Tuesday, December 13, 2011

பிரச்சினையில் லாபம் தேட சிலர் முயற்சி - ஜனாதிபதி!

Tuesday, December 13, 2011
நாட்டில் பிரச்சினை உச்ச நிலையை அடையும் போது, அதில் லாபம் தேடும் சில குழுக்கள் இருப்பதாக, ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தவும், அதன் மூலம் சுய இலாபம் தேடிக்கொள்ளவும், சில குழுக்கள் செயற்பட்டுக் கொண்டே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கை வந்துள்ள ஹொங்கொங் பௌத்த பிரதிநிதிகள் சிலர் இன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.

ஜீ.எல். பீரிஸ், பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கட்டார் பிரதமர் சந்திப்பு!

Tuesday, December 13, 2011
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கட்டார் நாட்டின் பிரதமர் ஷேக் ஹமாட் பின் ஜாஸிம் பின் ஜபர் அல்தானி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் சர்வதேச நாணய ஒத்துழைப்பு தொடர்பான சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோரை இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

மேலும் வர்த்தக பிரமுகர்களையும் கட்டார் பிரதமர் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்ப்புக்களின் போது இருதரப்பு பொருளாதாரதொடர்புகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

Followers

Blog Archive