவித்தார்.

அத்துடன் போரின் காரணமாக அகதிகளாகப் போன 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் மறுவாழ்வு, அழிந்து போய்க கிடக்கின்ற வடக்கு கிழக்கை மீள் கட்டி எழுப்புதல் போன்ற விடயங்களை அரசாங்கம் வெறுமனே நடைமுறையில் இருக்கின்ற அரசு இயந்திரத்தில் மாத்திரம் தங்கியிருப்பதில் பலனில்லை. எனவே புனர்வாழ்வு, மீள் கட்டுமாணப் பணிகளுக்கான ஆற்றல் வாய்ந்தவர்களைக் கொண்ட நிபுணர் குழுவினை அமைக்க வேண்டும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் கூறியதாவது,.

அதிகாரப் பரவலாக்கள் சம்பந்தப்பட்ட விடயத்தை சரியான முறையில் செயற்படுத்துவதற்கு உடனடியாக தேவைப்படுவது ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிக்கும் பட்சத்தில் அதில் அரசியல் யாப்பு சம்பந்தப்பட்ட நிபுணர்கள் விடயங்களை திறமையாக நிர்வகிக்கக் கூடிய நிர்வாகத் திறனுடைய நிபுணர்கள், மேலும் சில அரசியல் தலைவர்களை உள்ளடக்கி அந்த ஆணைக்குழுவை உருவாக்குவதன் மூலம் இப்பொழுது அரசியல் யாப்பின் தாகமாக இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை எப்படி சிறந்த முறையில் அதை நிறைவேற்றலாம் என்பது பற்றி தீர்மானித்து அந்த தீர்மானிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றுகின்ற பொழுது முதற்கட்டமாக/ முதற்படியாக 13 ஆவது திருத்தத்தை அதிகாரப் பகிர்வு சம்பந்தமான விடயத்தின் ஒரு செயன்முறைக்கு உயிராக மாற்றலாம். ஏனென்றால் இந்த அதிகாரப் பகிர்வு சம்பந்தப்பட்ட விடயத்தைப் பற்றி பேசி, பேசி அல்லது அதைப் பற்றிய நாடாளுமன்ற குழு அல்லது அரசியல் கட்சிகளுக்கிடையிலான குழு என்ற கடந்த 20 வருடங்களாக இவ்வாறு மங்கள முனசிங்க கமிட்டி தொடக்கம், பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான நாடாளுமன்ற கமிட்டி என காலம்போய் விட்டது..

இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக அந்த 13 ஆவது திருத்தத்தை சிறந்த முறையில் எப்படி நிறைவேற்றுவதென்று அதை தீர்மானித்து நிறைவேற்ற வேண்டும். அதற்கு அடுத்த கட்டமாக இந்த 13 ஆவது திருத்தத்தையே எப்படி திருத்துவது 13 ஆவது திருத்தத்திற்கு மேலான, அதிகார பரவலாக்க வேலையை எப்படி வழங்குவது என்றவிடயங்களை அரசியல் கட்சிகள்தீர்மானித்துக் கொள்ளலாம். அதை எதிர்காலத்தில் நடைமுறைக் கொள்ளலாம்..

இரண்டாவதாக இப்பொழுது தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினை, 5 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களில் அகதிளாகி போனவர்களின் மறுவாழ்வு, புனர்வாழ்வு இந்த 30 வருட யுத்தத்தினால் அழிந்து போய் கிடக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களுடைய புனரமைப்பு, அதாவது அதனுடைய உட்கட்டமைப்புகள் அவற்றினுடைய வர்த்தகம், அதனுடைய பொருளாதாரம் ஆகியவற்றினுடைய தனிப்பட்டவர்களின் வீடுகள், ஏனைய கட்டுமானங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் வெறுமனே அரசாங்க நிர்வாக இயந்திரத்தில் மட்டும் தங்கியிருக்காமல் அதற்கு உரிய வகையில் இருப்பதாகவோ அல்லது செயற்படக் கூடிய ஆற்றல் வாய்ந்ததாகவோ காணப்படவில்லை. ஆகவே அரசாங்கம் உடனடியாக புனரமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென ஒரு திறமை வய்ந்த அல்லது ஆற்றல் வாய்ந்தவர்களைக் கொண்டு ஒரு கமிட்டியை நியமித்து அவர்கள் வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தங்கி நேரடியாகவே அந்த பிரதேசங்களைப் பார்வையிட்டு அபிவிருத்திகளை திட்டமிட்டு அந்த அபிவிருத்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும்..

ஏனென்றால் இவ்வாறான சேவை மக்களோடு அந்த பிரதேசத்தோடு இருந்து செயற்படுகின்ற நிபுணர் குழு இல்லாமல் அரசாங்கம், கொழும்பிலிருந்து சில விடயங்களை தீர்மானிப்பதும் பாரம்பரிய அரசாங்க கட்டமைப்பினூடாக செயற்படுவதன் மூலம் அது செயலில் கூடியதாக இல்லை என்பதை நாங்கள் நடைமுறையில் காண்கிறோம். எத்தனையோ விதமான தடைகள் அந்த அமைப்பிலே காணப்படுகின்றன. மேலும் இந்த நிர்வாகங்கள் புலிகள் இருந்த கால கட்டத்தில் ஒரு பிழையான போக்குகளுக்கு அவை செயற்படுத்தப்பட்டதனால் அந்த போக்குகள் இன்றைக்கும் தொடருகின்றன. நிலைமைகளே அந்த நிர்வாக அமைப்பில் காணப்படுகின்றது. ஆகையால் இந்த நிர்வாக அமைப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை இருக்கின்ற அதேவேளை அந்த வொரு நிர்வாக அமைப்பில் தங்கியிருக்காமல் ஒரு விரைவுபடுத்தப்பட்ட புனரமைப்பு அபிவிருத்தி திட்டத்தை மேற்கெள்வதற்கென ஒரு நிபுணர்கள் குழு ஒன்றை அரசாங்கம் உடனடியாக நியமித்து செயற்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும். என்னுடைய ஆலோசனையாகும் என்றும்கூட அதனை கொள்ளலாம்.

27.06.10 அன்று சுவிஸ் நாட்டின் பேர்ன் மானிலத்தில் நடை பெற்ற தியாகிகள் தின நிகழ்வு,


Sunday, July 4, 2010
27.06.10 அன்று சுவிஸ் நாட்டின் பேர்ன் மானிலத்தில் நடை பெற்ற தியாகிகள் தின நிகழ்வு ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணி கட்சி தோழர்களினர்ல் ஓழுங்கு செய்யப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது இவ்நிகழ்வில் பொது மக்களும் சக தோழமை கட்சிகளான புளொட் .ஈபிடிபி .ரெலோ . ஆகிய கட்சிகளும் தங்கள் உறுப்பினர்கள் சகிதம் அனைவரும் வருகை தந்து தியாகிகள் தினத்தில் மிகவும் தோழமையுடன் கலந்துகொண்டு அஞ்சலிகளை தெரிவித்து கொண்டனர் சென்ற ஞாயிற்றுக்கிழமை தியாகிகள் தின நிகழ்வு 15.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது கட்சிதோழர்களின் விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது சகதோழமை கட்சி உறுப்பினர்களும் தங்களது கட்சிகள் சார்ந்து விளக்கேற்றி அஞ்சலிகளை தெரிவித்தனர் அதன்பின்னர் தோழர்கள் தங்கள் அஞ்சிகளை தங்கள் கருத்துக்கள் மூலமாகவும் கண்ணீர்மெல்க தெரிவித்தனர் பின்பு தியாகிகள் தினம் எதற்காக அனுஸ்க்கப்படுகிறது என்று ஜெர்மனிகிளை ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணி கட்சி பொறுப்பாளர் தோழர் அலெக்ஸ் அவர்கள் விரிவாக தெரிவித்திருந்தார் ஈழவிடுதலை போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தோழர்களும் பொதுமக்களும் புலிகள் இயக்கபோராளிகளுகம் மடிந்ததை நினைவுகூர்ந்திருந்தார் .தொடர்ந்து புளொட் சுவிஸ்கிளை சார்பில் திரு குமார் அவர்கள் பேசுகையில் தியாகிகளான தோழர்கள் என்றும் துதிக்கப்படவேண்டியவர்கள் என்றும் தெரிவித்தார்

தொடர்ந்து ஈபிடிபி சுவிஸ்கிளை பிராந்திய பொறுப்பாளர் தோழர் திலக் அவர்களின் அஞ்சலி உரையில் தோழர் பத்மநாபாவுடன் பணியாற்றியதாகவும் இன்றும் தோழர் நாபாவின் சிறப்பான அரசியல் வழிகாட்டிலில் தாங்கள் பயணிப்பதாகவும் மிகவும் மலர்ந்த முகத்துடன் தெரிவித்திருந்தார் தோழர் நாபா என்றும் ஓர் உத்தமர் என்றும் கண்ணீர்மெல்க தெரிவித்ததை காணக்கூடியதாகவிருந்தது

இடதுசாரி செயற்பாட்டாளரும் அறுவை சஞ்சிகையின் ஆசிரியருமான தோழர் லோகநாதன்ஆசிரியர் பேசும்போது நான் தோழர் நாபாவுடன் அதிகளவில் நெருங்கிப்பழகியதில்லைலை. ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட தோழர்களுடன் பழகியிருக்கின்றேன்.அதனூடாக தோழர் நாபா எப்படியான உயர்ந்த பண்புகளைக் கொண்டிருந்தார் என்பதை என்னால் உணரமுடிகின்றது.அத்துடன் நான் செயற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைப் பொறுப்புக்களிலிருந்து செயற்பட்ட தோழர் வீ.ஏ.கந்தசாமியும் தனது இறுதிக்காலத்தில் தோழர் நாபாவின் கட்சியுடன் இனைந்து செயற்பட்டார் என்னும்போது எனக்கு தோழர் நாபா மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கின்றது.இடதுசாரி முற்போக்கு சக்திகள் அனைவரும் ஐக்கியப்பட்டு பொதுவேலைத்திட்டத்தை உருவாக்கி செயற்படுவதே இந்த தியாகிகளுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும் என்று குறிப்பிட்டார்.

தெரடர்ந்து ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணி தலைமைக்குழு உறுப்பினரும் சர்வதேச பொறுப்பாளருமான தோழர் சாந்தன் பேசும்போது நாம் 20வருட தியாகிகள் தினத்தை நினைவு கூறுவதில் பெருமையடைகின்றோம்.ஏனேனில் இத்தியாகிகள் உயரிய இலட்சியங்களுடன் தொலைதூரக் கனவுகளுடன் போராடப்புறப்பட்டவர்கள்.அவர்கள் எம் ஒவ்வொருவருடனும் இனைந்து பணியாற்றிய காலங்களைத்தான் நாம் இலகுவில் மறந்துவிட முடியுமா? தமிழ் சமுகத்தில் பல ஆற்றல்மிக்க தலைவர்கள் கல்விமான்கள் சமுகசெயற்பாட்டாளர்கள் புத்தியீவிகள் என பல்வேறு தரப்பிபினர் படுகொலை செய்ப்பட்டுள்ளார்கள்.அவர்கள் அனைவரையும் இத்தியாகிகள் தினத்தில் நினைவுகூறுவோம். இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக இடைவெளியினூடாக இவ்வருடம் வடகிழக்கில் தியாகிகள் தினம் சிறப்பான முறையில் அனுஸ்டிக்கப்ட்டது. அதேபோல் வெளிநாடுகளிலும் பிரித்தானியா கனடா ஜேர்மனி பிரான்ஸ் போன்ற இடங்களில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இது தோழர்களாகிய எமக்கு உற்சாகத்தை தருகின்றது. இதனூடாக எமது கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்று கூறினார்.

இறுதிநிகழ்வாக பாசிச புலிகளால் கொலை செய்யப்பட்டஈழமக்கள் புரட்சீகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் தியாகிகள் ஆன 13 தோழர்களின் இறுதி நிகழ்வு வீடியோ பதிவின் மூலம் திரையில் காண்பிக்கப்பட்டது பின்பு கட்சியின் கொள்கைத் திட்டம் மற்றும் தொடர்ந்து செல்லும் பணிகள் ஆகியன தெளிவாக விபரிக்கப்பட்டது கட்சித் தோழர்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றன நாட்டிய நிகழ்வுகளும் புரட்சி பாடல்களும் கவிதை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன...தோழர் நாபா மறையவில்லை என்ற கட்சிகிதத்துடன் இவ் நிகழ்வு இனிதே நிறைவேறியது இவ்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும் கசகட்சித்தோழர்களும் ஈழக்கள் புரட்சீகர விடுதலை முன்னணியினர் தங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்

Friday, July 2, 2010

இன்று தமிழ் அரசியல் அமைப்புக்கள்; ஒன்றுகூடி இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட நிலைமைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.,

Friday, July 2, 2010
இன்று தமிழ் அரசியல் அமைப்புக்கள்; ஒன்றுகூடி இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் யுத்தத்திற்கு பிந்திய அன்றாட நிலைமைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.

இந்தக் கூட்டத்தில் த.வி.கூ ஈ.பி.டி.பி பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் புளொட் ஜனநாயக மக்கள் முன்னணி தமிழர் விடுதலை முன்னணிதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய அமைப்புக்கள் பங்கு கொண்டிருந்தன.

இவ் அமைப்புக்களின் தலைவர்களான திரு. வீ. ஆனந்தசங்கரி திரு. டக்ளஸ் தேவானந்தா திரு. சந்திரகுமார் திரு. வரதராஜப்பெருமாள் திரு. ஸ்ரீதரன் திரு. சித்தார்த்தன் திரு. ராகவன் திரு. சிவாஜிலிங்கம் திரு. உதயராஜா திரு. குமரகுருபரன்செரின் சேவியர் மேகலா சண்முகம் திரு. சந்திரஹாசன் திரு. கைலேஸ்வரராஜா திரு. பிரசாந் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். மேலும் அக்கட்சிகளின் வேறு சில பிரதிநிதிகளும் பங்குபற்றினர்

இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு வடக்கு கிழக்கில் இயல்பு நிலை ஏற்படல் நீண்டகாலமாக அகதிகளாக இருக்கும் மக்கள் தமது சொந்த இடங்களில் மிகவிரைவாக மீளக்குடியேற்றப்பட வேண்டியமை சிறப்பு முகாம்களில் உள்ள பிள்ளைகள் விடுவித்தல் முற்றும் Nவுற சில அடிப்படைப் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன் இவை தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனாதிபதியுடன் பேச வேண்டும். எனவும் இப்போது ஏற்பட்டுள்ள முயற்சி தமிழ் மக்களின் பொது அரங்காக தொடர்ந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல்வேறு கட்சிகளுடனும் பேச வேண்டு;ம் மலையக மக்களின் அரசியல் தலைவர்கள் முஸ்லீம் மக்களின் அரசியல் தலைவர்கள் மற்றும் சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளுடனும் கூட்டு உடன்பாடுகளைக் கண்டு இணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த கூட்டுச் செயற்பாடு பிளவுகளுக்கு இடமளியாமல் கருத்து பரிமாற்றங்களினூடாக தொடர்ந்து விஸ்தாரமாக நம்பிக்கைகளை வளர்க்கும் வகையில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமென்றும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

கூட்ட முடிவில் எதிர்வரும் கட்டங்களைப் பற்றிய ஒரு அடிப்படையை வரையறுப்பதற்கென கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கமிட்டியும்; அமைக்கப்;பட்டுள்ளது

Followers

Blog Archive