Sunday, July 4, 2010

27.06.10 அன்று சுவிஸ் நாட்டின் பேர்ன் மானிலத்தில் நடை பெற்ற தியாகிகள் தின நிகழ்வு,


Sunday, July 4, 2010
27.06.10 அன்று சுவிஸ் நாட்டின் பேர்ன் மானிலத்தில் நடை பெற்ற தியாகிகள் தின நிகழ்வு ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணி கட்சி தோழர்களினர்ல் ஓழுங்கு செய்யப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது இவ்நிகழ்வில் பொது மக்களும் சக தோழமை கட்சிகளான புளொட் .ஈபிடிபி .ரெலோ . ஆகிய கட்சிகளும் தங்கள் உறுப்பினர்கள் சகிதம் அனைவரும் வருகை தந்து தியாகிகள் தினத்தில் மிகவும் தோழமையுடன் கலந்துகொண்டு அஞ்சலிகளை தெரிவித்து கொண்டனர் சென்ற ஞாயிற்றுக்கிழமை தியாகிகள் தின நிகழ்வு 15.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது கட்சிதோழர்களின் விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது சகதோழமை கட்சி உறுப்பினர்களும் தங்களது கட்சிகள் சார்ந்து விளக்கேற்றி அஞ்சலிகளை தெரிவித்தனர் அதன்பின்னர் தோழர்கள் தங்கள் அஞ்சிகளை தங்கள் கருத்துக்கள் மூலமாகவும் கண்ணீர்மெல்க தெரிவித்தனர் பின்பு தியாகிகள் தினம் எதற்காக அனுஸ்க்கப்படுகிறது என்று ஜெர்மனிகிளை ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணி கட்சி பொறுப்பாளர் தோழர் அலெக்ஸ் அவர்கள் விரிவாக தெரிவித்திருந்தார் ஈழவிடுதலை போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தோழர்களும் பொதுமக்களும் புலிகள் இயக்கபோராளிகளுகம் மடிந்ததை நினைவுகூர்ந்திருந்தார் .தொடர்ந்து புளொட் சுவிஸ்கிளை சார்பில் திரு குமார் அவர்கள் பேசுகையில் தியாகிகளான தோழர்கள் என்றும் துதிக்கப்படவேண்டியவர்கள் என்றும் தெரிவித்தார்

தொடர்ந்து ஈபிடிபி சுவிஸ்கிளை பிராந்திய பொறுப்பாளர் தோழர் திலக் அவர்களின் அஞ்சலி உரையில் தோழர் பத்மநாபாவுடன் பணியாற்றியதாகவும் இன்றும் தோழர் நாபாவின் சிறப்பான அரசியல் வழிகாட்டிலில் தாங்கள் பயணிப்பதாகவும் மிகவும் மலர்ந்த முகத்துடன் தெரிவித்திருந்தார் தோழர் நாபா என்றும் ஓர் உத்தமர் என்றும் கண்ணீர்மெல்க தெரிவித்ததை காணக்கூடியதாகவிருந்தது

இடதுசாரி செயற்பாட்டாளரும் அறுவை சஞ்சிகையின் ஆசிரியருமான தோழர் லோகநாதன்ஆசிரியர் பேசும்போது நான் தோழர் நாபாவுடன் அதிகளவில் நெருங்கிப்பழகியதில்லைலை. ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட தோழர்களுடன் பழகியிருக்கின்றேன்.அதனூடாக தோழர் நாபா எப்படியான உயர்ந்த பண்புகளைக் கொண்டிருந்தார் என்பதை என்னால் உணரமுடிகின்றது.அத்துடன் நான் செயற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைப் பொறுப்புக்களிலிருந்து செயற்பட்ட தோழர் வீ.ஏ.கந்தசாமியும் தனது இறுதிக்காலத்தில் தோழர் நாபாவின் கட்சியுடன் இனைந்து செயற்பட்டார் என்னும்போது எனக்கு தோழர் நாபா மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கின்றது.இடதுசாரி முற்போக்கு சக்திகள் அனைவரும் ஐக்கியப்பட்டு பொதுவேலைத்திட்டத்தை உருவாக்கி செயற்படுவதே இந்த தியாகிகளுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும் என்று குறிப்பிட்டார்.

தெரடர்ந்து ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணி தலைமைக்குழு உறுப்பினரும் சர்வதேச பொறுப்பாளருமான தோழர் சாந்தன் பேசும்போது நாம் 20வருட தியாகிகள் தினத்தை நினைவு கூறுவதில் பெருமையடைகின்றோம்.ஏனேனில் இத்தியாகிகள் உயரிய இலட்சியங்களுடன் தொலைதூரக் கனவுகளுடன் போராடப்புறப்பட்டவர்கள்.அவர்கள் எம் ஒவ்வொருவருடனும் இனைந்து பணியாற்றிய காலங்களைத்தான் நாம் இலகுவில் மறந்துவிட முடியுமா? தமிழ் சமுகத்தில் பல ஆற்றல்மிக்க தலைவர்கள் கல்விமான்கள் சமுகசெயற்பாட்டாளர்கள் புத்தியீவிகள் என பல்வேறு தரப்பிபினர் படுகொலை செய்ப்பட்டுள்ளார்கள்.அவர்கள் அனைவரையும் இத்தியாகிகள் தினத்தில் நினைவுகூறுவோம். இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக இடைவெளியினூடாக இவ்வருடம் வடகிழக்கில் தியாகிகள் தினம் சிறப்பான முறையில் அனுஸ்டிக்கப்ட்டது. அதேபோல் வெளிநாடுகளிலும் பிரித்தானியா கனடா ஜேர்மனி பிரான்ஸ் போன்ற இடங்களில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இது தோழர்களாகிய எமக்கு உற்சாகத்தை தருகின்றது. இதனூடாக எமது கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்று கூறினார்.

இறுதிநிகழ்வாக பாசிச புலிகளால் கொலை செய்யப்பட்டஈழமக்கள் புரட்சீகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் தியாகிகள் ஆன 13 தோழர்களின் இறுதி நிகழ்வு வீடியோ பதிவின் மூலம் திரையில் காண்பிக்கப்பட்டது பின்பு கட்சியின் கொள்கைத் திட்டம் மற்றும் தொடர்ந்து செல்லும் பணிகள் ஆகியன தெளிவாக விபரிக்கப்பட்டது கட்சித் தோழர்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றன நாட்டிய நிகழ்வுகளும் புரட்சி பாடல்களும் கவிதை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன...தோழர் நாபா மறையவில்லை என்ற கட்சிகிதத்துடன் இவ் நிகழ்வு இனிதே நிறைவேறியது இவ்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும் கசகட்சித்தோழர்களும் ஈழக்கள் புரட்சீகர விடுதலை முன்னணியினர் தங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive