Saturday, November 20, 2010

சமாதானமில்லாத இடத்தில், அபிவிருத்தியினை எதிர்பார்க்க முடியாது – ஜனாதிபதி:

Saturday, November 20, 2010
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முற்பகல் 10.16 அளவில், தமது இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமானத்தை கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள பழைய நாடாளுமன்ற முன்றலில் செய்துக் கெணர்டார்.

இந்த சத்தியப் பிரமாணம் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா முன்னிலையில் இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக விசேட மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்ததுடன், இதில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட பெருந்திரளான பிரமுகர்களும் மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியை கௌரவிக்கும் வகையில் 21 மரியாதை வேட்டுக்களும், அதனைத் தொடர்ந்து கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, சமாதானம் இல்லாத இடத்தில், அபிவிருத்தியினையும், அபிவிருத்தி இல்லாத இடத்தில், சமாதானத்தையும், எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தார்.

இது தவிர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் என்பன, அரசியல் தீர்வின் ஒரு கட்டமாகவே தாம் பார்ப்பதாக குறிப்பிட்டார்.

வன்முறைகளில் இருந்து வடக்கு மற்றும் கிழக்கு விடுவிக்கப்பட்டு, தற்போது சமதானம் நிறைந்த பிரதேசமாக மாற்றப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் விரைவில் வடக்கு மக்களுக்கான பிரதேச சபை, நகரசபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை தமது விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்துக் கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், சுதந்திரமானதும், நீதியானதுமான நாடு ஒன்றை கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரும் ஒரே கொடியின் கீழ் ஐக்கியப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே வேளை, ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப்பிரமாணத்தை முன்னிட்டு பல வெளிநாட்டு ராஜதந்திரிகள் தமது வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு மக்கள் அடக்கு முறைகளுக்கு உட்பட்டிருந்தனர் - சவேந்திர சில்வா:

Saturday, November 20, 2010
புலிகள் இறுதிப்போரின் போது பெரும்பாலும் சிவில் உடையுடனேயே தாக்குதல்களை நடத்தினர் என ஸ்ரீலங்கா 58 வது படையணியின் முன்னாள் தளபதியும் தற்போது ஐக்கிய நாடுகளின் பிரதி நிரந்தர பிரதிநிதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் நேற்று சாட்சியமளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்

போர் நிறுத்த காலத்தின் போது டி சேர்ட்டையும் சாரத்தையும் உடுத்திக்கொண்டு படையினர் மீது தாக்குதல் நடத்தினால் அவர்களை பயங்கரவாதிகள்,என்றே அழைக்கமுடியும் என அவர் குறிப்பிட்டார் புலிகளின் யாழ்ப்பாண தாக்குதல் படைத்தலைவராக இருந்த தீபன், போரின் போது கொல்லப்பட்ட பின்னர், தாம் சென்று பார்த்தபோது, அவர் சாதாரண உடையிலேயே காணப்பட்டார் என சவேந்திர சில்வா குறிப்பிட்டார் தமது படைப்பிரிவினர்,
புலிகளின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக ஒப்படைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண உடைகளில் இருந்தபோதும் கொல்லப்பட்டவர்கள் தமது உறுப்பினர்கள் என அடையாளம் கண்டு அந்த சடலங்களை புலிகள் ஏற்றுக்கொண்டனர். எனினும் சில செய்தி நிறுவனங்கள், இந்த சடலங்களை தமிழ் பொதுமக்கள் என காட்ட முயற்சித்தன. பெண் போராளிகளின் ஆட்டிலறி பொறுப்பாளர் விதுஷா, பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் அந்தனி ஆகியோர் சிவிலியன் உடையிலேயே போரின் போது தாக்குதல்களில் ஈடுபட்டு மரணம் அடைந்தனர்

புலிகளின் திருகோணமலை அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி, தமது கணவரை தேடித்தருமாக இந்த ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளித்துள்ளார். எழிலன் திருகோணமலை மாவில் ஆறு நீர் விடயத்தில் முன்னிலை வகித்தார். அவரே புலிகளின் வரி சேகரிப்புக்கு பொறுப்பாகவும் இருந்தார் அவர் பயங்கரவாதியாவார் அவர் படையினருக்கு எதிராக போராடியவராவார் அவர் படையினருடனான போரின் போது காணாமல் போயிருக்கலாம் ஆனால் இன்று அவரின் மனைவி, தமது கணவரை காணவில்லை என புதிய கோணத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளார் என்றும் சவேந்திர சில்வா குறிப்பிட்டார் வடக்குகிழக்கு மக்கள் அவர்களின் பிரிவினராலேயே 30 வருடங்களாக அடக்குமுறைகளுக்கு உட்பட்டிருந்தனர். இதன் போது மக்கள்படை மற்றும் போராளிகள் என கூறப்படுவோரின் புகைப்படங்களை ஆணைக்குழுவின் முன்னிலையில் காட்டிய சவேந்திர சில்வா: அவர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதால்,அவர்களை பயங்கரவாதிகள் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும் என குறிப்பிட்டார்.

எனினும் புலம்பெயர்ந்தோரும் இணையத்தளங்களும் செய்தி நிறுவனங்களும் இவர்களை பொதுமக்களாக காட்ட முனைகின்றனர் என அவர் குற்றம் சுமத்தினர். சுதந்திரபுரம் என்ற இடமே அரசாங்கத்தினால், பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டது. இந்தநிலையில் ஆளில்லா விமானம் மூலம் கண்டறியப்பட்ட தகவலின்படி, பொதுமக்கள் இருந்த புதுமாத்தளன் பகுதியை நோக்கி புலிகளின் ஆட்டிலறி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 200 கிலோ மீற்றர் பிரதேசத்தை கைப்பற்றிய தமது படையினருக்கு சுமார் 7 கிலோமீற்றர் பிரதேசத்தை கைப்பற்றுவதற்காக பொதுமக்களை கொலை செய்யவேண்டிய அவசியம் இருக்கவில்லை என்றும் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். இறுதிப்போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்குள் படையினரின் ஊடுருவல் படையினர் சென்று தமது தாக்குதல்களை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய முன்னணியின் பிதாமகன் மக்கள்தோழர் பத்மநாபாவின் 59 வது பிறந்த தினம் இன்று ஆகும்:

Friday, November 19, 2010
ஐக்கிய முன்னணியின் பிதாமகன் மக்கள் போராளி பத்மநாபா.
தோழர் பத்மநாபாவின் 59 வது பிறந்த தினம் இன்று ஆகும்.
இலங்கைத் தீவில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்களின் வரலாற்றில் தோழர் என்ற சொல்லை மக்கள் மயப்படுத்திய பெருமை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையே சாரும்

தோழர் எஸ்.ஜி. அவர்கள் தோழர் என்ற சொல்லுக்கும் தோழமை என்ற உறவுக்கும் சரியான அர்த்தபுஷ்டியை தனது வாழும் முறையாலும் நடைமுறையாலும் வழங்கினார். தோழர் என்ற சொல்லை வரட்டுத்தனமாக உருப்போடும் சூத்திரங்களின் ஒரு பகுதியாகவோ அல்லாமல் தோழர் என்பதை ஸ்தாபன உறுப்பினர்களுக்கிடையேயான உளப்பூர்வமான உறவு முறையாக அதற்குரிய வகையில் தானே முன்னுதாரணமாக நடந்து நடைமுறைப்படுத்திக் காட்டினார்.

உயர்ந்த மனிதர்

தோழர் நாபாவின் தனிமனித குணாம்சங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை ஆகும். உயரமான மனிதனான தோழர் அவர்கள் உடல் ரீதியிலும் உள்ளத்தாலும் உணர்வாலும் குணத்தாலும் பண்பாலும் உயர்ந்த மனிதராக வாழ்ந்தார். ஒரு மனிதனின் சிறந்த வாழ்வுக்கு உதாரணபுருஷராக அவர் வாழ்ந்து காட்டியுள்ளார். ஆஜானுபாகுவான அவரது தோற்றம் அவரது உயர்ந்த மனித அம்சங்களையே பிரதிபலித்தது.

