Friday, July 9, 2010

மனிதாபிமான பணிகளில் பாதிப்பு ஏற்படாது!

Friday, July 9, 2010
ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் மூடப்படுகின்றமை இலங்கைக்கான ஐ.நாவின் மனிதாபிமானப் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புக்னே தெரிவித்தார். ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் உத்தரவின் பேரில் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான கொழும்பு அலுவலகத்தை மூடப்படுகிறது.

வதிவிடப் பிரதிநிதியான நெய்ல் புக்னேயும் நியூயோர்க்கு திரும்பி வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் புக்னே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐ.நாவால் இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு நடவடிக்கையிலும் தடங்கல் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive