Monday, June 27, 2011

மொழி உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - உத்தியோகபூர்வ மொழி ஆணைக்குழு!

Monday, June 27, 2011
மொழி உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தியோகபூர்வ மொழி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசாங்க நிறுவனங்கள் திணைக்களங்கள் மற்றும் பொது இடங்களில் தேசிய மொழிக் கொள்கை அமுல்படுத்தப்படாவிட்டால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தின் நான்காம் சரத்தின் அடிப்படையில் எந்தவொரு தனிப்பட்ட நபரோ அல்லது நிறுவனமோ மொழி உரிமை மீறப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்கள் திணைக்களங்களில் ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள தரவுகளை எவ்வித சிக்கலும் இன்றி வாசிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென உத்தியோகபூர்வ மொழி ஆணைக்குழுவின் செயலாளர் சீ.ஜே. ரெனிபுர தெரிவித்துள்ளார்.

மொழி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மொழி உரிமையை உறுதிப்படுத்தாத அரசாங்க நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு மொழி உரிமையை உறுதிப்படுத்த தவறுவோருக்கு எதிராக ஆயிரம் ரூபா அபராதமும், மூன்று மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

நாட்டுக்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டும்-பெசில் ராஜபக்ஷ!

Monday, June 27, 2011
நாட்டுக்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில உள்நாட்டு வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்ச்சியாக நாட்டுக்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தாருக்கு எதிராக குற்றப் பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்வதற்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் முனைப்பு காட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலிருந்து புலிப் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற விடுதலைப் புலி உறுப்பினர்களும், வெளிநாட்டுச் சக்திகளும் இணைந்து சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கக் கூடிய வகையிலான பல்வேறு திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள், யுத்தக் குற்றங்கள், தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை என பல்வேறு விடயங்கள் குறித்து குரல் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை என்றால் என்ன என கிராம மக்கள் கேட்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலணித்துவ ஆட்சியாளர்கள் நாடுகளில் தலையீடு செய்தனைப் போன்று மீண்டும் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்யத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் இந்தச் சக்திகளின் தலையீட்டினால் பாரிய ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நாட்டிலும் நாட்டுக்கு வெளியேயும் என்ன நடக்கின்றது என்பது குறித்து மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டொலர்களுக்காகவும், யூரோக்ககளுக்காகவும் சிலர் இலங்கையில் குரல் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பின் காலிமுகத்திடலில் சீனா ஆடம்பர துறைமுக நகர் ஒன்றை அமைக்கவுள்ளது!

Monday, June 27, 2011
கொழும்பின் காலிமுகத்திடலில் சீனா ஆடம்பர துறைமுக நகர் ஒன்றை அமைக்கவுள்ளது. இதற்காக 500 ஏக்கர் கடல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதன் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு 700 மில்லியன் டொலர்கள் வருமானமாக கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த மூதலீட்டை மேற்கொள்ளும் நிறுவனத்தின் பெயர் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே சீனாவின் சி.ஏ.டி.ஐ.சி என்ற விமான உற்பத்தியாளர் நிறுவனம், காலி முகத்திடலில் 10 ஏக்கர் காணிப் பரப்பில் ஆரம்பர ஹோட்டல் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுத்து வருகிறது.

அத்துடன் பல சீன நிறுவனங்கள், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஏனைய இடங்களில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளன.

இதேவேளை காலிமுகத்திடலில் ஆடம்பர ஹோட்டலுக்கான காணி, 99 வருட குத்தகை அடிப்படையிலேயே சீன நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. _

Sunday, June 19, 2011

இலங்கைத் தமிழர்களுக்கு இன்று அரசியற் தலைமை இல்லை (பகுதி 3) (அ. வரதராஜப்பெருமாள்)

Sunday, June 19, 2011
திரு. ஆனந்த சங்கரி அவர்கள் ஐம்பது வருடங்களுக்கு மேல் அரசியலி;ல் இருக்கிறார். பல தடவை சுதந்திரமாக தேர்தல்களிலும் வென்று பரந்துபட்ட கிளிநொச்சி மக்கள் பல்லாயிரம் பேரின் அன்பைப் பெற்றவர். அவர் இன்னமும் தமிழர்களுக்காக அரசியலில் இருக்கிறார். அவர் தனது மனச்சாட்சிக்கு உண்மை என்று பட்டவற்றை எந்த சங்கடங்களையும் நட்டங்களையம் பார்க்காமல் துணிந்து சொல்லுபவர். ஆனாலும் கடந்த இரண்டாண்டுகளில் அவரால் யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தலிற் கூட ஓர் உறுப்பினராக வெல்ல முடியவில்லை. மக்களால் அவர் தலைவராக அங்கீகரிக்கப்படாதவரை அவர் மக்களின் அங்கீகாரம் பெற்ற தலைவராக நெஞ்சை நிமிர்த்தி மற்றவர்களின் முன்னால் செயற்பட முடியாது. இலங்கையின் ஜனாதிபதி திரு..ஆனந்த சங்கரி அவர்களை நீண்டகால அனுபவங்கள் நிறைந்த ஒரு முதிய அரசியல்வாதி என்ற அடிப்படையில் அழைத்துப் பேசலாம், இலங்கையின் முதிய அமைச்சர்களும் மற்றும் பெரும் அரசியற் தலைவர்களும் அவரைக் கௌரவித்து அவரது அபிப்பிராயங்களைக் காது கொடுத்துக் கேட்கலாம். ஆனாலும் அவரை மக்களின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேபோல இந்திய அரசோ அல்லது இலங்கை அரசோ தமிழர்களின் பிரச்சினைக்கான தீhவு தொடர்பாக ஏதோ ஒரு வகையாக மரியாதைக்காக பேசினாலும் தமிழரசுக் கட்சிக் காரர்களுடன் பேசும் அளவுக்கு இவருடன் முன்னுரிமை கொடுத்துப் பேசத் தயாராக இல்லை என்பதையும் நாம் நடைமுறையில் காண்கிறோhம்.

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் சித்தார்த்தன் அவர்களைப் பாருங்கள் அவருக்கும் தமிழர்களின் போராட்டத்துக்கும் 40 ஆண்டுகளுக்கு மேற்பட்ட உறவு உள்ளது. தமிழரசுக்கட்சி, தமிழ் இளைஞர் பேரவை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என 40ஆண்டு காலங்களுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார் 10 ஆண்டுகளுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அவரின் தலைமைக்கு உட்பட்டவர்கள் வவுனியா நகரசபையை மிகச் சிறந்த முறையில் நிர்வகித்துக் காட்டியதை வன்னி மக்கள் நன்கு அறிவர்;. வன்னியில் மூன்று இலட்சம் தமிழர்கள் அகதிகளாக வவுனியாவில் முகாம்களில் முட்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டிருந்த போது மிக அதிகப்படியாக உதவி செய்து அந்தரித்து நின்ற அந்த மக்களுக்கு துணையாக நின்ற அரசியற் கட்சியின் தலைவர் அவர். ஆனால் அவர் கூட அதே வன்னியில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை. அதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இவர் எழுப்பும் குரல்களுக்கு அரசியல் அரங்கங்களில் ஓர் அங்கீகாரமும் இல்லாமற் போய்விட்டது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் சிறிதரன் அவர்களைப் பாருங்கள. தனது பதினேழாவது வயதில் தமிழர்களது போராட்டக் களத்தில் தன்னை இறங்கியவர். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் முன்னேற்றகரமான வாழ்வுக்காகவும் ஒரு போராட்ட வாழ்க்கையை விடாது நடாத்தி தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்பதை அவரை அறிந்தார் அனைவரும் அறிவர். 1984ம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு இவரின் கால் அடித்து முறிக்கப்பட்டு அழுகும் நிலை வரை துன்பத்துக்கு உள்ளானவர். ஆனாலும் எந்த வேளையிலும் உறுதி தளராதவர். சாவு அவரது கண்ணுக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட போhதிலும் தான் கொண்ட அரசியல் நிலைப்பாடுகளில் நின்று சற்றும் தடம் புரளாத அரசியல் உருக்காக இருந்தவர். மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த போதிலும் அவரோடு சிறைவாசம் அனுபவித்த அனைவரினதும் அன்புக்கும் பெரும் மதிப்புக்கும் உரியவர் அவர். மிகச் சிறந்த சிந்தனையாளன், பேச்சாளன், வெகுவீச்சான அரசியல் எழுத்தாளன். ஓர் உண்மையான சர்வதேசிய சமதர்மவாதி. தனக்கு அரசியல் பதவிகள் வராது என்று தெரிந்திருந்தும்; தமிழர்களின் நல்வாழ்வையும் முன்னேற்றத்தையுமே அல்லும் பகலும் கருத்தாய்க் கொண்டிருக்கிறார். ஆனாலும் மக்களின் வாக்குகள் மூலமான அங்கீகாரத்தைப் பெறாதவரை இவராலும் எதனையும் மக்களுக்காகச் சாதிக்க முடியவில்லை என்பதையே அனுபவம் காட்டுகிறது.

புத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான தோழர் இரா.துரைரத்தினம் எனது இந்த ஆய்வுக்கு சிறந்த உதாரணமாக உள்ளார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழர்களின் அரசியல் சமூக வாழ்வோடு தன்னை இணைத்து செயற்பட்டு வருகிறார். ஒருங்கிணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாண சபையிலும் உறுப்பினராக இருந்து இன்றைக்கிருக்கும் கிழக்குமாகாண சபையிலும் உறுப்பினராக இருக்கும் ஒரே தமிழ் உறுப்பினர் இவரேயாவர். ஏத்தனையோ கஷ்டங்கள் உயிராபத்துக்களின் மத்தியிலும் மக்களுக்கான தனது சேவையிலிருந்து இவர் எந்தக் கட்டத்திலும் தூரப்போனதில்லை. மட்டக்களப்ப மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இவரையறியாத ஓர் அரசியற் பிரமுகரோ அல்லது சமூகப் பிரமுகரோ அல்லது ஓர் தமிழ் அரசாங்க ஊழியரோ இருக்கமாட்டார் என நாம் உறுதியாகக் கூற முடியும்.

தோழர் துரைரத்தினம் மக்கள் சேவையில் ஈடுபடாத நாள் என்ற ஒன்று கடந்த முப்பது வருடங்களில் ஒரு நாள் கூட இருக்கமாட்டாது எனலாம். இப்படிப்பட்ட ஒரு தோழர் மட்டக்களப்பில் 1994ம் ஆண்டிலிருந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். ஆனால் அதற்கான தேர்தல் எதிலும் அவர் வெல்லுகிற அளவுக்கு போதிய வாக்குகளை மக்கள் அவருக்கு அளிக்கவில்லை. மக்கள் அவரை பாராளுமன்ற மட்டத்துக்கு தலைவராக்கும் அளவுக்கு வாக்களிக்கிறார்களோ இல்லையோ அவர் மக்கள் சேவையில் விடாது தொடர்ந்து ஈடுபடுவார் என்பத வேறுவிடயம். இவர் இப்போது ஒரு மாகாணசபை உறுப்பினராக இருப்பதனால் இவரால் மக்களுக்கான பல சேவைகளை உரிமையோடு செய்ய முடிகின்றது. மேலும் அதனால் மக்களின் அரசியல் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் மாகாண சபை மற்றும் உரிய இடங்களில் குரலெழுப்பவும் அவரால் முடிகின்றது.

இன்றைக்கும் இவரது சேவைக்காக மக்கள் இவரைத் தேடிச் செல்லுமளவுக்கு இன்றிருக்கும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிற் கூட எவரும் இருக்கமாட்டார். இவர் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்; போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினரானார். முன்னர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சமூகச் செல்வாக்கு மிக்க பிரமுகர்; வகையினரில் எவரது ஆதரவும் இவருக்கு இருக்கவில்லை. இருந்தும் இவர் மாகாண சபை உறுப்பினராக வெல்ல முடிந்ததற்குக் காரணங்களில் முக்கியமானவை: 2008ம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் ஓர் அசாதாரணமான சூழலிலேயே நடந்தது, இவரது கடுமையான மக்கள் சேவையின் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்களோடு இவருக்கு இருந்த உறவு, தமிழ் இனவாதம் இந்தத் தேர்தலில் பங்குபற்றாமை. மேலும் விகிதாசாரத் தேர்தல் முறையின் காரணமாக இவர் பெற்ற சில ஆயிரம் வாக்குகளோடு மாகாண சபை உறுப்பினராக முடிந்தது. அப்படி வெல்லக்கூடிய ஒரு வாய்ப்பு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இல்லையென்று இவர் கணித்தபடியாலும், தான் தனித்து வேட்பாளராக நின்று பெறும் சில ஆயிரம் வாக்குகள் கூட பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத் தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடிய உறுப்பினர்கள் ஒருவருக்கான வாய்ப்பை பறித்துவிடக் கூடும் என்ற இவரது சமூக அக்கறையும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவரைத் தேர்தலில் முடிவை எடுக்க வைத்தது.

முப்பது வருடங்கள் மக்கள் சேவையொன்றே தமது வாழ்வு என்று தியாகம் செய்து செயற்பட்டுவரும் தோழர் துரைரத்தினம் போன்றவர்களால் வெல்ல முடியாத தேர்தல்களில் கடந்த தேர்தற் காலம் வரை தமிழ்ச் சமூகத்தில் ஒரு முப்பது நாட்கள் கூட சமூக சேவை என்று ஒரு துரும்பைக் கூட தூக்கிப்போடாதவர்கள் - அரசியற் போராட்ட வாழ்வின் மணத்தைக் கூட அறியாமல் வீடு படிப்பு தொழில் வருமானம் என்று இருந்தவாகள் பலர் மிகவும் சுலபமாகவே பாராளுமன்ற உறுப்பினர்களாகியிருக்கிறார்கள் என்பது தமிழர் சமூகத்தில் தேர்தல் வெற்றியின் சூத்திரத்தை ஆய்வுக்குள்ளாக்குகிறது.

இன்று மக்களால் தலைவர்களாக அங்கீகரிக்கப்பட்டு இருப்பவர்களின் முந்தைய கால அரசியற் பின்னணி என்ன? இவர்கள் கடந்த காலங்களில் மக்களுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்திருக்கிறார்களா? தம்மால் தெரிவு செய்யப்படுபவர்கள் பணத்துக்கோ பதவிக்கோ ஆசைப்படாமல் மக்களுக்காகச் செயற்படுவார்களா? என்ற கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் மக்கள் பரிசோதனைகள் செய்தே தமது தலைவர்களைத் தெரிவு செய்தார்கள் என்றோ அல்லது தெரிவு செய்கிறார்கள் என்றோ கூற முடியாது என்று விவாதிப்பது சரியாக இருக்கலாம். அதற்காக மக்களால் தெரிவு செய்யப் பட்டவர்களைத் தலைவர்களல்ல என்று சொல்வது சரியான வாதமல்ல.

புலிகளின் காலத்தில்தான் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களித்து தமது தலைவர்களைத் தெரிவு செய்ய முடியவில்லை. ஆனால் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்றவை சுதந்திரமற்ற தேர்தல்கள் எனக் கூற மடியாது. மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை எனக் கூறுவதுவும், மக்கள் பயத்தின் காரணமாக வாக்களிக்க வரவில்லை என்பதுவும், வாக்களிக்கும் மனோநிலையில் மக்கள் இருக்கவில்லை என்பதுவும் மக்கள் பணத்துக்கும் உதவிகளுக்கும் சாராயத்துக்கும் மயங்கிவிட்டார்கள் எனவும்; காரணங்கள் கண்டுபிடிப்பதுவும் - கற்பிப்பதுவும் இந்தக் கால ஜனநாயதகத்துக்குப் பொருத்தமானதல்ல.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கே பெரும்பான்மையாக வாக்களித்தார்கள். தமிழரசுக் கட்சியின் தேர்தற் சின்னமான வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து அந்தக் கட்சியின் வேட்காளர்களை தெரிவு செய்யும்படி மக்களைக் கேட்டுக் கொண்ட தமிழ் சமூகப் பிரமுகர்கள் இப்போது தமிழர்களுக்கு அரசியற் தலைமை இல்லை என்று குறைப்பட்டுக் கொள்வது ஏற்புடையதல்ல.

அமைச்சர் கருணா முரளிதரன் 2003ம் ஆண்டு வரை தமிழர்களின் களம்பல கண்ட ஒரு பிரதானமான தலைவராக இருந்தவர்தான் ஆனாலும் அவர் இப்போது சிறி லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதனாலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் சந்திரகாந்தன் அவர்கள் அரசாங்கத்துக்கு அனுசரணையாக இருப்பவர் மேலும் அரசாங்கத்தின் தயவிலேயே முதலமைச்சர் ஆனார் என்பதனாலும் பெரும்பான்மையான தமிழ் சமூகப் பிரமுகர்கள் இவர்களைத் தமிழர்களின் தலைவர்களாக ஏற்பதில்லை. ஆனால், முதரமைச்சர் கௌரவ பிள்ளையான் சந்திரகாந்தன் அவர்களும் கௌரவ அமைச்சர் கருணா முரளிதரன் அவர்களும் இனிவரக் கூடிய ஒரு சுதந்;திரமான தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள் எனின் அதன்பின்ரும் அவர்களை மக்களின் தலைவர்களல்ல என நிராகரிப்பது சரியாக மாட்டாது. எனவே இங்கு மக்களின் வாக்குகளே தலைவர்களுக்கான அங்கீகாரங்களை நிர்ணயிக்கினறன. அதுவே தேர்தல் ஜனநாயகக் கலாச்சாரம்..

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 35 அண்டுகளாக தமிழர்களின் அரசியலில் இருக்கிறார். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் ஒரு தளபதியாகவும் இருந்தவர். மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தவர். 1983ம் ஆண்டு வெலிக்கடைப் படுகொலையிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியவர். 1994ம் ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகவும் பத்து ஆண்டுகளுக்கு மேல் அமைச்சராகவும் இருக்கும் அனுபவத்தைக் கொண்டவர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பல்லாயிரம் யாழ்ப்பாணத் தமிழர்களின் விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர். இவரைப் போலவே இவரது கட்சியைச் சேர்ந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு முருகேசு சந்திரகுமார் அவர்களும் 10 ஆண்டுகளுக்கு மேலாக போராளியாக இருந்தவர் அத்துடன் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாராளுமன்ற அனுபவமும் கொண்டவர்;. இந்த இருவரையும் தமிழர்களின் அரசியற் தலைமையின் ஒரு பகுதியாக அங்கீகரித்து அவர்களோடும் ஒரு நாகரீகமான நெருக்கமான அரசியல் உறவை பேணுவதே தமிழ்ப் பிரமுகர்கள் சமூகம் கடைப்பிடித்து வரும் அரசியற் கலாச்சசாரத்துக்கு ஆரோக்கியமானதமாகும்.

கொளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எப்போதும் அரசாங்கத்தின் ஒரு பாகமாகவே இருப்பவர் என்பதனாலும், இனியும் எப்படித்தான் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அதில் ஒரு அமைச்சராக இருப்பதற்கு முயற்சிப்பார் என்பதனாலும் தமிழ் பிரமுகர்கள் சமூகத்திற் பெரும்பான்மையினர் அவரை தமிழ் மக்களின் தலைவர்களில் ஒரு பகுதியாகக் கருத மறுப்பது சரியானதல்ல.

ஒரு சமூகத்தின் அரசியற் தலைவர் என்பது ஒருவர் வெகு வீச்சான எதிர்க்கட்சியர்கச் செயற்படுகிறார் என்பதனாலோ அல்லது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறாரா என்பதை வைத்தோ அவரின் சமூகரீதியான தலைமைத்துவ தகுதியை நிர்ணயிக்க முடியாது. ஒருவர் நேர்மையானவரா? அவர் மக்களுக்கு உண்மையில் தம்மைத் தியாகம் செய்து சேவை செய்பவரா? அவர் தனக்குக் கிடைத்துள்ள பதவியையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதிலும் சுயசுகங்கள் காண்பதிலும் குறியாக இருப்பவரா? போன்ற கேள்விகளை இங்கு யாரும் எழுப்புவதில்லை.

எனவே, தலைவராக ஆனவர் அவரது சமூக மக்களால் தேர்தலில் ரகசியமான வாக்குகள் மூலமாக அங்கீகரிக்கப்பட்டவராக இல்லையா என்பதை வைத்தே இங்கு ஒருவரை அரசியற் தலைவரா இல்லையா என்பதை நிர்;ணயிக்க வேண்டீயுள்ளது. இந்த சமூகப்; பிரமுகர்களிற் பலர் தமது தனிப்பட்ட நலன்களை அரசிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக அமைச்சர்களில் யாரையாவது நாடித்தானே பெற்றுக் கொள்கிறார்கள்;. அல்லது தமக்கு அணைவான அல்லது தம்மால் ஆதரிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் கைகளைப் பிடித்துத்தானே அமைச்சர்களின் கதவுகளைத் தட்டுகிறார்கள். இந்த வேளைகளில் எத்தனை பேர் அந்த அமைச்சரோ அல்லது அந்த பாராளுமன்ற உறுப்பினரோ நல்லவரா கெட்டவரா என்று சிந்திக்கிறார்கள்.

