Sunday, July 4, 2010

அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தைச் சரியான முறையில் செயற்படுத்துவதற்கு தேவைப்படுவது-- முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள்,

Sunday, July 4, 2010
அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தைச் சரியான முறையில் செயற்படுத்துவதற்கு உடனடியாகத் தேவைப்படுவது ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவாகும். இந்த அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவில் அரசியல் யாப்பு சம்பந்தமான விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள், விடயங்களைத் திறமையாக நிர்வகிக்கக் கூடிய திறமையாக நிர்வகிக்கக் கூடிய நிர்வாகத் திறன் மிக்க நிபுணர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளடங்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கள் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்று இணைந்த வட கிழக்கு மாகாண சபைகளின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கேசரி வார இதழுக்குத் தெரிவித்தார்.

அத்துடன் போரின் காரணமாக அகதிகளாகப் போன 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் மறுவாழ்வு, அழிந்து போய்க கிடக்கின்ற வடக்கு கிழக்கை மீள் கட்டி எழுப்புதல் போன்ற விடயங்களை அரசாங்கம் வெறுமனே நடைமுறையில் இருக்கின்ற அரசு இயந்திரத்தில் மாத்திரம் தங்கியிருப்பதில் பலனில்லை. எனவே புனர்வாழ்வு, மீள் கட்டுமாணப் பணிகளுக்கான ஆற்றல் வாய்ந்தவர்களைக் கொண்ட நிபுணர் குழுவினை அமைக்க வேண்டும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் கூறியதாவது,.

அதிகாரப் பரவலாக்கள் சம்பந்தப்பட்ட விடயத்தை சரியான முறையில் செயற்படுத்துவதற்கு உடனடியாக தேவைப்படுவது ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிக்கும் பட்சத்தில் அதில் அரசியல் யாப்பு சம்பந்தப்பட்ட நிபுணர்கள் விடயங்களை திறமையாக நிர்வகிக்கக் கூடிய நிர்வாகத் திறனுடைய நிபுணர்கள், மேலும் சில அரசியல் தலைவர்களை உள்ளடக்கி அந்த ஆணைக்குழுவை உருவாக்குவதன் மூலம் இப்பொழுது அரசியல் யாப்பின் தாகமாக இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை எப்படி சிறந்த முறையில் அதை நிறைவேற்றலாம் என்பது பற்றி தீர்மானித்து அந்த தீர்மானிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றுகின்ற பொழுது முதற்கட்டமாக/ முதற்படியாக 13 ஆவது திருத்தத்தை அதிகாரப் பகிர்வு சம்பந்தமான விடயத்தின் ஒரு செயன்முறைக்கு உயிராக மாற்றலாம். ஏனென்றால் இந்த அதிகாரப் பகிர்வு சம்பந்தப்பட்ட விடயத்தைப் பற்றி பேசி, பேசி அல்லது அதைப் பற்றிய நாடாளுமன்ற குழு அல்லது அரசியல் கட்சிகளுக்கிடையிலான குழு என்ற கடந்த 20 வருடங்களாக இவ்வாறு மங்கள முனசிங்க கமிட்டி தொடக்கம், பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான நாடாளுமன்ற கமிட்டி என காலம்போய் விட்டது..

இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக அந்த 13 ஆவது திருத்தத்தை சிறந்த முறையில் எப்படி நிறைவேற்றுவதென்று அதை தீர்மானித்து நிறைவேற்ற வேண்டும். அதற்கு அடுத்த கட்டமாக இந்த 13 ஆவது திருத்தத்தையே எப்படி திருத்துவது 13 ஆவது திருத்தத்திற்கு மேலான, அதிகார பரவலாக்க வேலையை எப்படி வழங்குவது என்றவிடயங்களை அரசியல் கட்சிகள்தீர்மானித்துக் கொள்ளலாம். அதை எதிர்காலத்தில் நடைமுறைக் கொள்ளலாம்..

இரண்டாவதாக இப்பொழுது தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினை, 5 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களில் அகதிளாகி போனவர்களின் மறுவாழ்வு, புனர்வாழ்வு இந்த 30 வருட யுத்தத்தினால் அழிந்து போய் கிடக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களுடைய புனரமைப்பு, அதாவது அதனுடைய உட்கட்டமைப்புகள் அவற்றினுடைய வர்த்தகம், அதனுடைய பொருளாதாரம் ஆகியவற்றினுடைய தனிப்பட்டவர்களின் வீடுகள், ஏனைய கட்டுமானங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் வெறுமனே அரசாங்க நிர்வாக இயந்திரத்தில் மட்டும் தங்கியிருக்காமல் அதற்கு உரிய வகையில் இருப்பதாகவோ அல்லது செயற்படக் கூடிய ஆற்றல் வாய்ந்ததாகவோ காணப்படவில்லை. ஆகவே அரசாங்கம் உடனடியாக புனரமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென ஒரு திறமை வய்ந்த அல்லது ஆற்றல் வாய்ந்தவர்களைக் கொண்டு ஒரு கமிட்டியை நியமித்து அவர்கள் வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தங்கி நேரடியாகவே அந்த பிரதேசங்களைப் பார்வையிட்டு அபிவிருத்திகளை திட்டமிட்டு அந்த அபிவிருத்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும்..

ஏனென்றால் இவ்வாறான சேவை மக்களோடு அந்த பிரதேசத்தோடு இருந்து செயற்படுகின்ற நிபுணர் குழு இல்லாமல் அரசாங்கம், கொழும்பிலிருந்து சில விடயங்களை தீர்மானிப்பதும் பாரம்பரிய அரசாங்க கட்டமைப்பினூடாக செயற்படுவதன் மூலம் அது செயலில் கூடியதாக இல்லை என்பதை நாங்கள் நடைமுறையில் காண்கிறோம். எத்தனையோ விதமான தடைகள் அந்த அமைப்பிலே காணப்படுகின்றன. மேலும் இந்த நிர்வாகங்கள் புலிகள் இருந்த கால கட்டத்தில் ஒரு பிழையான போக்குகளுக்கு அவை செயற்படுத்தப்பட்டதனால் அந்த போக்குகள் இன்றைக்கும் தொடருகின்றன. நிலைமைகளே அந்த நிர்வாக அமைப்பில் காணப்படுகின்றது. ஆகையால் இந்த நிர்வாக அமைப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை இருக்கின்ற அதேவேளை அந்த வொரு நிர்வாக அமைப்பில் தங்கியிருக்காமல் ஒரு விரைவுபடுத்தப்பட்ட புனரமைப்பு அபிவிருத்தி திட்டத்தை மேற்கெள்வதற்கென ஒரு நிபுணர்கள் குழு ஒன்றை அரசாங்கம் உடனடியாக நியமித்து செயற்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும். என்னுடைய ஆலோசனையாகும் என்றும்கூட அதனை கொள்ளலாம்.

27.06.10 அன்று சுவிஸ் நாட்டின் பேர்ன் மானிலத்தில் நடை பெற்ற தியாகிகள் தின நிகழ்வு,


Sunday, July 4, 2010
27.06.10 அன்று சுவிஸ் நாட்டின் பேர்ன் மானிலத்தில் நடை பெற்ற தியாகிகள் தின நிகழ்வு ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணி கட்சி தோழர்களினர்ல் ஓழுங்கு செய்யப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது இவ்நிகழ்வில் பொது மக்களும் சக தோழமை கட்சிகளான புளொட் .ஈபிடிபி .ரெலோ . ஆகிய கட்சிகளும் தங்கள் உறுப்பினர்கள் சகிதம் அனைவரும் வருகை தந்து தியாகிகள் தினத்தில் மிகவும் தோழமையுடன் கலந்துகொண்டு அஞ்சலிகளை தெரிவித்து கொண்டனர் சென்ற ஞாயிற்றுக்கிழமை தியாகிகள் தின நிகழ்வு 15.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது கட்சிதோழர்களின் விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது சகதோழமை கட்சி உறுப்பினர்களும் தங்களது கட்சிகள் சார்ந்து விளக்கேற்றி அஞ்சலிகளை தெரிவித்தனர் அதன்பின்னர் தோழர்கள் தங்கள் அஞ்சிகளை தங்கள் கருத்துக்கள் மூலமாகவும் கண்ணீர்மெல்க தெரிவித்தனர் பின்பு தியாகிகள் தினம் எதற்காக அனுஸ்க்கப்படுகிறது என்று ஜெர்மனிகிளை ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணி கட்சி பொறுப்பாளர் தோழர் அலெக்ஸ் அவர்கள் விரிவாக தெரிவித்திருந்தார் ஈழவிடுதலை போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தோழர்களும் பொதுமக்களும் புலிகள் இயக்கபோராளிகளுகம் மடிந்ததை நினைவுகூர்ந்திருந்தார் .தொடர்ந்து புளொட் சுவிஸ்கிளை சார்பில் திரு குமார் அவர்கள் பேசுகையில் தியாகிகளான தோழர்கள் என்றும் துதிக்கப்படவேண்டியவர்கள் என்றும் தெரிவித்தார்

தொடர்ந்து ஈபிடிபி சுவிஸ்கிளை பிராந்திய பொறுப்பாளர் தோழர் திலக் அவர்களின் அஞ்சலி உரையில் தோழர் பத்மநாபாவுடன் பணியாற்றியதாகவும் இன்றும் தோழர் நாபாவின் சிறப்பான அரசியல் வழிகாட்டிலில் தாங்கள் பயணிப்பதாகவும் மிகவும் மலர்ந்த முகத்துடன் தெரிவித்திருந்தார் தோழர் நாபா என்றும் ஓர் உத்தமர் என்றும் கண்ணீர்மெல்க தெரிவித்ததை காணக்கூடியதாகவிருந்தது

இடதுசாரி செயற்பாட்டாளரும் அறுவை சஞ்சிகையின் ஆசிரியருமான தோழர் லோகநாதன்ஆசிரியர் பேசும்போது நான் தோழர் நாபாவுடன் அதிகளவில் நெருங்கிப்பழகியதில்லைலை. ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட தோழர்களுடன் பழகியிருக்கின்றேன்.அதனூடாக தோழர் நாபா எப்படியான உயர்ந்த பண்புகளைக் கொண்டிருந்தார் என்பதை என்னால் உணரமுடிகின்றது.அத்துடன் நான் செயற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைப் பொறுப்புக்களிலிருந்து செயற்பட்ட தோழர் வீ.ஏ.கந்தசாமியும் தனது இறுதிக்காலத்தில் தோழர் நாபாவின் கட்சியுடன் இனைந்து செயற்பட்டார் என்னும்போது எனக்கு தோழர் நாபா மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கின்றது.இடதுசாரி முற்போக்கு சக்திகள் அனைவரும் ஐக்கியப்பட்டு பொதுவேலைத்திட்டத்தை உருவாக்கி செயற்படுவதே இந்த தியாகிகளுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும் என்று குறிப்பிட்டார்.

தெரடர்ந்து ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணி தலைமைக்குழு உறுப்பினரும் சர்வதேச பொறுப்பாளருமான தோழர் சாந்தன் பேசும்போது நாம் 20வருட தியாகிகள் தினத்தை நினைவு கூறுவதில் பெருமையடைகின்றோம்.ஏனேனில் இத்தியாகிகள் உயரிய இலட்சியங்களுடன் தொலைதூரக் கனவுகளுடன் போராடப்புறப்பட்டவர்கள்.அவர்கள் எம் ஒவ்வொருவருடனும் இனைந்து பணியாற்றிய காலங்களைத்தான் நாம் இலகுவில் மறந்துவிட முடியுமா? தமிழ் சமுகத்தில் பல ஆற்றல்மிக்க தலைவர்கள் கல்விமான்கள் சமுகசெயற்பாட்டாளர்கள் புத்தியீவிகள் என பல்வேறு தரப்பிபினர் படுகொலை செய்ப்பட்டுள்ளார்கள்.அவர்கள் அனைவரையும் இத்தியாகிகள் தினத்தில் நினைவுகூறுவோம். இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக இடைவெளியினூடாக இவ்வருடம் வடகிழக்கில் தியாகிகள் தினம் சிறப்பான முறையில் அனுஸ்டிக்கப்ட்டது. அதேபோல் வெளிநாடுகளிலும் பிரித்தானியா கனடா ஜேர்மனி பிரான்ஸ் போன்ற இடங்களில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இது தோழர்களாகிய எமக்கு உற்சாகத்தை தருகின்றது. இதனூடாக எமது கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்று கூறினார்.

இறுதிநிகழ்வாக பாசிச புலிகளால் கொலை செய்யப்பட்டஈழமக்கள் புரட்சீகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் தியாகிகள் ஆன 13 தோழர்களின் இறுதி நிகழ்வு வீடியோ பதிவின் மூலம் திரையில் காண்பிக்கப்பட்டது பின்பு கட்சியின் கொள்கைத் திட்டம் மற்றும் தொடர்ந்து செல்லும் பணிகள் ஆகியன தெளிவாக விபரிக்கப்பட்டது கட்சித் தோழர்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றன நாட்டிய நிகழ்வுகளும் புரட்சி பாடல்களும் கவிதை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன...தோழர் நாபா மறையவில்லை என்ற கட்சிகிதத்துடன் இவ் நிகழ்வு இனிதே நிறைவேறியது இவ்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும் கசகட்சித்தோழர்களும் ஈழக்கள் புரட்சீகர விடுதலை முன்னணியினர் தங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்

Followers

Blog Archive