Monday, June 27, 2011

நாட்டுக்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டும்-பெசில் ராஜபக்ஷ!

Monday, June 27, 2011
நாட்டுக்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில உள்நாட்டு வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்ச்சியாக நாட்டுக்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தாருக்கு எதிராக குற்றப் பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்வதற்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் முனைப்பு காட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலிருந்து புலிப் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற விடுதலைப் புலி உறுப்பினர்களும், வெளிநாட்டுச் சக்திகளும் இணைந்து சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கக் கூடிய வகையிலான பல்வேறு திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள், யுத்தக் குற்றங்கள், தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை என பல்வேறு விடயங்கள் குறித்து குரல் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை என்றால் என்ன என கிராம மக்கள் கேட்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலணித்துவ ஆட்சியாளர்கள் நாடுகளில் தலையீடு செய்தனைப் போன்று மீண்டும் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்யத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் இந்தச் சக்திகளின் தலையீட்டினால் பாரிய ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நாட்டிலும் நாட்டுக்கு வெளியேயும் என்ன நடக்கின்றது என்பது குறித்து மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டொலர்களுக்காகவும், யூரோக்ககளுக்காகவும் சிலர் இலங்கையில் குரல் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive