Tuesday, April 27, 2010

வடக்கு கிழக்கு பொலிஸாருக்கு தமிழ் மொழிப் பயிற்சி!

Tuesday, 27 April 2010
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சேவையாற்றும் ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழி பயிற்சிகளை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவூம் இதன் மூலம் மக்களுக்குத் தேவையான சேவைகளை சிறந்த முறையில் வழங்க முடியூம் என்று எதிh;பாh;ப்பதாகவூம் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசு+ரிய தெரிவித்தார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது பொலிஸ் அகடமி திறப்பு விழாவில் உரையாற்றிய போதே பொலிஸ் மா அதிபா; மேற்கண்டவாறு கூறினாh;. அவா; தொடா;ந்து கூறுகையில்.
யாழ்ப்பாணம் வவூனியா மன்னார் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சேவையாற்றும் பொலிஸாருக்கு இந்த பயிற்சி வழங்கப்படவூள்ளது.
இவ்வாறான பயிற்சி வழங்குவதன் மூலம் பொலிஸாரால் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான சேவைகளை சிறந்த முiறியல் வழங்க முடியூம்.
மூன்று மாதங்களுக்கு 300 பேர் என்ற அடிப்படையில் ