Saturday, May 15, 2010

உலகில் பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் நாமே : இராணுவத் தளபதி

Saturday, May 15, 2010
உலகில் எந்தவொரு நாடும் பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததில்லை. நாம் அதனைச் செய்திருக்கிறோம். பயங்கரவாதத்தை தோற்கடித்தமை தொடர்பில் எமது அனுபவங்களை வேறு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளவும் நாம் தயாராக இருக்கிறோம் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் உடல் அவயங்களை இழந்த இராணுவ வீரர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்து இராணுவத்தினரின் பங்களிப்பினாலும் நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது. தாய்நாட்டுக்காகத் தமது உடற்பாகங்களை இழந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துமுகமாக இத்திட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம்" என அவர் மேலும் கூறினார்.
பிரேவ் ஹார்ட்' செயற்திட்டத்தின் மூலம் அநுராதபுரத்திலுள்ள அங்கவீனமுற்ற 200 இராணுவ வீரர்களுக்கு இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்

நுவரெலியா தோட்டத்தில் ரோனடோ சு+றாவளி!

Saturday, May 15, 2010
நுவரெலியா நெஸ்லி தோட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட ரோனடோ சு+றாவளியினால் ஆறு வீடுகள் சேதமடைந்ததோடு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 36 வயதுடைய உதயகுமார் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இலேசான மழை பெய்து கொண்டிருந்தது. நண்பகல் இரண்டு மணியளவில் திடீரென ரொனடோ சுழல்காற்று ஏற்பட்டது. இதில் வீடுகள் தூக்கி வீசப்பட்டதோடு மின்கம்பங்களும் பாதிக்கப்பட்டன.
இந்த வேளையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த உதயகுமார் மீது வீட்டுச் சிதைவூகள் மோதி வெட்டியதிலேயே உயிரிழந்தாரென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
நுவரெலியா மாவட்ட எம்.பி. வே. இராதாகிருஷ்ணன் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமைகளை ஆராய்ந்ததோடு பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவூ வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்,

Followers

Blog Archive