Tuesday, October 5, 2010

வன்னியில் மக்கள் கருத்து கேட்கும் நிகழ்வில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ்- வரதராஜப்பெருமாள்-- புதுக்குடியிருப்பில் மக்களை சந்திக்க சென்ற போது


Tuesday, October 5, 2010
புதுக்குடியிருப்பில் மக்களை சந்திக்க சென்ற போது பத்மநாபா ஈபிஆர்எல்எவ்-முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள்.

இறுதிக்கட்ட போரின் போது பெரிதும் பாதிகப்பட்ட இடங்களை பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இனர் பார்வையிட்டனர். அங்கு தற்போது மீள் குடியேற்றம் நடைபெற்று வரும் மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். மேலும் ஈபிஆர்எல்எவ் இன் உறுப்பினர் பலரையும் மீண்டும் சந்தித்து உறவுகளை புதுப்பித்து கட்சி வேலைகளை ஆரம்பித்து வைத்தனர். முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு பகுதிக்கு விஐயம் செய்த முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள் அங்கு நடைபெற்ற மீள் குடியேற்ற இடங்களை பார்வையிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------- -----------
வன்னியில் மக்கள் கருத்து கேட்கும் நிகழ்வில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ்- வரதராஜப்பெருமாள்.

மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறியும் நிகழ்வின் ஒரு பகுதியாக வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் தலைவர்களில் ஒருவரான முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை முதல் அமைச்சர் அ. வரதராஜப்பெருமாள். வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகர் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் எமது முன்னாள் தோழர் கணபதி கதிரவேலு (ரகுபரன்) அவர்களால் நடாத்தப்படும் ஸ்ரீஸ் கந்தராஐ இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியினை மங்கள விழக்கேற்றி ஆரம்பித்து வைத்து சிறப்புரையாற்றினார். அவருக்கு கோயில் நிர்வாகிகள் மற்றும் இசைக்குழுவினர் சார்பில் மாலைகள் அணிவித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்

அமைதியை நிலைநாட்ட ஜனாதிபதிக்கு வாய்ப்பென்கிறார் றொபேர்ட் ஓ பிளேக்.

Tuesday, October 5, 2010
இலங்கையில் பல்வேறு இனங்களிடையே ஜனநாயத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்கான வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்குக் கிடைத்துள்ளதாகத் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

உலகின் கொடூர பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றைத் தோற்கடித்துள்ளதன் மூலம் நாட்டில் நிலையான சமாதானத்தையும் வளமான அபிவிருத்தியையும் முன்னெடுப்பதற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தெற்காசியக் கொள்கைகள் குறித்து சன்டியாகோவில் நடைபெற்ற உலக விவகாரங்கள் தொடர்பான உரையின்போதே அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

மோதல்கள் அற்றதும் காத்திரமான பொருளாதார முன்னேற்றத்தையும் கொண்டதாக இலங்கையின் எதிர்காலம் அமையவுள்ளதாக கொழும்பிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.

வடமாகாண இலக்கிய விழா இறுதி நாள் விழா இன்று.

Tuesday, October 5, 2010
கடந்த முதலாம் திகதி கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் ஆரம்பமான வட மாகாண இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.

கிளிநொச்சி இந்துக் கல்லூரி 'மெட்றாஸ் மெயில் அரங்கில்' பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகும் இவ்விழாவை முன்னிட்டு கிளிநொச்சி பிரதான நகரிலிருந்து பண்பாட்டுப் பேரணியொன்றும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணக் கல்விப் பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் தலைமையில் இன்றைய இறுதிநாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வடமாகாண ஆளுநர் உட்பட அரச அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

சிறந்த நூல்களுக்கான பரிசுகள் மற்றும் கௌரவ ஆளுநர் விருது என்பவை வழங்கல், மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் என்பவை இடம்பெறவுள்ள இவ்விழாவில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழப்பு.

Tuesday, October 5, 2010
காலநிலை காரணமாக இதுவரை பத்துப்பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகிறது.

உயிரிழந்தோரில் 6 பேர் மின்னல் தாக்கத்தினால் பலியானதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இவர்களைத் தவிர மேலும் ஆறுபேர் இயற்கை அனர்த்தங்களால் காயங்களுக்குள்ளானதாகவும் அவர் சொன்னார்.

மழைவெள்ளம் காரணமாக முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளைச் சேர்ந்தோருக்கு இழப்பீடுகள் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மழை வெள்ளம் காரணமாக 30 வீடுகள் முற்றாகவும் 84 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ எச் எம் பௌசி குறிப்பிட்டார்.

Followers

Blog Archive