Tuesday, October 5, 2010

வன்னியில் மக்கள் கருத்து கேட்கும் நிகழ்வில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ்- வரதராஜப்பெருமாள்-- புதுக்குடியிருப்பில் மக்களை சந்திக்க சென்ற போது


Tuesday, October 5, 2010
புதுக்குடியிருப்பில் மக்களை சந்திக்க சென்ற போது பத்மநாபா ஈபிஆர்எல்எவ்-முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள்.

இறுதிக்கட்ட போரின் போது பெரிதும் பாதிகப்பட்ட இடங்களை பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இனர் பார்வையிட்டனர். அங்கு தற்போது மீள் குடியேற்றம் நடைபெற்று வரும் மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். மேலும் ஈபிஆர்எல்எவ் இன் உறுப்பினர் பலரையும் மீண்டும் சந்தித்து உறவுகளை புதுப்பித்து கட்சி வேலைகளை ஆரம்பித்து வைத்தனர். முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு பகுதிக்கு விஐயம் செய்த முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள் அங்கு நடைபெற்ற மீள் குடியேற்ற இடங்களை பார்வையிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------- -----------
வன்னியில் மக்கள் கருத்து கேட்கும் நிகழ்வில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ்- வரதராஜப்பெருமாள்.

மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறியும் நிகழ்வின் ஒரு பகுதியாக வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் தலைவர்களில் ஒருவரான முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை முதல் அமைச்சர் அ. வரதராஜப்பெருமாள். வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகர் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் எமது முன்னாள் தோழர் கணபதி கதிரவேலு (ரகுபரன்) அவர்களால் நடாத்தப்படும் ஸ்ரீஸ் கந்தராஐ இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியினை மங்கள விழக்கேற்றி ஆரம்பித்து வைத்து சிறப்புரையாற்றினார். அவருக்கு கோயில் நிர்வாகிகள் மற்றும் இசைக்குழுவினர் சார்பில் மாலைகள் அணிவித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive