Thursday, November 4, 2010

ரிபிசியின் வியாழக்கிழமை சிறப்பு அரசியல் கலந்துரையாடல்-முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஐப்பெருமாள் கலந்துரையாட உள்ளனர்!

Thursday, November 4, 2010
ரிபிசியின் வியாழக்கிழமை சிறப்பு அரசியல் கலந்துரையாடல்-முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஐப்பெருமாள் கலந்துரையாட உள்ளனர்!

இந் நிகழ்ச்சியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணி தலைவரும் முன்னால் வடகிழக்கு மகாணத்தின் முதலமைச்சருமான தோழர் வரதராஐப்பெருமாள் ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணியின் சர்வேதச பொருப்பாளர் தம்பா ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர் மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்

தொடர்புகளுக்கு 00 44 208 9305313 – 078107063682

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சம்பந்தன் எம்.பியுடன் சந்திப்பு தமிழர்களின் உடனடி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் ஒரே நிலைப்பாடு.

Thursday, November 4, 2010
தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இனப்பிரச்சினைத் தீர்வு, தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அதன் சாத்தியப்பாடுகள் குறித்து நேற்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். கே. சிவாஜிலிங்கம் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சம்பந்தன் எம்.பி.யின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் ஈ. பி. ஆர். எல். எப். பத்ம நாபா அணிச்செயலாளர் ஸ்ரீதரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நேற்றைய சந்திப்புத் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம், தமிழர்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை இரண்டு தரப்பும் ஏற்றுக் கொண்டது.

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்து அரங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு கடந்த ஜுலை மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் பிரதியையும் நேற்று சம்பந்தனிடம் கையளித்தோம். தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்துகொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான திகதி, நேரம் மற்றும் இடம் பற்றி அறிவிக்குமாறு அவரிடம் நாம் கோரிக்கை விடுத்தோம் என்றார்.

இதேவேளை, கொழும்பில் உள்ள ஈ. பி. டி. பி. அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் தமிழர்களின் உடனடிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பான மகஜரொன்றை அரசாங்கத்திடம் கையளிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இந்த மகஜரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மகஜரில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு தமிழ்க் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் 13ஆம் 14ஆம் திகதிகளில் கூடவுள்ளது.

ஜனாதிபதியைச் சந்தித்து மகஜர் கையளிக்கப்பட்ட பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்ந்து டிசம்பருக்குள் திட்ட வரைபொன்றை தயாரிப்பது பற்றியும் நேற்றைய அரங்கக் கூட்டத்தில் ஆராய்ந்தோம்.

இரண்டாம் கட்டமாக மலையகக் கட்சிகளை அரங்கத்தில் இணைத்துக் கொள்வது பற்றியும் கலந்துரையாடி யிருந்தோம் என்றார்.

நேற்றைய சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்த சங்கரி, ஈ. பி. ஆர். எல். எவ். நாபா அணிச் செயலாளர் தி. ஸ்ரீதரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஆர். ராகவன், எஸ். சதானந்தன், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம். கே. சிவாஜிலிங்கம், துணைச் செயலாளர் ப. நித்தியானந்தம், சிறி ரெலோ சார்பில் ப. உதயராசா, கு. சுரேந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் என். குமரகுருபரன், ஈழமக்கள் ஏதிலியர் அமைப்பின் சார்பில் செ. சந்திரஹாசன், ரெமிஜியஸ் சிறிகுமார், டி மாணிக்கவாசகர், மனித உரிமைகள் இல்லத்தைச் சேர்ந்த மேகலா சண்முகம், யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, சந்திரமோகன், அங்கயற்கன்னி ஆகியோர் பங்குகொண்டனர்.

அரசியல் தீர்வொன்றின் மூலமே இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்- கத்தோலிக்க பேராயர்கள் சாட்சியம்.

Thursday, November 4, 2010
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென்று கத்தோலிக்க பேராயர்கள் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசியல் தீர்வொன்றின் மூலமே இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமென்று கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் அவர்கள் வலியுறுத்தினர்.

கர்தினாலாகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பேராயர் அதி வண. மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க திருச்சபையினர் நேற்று (03) நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் சாட்சிய மளித்தனர்.

வன்முறைகளுக்கான மூல காரணத்தையும் இனங்களுக் கிடையே அமைதியின்மை யையும், சந்தேகத்தையும், நம்பிக் கையீனத்தையும் இல்லாதொழிப்ப தற்கு அரசியல் தீர்வே ஒரே வழியாகுமென்று பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

சகல பாடசாலைகளிலும் மூன்று மொழிக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டுமென்று குறிப்பிட்ட பேராயர், அதன் மூலம் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படுமென்று அவர் தெரிவித்தார்.

அதேநேரம், சிங்களமும் தமிழும் உத்தியோக பூர்வ மொழிகளாகவும் தேசிய மொழிகளாகவும் அரசியலமைப்பில் பிரகடனப்படுத்த வேண்டுமென்றும் பேராயர் குறிப்பிட்டார். ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை சாட்சியமளிக்கையில், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள ஆயுதக் குழுக்களுக்குப் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் மலையகப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டு ள்ளதாகவும் ஆயர் சுட்டிக்காட்டினார். தேவேளை மக்கள் இழந்துவிட்டுள்ள உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவி புரிய வேண்டுமென்று குறிப்பிட்ட அவர், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளால்

கொல்லப்ப ட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த சட்டத்தரணி சமில் பெரேரா சாட்சியமளிக் கையில், புலிகள் இயக்கம் தோற்கடிக்கப் பட்டுள்ளதால் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் நீக்கிவிடலாமென்று ஆலோசனை தெரிவித்தார். வடக்கு, கிழக்குப் பதிகளில் சிவில் நிர்வாகம் பலப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

அருட்தந்தை ஜோர்ஜ் சிகாமணி சாட்சியமளிக்கையில், வடபகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி அந்தக் காணிகளை உரிய பொதுமக்களிடம் கையளிகக் வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். உயர் பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்தியிருப்பதால், பெறுமதியான விவசாய நிலங்கள் வீணாகுவதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். முல்லைத்தீவு, நந்திக் கடல் பகுதி மக்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்.

சம்பூர் மக்கள் அவர்களின் சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்று கூறியதுடன் இந்திய அகதி முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு அவர்களை அரசாங்கம் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

‘வன்னி மக்கள் தமக்கே உரிய தனித்துவமான வாழ்வியலைக் கொண்டுள்ளனர். அவர்கள் அவ்வாறே வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

அருட்தந்தை ரஞ்சித் மதுராவல சாட்சியமளிக்கையில், வட பகுதி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைச் சீராக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். அந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் களையப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.

சாட்சியத்தின் நிறைவில் குறுக்கு விசாரணை செய்த ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா, அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் உடனடியாக நீக்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகக் கூறியதோடு, அது தொடர்பில் சட்த்தரணி சமில் பெரேராவின் கருத்தினைக் கேட்டார்.

அதற்குப் பதில் அளித்த அவர், நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால் இந்தச் சட்டங்களை நீடிப்பதற்கான அவசியம் இல்லை எனக் கருதுவதாகக் கூறினார். நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்கான முதற்படியாக குறைந்தது அவசரகாலச் சட்டத்தையாவது நீக்க வேண்டுமென்றார்.

நிறைவாகக் கருத்துரைத்த பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழ வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. பிரிவினையை ஒருபோதும் நாம் ஆதரித்ததில்லை. இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்வதற்கு ஆரம்பம் முதலே முயற்சித்தோம். ஆனால், அடிப்படையில் இரு தரப்பிற்கும் நம்பிக்கை இல்லாததால் அது பலனளிக்கவில்லை’ என்றார்.

Followers

Blog Archive