தமக்கு விருப்பமானவர்கள் அல்லது தமக்கு அனுசரணையாக இருப்பவர்கள் மட்டுமே நல்லவர் நோமையானவர் கொள்கை உறுதி கொண்டவர்கள் என்பதும் மற்றவர்களைத் தரோகிகள் என்பதும் தமிழ் சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. ஒரு தலைவர் பிழையானவர் என்றால் இவர் என்ன காரணங்களால் பிழையானவர் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

புலிகளுக்கு எதிராக இருந்தமை, புலிகளின் அழிவுக்கு துணையாகச் செயற்பட்டமை, அந்தந்தக் கட்டங்களில் ஆட்சியில் இருக்கும் சிறி லங்கா அரசாங்கத்துக்கு அனுசரணையாக இருக்கின்றமை என்பதெல்லாம் தமிழ் தலைமையாக இருப்பதற்கு விரோதமான குணாம்சங்களாகக் கொள்வதே செல்வாக்கு மிக்க தமிழ் அரசியற் கலாச்சாரமாக உள்ளமையை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இந்தக் கலாச்சாரத்தின்படி அரசாங்கத்துடன் கள்ள உறவுகளை பின்கதவுகளால் வைத்துக் கொள்ளலாம், இராணுவம் பொலிஸ் தவிர வேறெந்த அரச பதவியையும் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கலாச்சாரம் சமூக மற்றும் பொதுமக்கள் விரோதங்களை வெறுப்பதில்லை, இங்கு வேண்டப்படுவதெல்லாம் தமிழ் இனப்பெருமை, தமிழ்த் தேசியப் பற்று, தமிழ்த் தாயகப் பாசம், தமிழர் சுய நிர்ணய உரிமைக் கோசம் போன்றவற்றின் ஆதரவாளன் போல பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதையே.. அத்துடன் அவ்வப்போது சிங்கள இராணுவத்தை எதிர்த்தும், சிங்கள அரசை வெருட்டுவதாகவும் சிங்கள இனத்தை வெறுப்பதாகவும் அறிக்கைகளை விட வேண்டும் என்ற வகையான குணங்களைக் கொண்டிருக்கின்றது.

புத்திரிகை அறிக்கைகளிலும் மேடைப்பேச்சுக்களிலும் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களைத் திட்டுவது, இராணுவத் தளபதிகளுக்கு எதிரான வெறுப்பேற்கும் கருத்துக்களை வெளியிடுவது. ஆனால் அவர்களை நேரிற் காணுகின்ற போதும் அவர்களுடன் ஒரே மேடையில் தோன்றுகின்ற போதும் அவர்களுக்கு கூழைக் கும்பிடு போட்டு குனிந்து வளைந்து புகழ்பாடுவதுவும்தான் தமிழ் அரசியற் கலாச்சாரமெனில் அந்தக் கலாச்சாரம் கண்டு நாம் வெட்கப்பட வேண்டும். அது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு கெட்ட கலாச்சாரம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு தமிழ் சமூகப் பிரமுகர்களால் காபந்து பண்ணப்படும் தமிழ்த் தேசியக் கலாச்சாரத்தில் மொழிப்பற்று, தமிழ்த் தேசம், தமிழர் சுயநிர்ணய உரிமை என்பதெல்லாம் ஓர் அரசியற் போர்வையின் வௌ;வேறு பக்கங்களே. இங்கிருக்கும் தமிழ்ப் பிரமுகர்கள் சமூகக் கூட்டத்தவர்கள் இந்தப் போர்வையைப் போர்த்துக் கொண்டவர்களின் எந்த வகையான சமூக விரோத மக்கள் விரோத செயல்களையும் கண்டு கொள்வதில்லை - எப்படியும் பணம் சொத்துக்களை உழைத்துக் கொள்ளலாம் அதனைக் கேலி பண்ண மாட்டார்கள், என்ன அயோக்;கியத்தனத்தையும் யாருக்கும் பண்ணலாம்; அது கண்டு ஆத்திரப்படமாட்டார்கள், யாரையும் எப்படியும் கொலை செய்யலாம் அது கண்டு கொதித்தெழமாட்டார்கள், யாரிடமிருந்தும் எப்படியும் கொள்ளையடிக்கலாம் அதனை எதிர்க்கமாட்டார்கள், பகிரங்கத்திற் கூட என்ன தூஷணமும் பேசலாம் அதனை விமர்சிக்க மாட்டார்கள். இதெல்லாம் தமிழர் சமூகத்தில் புலிகள் வளர்த்த கலாச்சாரம். இது இன்னமும் இங்கே செல்வாக்காக வாழ்கிறது. இந்தப் போலித் தனங்கள் தமிழர்களின் அரசியற் கலாச்சாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டியவையாகும். அப்பொழுதுதான் தமிழர்களின் அரசியற் சிந்தனைகளில் தெளிவும் அரசியற் தெரிவுகளில் சரியான முடிவுகளும் ஏற்படும்.

மண்ணெண்ணெய் மகேஸ்வரன் அவர்கள்; தமிழ்ச் தேசியம், தமிழர் தாயகம் தமிழர் சுயநிர்ணய உரிமை என்று சிறிது காலம் பேசினார்;. புலித் தலைமையின் அரவணைப்புக்கு உள்ளானார். யாழ்ப்பாணத்தின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டார். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளராக நின்ற போதும் அவர் கொழும்புத் தமிழர்களால் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். அவர் பாராளுமன்றத்தில் தன்னையொரு தமிழ்த் தேசிய வீரனாக அடிக்கடி அரங்கேற்றங்கள் செய்ததானால் அவரும் ஒரு தமிழ்த் தேசிய அஞ்சா நெஞ்சனாக யாழ்ப்பாண பிரமுகர் சமூகத்தில் இடம் பிடித்துக் கொண்டார்.

அவர் எப்படிக் குறுகியகாலத்தில் அதுவும் புலிகளின் வரிகள், அரசின் பொருளாதாரத் தடைகள், போக்குவரத்து நெருக்கடி என்றெல்லாம் இருக்கையில் பெரும் கோடீஸ்வரனானார் என்பது பற்றி யாழ்ப்பாணத்து பிரமுகர்கள் சமூகத்தின் மத்தியில் குறிப்பிடக் கூடிய வகையில் வெறுப்பு, விமர்சனம் என்று பெரிதாக எதுவுமில்லை. புலிகளின் காலத்தில் யாழ்ப்பாணத்தின் பெரிய பெரிய பழைய வர்த்தகர்கள் பலர் ஓட்டாண்டிகளாகப் போனபோது எப்படி திரு மகேஸ்;வரன் அவர்கள் மட்டும். பணம் சொத்துக்கள் எனக் குவிக்க முடிந்தது என்ற கேள்வி ஏதும் இல்லை..

திரு மண்ணெண்ணெய் மகேஸ்வரனையும் விட வியாபார நுட்பங்கள் கொண்ட திறமைசாலி என யாழ்ப்பாண வர்த்தகர்களால் புகழப்படும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திருமதி மகேஸ்வரன் அவர்கள்; யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப்; போட்டியிட்டே வென்றார். அவர் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரலெழுப்புபவர் எனறில்லை. எனினும் யாழ்ப்பாண பிரமுகர்கள் சமூகத்தினால் அவர் தமிழர்களின் ஒரு தலைவரல்ல என்று நிராகரிக்கப்படுவதில்லை. தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்ல. தமிழ்த் தேசியத்தை மிக உயர்த்திப்பிடிக்கும் கொழும்புத் தமிழர்கள் மத்தியிலும் ஏன்! இந்தியத் தூதரக மட்டத்திலும் அவருக்கென்று ஒரு தனி மரியாதையே உண்டு.(பாகம் 4 தொடரும்....)

19 – ஜூன் 2011 — 21 வது தியாகிகள் தினம் இன்று!:(பத்மநாபா ஈபிஆர்எல்எப்)

Sunday, June 19, 2011

Thursday, June 16, 2011

இன உறவை சீரழிக்கும் சதியே சனல் - 4 காட்சி:அரசாங்கம் முற்றாக நிராகரிப்பு:புலிகளின் பணப்பலத்தால் சோடிக்கப்பட்டதே விவரணக் காட்சிகள்!!

Thursday, June 16, 2011
இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சனல் - 4 இன் விவரண படம் முற்றிலும் பொய்யானதென இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் பணிப்பு க்கமைய, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் இது தொடர்பாக அறிக்கையொன்றை நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டவிரோத ஆயுதக் குழுவொன்றினால் பலாத்காரமாக பணயக் கைதிகளாக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட இலங்கை இராணுவம் இதுவரைக்கும் உலகெங்கிலுமே நடைபெற்றிராத பாரிய மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. உயிர்களைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வது நிச்சயமற்றதென்ற நிலையில் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பாவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை மீட்கும் பணியில் இலங்கை இராணுவம் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதனால் இலங்கையின் கீர்த்தியும், புகழும் உலகம் முழுதும் வியாபித்தது.

இதைத் தாங்கிக்கொள்ள இயலாத புலிச் சார்பு ஊடகங்களே சனல் 4 விவரணப் படத்தில் இலங்கைக்கு எதிராக பாரிய புரளியை கிளப்பி விட்டுள்ளது. யுத்தத்துக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள இன உறவையும் புரிந்துணர்வையும் சீர்குலைத்து மீண்டும் இங்கு பிரிவினைவாதம் பயங்கரவாதத்தை தூண்டி அதனூடாக ஆதாயம் காண முயல்வோரின் கெட்ட வேலைகளே இவை. நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்க ஆணைக்குழு இதுவரைக்கும் இரு நூறுக்கும் மேலான மக்கள் சந்திப்புக்களை நடத்தியுள்ளது. எனினும் இலங்கை இராணுவத்துக் கெதிரான எந்த முறைப்பாடுகளும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு முன்வைக்கப்பட்டு அவை நிரூபணமானால் உரிய நடவடிக்கை எடுக்கவும் நல்லிணக்க ஆணைக்குழு தயாராகவுள்ளது- பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள வடக்கு, கிழக்கு மக்களின் புனர்வாழ்வு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. சட்ட இறைமையுள்ள அரசொன்று செய்ய வேண்டிய பணிகளே இலங்கையின் கடைசி யுத்தத்தில் செய்யப்பட்டன.

சனல் - 4 விவரணப் படம் ஒளிபரப்பிய காட்சிகள் அனைத்தும் புலிகளின் தரப்பால் வழங்கப்பட்டவை. அதிநவீன தொழில்நுட்ப உதவிகள், புலிகளின் பண வசதிகளைக் கொண்டு நன்கு கச்சிதமாக சோடிக்கப்பட்டவை. சனல் 4 விவரணக் காட்சிகளின் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் பெரும்பாலான நாடுகள் இதை நம்பத் தயாராக இல்லை.

ஆனால் வெளிநாடுகளிலுள்ள சில புலிச் சார்பு குழுக்களே தங்களது சொந்த நலனுக்காக இதைத் தூக்கிப் பிடிக்கின்றன. இவ்விடயத்தில் இலங்கை அரசு அதீத அக்கறை செலுத்தி வருகின்றது.

பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழுகின்ற இன்றைய சூழலில் இவ்வாறான போலி விவரணக் காட்சிகள் அம்மக்களின் சந்தோஷம், சுதந்திரம் என்பவற்றை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகின்ற முயற்சியாகவே இதை மக்கள் கருதுவதாக அரசாங்கம் கருதுகின்றது.

Wednesday, June 8, 2011

இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காது-ஜி.எல்.பீரிஸ்!

Wednesday, June 8, 2011
இலங்கைக்கு எதிராக அனைத்துலக விசாரணைகளை நடத்த வேண்டும் என்ற சில வெளிநாடுகளின் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை. அது எமக்கு மிகப்பெரிய மனோபலத்தைக் கொடுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த மே 16ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்திய-இலங்கை கூட்டறிக்கை தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை மீது இந்தியா அழுத்தங்களை கொடுப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் நிராகரித்தார். அத்துடன், தருஸ்மன் குழு அறிக்கை குறித்து இராஜதந்திர ரீதியாக இந்தியத் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்தும் நடவடிக்கையை மட்டுமே அரசாங்கம் எடுத்துள்ளது.

இந்த அறிக்கையைக் கண்டித்து இந்தியா அறிக்கை வெளியிட வேண்டும் என்ற தேவை எமக்கில்லை.

இந்த அறிக்கையை நாம் ஏற்கனவே நிராகரித்து விட்டோம். இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்குமாறு மேலும் மேலும் வெளிநாடுகளிடம் கேட்டுக்கொண்டிருந்தால் அதற்கு நாமே அதிக பெறுமானத்தைக் கொடுத்ததாகிவிடும். எனது இந்தியப் பயணத்தின் அடிப்படை நோக்கம் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக ஆதரவு தேடுவதல்ல. அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதற்கு அது ஒன்றும் ஐ.நாவின் அதிகாரபூர்வ அறிக்கையல்ல.

சில வெளிநாடுகள் இலங்கைக்கு எதிரான விசாரணை நடத்தக் கோருகின்றன. ஆனால் இந்தியா அதற்கு ஆதரவளிக்கவில்லை. இது எமக்கு திருப்தி தரக்கூடியதொன்று.

எனது இந்தியப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேசினேன். ஆனால் நிபுணர் குழு அறிக்கை பற்றி இந்தியா கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று அவரிடம் நான் கேட்கவில்லை. தேவையேற்படும் போதெல்லாம் இந்தியாவின் ஆதரவு இலங்கைக்குக் கிடைக்கும்.

நியூயோர்க்கிலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கைக்கு எதிராக இந்த விவகாரம் கிளம்பும் போது இந்தியாவின் ஆதரவை நாம் வேண்டிக்கொள்வோம்.

இலங்கையின் அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பாக இந்தியாவுடன் எந்த உடன்பாடும் செய்துகொள்ளப்படவில்லை. சக்தி, மின்சக்தி, மீன்பிடி மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்காலத்தில் தொடர்ந்து பேசிக்கொள்ளலாம் என்றே வாய்மூல இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவுக்கான பயணத்தின் போது அணிசேரா நாடுகள் அமைப்பிலுள்ள 22 நாடுகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்துப் பேசினேன். அவர்களுக்கு நிபுணர் குழு அறிக்கை மற்றும் அதுதொடர்பான எமது நிலைப்பாடு குறித்து விளக்கமளித்திருந்தேன்.

ஆனால் அவர்களிடம் கண்டன அறிக்கை வெளியிடுமாறு நான் கேட்டுக்கொள்ளவில்லை என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் மூலம் தமிழர்களுக்கு சமவுரிமையை வழங்க இந்தியா எதிர்ப்பார்க்கிறது-சோ ராமசாமி!.

Wednesday, June 8, 2011
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் இதனை மேற்கொள்ள முடியும் என்று இந்தியா எதிர்ப்பார்ப்பதாக தமிழக அரசியல் விமர்சகரும் துக்ளக் ஆசிரியருமான சோ ராமசாமி தெரிவித்துள்ளார்.ஏசியன் ரிபியூன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசாங்கம், தமிழர்களுக்கு சமவுரிமையை வழங்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் சோ ராமசாமி தெரிவித்துள்ளார்.

அதனை தாம் காத்திருந்து பார்க்கப்போவதாகவும் சோ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக வெளியான தகவலை மறுத்த அவர் சென்னையை விட்டு எங்கும் செல்வதற்கு தயாரில்லை என்று குறிப்பிட்டார்.

சோ ராமசாமியின் துக்ளக் வாராந்த இதழின் 170,000 பிரதிகள் விற்பனையாகின்றன

இந்த இதழ் தமிழகத்தின் படித்தவர்கள் மத்தியில் பிரபல்யமான இதழாக கருதப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய அரசியல் ஆலோசரான சோ ராமசாமி, கடந்த சட்டசபைத்தேர்தலில் நடிகர் விஜயகாந்தை ஜெயலலிதாவின் கூட்டணிக்குள் இணைப்பதில் வெற்றிக்கண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sunday, June 5, 2011

புலிகளுக்கு எதிரான சட்டங்களை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும்!

Sunday, June 5, 2011
புலிகளின் தீவிர போராளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றிய முடிபை மறுபரிசீலனை செய்யுமாறு பயங்கரவாத நிபுணரும் பேராசிரியருமான றொகான் குணரட்ண கொழும்புக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

புலிகளின் ஏனைய போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கி அவர்களை விடுவித்து வருவது போன்று இப்போராளிகளையும் விடுவிப்பது குறித்து கவனம் செலுத்துமாறு அவர் கூறியுள்ளார். படைத்தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பில் நடைபெற்ற மூன்று நாள் போர் அனுபவ கருத்தரங்கில் கடைசிநாளான நேற்று முன்தினம் நிறைவுரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் முன்வைத்துள்ளார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஓர் அரசாங்கம் நுண்ணிய திட்டமிடலுடன் கவனமாகச் செயற்பட்டால் தீவிரவாதத்தைத் தோற்கடிக்க முடியும் என்பது இலங்கையின் அனுபவத்தில் இருந்து தெளிவாகியுள்ளது. அரசாங்கம் போரில் வெற்றி பெற்றதற்கு இந்திய அரசாங்கத்துடன் கொண்டிருந்த நெருக்கமான உறவும் மிக முக்கியமானது. வன்னியில் இடம்பெற்ற போரின்போது இவ்விரு நாடுகளின் தரப்பிலும் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு, போர் நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டமை இப்போரின் வெற்றியில் முக்கிய பங்கை வகித்துள்ளது.

இதனை முன்னுதாரணமாகக் கொண்டு உலகத்துடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையிலான ஒரு தகவல் பரிமாற்ற நிலையத்தை படைத்தரப்பு உருவாக்க வேண்டும். இதன் ஊடாக இலங்கை தொடர்பாக சர்வதேச நாடுகள் தவறாக வழிநடத்தப்படுவதை தடுக்க முடியும் என்றும் அவர் தனது உரையில் மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Wednesday, June 1, 2011

சர்வதேச பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கையின் அனுபவம் வலுச்சேர்க்கும்-கோத்தாபய ராஜபக்'!

Wednesday, June 01, 2011
பயங்கரவாதம் ஒரு சர்வதேச ரீதியிலான அச்சுறுத்தலாகும். இலங்கை இதனால் துன்பப்பட்டதைப் போன்று வேறு எந்தவொரு நாடும் துன்பப்படவோ அழிந்திடவோ கூடாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று கூறினார்.

வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்துள்ள இராணுவ உயர் அதிகாரிகள் இலங்கை கற்றுக்கொண்ட பாடங்களை பயன்படுத்தி சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, உலக மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உலக நாடுகளில் ஏற்படுத்துவதற்கு உதவி புரிய வேண்டுமெனவும் அவர் கூறினார். பயங்கரவாத ஒழிப்பு மற்றும் இலங்கையின் அனுபவம் என்ற தொனிப்பொருளில் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்த மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு நேற்று கலதாரி ஹோட்டலில் ஆரம்பமானது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்தும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம, வெளிநாட்டில் இருந்து வருகை தந்த டொக்டர் அஹமட் எஸ். ஹாசிம், டொக்டர் ரொஹான் குணரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

மிகவும் பிரமாண்ட முறையில் நடைபெறுகின்ற இந்த கருத்தரங்கில் 42 நாடுகளின் பாதுகாப்பு, இராணுவ உயர் அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள், தூதரக பாதுகாப்பு இணைப்பாளர்கள் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, முப்படைத் தளபதிகள் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது :- இன்று உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் உள்ளூர் மற்றும் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்நோக்கிய வண்ணமிருக்கிறது.

பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு இலங்கை ஆயுதப்படையினர் கையாண்ட யுக்திகளையும், யுத்த தந்திரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் நாம் பெற்ற இந்த அனுபவத்தை உங்களுக்கு எடுத்துரைப்பதற்கும் தயாராக இருக்கிறோம். யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்திலும், எங்கள் அரசாங்கம் மனிதாபிமான உதவிகளை யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அப்பாவி மக்களுக்கு செய்யத் தவறவில்லை. நாம் இது விடயத்தில் அரசியல் ரீதியிலும் சர்வதேச நியதிகளுக்கு ஏற்புடைய வகையிலும் நடந்து கொண்டோம். நாம் யுத்தத்தில் பெற்ற அனுபவங்களும் கற்றுக் கொண்ட பாடங்களும் எங்கள் நெருங்கிய நண்பர்களான உங்களுக்கு பேருதவியாக இருக்குமென்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. இதன் மூலம் சர்தேச பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கும் உங்களுக்கு வலுவை பெற முடியும்.

இலங்கையில் பயங்கரவாதம் 1970 ஆம் ஆண்டு தசாப்தத்தில் ஆரம்பமாகியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகள் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு நீண்டு கொண்டிருந்தது. இன்றைய ஜனாதிபதிக்கு முன்னர் பதவியிலிருந்த நான்கு ஜனாதிபதியும், பலதரப்பட்ட கட்சிகளின் அரசாங்கங்களும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அவை எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. பல்லாண்டு காலமாக அரசாங்கங்கள் இராணுவ நடவடிக்கைகள், சமாதானப் பேச்சுவார்த்தைகள் மட்டுமன்றி சர்வதேச மத்தியஸ்தத்தின் மூலம் தீர்வு காண பல சந்தர்ப்பங்களில் நாம் முயற்சிகளை மேற்கொண்டோம். அத்தகைய முயற்சிகள் எவையும் வெற்றியளிக்கவில்லை. எல். ரி. ரி. ஈ இயக்கம் பிடிவாதத்துடன் தன்னுடைய வன்முறைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத கொள்கையை கடைப்பிடித்ததனால் சமாதான முயற்சிகள் படுதோல்வியடைந்தன.

கடந்த பல்லாண்டு காலத்தில் எல். ரி. ரி. ஈ ஒரு சிறிய அமைப்பாக இருந்து நவீன ஆயுதங்களைக் கொண்ட படு பயங்கரமான இயக்கமாக உருவெடுத்தது. எல். ரி. ரி. ஈ இயக்கம் வலுவுடன் இருந்த போது ஆயுத போராட்டத்தில் அனுபவமிக்க 30 ஆயிரம் போராளிகள் அதில் இருந்தார்கள். இவ்வியக்கம் நவீன ஆயுதங்களையும், யுத்த உபகரணங்களையும் பெருமளவில் களஞ்சியப்படுத்தி பதக்கி வைத்திருந்தது.

2005 ஆம் ஆண்டளவில் இலங்கையில் எல். ரி. ரி. ஈ பயங்கரவாதிகள் நாட்டின் 25 சதவீதப் பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். அத்துடன் கடற்கரையோரப் பகுதிகளில் மூன்றில் இரண்டு பகுதியையும் எல். ரி. ரி. ஈயினர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சர்வதேச ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட போதிலும், எல். ரி. ரி. ஈ தனது 8pனிt@!pநி} கீழ் உள்ள பகுதியில் ஆட்சி உரிமையை தனது கையிலேயே வைத்திருந்தனர். எல். ரி. ரி. ஈ உலகில் இருந்த படு பயங்கரவாத இயக்கம் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியமாகும். எல். ரி. ரி. ஈ புரிந்த கொடுமைகள் பற்றி நாம் பட்டியல்படுத்தி சொல்லக்கூடிய நிலையில் இருக்கிறோம். கடந்த பல்லாண்டு காலத்தில் எல். ரி. ரி. ஈ வடக்கில் இருந்து சிங்கள, முஸ்லிம் மக்களை விரட்டியடித்தது மட்டுமன்றி, இவ்வியக்கம் எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டாமல் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை மரணிக்கச் செய்தனர். அநுராதபுரத்தின் ஸ்ரீ மஹாபோதி, கண்டியின் தலதா மாளிகை போன்ற இரு பிரதான பெளத்த தலங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியது. எல். ரி. ரி. ஈயினர் பள்ளிவாசல்கள், தேவாலயங்களிலும் தாக்குதல்களை மேற்கொண்டு படுகொலை செய்தனர். நாட்டின் தேசிய கட்டமைப்பு வசதிகளுக்கு உறுதுணை புரிந்த சர்வதேச விமான நிலையம், மத்திய பஸ்தரிப்பு நிலையம், கொழும்பிலுள்ள பிரதான ரயில் நிலையம் ஆகியவற்றின் மீதும், பொருளாதாரத்தை கட்டிக்காக்கும் மத்திய வங்கி, உலக வர்த்தக நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சிவிலியன் துறைமுகங்கள் ஆகியவற்றின் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டது. எல். ரி. ரி. ஈ நூற்றுக்கணக்கான கார் குண்டுகள், லொறி குண்டுகள், கிளைமோர் கண்ணிவெடிகள் ஆகியவற்றை மக்கள் கூடுதலாக இருக்கும் இடங்களில் வெடிக்கச் செய்ததன் மூலம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்தது. எல். ரி. ரி. ஈ தற்கொலை குண்டு தாக்குதல்களை நடத்துவதில் தன்னிகரற்ற நிலையில் இருந்தது.

எல். ரி. ரி. ஈ கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் நடை பிணங்களைப் போன்று வேதனையில் மூழ்கியிருந்தார்கள். எல். ரி. ரி. ஈ தன்னுடைய மக்களுக்காக உதித்த விடுதலைப் போராளிகள் அல்ல என்பதும் இதன் மூலம் புலனாகியது. எல். ரி. ரி. ஈயினர் தனது கொடுமையான சர்வாதிகாரத்தின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள மக்களை அடிமைகளைப் போல் நடத்தினார்கள். எல். ரி. ரி. ஈ தனக்கு எதிரான எதிர்ப்புகளை கொடுமையான முறையில் அடக்கியது. எல். ரி. ரி. ஈ வேறு ஆயுத போராளிக் குழுக்களின் தலைவர்களை படுகொலை செய்தது. அதன் மூலம் பல தமிழ் போராளிக் குழுக்களை முற்றாக துவம்சம் செய்யவும் தவறவில்லை. எல். ரி. ரி. ஈ மிதவாத ஜனநாயக தலைவர்களையும், தமிழ் மக்கள் மீது அதிக செல்வாக்கை பெற்றுள்ள கல்விமான்களையும் படுகொலை செய்து மக்களை அச்சுறுத்தியது.

எல். ரி. ரி. ஈ யுத்த நிறுத்த உடன்படிக்கையை மூர்க்கத்தனமாக உடைத்தெறிந்து பிரதான இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளையும் பொதுமக்களையும் படுகொலை செய்தது. கெப்பட்டி கொல்லாவையில் மேற்கொள்ளப்பட்ட எல். ரி. ரி. ஈ கிளைமோர் கண்ணிவெடி தாக்குதலினாலும் ஏனைய தாக்குதலினாலும் நூற்றுக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர், பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டனர். எல். ரி. ரி. ஈயின் தோல்விக்கு ஆரம்பமாக மாவில்லாறு வான்கதவை மூடிய நிகழ்வாகும். இந்த வான்கதவு மூலம் கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நெற்காணிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. இதனால் எல். ரி. ரி. ஈ மேற்கொண்ட மனிதாபிமானமற்ற கொடுமையான செயலினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாழடைந்து அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.

அரசாங்கத்திற்கு இனிமேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாத கட்டம் எழுந்த காரணத்தினால் அரசாங்கம் இராணுவ பலத்தை பிரயோகித்து மாவில்லாறு வான்கதவுகளை திறந்துவிட்டது. இதுவே எல். ரி. ரி. ஈயின் அழிவின் ஆரம்பமாகும்.

ஜனாதிபதி அவர்கள் ஆயுதப்படைகளின் பிரதம தளபதி என்ற முறையில் எல். ரி. ரி. ஈக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை சிறந்த ஆளுமையின் மூலம் வழிநடத்தினார். இந்த இராணுவ நடவடிக்கைகளின் போது இராணுவத் தரப்பில் பலர் மரணமடைந்தும், காயமடைந்தும் பாதிப்பிற்குள்ளானார்கள். அத்துடன் சர்வதேச ரீதியிலும் அரசாங்கத்தின் மீது கண்டனக் குரல் எழுந்தது. எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இலங்கை ஜனாதிபதி நிலையாக இருந்து, தொடர்ந்தும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டார். எல். ரி. ரி. ஈயை முற்றாக முறியடித்து அடிபணிய வைக்கவேண்டுமென்ற நிலையிலேயே செயற்பட்டார்.

அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த காலகட்டத்தில் அரசாங்கம் பலவீனமடைந்திருந்தால் எமது முயற்சிகள் அனைத்துமே செயல் இழந்திருக்கும்.

1987 ஆம் ஆண்டில் எல். ரி. ரி. ஈயை வாபஸ்பெற வைத்து வடமராட்சி யுத்தத்தில் அதனை படுதோல்வியடைய செய்யும் கட்டத்தில் அரசாங்க படையினர் நெருங்கிக் கொண்டிருந்த போது இந்திய அரசாங்கம் தலையிட்ட காரணத்தினால் எல். ரி. ரி. ஈ அடையவிருந்த படுதோல்வி தவிர்க்கப்பட்டது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவை சரியான முறையில் நடைமுறைப்படுத்த தவறியமையால் 1987 ஆம் ஆண்டு பிரச்சினை உருவாகியது.

எனினும் அதற்கு மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக தெரிவாகியவுடன் இந்திய அரசாங்கத்திற்கு இலங்கையின் செயற்பாடுகள் குறித்து உரிய முறையில் எடுத்துரைத்தார். மற்ற நாடுகள் இலங்கை மீது ராஜதந்திர பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்தினாலும் இந்தியா தி!rதிரமே இராணுவ செல்வாக்கை பயன்படுத்த முடியுமென்று எங்கள் ஜனாதிபதி நன்கு அறிந்திருந்தார். இதனால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி ஒரு குழுவை உருவாக்கினார். அதில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பசில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்க மற்றும் நானும் இடம்பெற்றேன். இந்தியத் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலேசகர் எம். கே. நாராயணன், அன்றைய வெளிவிவகார அமைச்சர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் விஜய சிங் ஆகியோர் இடம்பெற்றனர். இவ்விரு குழுவினரும் அடிக்கடி சந்தித்து உரையாடி உணர்வு பூர்வமான பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் வெற்றி கண்டனர்.

தமிழ் பிள்ளைகளுக்கு கல்வியை பெறுவதற்கான வாய்ப்போ நல்ல வாழக்கையை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பமோ மறுக்கப்பட்டது. இந்த தமிழ் சிறுவர்கள் எல். ரி. ரி. ஈ யின் போராளிகளாக சேர்க்கப்பட்டு 12, 13, 14 வயது சிறுவர்களை யுத்த முனைக்கு அனுப்பி எல். ரி. ரி. ஈயினால் படுகொலை செய்யப்பட்டார்கள். இலங்கையிலுள்ள தமிழ் சமூகத்திற்கு எதிராக சிங்களவரோ, ஆயுதப்படையினரோ அரசாங்கமோ தீங்கிழைக்கவில்லை. எல். ரி. ரி. ஈ இயக்கமே அவர்களுக்கு திங்கிழைத்து அந்த மக்களின் மனிதாபிமான உரிமைகளை வடக்கிலும், கிழக்கிலும் பறித்த கொடுமை புரிந்தது.

எல். ரி. ரி. ஈயினர் அரசாங்கப் படைகளுக்கு எதிரான மோதல்கள் பலவற்றில் வெற்றியும் ஈட்டியுள்ளனர். அவர்கள் 1993ல் பூநகரி இராணுவ முகாமையும், 1996 முல்லைத்தீவு இராணுவ முகாமை தாக்கி பல்லாயிரக்கணக்கான இராணு வீரர்களை படுகொலை செய்தனர். 1998 முதல் 99 வரையில் எல். ரி. ரி. ஈ தாக்குதல்களினால் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். 2000 ஆவது ஆண்டில் 12 ஆயிரம் இராணுவ வீரர்கள் நிலை கொண்டிருந்த ஆணையிறவையும் எல். ரி. ரி. ஈயினர் கைப்பற்றினர். 2005இல் எல். ரி. ரி. ஈ 26 ஆயிரத்திற்கும் அதிகமான ஆயுதப்படை வீரர்களை படுகொலை செய்தது.

உலகிலுள்ள பயங்கரவாத இயக்கங்களில் எல். ரி. ரி. ஈ மாத்திரமே கடற்படை ஒன்றும் கொழும்பில் வந்து குண்டுகளைப் போடும் விமானங்களும் இருந்தன. யுத்தம் முடிவடையும் காலகட்டத்தில் எல். ரி. ரி. ஈயினர் 2 லட்சத்திற்கும் கூடுதலான பொதுமக்களை தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறச் செய்து, தங்கள் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆயுதமாக பயன்படுத்தினார்கள். யுத்தத்தின் போது பொதுமக்களை பாதுகாப்பு கேடயங்களாக எல். ரி. ரி. ஈ பயங்கரவாதிகள் பயன்படுத்தினார்கள்.

நாம் துப்பாக்கி பிரயோகம் செய்வதில்லை என்ற பிரதேசங்களை ஏற்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதைகளையும் அமைத்தோம். எனினும் எல். ரி. ரி. ஈ யினர் அவற்றின் மூலம் அரசாங்கத் தரப்புக்கு தப்பி வருவதற்கு தடை விதித்து, அவர்களை சுட்டுக் கொல்லும் கொடுமைகளைப் புரிந்தனர். இந்த எல். ரி. ரி. ஈக்கு எதிரான யுத்தத்தின் போது நவீன யுத்த தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து பொதுமக்களின் மரணத்தை தவிர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் அல்பிரெட் துரையப்பாவின் 36 ஆவது நினைவு தினம்!

Wednesday, June 01, 2011
படுகொலை செய்யப்பட்ட முன் னாள் முதல்வர் அல்பிரெட் துரை யப்பாவின் 36 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அல்பிரெட் துரையப்பாவின் மகள் வைத்திய கலாநிதி ஈசா யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளார். இவரை சுதந்திரக்கட்சியுடன் இணைத்து எதிர்காலத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வைப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளருமான தேசமான்ய கலாநிதி வேல் முருகு தங்கராசா தெரிவித் தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதா வது, புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் அல்பிரெட் துரையப்பாவின் 36 ஆவது நினைவு தினம் எதிர்வரும ஜூலை மாதம் 27 ஆம் திகதி யாழ்ப் பாணத்தில் வெகு சிறப்பாக அனுஷ் டிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவருடைய மகள் வைத்திய கலாநிதி ஈசா இங்கு வருகைதரவுள்ளார். இவரை எதிர்காலத்தில் அரசியற் செயற்பாடுகளில் இணைத்து செயற்படுமாறு கோரியுள்ளோம். இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அரசியற் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான வழிவகைகளைச் செய்து கொடுப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளைச் செய்து வருகின்றோம்.


அல்பிரெட் துரையப்பா மக்களுக்கு சிறந்த சேவையினைச் செய்து மக்கள் மரியாதையினைப் பெற்ற சிறந்த தலைவராவார். அவரை புலிகள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். இவருடைய இழப்பு தமிழ் பேசும் மக்களுக்கு பேரிழப்பாகியது. இவருடைய இழப்பினை நினைவுபடுத்தும் முகமாகவும் அவருடைய சேவையினைப் பாராட்டும் முகமாகவும் அவருடைய 36 ஆவது நினைவுதின நிகழ்வினை யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது என்றார்.

வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர் அச்சமின்றி நாடு திரும்பலாம்-ரஜீவ விஜயசிங்க!

Wednesday, June 01, 2011
மோதல் காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறிய இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லையென பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் இலங்கையர்கள் அந்தநாடுகளில் அரசியல் புகலிடம் கோர வேண்டிய தேவை இல்லலையென்பதே இலங்கையின் நிலைப்பாடு என அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து வெளியேறிய பலர் அவுஸ்திரே லியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருகின்றனர். இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப் பட்டு அமைதி சூழல் உருவாக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அரசியல் புகலிடம் கோரவேண்டிய தேவை இல்லை என்றார் அவர்.

அவுஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டு ள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலர் நாடு திரும்புவதற்கு கடவுச் சீட்டைக் கோரியுள்ளனர். இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலி யாவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.

எனவே, வெளிநாட்டிலுள்ள இலங்கையின் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் எந்தவிதமான அச்சமுமின்றி நாடு திரும்ப முடியும் என்றார்.

இதேவேளை, பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காமையானது வெட்கத்துக்கு உரியது என அவுஸ்திரேலிய ஊடகமான ஏ. பி. சி. வானோலி சேவைக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிடுள்ளார்.

Followers

Blog Archive