Monday, November 8, 2010

வெலிக்கடைச் சிறைச்சாலை மோதல் குறித்து விசாரணை ஆரம்பம்.

Monday, November 8, 2010
வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆராய்வதற்குச் சிறைச்சாலைகள் ஆணையாளரினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் கெனத் பெர்னண்டோ தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ ஆர் டி சில்வா குறிப்பிட்டார்.

மோதலுக்கான காரணம் தொடர்பாக இந்தக் குழுவினால் பல பிரிவுகளினூடாக ஆராயப்பட்டு அறிக்கையொன்று பெறப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் கூறினார்.

இதேவேளை இந்த மோதல் தொடர்பாக இரகசிய பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பொலிஸ் குழு நேற்று மாலை வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்ததாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.

இதேவேளை மோதலில் காயமடைந்த 14 பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive