Tuesday, December 28, 2010

235 பிக்பொக்கட் திருடர்கள் பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு சார்க் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவர் உட்பட முக்கிய கேடிகள் கைது!

Tuesday, December 28, 2010
பண்டிகைக் காலத்தில் திருடர்களின் கைவரிசையும் அதிகரித்துள்ளது. இக்காலப் பகுதியில் 235 ‘பிக்பொக்கட்’ திருடர்கள் கொழும்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்திருட்டுச் சம்பவங்களை வழிநடத்தும் 6 பேரும், திருட்டில் ஈடுபடும் 229 பேரும் கொழும்பு குற்றப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டிகைக் காலத்தில் இவ்வாறு பெருந்தொகையான ‘பிக்பொக்கட்’ திருடர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையெனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சார்க் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஒருவரும் உள்ளடங்குவதாகவும், ஹெரோயின் போதைவஸ்துக்கு அடிமையான அவர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கொழும்பு குற்றப் பிரிவுப் பொலிஸார் கூறுகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 20 நாடோடி (ஜிப்சீஸ்) ஆண், பெண்களும் ‘உள்ளடங்குகின்றனர். இவர்கள் தமது பிள்ளைகளையும் திருட்டுச் சம்பவங்களுக்குப் பழக்கியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

‘பிக்பொக்கட்’ திருடர்களை அவர்களின் உடைநடை, பாவனைகளைக் கொண்டு அடையாளம் காணமுடியாது. மக்களுடன் மக்களாக இணைந்து சென்றே திருட்டுக்களில் ஈடுபடுகின்றனர். சில தனியார் பஸ் நடத்துனர்களும் இவ்வாறான திருட்டுகளுக்கு உதவுகின்றனர். இதில் அவர்களுக்கும் பங்குகள் வழங்கப்படுவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருட்டுக் கும்பல்களின் தலைவர்களான வையா, சுதா, கிரா, மெகா, சாமீ, யுந்தா ஆகியோரே டிசம்பர் 3ம் திகதி முதல் நடத்தப்பட்ட விசேட தேடுதல்களில் பொலிஸா¡ல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய அவர்களின் பணிப்புரைக்கமைய இத்தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

Thursday, December 23, 2010

53 வது பிறந்த நாள் நினைவு தினம் அமரர் றொபேட் தம்பிராசா சுபத்திரன் மத்திய குழு உறுப்பினர்- பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்

Thursday, December 24, 2010
அமரர் தோழர் றொபேட்
தம்பிராசா சுபத்திரன்
(ஈ.பிஆர்.எல்.எவ் மத்திய குழு உறுப்பினர்
முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்)

தேச விடுதலையை நேசித்து

மானிட தர்மத்தை மதித்து நின்றதால்
ஏக பிரதிநிதித்துவத்தின் எதிரியானாய் -

இடர்களின் நடுவேயும்
தஞ்சமென மண்டியிடாது

தலைநிமிர்ந்து நின்று வீர காவியமானாய்
காற்றில் கலந்த போதும்

சாய்ந்துவிட்ட வல்லாதிக்கம் - உன்
கருத்தின் வலிமையை பறைசாற்றி நிற்கின்றது.
இனி நிமிர்ந்தெழும்

நீ உயர்த்திப் பிடித்த மானிட தர்மம்.

கண்டி இந்திய துணை தூதரக அலுவல்களை இலகுபடுத்த நடவடிக்கை.

Thursday, December 23, 2010
கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பணிகளை இலகுவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோபியோ’ (வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினருக் கான அமைப்பு) பிரதிநிதிகள் குழு இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவுடன் கொழும்பில் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்டி துணைத் தூதரகத்திற்கு அலுவல்களுக்காகச் செல்லும் பொது மக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளாகுவதாக ‘கோபியோ’ பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து துணைத் தூதரகத்தின் செயல்பாடுகளை வினைதிறன்மிக்கதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ‘தினகரனு’க்குத் தெரிவித்தார். வீசா பெற்றுக்கொள்ள முடியாமலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களிலும் நெருக்கடிகளை எதிர்நோக்குவோரின் பிரச்சினையை ‘கோபியோ’ அமைப்பின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம் காணப்பட்டு ள்ளது.

வீசாவைப் பெறுவதற்கான நியாயமாக காரணம் உள்ளதாக ‘கோபியோ’ பரிந்துரைக்கும் பட்சத்தில் அதனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Friday, December 17, 2010

அரச அதிகாரிகளின் தீர்மானங்களில் அரசாங்கம் பக்கபலமாக இருக்கும்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

Friday, December 17, 2010
அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் நியாயமான தீர்மானங்களில் அரசாங்கம் எப்போதும் பக்க பலமாக இருக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்றைய தினம் அரச நிர்வாக அதிகாரிகளின் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, சரியோ பிழையோ நியாயபூர்வமாக அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளின் பின்புலத்தில் முழு அரசாங்கமும் துணை நிற்கும் எனவும் தெரிவித்தார்.

“மக்கள் சேவை மகேசன் சேவை” என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி; வரலாற்றில் பதிவு செய்யப்படும் வகையில் அர்ப்பணிப்புள்ள சேவையை அரச அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் அதுவே நாட்டுக்கும் மக்களுக்குமான சேவையாகும் எனவும் தெரிவித்தார்.
அரச நிர்வாக சேவைக்கு புதிதாக 135 உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், புதிய நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களைக் கையளித்து உரை நிகழ்த்திய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்குச் செல்வதற்கான முதற்படியாக நிர்வாக சேவை உத்தியோகத்தர் பதவி அமைகிறது.

புதிதாக நியமனம் பெறுவோர் பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனைவரை சுதந்திரமாக சென்று பணிபுரியும் வகையில் நாட்டில் சிறந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இனம், மதம் என்ற பேதங்களைக் கடந்து நாட்டின் சகல மக்களுக்கும் அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்குவது புதிய உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும்.

பல்வேறு பிரச்சினைகளுடன் கண்ணீரோடு வரும் மக்களை மகிழ்ச்சியோடு செல்லும் வகையில் உங்கள் சேவை அமைய வேண்டும். எனது தந்தையார் அரசியலில் இருந்த காலத்தில் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அரசியல் தலைவர்கள், அரச உயரதிகாரிகள் மக்களை தமது காரில் ஏற்றிச் சென்று சம்பந்தப்பட்டோரை நேரில் பார்த்து உடனடியாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்தனர்.
அன்றைய அதிகாரிகள், தலைவர்கள் மக்களுக்கு நெருக்கமாக இருந்து செயற்பட்டனர். மக்கள் சேவைக்கு இது மிக முக்கியமாகும். நீங்களும் மக்களை நெருங்கி அவர்களின் பிரச்சினைகளுக்குக் காலங்கடத்தாமல் தீர்வு பெற்றுக் கொடுப்பது அவசியம். மக்கள் மனதில் பதியக்கூடிய வகையில் உங்கள் சேவை அமைய வேண்டும்.

ஒரு கணிப்பீட்டின் படி 7 மணியும் 45 நிமிடங்களையும் கொண்ட நாளொன்றுக்கான சேவை நேரத்தில் 3 மணி 20 நிமிட சேவைதான் அரச அலுவலகங்களில் இப்போது நடைபெறுகிறது. இது நியாயமானதா என்பதை அரச உத்தியோகத்தர்களே மனதில் கையை வைத்துச் சொல்லட்டும்.

24 மணி நேரமும் மக்கள் சேவையில் தம்மைப் பிணைத்துக் கொண்டு உழைத்த பல அதிகாரிகளையும் இங்கு குறிப்பிட முடியும். சுனாமி வேளையில் மாத்தறை பகுதியில் ‘சோர்ட்ஸ்’ அணிந்து கொண்டு அரச அதிபர்கள் நேர காலம் பாராது நள்ளிரவிலும் செயற்பட்டதை குறிப்பிட விரும்புகிறேன்.

நீங்களும் வரலாற்றுப் பதிவுகளில் இடம் பிடிக்கும் வகையில் சேவை செய்ய வேண்டும். நீங்கள் ஓய்வுபெற்ற பின்னரும் உங்கள் பெயர் மக்கள் மத்தியில் பேசப்பட வேண்டும்.

மக்களுக்காக நீங்கள் எடுக்கும் நியாயமான தீர்மானங்களுக்கு முழு அரசாங்கமும் பக்க பலமாக இருக்கும். உங்களைப் பாதுகாப்பதில் நாம் கடமைப்பட்டுள்ளோம். நாட்டுக்கு உங்களால் கிடைக்க வேண்டிய சேவையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

தேசிய உணர்வு, கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும், தேசிய கீதத்துக்கு கெளரவமளிக்கும் வகையில் செயற்பட வேண்டும். அதற்கு மதிப்பளிக்கத் தெரியாத ஒரு சமூகம் உருவாக இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தேசத்துரோக சக்திகளுக்கு இனிமேல் இடமில்லை-தரைப்படைத் தளபதி!


Friday, December 17, 2010
இலங்கையில் இனிமேல் எந்தவொரு தேசத்துரோக சக்திகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் சர்வதேச ரீதியில் அவை செயற்பட்டாலும் அவைகள் முறியடிக்கப்படும் எனவும் தரைப்படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நேற்று(டிச15) தெரிவித்தார்.

இராணுவ கவச வாகன படையணியின் 55ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு மோதரையிலுள்ள இராணுவ கவச வாகன தலைமையகமான ரொக் ஹவுஸ் முகாமில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

சர்வதேச ரீதியில் எழுப்பப்படும் சவால்களுக்கு முகம் கொடுக்க இலங்கை தயார் நிலையில் இருப்பதாகவும், இராணுவத்தை மேலும் பலப்படுத்தும் முகமாக ரஷ்யாவில் இருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கவச வாகனங்கள் இராணுவ கவச வாகன படையணிக்கென இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம், பயங்கரவாத கெடுபிடியில் இருந்து மக்களை மீட்டெடுத்ததை போன்று, தேசத்தின் அபிவிருத்தியிலும் மிக முக்கிய பங்காற்றுவார்கள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ள அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் இலக்கான ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்ற இராணுவத்தினர் சிறந்த முறையில் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பாதுகாப்பு செயலாளர் கோடாபய ராஜபக்‌ஷ அவர்களின் சிறந்த வழிகாட்டலின் கீழ் எந்தவொரு சவால்களுக்கும் முகம்கொடுக்க இலங்கை இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும், பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதற்காக வழி காட்டல்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இராணுவத்தை பலப்படுத்துவதன் மூலம் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் சேவையாற்றுவதற்கு கவச படை பிரிவைச் சேர்ந்த படை வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக தெரிவித்துக் கொண்டார்.

Saturday, December 11, 2010

தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இன்றையதினம் சந்திப்பினை மேற்கொண்டன--அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளுடன் இணையத் தயார் –TNA.!

Saturday, December 11, 2010
தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கம் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்திப்பு இன்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இச்சந்திப்பு சுமுகமாக இடம்பெற்றதாக சந்திப்பில் கலந்துகொண்ட எமது கட்சியின் பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் தெரிவித்தார். இன்றைய சந்திப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் கூட்டாக செயற்படுவது எனவும் தீர்வு திட்டம் ஒன்றை ஒருமித்து முன்வைப்பதற்கு ஏற்றவகையில் குழு ஒன்றை அமைப்பதற்கும் இன்றைய சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து சந்திப்பதெனவும், பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதெனவும் இன்று உடன்பாடு காணப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இன்றையதினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பினை மேற்கொண்டன.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை ஒரே குரலில் வெளிப்படுத்தும் முகமாக அமைக்கப்பட்ட தமிழ்க் கட்சிகளின் அரங்கமானது கடந்த ஜூன் மாதம் 24ம் திகதி இடம்பெற்ற தமது முதலாவது சந்திப்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இதுதொடர்பாக அழைப்பினை விடுத்திருந்தன. இந்த நிலையில் அவ்வழைப்பினை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அழைப்பிற்கிணங்க கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இன்றைய சந்திப்பு இடம்பெற்றது.

இரு அமைப்புக்களிலும் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்குகொண்ட நிலையில் இன்றைய சந்திப்பானது ஆக்கபூர்வமாக இடம்பெற்றது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம் கலந்துரையாடப்பட்டதுடன் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதனடிப்படையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகுறித்து அடுத்தடுத்த கட்டங்களில் இணைந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டதுடன் அரசியல் தீர்வு தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு இலகுவாக அதற்கான வரைபினை தயாரிப்பதற்கு ஒரு குழுவினை எதிர்வரும் திங்கட்கிழமை (13) அமைப்பதென்றும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இன்றையதினம் மாலை 3.30 மணியிலிருந்து 5.30 மணி வரை இடம்பெற்ற இம்முதல் சந்திப்பானது மிகவும் சிநேக பூர்வமானதாகவும் அடுத்தகட்ட சந்திப்புக்களுக்கான ஓர் ஆரம்பமாகவும் அமைந்தமை குறித்து பங்குகொண்ட கட்சித் தலைவர்கள் தமது திருப்தியை வெளியிட்டனர்.

இன்றைய கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (ரி.சிறிதரன் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.)
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் எம்.சந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்திரன் அப்பாத்துரை விநாயகமூர்த்தி சிவசக்தி ஆனந்தன் பா.அரியநேத்திரன் எம்.சுமந்திரன் பொன்.செல்வராசா எஸ்.வினோநோதாரலிங்கம் மேல்மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரன் மற்றும் வீ.ஆனந்தசங்கரி எம்.கே.சிவாஜிலிங்கம் த.சித்தார்த்தன் செ.சந்திரஹாசன் அ.இராசமாணிக்கம் ப.உதயராசா ஜீ.சுரேந்திரன் கோபாலகிருஷ்ணன் ஆர்.ராகவன் எஸ்.சதானந்தம் டி.மாணிக்கவாசகர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளுடன் இணையத் தயார் –TNA.!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது!
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜனநயாக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் நல்லய்யா குமாரகுருபரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று விசேட உயர் மட்ட கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் நாளாந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிபப்pட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அசரியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்காக ஆறு பேர் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈ.பி.டி.பி. தமிழர் விடுதலைக் கூட்டணி, (ரி.சிறிதரன் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.)
,புளொட், போன்ற 11 கட்சிகள் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதல் தடவையாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த முக்கிய தமிழ் அரசியல் கட்சிகள் தமிழர் பிரச்சினைக்காக ஒன்று சேர்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, December 8, 2010

சார்க் நடவடிக்கைகளுக்கு இலங்கை தொடர்ந்து ஆதரவு - ஜனாதிபதி.

Wednesday, December 8, 2010
சார்க் அமைப்பிற்கும் அதன் நடவடிக்கைகளுக்கும் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஆதரவு வழங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தெற்காசிய நாடுகள் இணைந்து ஆரம்பித்த சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இத்தருணத்தில் தெற்காசிய நாடுகளில் வாழும் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் சார்பிலும், நாட்டு மக்கள் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமையடைகிறேன்.

ஏப்ரல் மாதம் திம்புவில் நடைபெற்ற சார்க் அமைப்பின் வெள்ளிவிழாவில் நான் குறிப்பிட்டதைப் போன்று கடந்த இரண்டு தசாப்தங்களாக சார்க் நாடுகளுக்கிடையிலான பிராந்திய ஒத்துழைப்பு, இணைந்த அடையாளம் என்பனவே தனித்துவமான குறியீடுகள். இது தொடர்ந்தும் வலுப்படுத்தப்படுவது மிகவும் முக்கியமானது.

இதன் மூலம் சார்க் அமைப்பிலுள்ள நாடுகளுக்கிடையிலும், நாட்டு மக்களுக்கிடையிலும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்த முடியும்.

சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதெனில், 1985 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பை அனைவரும் இணைந்து சிறப்பாகக் கட்டிக்காத்து வந்துள்ளோம் என்பதில் நாம் அனைவரும் பெருமிதமடைய வேண்டும்.

இதனைத் தொடர்ந்தும் முன்னெடுத்தாலே அடுத்த சந்ததிக்கும் இணைந்த ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

தீர்மானங்களை நிறைவேற்றுதல், ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவருதல், மக்களின் சுதந்திரமான நடமாட்டம் போன்ற விடயங்களில் எம் முன்னால் காணப்படும் சவால்களை வெற்றி பெறுவதாயின் சில தீர்க்கமான முடிவுகளை நாம் எடுக்கவேண்டும். இவ்வாறான நிலையில் சார்க் அமைப்பிற்கும் அதன் நடவடிக்கைகளுக்கும் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஆதரவு வழங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லண்டன் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு ஜனாதிபதிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டனப் பேரணி.

Wednesday, December 8, 2010
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நேற்று மாபெரும் கண்டனப் பேரணியொன்று நடைபெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை அமைப்பாளர் வேல்முருகு தங்கராசா மற்றும் இணைப்பா ளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் யாழ். மாவட்டத்தின் பதினொரு தொகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், கல்வியாளர்கள், சமூக சேவையாளர்கள், இளைஞர்கள், யுவதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக த்தில் உரையாற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை மற்றும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களால் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்தே இப்பேரணி நடைபெற்றது.

நேற்றுக் காலை 10 மணிக்கு யாழ் துரையப்பா விளையாட்டரங்கிலிருந்தும், காலை 9 மணிக்கு பாஷையூர் அந்தோனியார் கோவில் முன்றலிலிருந்தும் ஆரம்பமான இருவேறு பேரணிகள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தன.

ஜனாதிபதியின் உருவப் படங்களைத் தாங்கியவாறும், தேசியக் கொடியைத் தாங்கியவாறும், ஜனாதிபதிக்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களைக் கண்டிக்கும் வாசகங்களை உள்ளடக்கிய சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஊர்வலமாக வந்தனர்.

நாட்டை மீட்ட ஜனாதிபதிக்கு நன்றி” நாடு ஒன்றுபட்டு விட்டது, “பயங்கரவாத புலிகளை முழுமையாக ஒழியுங்கள்”, “ஜனாதிபதியின் துணிச்சலான முடிவும் மக்களின் நல்லாசியால் நாட்டில் பயங்கரவாதம் ஒழிந்தது”, “ஜனாதிபதியின் மக்கள் சேவையைப் பாராட்டுகிறோம்” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் சென்றவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இப்பேரணியால் யாழ் நகரில் சிறிதுநேரம் வாகன நெரிசல்கள் ஏற்பட்டிருந்தன.

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Wednesday, November 24, 2010

தமிழ் கட்சிகளின் அரங்கம் அமர்வை கொழும்பில் நடத்தியது.

Wednesday, November 24, 2010
கூட்டத்தில் மீள்குடியேற்றம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பன குறித்து ஆராயப்பட்டது. இலங்கை அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்தியாவின் அனுசரணை தொடர்பாகவும் முரண்பட்ட அபிப்பிராயங்கள் நிலவிய போதும் நீண்ட நேர கருத்துப்பரிமாற்றத்தின் பின்னர் முடிவுகள் எட்டப்பட்டன.

ஏற்கனவே தமிழ் கட்சிகளின் அரங்க கூட்டத்தில் பேசப்பட்டதற்கிணங்க இரண்டாவது தடவையாக பதவியேற்றுள்ள ஜனாதிபதியிடம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க கோருவதெனவும், மீள்குடியேறிய மக்கள் அனைவருக்கும் ஒரேசீராக அரசின் உதவிகள் கிடைக்க செய்வது தொடர்பாகவும், இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடுவதுடன் மீள் குடியேற்றம் முற்றுப்பெற்றதாக கருதாமல் அவர்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஏற்ற வழிவகைகளை தொடர்சியாக மேற்கொள்ள வேண்டியிருப்பது தொடர்பாகவும் ஜனாதிபதியை சந்தித்து எடுத்துக் கூறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்களை சந்தித்து மீள்குடியேற்றம், இனப்பிரச்சினை தீர்வு போன்ற விடயங்களில் இந்தியாவின் ஒத்துழைப்பை கோருவதெனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், பத்மநாபா ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறி ரெலோ, ஈரோஸ், ஆகிய கட்சிகளினதும் ஈழ எதிலியர் மறுவாழ்வு கழகம், மனித உரிமைகள் இல்லம் ஆகிய தொண்டு நிறுவனங்களினதும் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிட்ட வேண்டும், இதற்கு தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை வேண்டும் என்ற அக்கறையுள்ள பொதுமக்களும் இதில கலந்து கொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தனர்.

இதனிடையே, தமிழ் கட்சிகளின் அரங்கமானது, எதிர்வரும் 28 ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பத்திரிகை அறிக்கை-இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு சரித்திரத்தின் செழுமைமிகு பக்கங்களில் இடம்பெற வேண்டும்-தி.ஸ்ரீதரன்-பொதுச்செயலாளர்-பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.
Wednesday, November 24, 2010
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

பொருளாதார அபிவிருத்தியின் சிகரங்களை தொடுவதற்கான வாக்குறுதியை அவர் மக்களுக்கு அளித்துள்ளார். விமான போக்குவரத்து, சமுத்திரம், மின்சாரம், வர்த்தகம், அறிவு ஆகிய ஐந்து துறைகளிலும் இலங்கை எதிர்காலத்தில் பிரகாசிப்பதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சமாதானம் நிலைநாட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த இலக்குகள் மகிழ்ச்சிகரமானவை. இலங்கையின் சகல இன மக்களுக்கும் தெம்பூட்டுபவை.

எனினும் இலங்கையின் இன சமூகங்களிடையே நிலவும் அரசியல் அதிகாரப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதனூடாகவே இந்த இலக்குகளை எய்த முடியும்.

உலக வரலாற்றில் ஜனநாயகமும், சமூகங்களிடையே சமுத்துவமும் நிலைநாட்டப்பட்ட நாடுகளிலேயே வெற்றிகரமான சமூக பொருளாதார சாதனைகள் நிகழ்ந்துள்ளன.

எனவே இலங்கை அனைத்து இன மக்களினதும் நாடு, பல்லினங்களின் நாடு என்பது உறுதிப்படுத்தப்படுவதும் தனி மனித ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதும் நாம் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான அடிப்படை நிபந்தனைகளாகும்.

தேசிய வாழ்வினுள் தமிழ், முஸ்லீம் மக்கள் உள்வாங்கப்படும் விதமாக அரசியல் அதிகாரப் பகிர்வு நிகழ வேண்டும்.

இதனை ஜனாதிபதி தனது பதவி காலத்தில் உறுதிப்படுத்தி சரித்திரத்தின் செழுமைமிகு பக்கங்களில் தனது பெயரை பொறிக்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். அதனை மேற்கொள்வதற்குரிய ஆற்றலும், பலமும் அவருக்கு இருக்கிறது.

இலங்கையில் 30 வருடமாக நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது போல் இனப்பபிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை எட்டுவதிலும் ஜனாதிபதி அவர்கள் ஆற்றலுடன் செயற்பட முடியும் என நாம் நம்புகிறோம்.

தி. ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா- ஈ.பி.ஆர்.எல்.எப்.

பதவியை இருக்கைகளோடு மட்டுப்படுத்தாதீர்! - செயலர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை!

Wednesday, November 24, 2010
தமது பதவியினை இருக்கைகளோடு மட்டுப்படுத்தாது மக்களுக்குப் பணியாற்றுமாறு ஜனாதிபதி புதிய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, தமது பதவியினை இருக்கைகளுடன் மட்டுப்படுத்தாது நடைமுறை ரீதியிலும் இதய சுத்தியுடன் மக்களுக்கு பணியாற்றுமாறும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அர்ப்பணிக்குமாறும் அறிவுரை வழங்கினார்.

அந்தந்த அமைச்சுக்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் பிரச்சினைகள் பற்றிய கடிதங்களுக்குக் கட்டாயம் பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை குறித்த அமைச்சின் செயலாளர் தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண் டார்.

அதேபோன்று இந்த நாட்டின் அரச சேவைகள் பற்றித் தமக்குப் போதியளவு புரிந்துணர்வு இருப்பதாகக் கூறிய ஜனாதிபதி தம்மை எந்தவொரு அதிகாரியாலும் ஏமாற்ற முடியாதெனத் தெரிவித்தார்.

Monday, November 22, 2010

இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு உதவும் வகையில் நடமாடும் சேவை 115 அகதி முகாம்களில் துணைத் தூதரகம் ஏற்பாடு.

Monday, November 22, 2010
தமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு ஏதுவான ஆவணங்களை வழங்கும் நோக்கில் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர் வீ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடமாடும் சேவையொன்று நடத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மதுரையில் அப்பகுதி மாவட்ட ஆட்சியர் ஊடாக இம்மாதம் 20ஆம் 21ஆம் திகதிகளில் இந்நடமாடும் சேவை நடைபெற்றதாகத் துணைத்தூதுவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதேபோல் இலங்கைத் தமிழர்கள் தங்கியிருக்கும் 115 அகதி முகாம்களில் அந்தந்தப் பகுதி மாவட்ட ஆட்சியாளர்கள் ஊடாக நடமாடும் சேவை முன்னெடுக்கப் படும்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்; ‘வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை விட நாட்டுக்குத் திரும்ப வேண்டும்’ என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ‘மஹிந்த சிந்தனை’க்கு அமைய 115 முகாம்களிலும் இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.

அகதி முகாம்களிலுள்ள இலங்கையர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பிறப்புகள், திருமணங்கள் சட்ட ரீதியான பதிவுகள் இல்லாமல் உள்ளன. அகதிகளுக்கான சலுகைகளைப் பெறுவதாயினும், நாடு திரும்பி மீள்குடியேறுவதாயினும் ஆவணங்கள் அவசியம்.

இதற்காகவே, மதுரையில் நாம் நடமாடும் சேவையை ஆரம்பித்துள்ளோம். ஏனைய பகுதிகளிலும் இச்சேவை விஸ்தரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் இன்று சமர்ப்பிப்பு 2011

Monday, November 22, 2010
2011ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் 1.35 மணிக்கு வரவு - செலவுத் திட்டத்தைப் பாராளு மன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

நீண்டகால மற்றும் குறுகிய கால அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டே இவ் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக நிதிய மைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டி ருப்பதற்கு அமைவாகக் கிராமங்களை அபிவிருத்தி செய்து ஏழை, பணக்காரன் என்ற வர்க்க ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அனைவருக்கும் சமமாகப் பகிரக்கூடிய வகையிலேயே இவ் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதற்குக் காணப்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பு, நலன்புரி, கல்வி மற்றும் பொருளாதாரம் போன்ற முக்கிய துறைகள் குறித்து இவ்வரவு - செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பட்டுள்ளது.

வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினையை ஒழிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும். நகரத்தின் பொது வசதிகளை மேம்படுத்தும் செயற்பாடுகளுக்கு அதிக நிதியை ஒதுக்குவதற்கும் தீர்மானிக்க ப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

ஜனாதிபதி பதவியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தின் பின்னர் அவர் சமர்ப்பிக்கும் முதலாவது வரவு - செலவுத் திட்டம் இதுவாகும். அத்துடன் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் இடம்பெறும் முதலாவது வரவு - செலவுத் திட்டம் இதுவாகும்.

நாட்டின் அனைத்து மக்களும் பொரு ளாதார அபிவிருத்தியின் பங்குதாரர்களாகும் மற்றும் அபிவிருத்தியின் பெறுபேறுகள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்வதும் இம்முறை வரவு - செலவு திட்டத்தின் முக்கிய அம்சமாகும். அதிவேக நெடுஞ்சாலைகள், மாகாண சபை வீதி மற்றும் கிராமப்புர பாதைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கப்படும் அதேவேளை, சிறிய நடுத்தர முதலீட்டாளர்களுக்கு அதிக பெறுபேறுகளை பெற்றுத் தரும். அவர்களை ஊக்குவிக்கும் யோசனைகளும் வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்க ப்பட்டுள்ளன.

எமது நாட்டின் வரி முறையை இலகுபடுத்தும் வகையிலான முறையொன்று வரவு - செலவுத் திட்ட த்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.

விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் பிரிவுகள் மேம்படுத்தப் படுவதுடன் கடற் படை, விமானப் படை ஆகியவற்றை பலப்படுத்தி ஆசியாவின் உன்னதமான நாடாக இலங்கையை மாற்றும் நோக்கத்தை ஸ்திரப்படுத்தும் யோசனைகளும் இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வரவு - செலவுத் திட்ட அறிக்கையில் இடம்பெறும் அரச வருமானம், செலவு மற்றும் வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையை 2011 ஆம் ஆண்டின் இறுதியில் அதேபோன்று வைத்திருப்பதில் அரசாங்கம் இம்முறை அதிக அவதானம் செலுத்தியுள்ளது.

2010ஆம் ஆண்டில் வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறை தேசிய வளர்ச்சி விகிதத்தில் நூற்றுக்கு 9.8 சதவீதமாகும். அதனை நூற்றுக்கு 7 சதவீதம் என்ற மட்டத்தில் பேணுவதற்கே எதிர்பார்க் கப்பட்டது. அதிக நிதியை நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய வேண்டியுள்ளதன் காரணமாக இந்த விகிதம் அதிகரித்துள்ளது.

இம்முறை வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையை நூற்றுக்கு 7 சத வீத மட்டத்தில் வைத்திருப்பதே இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு கிடைக்கும் வெளிநாட்டு கடன், உள்ளூர் மொத்த உற்பத்தியில் நூற்றுக்கு 80 என்ற மட்டத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

2005 இல் நாட்டின் கடன் உள்ளூர் மொத்த உற்பத்தி விகிதத்தில் நூற்றுக்கு 105 சதவீதமாக இருந்தது. அது படிப் படியாக நூற்றுக்கு 84 சதவீதம் வரை குறைந்தது.

நாட்டை அபிவிருத்தி செய்யும் யோசனைகளை வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் அவற்றை செயலுருப்படுத்தும் வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதன் மூலம் நாட்டு மக்களுக்கு முக்கிய செய்தியொன்றை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

பாராளுமன்றத்துக்கு அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த குறைநிரப்பு பிரேரணைக்கு ஏற்ப 2011ஆம் ஆண்டில் மீண்டுவரும் செலவு 1080.9 பில்லியன் ரூபாவாகவும் மூலதனச் செலவு 458.1 பில்லியன் ரூபாவாகவும் மதிப்பிடப் பட்டுள்ளது.

Saturday, November 20, 2010

சமாதானமில்லாத இடத்தில், அபிவிருத்தியினை எதிர்பார்க்க முடியாது – ஜனாதிபதி:

Saturday, November 20, 2010
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முற்பகல் 10.16 அளவில், தமது இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமானத்தை கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள பழைய நாடாளுமன்ற முன்றலில் செய்துக் கெணர்டார்.

இந்த சத்தியப் பிரமாணம் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா முன்னிலையில் இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக விசேட மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்ததுடன், இதில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட பெருந்திரளான பிரமுகர்களும் மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியை கௌரவிக்கும் வகையில் 21 மரியாதை வேட்டுக்களும், அதனைத் தொடர்ந்து கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, சமாதானம் இல்லாத இடத்தில், அபிவிருத்தியினையும், அபிவிருத்தி இல்லாத இடத்தில், சமாதானத்தையும், எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தார்.

இது தவிர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் என்பன, அரசியல் தீர்வின் ஒரு கட்டமாகவே தாம் பார்ப்பதாக குறிப்பிட்டார்.

வன்முறைகளில் இருந்து வடக்கு மற்றும் கிழக்கு விடுவிக்கப்பட்டு, தற்போது சமதானம் நிறைந்த பிரதேசமாக மாற்றப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் விரைவில் வடக்கு மக்களுக்கான பிரதேச சபை, நகரசபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை தமது விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்துக் கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், சுதந்திரமானதும், நீதியானதுமான நாடு ஒன்றை கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரும் ஒரே கொடியின் கீழ் ஐக்கியப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே வேளை, ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப்பிரமாணத்தை முன்னிட்டு பல வெளிநாட்டு ராஜதந்திரிகள் தமது வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு மக்கள் அடக்கு முறைகளுக்கு உட்பட்டிருந்தனர் - சவேந்திர சில்வா:

Saturday, November 20, 2010
புலிகள் இறுதிப்போரின் போது பெரும்பாலும் சிவில் உடையுடனேயே தாக்குதல்களை நடத்தினர் என ஸ்ரீலங்கா 58 வது படையணியின் முன்னாள் தளபதியும் தற்போது ஐக்கிய நாடுகளின் பிரதி நிரந்தர பிரதிநிதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் நேற்று சாட்சியமளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்

போர் நிறுத்த காலத்தின் போது டி சேர்ட்டையும் சாரத்தையும் உடுத்திக்கொண்டு படையினர் மீது தாக்குதல் நடத்தினால் அவர்களை பயங்கரவாதிகள்,என்றே அழைக்கமுடியும் என அவர் குறிப்பிட்டார் புலிகளின் யாழ்ப்பாண தாக்குதல் படைத்தலைவராக இருந்த தீபன், போரின் போது கொல்லப்பட்ட பின்னர், தாம் சென்று பார்த்தபோது, அவர் சாதாரண உடையிலேயே காணப்பட்டார் என சவேந்திர சில்வா குறிப்பிட்டார் தமது படைப்பிரிவினர்,
புலிகளின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக ஒப்படைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண உடைகளில் இருந்தபோதும் கொல்லப்பட்டவர்கள் தமது உறுப்பினர்கள் என அடையாளம் கண்டு அந்த சடலங்களை புலிகள் ஏற்றுக்கொண்டனர். எனினும் சில செய்தி நிறுவனங்கள், இந்த சடலங்களை தமிழ் பொதுமக்கள் என காட்ட முயற்சித்தன. பெண் போராளிகளின் ஆட்டிலறி பொறுப்பாளர் விதுஷா, பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் அந்தனி ஆகியோர் சிவிலியன் உடையிலேயே போரின் போது தாக்குதல்களில் ஈடுபட்டு மரணம் அடைந்தனர்

புலிகளின் திருகோணமலை அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி, தமது கணவரை தேடித்தருமாக இந்த ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளித்துள்ளார். எழிலன் திருகோணமலை மாவில் ஆறு நீர் விடயத்தில் முன்னிலை வகித்தார். அவரே புலிகளின் வரி சேகரிப்புக்கு பொறுப்பாகவும் இருந்தார் அவர் பயங்கரவாதியாவார் அவர் படையினருக்கு எதிராக போராடியவராவார் அவர் படையினருடனான போரின் போது காணாமல் போயிருக்கலாம் ஆனால் இன்று அவரின் மனைவி, தமது கணவரை காணவில்லை என புதிய கோணத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளார் என்றும் சவேந்திர சில்வா குறிப்பிட்டார் வடக்குகிழக்கு மக்கள் அவர்களின் பிரிவினராலேயே 30 வருடங்களாக அடக்குமுறைகளுக்கு உட்பட்டிருந்தனர். இதன் போது மக்கள்படை மற்றும் போராளிகள் என கூறப்படுவோரின் புகைப்படங்களை ஆணைக்குழுவின் முன்னிலையில் காட்டிய சவேந்திர சில்வா: அவர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதால்,அவர்களை பயங்கரவாதிகள் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும் என குறிப்பிட்டார்.

எனினும் புலம்பெயர்ந்தோரும் இணையத்தளங்களும் செய்தி நிறுவனங்களும் இவர்களை பொதுமக்களாக காட்ட முனைகின்றனர் என அவர் குற்றம் சுமத்தினர். சுதந்திரபுரம் என்ற இடமே அரசாங்கத்தினால், பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டது. இந்தநிலையில் ஆளில்லா விமானம் மூலம் கண்டறியப்பட்ட தகவலின்படி, பொதுமக்கள் இருந்த புதுமாத்தளன் பகுதியை நோக்கி புலிகளின் ஆட்டிலறி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 200 கிலோ மீற்றர் பிரதேசத்தை கைப்பற்றிய தமது படையினருக்கு சுமார் 7 கிலோமீற்றர் பிரதேசத்தை கைப்பற்றுவதற்காக பொதுமக்களை கொலை செய்யவேண்டிய அவசியம் இருக்கவில்லை என்றும் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். இறுதிப்போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்குள் படையினரின் ஊடுருவல் படையினர் சென்று தமது தாக்குதல்களை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய முன்னணியின் பிதாமகன் மக்கள்தோழர் பத்மநாபாவின் 59 வது பிறந்த தினம் இன்று ஆகும்:

Friday, November 19, 2010
ஐக்கிய முன்னணியின் பிதாமகன் மக்கள் போராளி பத்மநாபா.
தோழர் பத்மநாபாவின் 59 வது பிறந்த தினம் இன்று ஆகும்.
இலங்கைத் தீவில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்களின் வரலாற்றில் தோழர் என்ற சொல்லை மக்கள் மயப்படுத்திய பெருமை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையே சாரும்

தோழர் எஸ்.ஜி. அவர்கள் தோழர் என்ற சொல்லுக்கும் தோழமை என்ற உறவுக்கும் சரியான அர்த்தபுஷ்டியை தனது வாழும் முறையாலும் நடைமுறையாலும் வழங்கினார். தோழர் என்ற சொல்லை வரட்டுத்தனமாக உருப்போடும் சூத்திரங்களின் ஒரு பகுதியாகவோ அல்லாமல் தோழர் என்பதை ஸ்தாபன உறுப்பினர்களுக்கிடையேயான உளப்பூர்வமான உறவு முறையாக அதற்குரிய வகையில் தானே முன்னுதாரணமாக நடந்து நடைமுறைப்படுத்திக் காட்டினார்.

உயர்ந்த மனிதர்

தோழர் நாபாவின் தனிமனித குணாம்சங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை ஆகும். உயரமான மனிதனான தோழர் அவர்கள் உடல் ரீதியிலும் உள்ளத்தாலும் உணர்வாலும் குணத்தாலும் பண்பாலும் உயர்ந்த மனிதராக வாழ்ந்தார். ஒரு மனிதனின் சிறந்த வாழ்வுக்கு உதாரணபுருஷராக அவர் வாழ்ந்து காட்டியுள்ளார். ஆஜானுபாகுவான அவரது தோற்றம் அவரது உயர்ந்த மனித அம்சங்களையே பிரதிபலித்தது.

பத்மநாபா EPRLF சர்வதேச கிளைகளின் ஒன்றியம்


மக்களை நேசித்த மாமனிதர் தோழர் பத்மநாபா
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சாத்வீக வழிகளில் நடந்த போராட்டங்களில் பங்காளனாகவும் பின்னர் ஆயுதந் தாங்கிய போராட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தவர்களில் ஒருவராகவும் விளங்கியவர் அமரர் தோழர் பத்மநாபா. அவர் 1951 ம் ஆண்டு நவம்பர் 19 ம் திகதி காங்கேசன்துறையில் பிறந்தார். அவரது வாழ்க்கை காலத்தின் பெரும் பகுதி இயக்க முகாம்களிலும், காடு, மேடுகளிலும், ஏழை, பாளைகளின் குடிசை வீடுகளிலுமே களிந்தது.

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்வி பயிலும் காலத்தில் 1970 இல் ஒரு மாணவனாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை, ஈழ விடுதலை இயக்கம், ஈழப்புரட்சி அமைப்பு என தனது அரசியல் வாழ்வை தொடர்ந்த தோழர் பத்மநாபா 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் அமைப்பாளர்கள் மாநாட்டில் ஈபிஆர்எல்எவ் இன் தலைமை பொறுப்பை ஏற்றார். 1984ம் ஆண்டு ஈபிஆர்எல்எவ் இன் முதலாவது காங்கிரசில் செயலாளர் நாயகமாக தெரிவுசெய்யப்பட்ட அவர் இறக்கும் வரை கட்சியின் செயலாளர் நாயகமாக பணியாற்றினார்.

காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அவரது பாடசாலைக் கல்வியை கற்றார். 1972 ஆம் ஆண்டு அவரது பாடசாலைக் கற்றல் முடிவுக்கு வந்தது. அரசியல் நடவடிக்கைகள் காரணமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின் விடுதலை செய்யப்பட பத்மநாபாவை அவரது பெற்றோர் கணக்கியல் துறையில் கல்வி பயில்வதற்காக 1976 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவர் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒன்றிடம் ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு ஒரு போராளியாக அங்கிருந்து நாடு திரும்பினார்.

தமிழர்களின் ஆயுதந் தாங்கிய போராட்டம் எங்கள் மத்தியில் ஜனநாயக விழுமியங்களை புறந்தள்ளி உதாசீனப்படுத்தும் போக்கு தலையெடுத்திருந்த போதும் தோழர் பத்மநாபா எப்போதும் ஜனநாயக பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்து வந்தவர். கட்சிக்குள் ஜனநாயகத்தையும், தமிழ் இயக்கங்களிடையே ஐக்கியத்தையும் இடையறாது வலியுறுத்தி வந்தவர். கட்சிக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அவர் துப்பாக்கிகளுக்குப் பதிலாக விமர்சனம் சுயவிமர்சனம் என்ற ஆயுதத்தையே நம்பினார். இயக்கங்களிடையே தோன்றிய பிணக்குகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ளவதற்கே முக்கியத்துவமளித்தார். அவர் இறக்கும் வரையும், இறந்த பின்னரும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களாலும் மரியாதை செலுத்தப்படும் ஒருவராக தோழர் பத்மநாபா விளங்குவதற்கு அவரது இந்த அணுகுமுறையும் ஒரு காரணம்.

தோழர் பத்மநாபாவின் மறைவின் பின் வெளியிடப்பட்ட நினைவு மலரில் அவரது நீண்டகால நண்பனும், கட்சித் தோழனுமான தோழர் வரதராஜப்பெருமாள் குறிப்பிட்டிருப்பவற்றை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.

“அவர் கொள்கைப் பிடிவாதமுடைய ஒரு சமதர்மப் புரட்சிவாதி. மாக்சிசம், வர்க்கம், புரட்சி, போராட்டம் என்ற வார்த்தைப் பிரயோகங்களை உருப்போடும் வரட்டுத் தனமோ அல்லது தனது சுயநல நோக்கங்களுக்காக புரட்சிக் கோட்பாட்டை பயன்படுத்தும் பாசாங்குத் தனமோ அவரது புரட்சிவாழ்;க்கையில எள்ளளவும் இருந்ததில்லை.

அவர் சமூகப் புரட்சிக்காக உணர்வு பூர்வமாக உழைத்தார் சமூகப் புரட்சியாளர்களை உள்ளத்தால் நேசித்தார். நேர்மையான சமூகப் புரட்சியாளர்கள் மீது – அவர்கள் தன்னை விமர்சிப்பவர்களாயினும் சரி, எதிர்ப்பவர்களாயினும் சரி – உளமார அன்பு செலுத்தினார். அவ்வாறானவர்களோடு பழகுவதிலும், நட்பு கொள்வதிலும் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டார்.

தோழர் நாபாவிடம் கர்வம், தலைக்கனம், அதிகார வெறி என்பவற்றை இம்மியளவேனும் யாரும் கண்டிருக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான இளம் தோழர்கள் அவர் சுட்டு விரலுக்கு கட்டுப்பட்டு எதையும் செய்யத் தயாரான நிலையில் இருந்த போதிலும் அவர் எந்தக் கட்டத்திலும் அதிகார மமதையோடு நடந்ததில்லை. ஸ்தாபனத்தின் ஜனநாயக பூர்வமான பொது முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு கட்டுப்பாடுடைய உறுப்பினனுக்கு முன்னுதாரணமாக அவரே திகழ்ந்தார்.”

இவ்வாறு தோழர் பத்மநாபாவின் மறைவின் பின் வெளியிடப்பட்ட நினைவு மலரில் அவரது நீண்ட கால நண்பனும் கட்சித் தோழனுமான தோழர் வரதராஜப்பெருமாள் குறிப்பிட்டிருப்பது அவரது குணநலன்களை மிகவும் நேர்த்தியாய் பிரதிபலிப்பதாகும்.

தோழர் பத்மநாபா எப்போதும் மனித நேயத்துக்கு முக்கியத்துவம் தந்தவர்.
உழைக்கும் மக்களின் துன்ப, துயரங்களுக்கு தீர்வு காண உழைப்பதில் தனது இலட்சியமாக கொண்டிருந்தார். அவரது தாராள மனப்பான்மையும், தயாள குணமும் தான் அவரது எதிரிகளுக்கும் வாய்ப்பாய் அமைந்தது.

“மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம்” என்ற அவரது புகழ்பெற்ற வாக்கியம் அவர் எந்தளவிற்கு மக்களை நேசித்தார் என்பதை எடுத்துக்காட்டுவதாகும்.

சிங்கள மக்களின் ஆதரவு எமக்கு அவசியம் என்பது பற்றி பலர் இன்று பேசுகின்றார்கள் ஆனால், எமது போராட்டத்தின் ஆரம்ப காலத்திலேயே சிங்கள மக்கள் எமது நண்பர்கள் என்பதை நன்குணர்ந்து செயற்பட்டவர் தோழர் பத்மநாபா.

அவர் தனது சொல்லாலும் செயலாலும் மட்டுமல்ல தனது வாழ்க்கை நடைமுறை மூலமும் எங்களுக்கு வழிகாட்டிய, கற்றுத்தந்த ஒருவர்.

ஏறத்தாள 10 ஆண்டுகளாக பழகி வந்த ஆனந்தி என்ற இந்தியப் பெண்ணை 10.04.1989 இல் திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சுமார் ஒருவருடத்தில் 19.06.1990 இல் சென்னை, கோடம்பாக்கத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இதனால் அவருக்கு குடும்ப வாரிசு இல்லை. ஆனால், அமரர் தோழர் பத்மநாபாவின் அரசியல் வாரிசுகள் பல ஆயிரக்கணக்கானவர்கள், இலங்கையில் மட்டுமல்ல இன்று உலகெங்கும் உள்ளார்கள். அவர்கள், தோழர் பத்மநாபாவின் கொள்கைகளையும், இலட்சியங்களையும் முன்கொண்டு செல்வார்கள். தங்கள் சொல்லாலும், செயலாலும் அவரது நாமம் நின்று, நிலைக்கச் செய்வார்கள். மக்களை நேசித்து, மக்களின் உரிமைகளுக்காக போராடி, மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவே தனது உயிரையும் அர்ப்பணித்த தோழர் பத்மநாபா என்னென்றும் மக்களால் நேசிக்கப்படுவார்.

Thursday, November 18, 2010

ஜனாதிபதியின் பிறந்த தினம் ஜனாதிபதியின் பிறந்த தினம் நாடு முழுவதும் வைபவங்கள்!

Thursday, November 18, 2010
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளையொட்டியும் இரண்டாவது பதவிப் பிரமாணத்தை முன்னிட்டும் நாடு முழுவதும் மத வழிபாடுகளுடன் கூடிய நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெறுகின்றன.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தையொட்டி உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தவிரவும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அதேநேரம், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளையும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சர்வ மத வழிபாட்டுத் தலங்களிலும் விசேட பூஜைகளும் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன. இதற்கான ஒழுங்குகளை அரசியல், தொழிற்சங்க அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

ஜனாதிபதியின் பிறந்த நாளை யொட்டி இன்று (18) மாகம்புர (அம்பாந்தோட்டை) துறைமுகத்தில் முதலாவது கப்பல் நங்கூரமிடும் நிகழ்வு காலை 10.30 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறுகிறது. இன்றைய தினம் நாட்டு அபிவிருத்தியைப் பொன்னெழுத்துக்களால் பதியப்படும் ஒரு நாளாகுமென அரசியல் தலைவர்கள் பலர் அபிப்பிராயம் வெளி யிட்டுள்ளனர்.

நாளை 19 ஆம் திகதி இரண்டாவது பதவிப் பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெறுகிறது.

நாளை காலை 10 மணிக்குள்ள சுபவேளையில் ஜனாதிபதி பதவி ஏற்பதற்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி காலி முகத்திடல் விழாக்கோலம் பூண்டுள்ளது. முப்படையினரினதும் பொலிஸாரினதும் அணி வகுப்பு மரியாதை மற்றும் போர்த்தளபாட பேரணியும் நடைபெறும்.

இந்த விழாவையொட்டி கொழும்பு கோட்டைக்கான பொதுப் போக்குவரத்து நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை தடை செய்யப்படுமெனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பின் சில பகுதிகளிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பிறந்த தினத்தையொட்டி தேசத்துக்கு நிழல்தரும் 11 இலட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி நடைபெற்றது. சில பிரதேசங்களில் தொடர்ந்தும் மரம் நடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு 7, சுதந்திர சதுக்கத்தில் ‘சுதந்திரம்’ எனும் தொனிப் பொருளிலான கலாசார கண்காட்சி பிரதமர் டி. எம். ஜயரட்ன தலைமையில் நேற்று (17) ஆரம்பமானது.

பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை நான்கு நாட்களுக்குக் கண்காட்சி நடை பெறும். இந்தக் கண்காட்சியின் விசேட அம்சமாக ஏழாயிரம் கிலோ அரசியில் பிரமாண்டமான பாற்சோறு தயாரிக்கப்படுகின்றது. 65 ஆயிரம் பேர் உண்ணக்கூடிய இந்தப் பாற்சோற்றை உலக சாதனைக்காக 500 பேர் சேர்ந்து தயாரிக்கிறார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் இந்தக் கண்காட்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். நாளை மறுதினம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்து கொள்வர்.

மாகம்புர துறைமுகத்தில் முதலாவது கப்பல் இன்று நங்கூரமிடும் நிகழ்வு!

Thursday, November 18, 2010
அம்பாந்தோட்டை, மாகம்புர சர்வதேச துறைமுகத்தின் முதலாவது கட்ட நிர்மாணப் பணிகளின் நிறைவும் முதலாவது கப்பல் துறைமுகத்தை வந்தடையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வும் இன்று நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணிக்கு மாகம்புர துறைமுக வளாகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிதியாகக் கலந்துகொள்வார்.

துறைமுக விமான சேவைகள் பிரதி அமைச்சர்களான தயாசிரி திசேரா மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோருடன் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிறந்த தினம் ஆகையால் வடக்கிலிருந்து வருகை தரும் மக்கள் மாகம்புர துறைமுக வளாகத்தில் ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த் துக்களையும் வடக்கினை மீட்டு தந்தமை க்காக நன்றியினையும் தெரிவிக்க வுள்ளனர்.

இத்துறைமுகம் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் 390 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதில் மூன்று கப்பல்களை நங்கூரமி டக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ள்ளார்.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Thursday, November 18, 2010
பொருளாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் யாங் சுப்பிங்கும், நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இதேவேளை, சீன ஜனாதிபதி ஹீ ஜின்டாவோவின் விசேட பிரதிநிதி சான் கோவுவேய் இன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழாவிலும் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Monday, November 15, 2010

சுதந்திரம்”கண்காட்சி குறித்து அமைச்சா; கெஹலிய!

Monday, November 15, 2010
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப் பிரமாணம் மற்றம் பிறந்த தினத்தையொட்டி கொழும்பில் நடத்தப்படும் கண்காட்சி அந்த சொல்லுக்கே புது அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்று ஊடக தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தொpவித்தார்.
இந்தக் கண்காட்சி கடந்தகாலம் நிகழ்காலம் மற்றம் எதிர்காலம் ஆகிய மூன்றையூம் உள்ளடக்கயதாகவே இருக்கம் என்றும் குறிப்பிட்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திரம் என்ற புதிய கலாசாரத்தின் அடிப்படையிலான கண்காட்சி தொடர்பாக தகவல் திணைக்களத்தில் இன்று காலை ஊடகவியலாளா;களுக்கு விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தக் கண்காட்சி எல்லை கடந்த ஒரு கண்காட்சியாக இருக்கும் என்றும் இதனூடாக நாட்டு மக்களுக்கு பல தரப்பட்ட விடயங்கள் குறித்து அறியக் கிடைப்பதுடன் புது அனுபவங்களையூம் ஏற்படத்தும் என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் சுதந்திரம் என்ற பெயரில் புதிய கலாசாரத்தின் அடிப்படையிலான கண்காட்சியொன்றை சுதந்திர சதுக்கத்தில் நடத்தவூள்ளது.

நாளை மறுதினமான 17 முதல் 20 ஆம் திகதி வரை நடை பெறவூள்ள இந்தக் கண்காட்சி பி. ப. 2 மணி முதல் இரவூ 10 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.

இக்கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்திற்கு மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்வின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

அடுத்து வரும் நாட்களில் பிரதமா; டி.எம்.ஜயரத்ன அமைச்சா;களான மைத்திhpபால சிறிசேன பஸில் ராஜபக்ஷ ஆகியோர்; பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

சிறந்ததொரு கலாசாரத்திற்கான முன்மாதிரி என்ற தொனிப் பொருளில் நடை பெறும் ‘சுதந்திரம்’ கண்காட்சியில் புதுவகையிலான களியாட்டங்களைக் கண்டுகளிக்கவூம் அனுபவிக்கவூம் மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படவூள்ளது.

பொருட்களை மீள பெற உதவும்படி கோரிக்கை!

Monday, November 15, 2010
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களினால் கைவிடப்பட்ட பொருட்களை சென்று பார்வையிடுவதற்கும் அவற்றை மீள எடுத்துவருவதற்கும், இராணுவம் அனுமதி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வன்னி இராணுவ கட்டளை தலத்தில் மேஜர் ஜெனரல் ராஜகுருவை நேரயொக உரையாடிய போது, அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியேரும் நிலையில் அவர்களது பொருட்களை மீள பெறுவதன் அவசியம் குறித்து தனது கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தமது வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கைவிட்ட நிலையில் வெளியேறியிருந்தனர்.

இந்த நிலையில் மீளகுடியேறியவர்கள் தமது வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இது மிகவும் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இராணுவ கட்டளை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

தேசிய அடையாள அட்டைகளை வீட்டு முகவரிக்கே அனுப்ப நடவடிக்கை!

Monday, November 15, 2010
ஜனவரி முதலாம் திகதி முதல் வீட்டு முகவரிக்கே தேசிய அடையாள அட்டைகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர தெரிவித்துள்ளார்.

இதுவரைகாலமும் பிரதேச செயலகத்துக்கு அனுப்பி வைக் கப்பட்டு, அங்கிருந்து கிராம உத்தியோகத்தர் ஊடாகவே தேசிய அடையாள அட்டை உரியவருக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இதில் ஏற்படும் தாம தத்தை தவிர்க்கும் வகையிலேயே இந்த புதிய முறை மேற்கொள் ளப்படவுள்ளது.

எதிர்காலத்தில் தேசிய அடை யாள அட்டை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்போர் விண்ணப் பத்துடன் முகவரியிட்டு முத்திரை ஒட்டிய தபாலுறையை இணைத்து அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

க. பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை இம்மாத முடிவுக்குள் பெற்றுக் கொடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ரூ. 50 கோடியில் அபிவிருத்தி:

Monday, November 15, 2010
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐம்பது கோடி ரூபா செலவில் உள்ளூராட்சி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக் கப்பட்டு வருவதாக வட மாகாண ஆளு நர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யுத்தத்தின் போது கடுமையாக பாதிக்கப் பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வெகு விரைவில் முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் பொருட்டும், மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகளை புனரமைக்கும் திட்டத் திற்கு 393 மில்லியன் ரூபாவும், பிரதேச சபைகளை நிர்மாணிப்பதற்கான ஒன்பது கட்டுமான பணிகளுக்கு 71 மில்லியன் ரூபாவும், ஏனைய நிர்மாண பணிகளுக்கு 36 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்துள் ளதாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.உதயராஜா தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம், வட மாகாணத்துக்கான அவசர புனரமைப்பு திட்டம் (ரினிஞிரிஜி) ஆகியவற்றின் ஊடாக வட மாகாண சபை இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன் னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் முல் லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகள் முழுமையாக புனரமைக்கப்பட வுள்ளதுடன் புதுக்குடியிருப்பு, துணுக்காய், கரைத்துறைப்பற்றும் மற்றும் பாண்டியன் குளம் ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான அலுவலகங்களும், செம்மாலை கொக்கிளாய் பிரதேசத்திற்கான உப பிரதேச சபை அலுவலகங்களும் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.

துணுக்காய் பிரதேச சபைக்கு 2 கோடி 80 இலட்சம் ரூபாவும், கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு ஒரு கோடி 80 இலட்சம் ரூபாவும், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு ஒரு கோடி 20இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

துணுக்காய்

11 மில்லியன் ரூபா செலவில் துணுக்காய் பிரதேச சபை அலுவலகமும், 16 மில்லியன் ரூபா செலவில் துணுக்காய் பஸ் தரிப்பு நிலையம் மற்றும் கடைத் தொகுதியும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

மாந்தை கிழக்கு

5.5 மில்லியன் ரூபா செலவில் பாண்டியன் குளம் பிரதேச சபை அலுவலகமும், 6.5 மில்லியன் ரூபா செலவில் பொன்னகர் கிராமிய சந்தையும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

கரைத்துறைப்பற்று (மரிடைன்பற்று)

14 மில்லியன் ரூபா செலவில் கரைத்துறைப்பற்று பிரதேச சபை அலுவலகமும், 2 மில்லியன் ரூபா செலவில் செம்மாலை பிரதேச சபை உப அலுவலகமும் 2 மில்லியன் ரூபா செலவில் கொக்கிளாய் பிரதேச சபை உப அலுவலகமும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

புதுக்குடியிருப்பு

ஆறு மில்லியன் ரூபா செலவில் ஒட்டுச் சுட்டானில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப அலுவலகமும், முத்தையன் கட்டு சந்தையும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.உதயராஜா மேலும் தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தின் உள்ளூராட்சி மேம்பாட்டுத்திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற் கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Friday, November 12, 2010

மட்டக்களப்புக்கு டி.யு குணசேகர விஜயம்!

Friday, November 12, 2010
சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியு.குணசேகர இருநாள் விஜயத்தை மேற்கொண்டு மட்;டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம் செய்துள்ளார். நேற்று மாலை இடம் மாவட்டதிற்கு விஜயம் செய்த அவர் இலங்கை கம்னிஸ்ட் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகசபை மாநாட்டிலும் பங்கு கொண்டார்.

இன்று காலை மட்டக்களப்பு நிறைச்சாலையில் கைதிகள் மற்றும் உதிதியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படுள்ள சமுக சீர்திருத்த திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

மாவட்ட திணைக்களத் தலைவர்களின் மாநாடு டேபா மண்டபத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது அதிலும் அமைச்சர் பங்கு கொண்டார்.

நீதவான்களுக்குப் பயிற்சி நிலையம்!

Friday, November 12, 2010
நீதவான்களுக்குப் பயிற்சியளிப்பதற்கான பயிற்சி நிலையமொன்றை அமைப்பதற்குத் தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அதாவுத செனெவிரத்ன கூறுகிறார்.

பனாகொடப் பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான இடமொன்றைப்பெற்று அங்கு விடுதி வசதியுடன் இரண்டு வருடப் பயிற்சிகளை வழங்க எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நீதவான்களைப் பயிற்றுவிக்கும் கல்லூரியொன்று இந்தியாவில் இருப்பதாகவும் அவர்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதனூடாக இங்குள்ள நீதவான்களை அங்கு அனுப்பி நீதித்துறை தொடர்பில் அவர்களுக்குத் தேவையான அறிவினைப் பெற்றுக்கொடுக்க முடியுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனூடாக மிகவும் தைரியத்துடன் சரியான தீர்ப்புகளை விரைவில் எடுக்கக்கூடிய ஆற்றல் கிடைக்குமென அமைச்சர் மேலும் கூறினார்.

Thursday, November 11, 2010

இலங்கைபற்றி ஐ.நாவின் குழுவொன்று ஆய்வு!

Thursday, November 11, 2010
பொருளாதார, சமூக மற்றும் கலாசாரப் பிரிவுகளில் சர்வதேச சாசனங்களின் பிரகாரம் இலங்கை செயற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான குழு ஆராய்ந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் ஜெனிவாவிலுள்ள தலைமையகத்தில் நடைபெற்றுவரும் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான குழுவின் 45 ஆவது கூட்டத் தொடரின்போதே இது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கென நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகளின் முன்னேற்றம் குறித்து நிபுணர்கள் குழு முன்னிலையில் இலங்கையின் பிரதி சொலிசிட்டர் நாயகம் ஷவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார்.

இலங்கை கடந்த 30 வருட கால ஆயுதப் போராட்டத்தைக் கடந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் பயங்கரவாதச் செயற்பாடுகள் காரணமாக சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி ஆகிய துறைகளில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைவதில் தடங்கல்கள் ஏற்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.

கடந்த மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது உள்ளக ரீதியில் 3 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருந்ததாகக் கூறிய அவர் இந்த எண்ணிக்கை தற்போது 18 ஆயிரம் பேராகக் குறைந்துள்ளதெனச் சுட்டிக் காட்டினார்.

இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவதற்காக அரசாங்கம் அளப்பரிய அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளதுடன் இடம்பெயர்ந்த மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான உதவிகளையும் செய்து வருவதாக அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

எஞ்சியுள்ள இடம்பெயர்ந்த மக்களையும் மீளக் குடியேற்றும் பொருட்டு மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் சர்வதேச மனிதாபிமான நிறுவனங்களின் உதவியுடன் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் இலங்கையின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 28 பக்கங்களைக் கொண்ட அறிக்கையானது விரிவாக ஆராயக்கூடிய அளவிற்குப் போதுமான தகவல்களைக் கொண்டிருக்கவில்லையென ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அல் ஜஸீரா வெளியிட்ட செய்திக்கு இலங்கை அரசு கண்டனம்!

Thursday, November 11, 2010
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் என மற்றுமொரு கதையினை ஔிபரப்பி நாட்டின் பாதுகாப்பு படையினரது நற்பெயருக்கு கலங்கமேற்படுத்தவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை வீணடிக்க முயற்சிப்பதாகவும் அல் ஜஸீரா செய்திச் சேவை மீது இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.

எதுவிதமான நம்பத்தகு ஆதாரங்களுமின்றி கிடைக்கப்பெற்ற ஒருசில புகைப்படங்களை கொண்டு சித்தரிக்கப்பட்ட ஒரு செய்தியினை அல் ஜஸீரா வெளியிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான சித்தரிக்கப்பட்டு செய்திகளுக்கு கடுமையான கண்டனத்தையும், மறுப்பினையும் தெரிவிப்பதோடு, ஒருசில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் இவ்வாறான முனைப்புகளை முன்னெடுத்து இலங்கையின் பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயல்வாதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Wednesday, November 10, 2010

ஜனாதிபதி ஆணைக்குழு மன்னாரில் விசாரணை நடத்துமா?

Wednesday, November 10, 2010
கற்றுக்கொண்டுள்ள பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மன்னார் மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மன்னார் மாவட்டத்தில் நடைபெறவேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டி, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையினால் அனுப்பப்பட்டிருந்த கடிதம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யுத்தம் முடிவுற்றுள்ள நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்டிருக்கும் விசாரணைகளில் பொது மக்கள் கண்ணீர் மல்கச் சாட்சியம் அளித்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா, மட்டக்களப்பு, கொழும்பு எனப் பல பாகங்களிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள்மூலம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் மன்னார் மாவட்டத்தில் இதுவரை ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெறவில்லையெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் ஆயரினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை சாதகமாகப் பரிசீலிக்கப்படுமென ஆணைக்குழு அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இல்லம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கில் வாக்காளர் பதிவு நிறைவுறும் நிலையில்.

Wednesday, November 10, 2010
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் பெரும்பாலும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 90 வீதமான வாக்காளர் பதிவுகள் இதுவரை பூர்த்தியடைந்துள்ளதாக முல்லைத்தீவு - கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ எஸ் கருணாநிதி எமக்குத் தெரிவித்தார்.

வவுனியாவில் முகாம்களில் தங்கியுள்ள வாக்காளர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் கிராம உத்தியோகத்தர்களூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்குத் தடை.

Wednesday, November 10, 2010
தரக்குறைவான மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்ற த்தில் தெரிவித்தார்.

தரக்குறைவான மருந்துகளை ஏற்கனவே இறக்குமதி செய்து விநியோகித்திருந்தவர்க ளிடமிருந்து நஷ்ட ஈடுகளையும் சுகாதார அமைச்சு அறவிடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் கூடியது.

வழமையான சபை நடவடிக்கைகளின் பின்னர் வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ. தே. க. எம். பி. தயாசிறி ஜயசேக்கர சுகாதார அமைச்சரிடம் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டெண்டர் மூலம் மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் முதலில் தரமான மருந்து வகைகளை மாதிரிகளாக காண்பி த்து இறக்குமதி செய்து விநியோகிக்கும் போது தரக்குறைவான மருந்து வகைகளை விநியோகித்தும் உள்ளன.

இதனால் இந் நிறுவனங்களிடமிருந்து ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக நஷ்ட ஈடுகளை அறவிட்டும் உள்ளோம். அத்துடன் தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்வது இனியும் கண்டுபிடிக்க ப்பட்டால் உடனடியாக அந்த நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்றார்.

அத்துடன் தரக்குறைவான மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் விடயத்தில் டெண்டர் சபையின் அதிகாரிகள் எவரேனும் செயற்பட்டிருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டால் அந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார பிரதியமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட 12,030 பேர் கைது.

Wednesday, November 10, 2010
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 27 நாட்களாக நடத்தப்பட்ட பாரிய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 12,030 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

கடந்த மாதம் 13ம் திகதி முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 27 நாட்களாக நடத்தப்பட்ட இந்த சுற்றிவளைப்பு தேடுதலின்போது போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான 12,500 சம்பவங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட இந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதலின்போது 10, 306 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஹெரோயின், கஞ்சா, பாபுல், போதை தரும் லேகியங்கள் மற்றும் அபின்போன்ற பல்வேறு வகையான போதைப் பொருட்களையே பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆயிரக் கணக்கான பொலிஸார் அடங்கிய, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் விஷேட பொலிஸ் தேடுதல் பிரிவினர் ஆகியோர் இணைந்து இந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ‘போதை ஒழிப்பு, திட்டத்தின் பிரகாரம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஹெரோயினுடன் தொடர்புடைய 3275 சம்பவங்கள் தொடர்பாகவும், கஞ்சாவுடன் தொடர்புடைய 7596 சம்பவங்கள் தொடர்பாகவும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கல்கிஸ்ஸையிலுள்ள படோவிட்ட, கிரேண்ட் பாஸிலுள்ள கிம்புலாஎல, பொரல்லையிலுள்ள மகஸின் வீதி, பண்டாரநாயக்க வீதி, ஒபேசேகரபுர மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களிலேயே விஷேட பொலிஸ் குழுக்கள் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர் என்றார். போதைப் பொருள் பாவனையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கும் வரை இந்த பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுப்பர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Monday, November 8, 2010

கங்காராம விகாரை சமய வைபவங்களில்;;;; ஜனாதிபதி!

Monday, November 8, 2010
ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்டட தான சமய வைபவம் நடைபெற்றது.
கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இருந்து இன்று அதிகாலை ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையை நோக்கி பெரஹர ஊh;வலம் நடைபெற்றது. நேற்று முழு இரவூம் பிரித் பாராயணம் நடைபெற்றது.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கா; வண. உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரோவூம் இந்த வைபவத்தில் கலந்துகொண்டாh;.

ஹுனுப்பிட்டி கங்காராம விகாராதிபதி வண. கலபொட ஞானதிஸ்ஸ தேரர் இங்கு உரை நிகழ்;த்துகையில்:

நாட்டு மக்கள் அனைவரும் இப்போது அமைதியான சூழலில் தத்தமது கடமைகளில் நிம்;மதியாக ஈடுபடக்கூடிய சந்தாப்பம் வழங்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாட்டில் துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே நாட்டு மக்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கவது அவசியமாகும் என்றாh;.

பொன்சேகா விடுதலைகோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது முறுகல்!

Monday, November 8, 2010
வெலிக்கடைச் சிறைச்சாலையினுள் வைத்துப் பொலிசார் சிலர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று சிலர் இந்தச் சிறைச்சாலை முன்றலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி வெலிக்கடைச் சிறைச்சாலை முன்னால் 'ஜெனரலுக்காக இராணுவத்தினர்' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு மாற்றப்பட்டது.

லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த இனந்தெரியாத சில நபர்களால் குழப்பநிலை ஏற்பட்டது.

வெலிக்கடைச் சிறைச்சாலை மோதல் குறித்து விசாரணை ஆரம்பம்.

Monday, November 8, 2010
வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆராய்வதற்குச் சிறைச்சாலைகள் ஆணையாளரினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் கெனத் பெர்னண்டோ தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ ஆர் டி சில்வா குறிப்பிட்டார்.

மோதலுக்கான காரணம் தொடர்பாக இந்தக் குழுவினால் பல பிரிவுகளினூடாக ஆராயப்பட்டு அறிக்கையொன்று பெறப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் கூறினார்.

இதேவேளை இந்த மோதல் தொடர்பாக இரகசிய பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பொலிஸ் குழு நேற்று மாலை வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்ததாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.

இதேவேளை மோதலில் காயமடைந்த 14 பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Friday, November 5, 2010

புலிகள் இறுதிநேரம் வரை மக்களை கேடயமாகவே வைத்திருந்தனர் நல்லிணக்க ஆணைக்குழு முன் யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார்.

Friday, November 5, 2010
பொதுமக்களுக்காக அரசாங்கம் பாதுகாப்பு வலயத்தைப் பிரகடனப்படுத்திய போதிலும், அதில் மக்களோடு மக்களாக புலிகள் இயக்கத்தினரும் இரண்டறக் கலந்திருந்தார்களென்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் அரச அதிபருமான திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

புலிகள் மக்களை வெளியேற இடமளிக்கவில்லை என்றும் மீறித் தப்பிச் செல்ல முயன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்களென்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (04) சாட்சியம் அளித்த போது திருமதி சுகுமார் குறிப்பிட்டார்.

புலிகள் மக்களை மனிதக் கேடயமாக வைத்திருந்தார்களென்று கூறிய யாழ். அரச அதிபர் அதனையும் மீறி மக்கள் வெள்ளைக் கொடி ஏந்தியவாறு இராணுவத்தினரின் பகுதிக்குத் தப்பி வந்தார்களென்றும் குறிப்பிட்டார்.

வெள்ளைக் கொடியுடன் தப்பி வந்த மக்கள் எவரையும் இராணுவம் சுடவில்லையென்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ‘வெள்ளைக் கொடியுடன் இராணுவத் தினரிடம் தப்பி வந்த அனைவரும் இன்னமும் உயிருடன் வாழ்கிறார்கள்.

வேண்டுமானால் அவர்களுள் சிலரை ஆணைக்குழு முன்னிலையில் கொண்டு வந்து சாட்சியமளிக்கவும் இயலும். நான் எப்போதும் மக்களுடன் வாழ்கிறேன். அவர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்கிறேன். மக்கள் எவராவது அவ்வாறு வெள்ளைக் கொடியுடன் வந்து இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு – 7 ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் நேற்று நடந்த ஆணைக்குழு விசாரணையில் சாட்சியம் அளித்த அரச அதிபர் இமெல்டா சுகுமார்,

ஜனவரி 19 ஆம் திகதி (2009) இராணுவக் கட்டளையிடும் அதிகாரியிடமிருந்து எனக்கோர் அறிவிப்பு தொலைநகல் மூலம் வந்தது. அதில், வள்ளிபுனம் பகுதியில் மக்களுக்குப் பாதுகாப்பு வலயத்தைப் பிரகடனப்படுத்துமாறு வரைபடத்துடன் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நான் அறிவிப்புச் செய்தேன். ஆனால், மக்கள் எங்கு செல்கிறார்களோ அங்கே புலிகளும் செல்வார்கள்.

நாம் புதுக்குடியிருப்புக்கு இடம்பெயர்ந்த பொழுது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா (நெடுங்கேணி), கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3,50,000 பொதுமக்கள் அங்கு இருந்தார்கள். இறுதிவரை மக்கள் நம்பிக்கையுடன் தமது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு இடம்பெயர்ந்தார்கள். புதுக்குடியிருப்பில் தற்காலிக அலுவலகத்தில் நான் இயங்கிய பொழுது எம்மை வெளியேறுமாறு இராணுவம் கேட்டுக்கொண்டது.

ஜனவரி 22ஆம் திகதி காலை 10 மணி முதல் பிற்பகல் இரண்டு மணிவரை போர் நிறுத்தம் செய்து நாம் வெளியேற அவகாசம் வழங்கினார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் நான் அங்கிருந்து ஒட்டுசுட்டானுக்கு இடம்பெயர்ந்தேன். ஆனால் எனது உத்தியோகத்தர்கள் பலர் மக்களுடன் அங்கேயே தங்கிவிட்டார்கள். அவர்களைப் புலிகள் அனுமதிக்கவில்லை.

அவரின் சாட்சியம் நிறைவடைந்ததும் ஆணைக்குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் அரச அதிபரிடம் கேள்விகளைத் தொடுத்தனர். அதற்குப் பதில் அளித்த அவர், இடம்பெயர்ந்த மக்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் அரச நிவாரணத்தைப் பெற்றுக் கொடுத்ததாகவும் ஆனால், அதில் 80% மட்டுமே மக்களைச் சென்றடைந்ததாகவும் 20% உணவைப் புலிகள் எடுத்திருக்கலாமென்றும் கூறினார்.

புலிகளின் துப்பாக்கிச் சூட்டினால் 5, 6 கிராம சேவை உத்தியோகத்தர்களும் தமது உத்தியோகத்தர்கள் சிலரும் கொல்லப்பட்டதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். இறுதி நம்பிக்கையுடன் மக்கள் கொண்டு சென்ற இலட்சக்கணக்கான வாகனங்கள் பல கிலோமீற்றர் தூரத்திற்கு எரியுண்டு கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்புக்காவலில் உள்ளோர் பட்டியல் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் தயாரிப்பு நல்லிணக்க ஆணைக்குழுவிடம் விரைவில் கையளிப்பு.

Friday, November 5, 2010
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளின் பட்டியலொன்றை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தயாரித்து வருவதாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தினகரனுக்குத் தெரிவித்தார்.

இந்தப் பட்டியல் விரைவில் தமக்கு வழங்கப்படுமென்றும் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

இறுதி யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் கைது செய்யப்பட்டவர்களும் படையினரிடம் சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓமந்தை தடுப்பு முகாமுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்த ஆணைக்குழுவின் தலைவர் சில்வா, அவர்களின் விடுதலை, சட்ட நடவடிக்கை குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேநேரம், தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளின் பெயர்கள் அடங்கிய நீண்டதொரு பட்டியலையும் வழங்கியிருந்தார். அதற்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான பட்டியலொன்றைத் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தயாரித்து வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

Thursday, November 4, 2010

ரிபிசியின் வியாழக்கிழமை சிறப்பு அரசியல் கலந்துரையாடல்-முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஐப்பெருமாள் கலந்துரையாட உள்ளனர்!

Thursday, November 4, 2010
ரிபிசியின் வியாழக்கிழமை சிறப்பு அரசியல் கலந்துரையாடல்-முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஐப்பெருமாள் கலந்துரையாட உள்ளனர்!

இந் நிகழ்ச்சியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணி தலைவரும் முன்னால் வடகிழக்கு மகாணத்தின் முதலமைச்சருமான தோழர் வரதராஐப்பெருமாள் ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணியின் சர்வேதச பொருப்பாளர் தம்பா ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர் மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்

தொடர்புகளுக்கு 00 44 208 9305313 – 078107063682

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சம்பந்தன் எம்.பியுடன் சந்திப்பு தமிழர்களின் உடனடி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் ஒரே நிலைப்பாடு.

Thursday, November 4, 2010
தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இனப்பிரச்சினைத் தீர்வு, தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அதன் சாத்தியப்பாடுகள் குறித்து நேற்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். கே. சிவாஜிலிங்கம் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சம்பந்தன் எம்.பி.யின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் ஈ. பி. ஆர். எல். எப். பத்ம நாபா அணிச்செயலாளர் ஸ்ரீதரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நேற்றைய சந்திப்புத் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம், தமிழர்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை இரண்டு தரப்பும் ஏற்றுக் கொண்டது.

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்து அரங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு கடந்த ஜுலை மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் பிரதியையும் நேற்று சம்பந்தனிடம் கையளித்தோம். தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்துகொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான திகதி, நேரம் மற்றும் இடம் பற்றி அறிவிக்குமாறு அவரிடம் நாம் கோரிக்கை விடுத்தோம் என்றார்.

இதேவேளை, கொழும்பில் உள்ள ஈ. பி. டி. பி. அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் தமிழர்களின் உடனடிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பான மகஜரொன்றை அரசாங்கத்திடம் கையளிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இந்த மகஜரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மகஜரில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு தமிழ்க் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் 13ஆம் 14ஆம் திகதிகளில் கூடவுள்ளது.

ஜனாதிபதியைச் சந்தித்து மகஜர் கையளிக்கப்பட்ட பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்ந்து டிசம்பருக்குள் திட்ட வரைபொன்றை தயாரிப்பது பற்றியும் நேற்றைய அரங்கக் கூட்டத்தில் ஆராய்ந்தோம்.

இரண்டாம் கட்டமாக மலையகக் கட்சிகளை அரங்கத்தில் இணைத்துக் கொள்வது பற்றியும் கலந்துரையாடி யிருந்தோம் என்றார்.

நேற்றைய சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்த சங்கரி, ஈ. பி. ஆர். எல். எவ். நாபா அணிச் செயலாளர் தி. ஸ்ரீதரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஆர். ராகவன், எஸ். சதானந்தன், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம். கே. சிவாஜிலிங்கம், துணைச் செயலாளர் ப. நித்தியானந்தம், சிறி ரெலோ சார்பில் ப. உதயராசா, கு. சுரேந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் என். குமரகுருபரன், ஈழமக்கள் ஏதிலியர் அமைப்பின் சார்பில் செ. சந்திரஹாசன், ரெமிஜியஸ் சிறிகுமார், டி மாணிக்கவாசகர், மனித உரிமைகள் இல்லத்தைச் சேர்ந்த மேகலா சண்முகம், யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, சந்திரமோகன், அங்கயற்கன்னி ஆகியோர் பங்குகொண்டனர்.

அரசியல் தீர்வொன்றின் மூலமே இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்- கத்தோலிக்க பேராயர்கள் சாட்சியம்.

Thursday, November 4, 2010
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென்று கத்தோலிக்க பேராயர்கள் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசியல் தீர்வொன்றின் மூலமே இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமென்று கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் அவர்கள் வலியுறுத்தினர்.

கர்தினாலாகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பேராயர் அதி வண. மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க திருச்சபையினர் நேற்று (03) நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் சாட்சிய மளித்தனர்.

வன்முறைகளுக்கான மூல காரணத்தையும் இனங்களுக் கிடையே அமைதியின்மை யையும், சந்தேகத்தையும், நம்பிக் கையீனத்தையும் இல்லாதொழிப்ப தற்கு அரசியல் தீர்வே ஒரே வழியாகுமென்று பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

சகல பாடசாலைகளிலும் மூன்று மொழிக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டுமென்று குறிப்பிட்ட பேராயர், அதன் மூலம் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படுமென்று அவர் தெரிவித்தார்.

அதேநேரம், சிங்களமும் தமிழும் உத்தியோக பூர்வ மொழிகளாகவும் தேசிய மொழிகளாகவும் அரசியலமைப்பில் பிரகடனப்படுத்த வேண்டுமென்றும் பேராயர் குறிப்பிட்டார். ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை சாட்சியமளிக்கையில், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள ஆயுதக் குழுக்களுக்குப் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் மலையகப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டு ள்ளதாகவும் ஆயர் சுட்டிக்காட்டினார். தேவேளை மக்கள் இழந்துவிட்டுள்ள உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவி புரிய வேண்டுமென்று குறிப்பிட்ட அவர், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளால்

கொல்லப்ப ட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த சட்டத்தரணி சமில் பெரேரா சாட்சியமளிக் கையில், புலிகள் இயக்கம் தோற்கடிக்கப் பட்டுள்ளதால் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் நீக்கிவிடலாமென்று ஆலோசனை தெரிவித்தார். வடக்கு, கிழக்குப் பதிகளில் சிவில் நிர்வாகம் பலப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

அருட்தந்தை ஜோர்ஜ் சிகாமணி சாட்சியமளிக்கையில், வடபகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி அந்தக் காணிகளை உரிய பொதுமக்களிடம் கையளிகக் வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். உயர் பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்தியிருப்பதால், பெறுமதியான விவசாய நிலங்கள் வீணாகுவதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். முல்லைத்தீவு, நந்திக் கடல் பகுதி மக்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்.

சம்பூர் மக்கள் அவர்களின் சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்று கூறியதுடன் இந்திய அகதி முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு அவர்களை அரசாங்கம் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

‘வன்னி மக்கள் தமக்கே உரிய தனித்துவமான வாழ்வியலைக் கொண்டுள்ளனர். அவர்கள் அவ்வாறே வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

அருட்தந்தை ரஞ்சித் மதுராவல சாட்சியமளிக்கையில், வட பகுதி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைச் சீராக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். அந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் களையப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.

சாட்சியத்தின் நிறைவில் குறுக்கு விசாரணை செய்த ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா, அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் உடனடியாக நீக்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகக் கூறியதோடு, அது தொடர்பில் சட்த்தரணி சமில் பெரேராவின் கருத்தினைக் கேட்டார்.

அதற்குப் பதில் அளித்த அவர், நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால் இந்தச் சட்டங்களை நீடிப்பதற்கான அவசியம் இல்லை எனக் கருதுவதாகக் கூறினார். நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்கான முதற்படியாக குறைந்தது அவசரகாலச் சட்டத்தையாவது நீக்க வேண்டுமென்றார்.

நிறைவாகக் கருத்துரைத்த பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழ வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. பிரிவினையை ஒருபோதும் நாம் ஆதரித்ததில்லை. இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்வதற்கு ஆரம்பம் முதலே முயற்சித்தோம். ஆனால், அடிப்படையில் இரு தரப்பிற்கும் நம்பிக்கை இல்லாததால் அது பலனளிக்கவில்லை’ என்றார்.

Followers

Blog Archive