பத்மநாபா EPRLF சர்வதேச கிளைகளின் ஒன்றியம்


மக்களை நேசித்த மாமனிதர் தோழர் பத்மநாபா
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சாத்வீக வழிகளில் நடந்த போராட்டங்களில் பங்காளனாகவும் பின்னர் ஆயுதந் தாங்கிய போராட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தவர்களில் ஒருவராகவும் விளங்கியவர் அமரர் தோழர் பத்மநாபா. அவர் 1951 ம் ஆண்டு நவம்பர் 19 ம் திகதி காங்கேசன்துறையில் பிறந்தார். அவரது வாழ்க்கை காலத்தின் பெரும் பகுதி இயக்க முகாம்களிலும், காடு, மேடுகளிலும், ஏழை, பாளைகளின் குடிசை வீடுகளிலுமே களிந்தது.

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்வி பயிலும் காலத்தில் 1970 இல் ஒரு மாணவனாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை, ஈழ விடுதலை இயக்கம், ஈழப்புரட்சி அமைப்பு என தனது அரசியல் வாழ்வை தொடர்ந்த தோழர் பத்மநாபா 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் அமைப்பாளர்கள் மாநாட்டில் ஈபிஆர்எல்எவ் இன் தலைமை பொறுப்பை ஏற்றார். 1984ம் ஆண்டு ஈபிஆர்எல்எவ் இன் முதலாவது காங்கிரசில் செயலாளர் நாயகமாக தெரிவுசெய்யப்பட்ட அவர் இறக்கும் வரை கட்சியின் செயலாளர் நாயகமாக பணியாற்றினார்.

காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அவரது பாடசாலைக் கல்வியை கற்றார். 1972 ஆம் ஆண்டு அவரது பாடசாலைக் கற்றல் முடிவுக்கு வந்தது. அரசியல் நடவடிக்கைகள் காரணமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின் விடுதலை செய்யப்பட பத்மநாபாவை அவரது பெற்றோர் கணக்கியல் துறையில் கல்வி பயில்வதற்காக 1976 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவர் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒன்றிடம் ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு ஒரு போராளியாக அங்கிருந்து நாடு திரும்பினார்.

தமிழர்களின் ஆயுதந் தாங்கிய போராட்டம் எங்கள் மத்தியில் ஜனநாயக விழுமியங்களை புறந்தள்ளி உதாசீனப்படுத்தும் போக்கு தலையெடுத்திருந்த போதும் தோழர் பத்மநாபா எப்போதும் ஜனநாயக பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்து வந்தவர். கட்சிக்குள் ஜனநாயகத்தையும், தமிழ் இயக்கங்களிடையே ஐக்கியத்தையும் இடையறாது வலியுறுத்தி வந்தவர். கட்சிக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அவர் துப்பாக்கிகளுக்குப் பதிலாக விமர்சனம் சுயவிமர்சனம் என்ற ஆயுதத்தையே நம்பினார். இயக்கங்களிடையே தோன்றிய பிணக்குகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ளவதற்கே முக்கியத்துவமளித்தார். அவர் இறக்கும் வரையும், இறந்த பின்னரும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களாலும் மரியாதை செலுத்தப்படும் ஒருவராக தோழர் பத்மநாபா விளங்குவதற்கு அவரது இந்த அணுகுமுறையும் ஒரு காரணம்.

தோழர் பத்மநாபாவின் மறைவின் பின் வெளியிடப்பட்ட நினைவு மலரில் அவரது நீண்டகால நண்பனும், கட்சித் தோழனுமான தோழர் வரதராஜப்பெருமாள் குறிப்பிட்டிருப்பவற்றை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.

“அவர் கொள்கைப் பிடிவாதமுடைய ஒரு சமதர்மப் புரட்சிவாதி. மாக்சிசம், வர்க்கம், புரட்சி, போராட்டம் என்ற வார்த்தைப் பிரயோகங்களை உருப்போடும் வரட்டுத் தனமோ அல்லது தனது சுயநல நோக்கங்களுக்காக புரட்சிக் கோட்பாட்டை பயன்படுத்தும் பாசாங்குத் தனமோ அவரது புரட்சிவாழ்;க்கையில எள்ளளவும் இருந்ததில்லை.

அவர் சமூகப் புரட்சிக்காக உணர்வு பூர்வமாக உழைத்தார் சமூகப் புரட்சியாளர்களை உள்ளத்தால் நேசித்தார். நேர்மையான சமூகப் புரட்சியாளர்கள் மீது – அவர்கள் தன்னை விமர்சிப்பவர்களாயினும் சரி, எதிர்ப்பவர்களாயினும் சரி – உளமார அன்பு செலுத்தினார். அவ்வாறானவர்களோடு பழகுவதிலும், நட்பு கொள்வதிலும் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டார்.

தோழர் நாபாவிடம் கர்வம், தலைக்கனம், அதிகார வெறி என்பவற்றை இம்மியளவேனும் யாரும் கண்டிருக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான இளம் தோழர்கள் அவர் சுட்டு விரலுக்கு கட்டுப்பட்டு எதையும் செய்யத் தயாரான நிலையில் இருந்த போதிலும் அவர் எந்தக் கட்டத்திலும் அதிகார மமதையோடு நடந்ததில்லை. ஸ்தாபனத்தின் ஜனநாயக பூர்வமான பொது முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு கட்டுப்பாடுடைய உறுப்பினனுக்கு முன்னுதாரணமாக அவரே திகழ்ந்தார்.”

இவ்வாறு தோழர் பத்மநாபாவின் மறைவின் பின் வெளியிடப்பட்ட நினைவு மலரில் அவரது நீண்ட கால நண்பனும் கட்சித் தோழனுமான தோழர் வரதராஜப்பெருமாள் குறிப்பிட்டிருப்பது அவரது குணநலன்களை மிகவும் நேர்த்தியாய் பிரதிபலிப்பதாகும்.

தோழர் பத்மநாபா எப்போதும் மனித நேயத்துக்கு முக்கியத்துவம் தந்தவர்.
உழைக்கும் மக்களின் துன்ப, துயரங்களுக்கு தீர்வு காண உழைப்பதில் தனது இலட்சியமாக கொண்டிருந்தார். அவரது தாராள மனப்பான்மையும், தயாள குணமும் தான் அவரது எதிரிகளுக்கும் வாய்ப்பாய் அமைந்தது.

“மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம்” என்ற அவரது புகழ்பெற்ற வாக்கியம் அவர் எந்தளவிற்கு மக்களை நேசித்தார் என்பதை எடுத்துக்காட்டுவதாகும்.

சிங்கள மக்களின் ஆதரவு எமக்கு அவசியம் என்பது பற்றி பலர் இன்று பேசுகின்றார்கள் ஆனால், எமது போராட்டத்தின் ஆரம்ப காலத்திலேயே சிங்கள மக்கள் எமது நண்பர்கள் என்பதை நன்குணர்ந்து செயற்பட்டவர் தோழர் பத்மநாபா.

அவர் தனது சொல்லாலும் செயலாலும் மட்டுமல்ல தனது வாழ்க்கை நடைமுறை மூலமும் எங்களுக்கு வழிகாட்டிய, கற்றுத்தந்த ஒருவர்.

ஏறத்தாள 10 ஆண்டுகளாக பழகி வந்த ஆனந்தி என்ற இந்தியப் பெண்ணை 10.04.1989 இல் திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சுமார் ஒருவருடத்தில் 19.06.1990 இல் சென்னை, கோடம்பாக்கத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இதனால் அவருக்கு குடும்ப வாரிசு இல்லை. ஆனால், அமரர் தோழர் பத்மநாபாவின் அரசியல் வாரிசுகள் பல ஆயிரக்கணக்கானவர்கள், இலங்கையில் மட்டுமல்ல இன்று உலகெங்கும் உள்ளார்கள். அவர்கள், தோழர் பத்மநாபாவின் கொள்கைகளையும், இலட்சியங்களையும் முன்கொண்டு செல்வார்கள். தங்கள் சொல்லாலும், செயலாலும் அவரது நாமம் நின்று, நிலைக்கச் செய்வார்கள். மக்களை நேசித்து, மக்களின் உரிமைகளுக்காக போராடி, மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவே தனது உயிரையும் அர்ப்பணித்த தோழர் பத்மநாபா என்னென்றும் மக்களால் நேசிக்கப்படுவார்.

Followers

Blog Archive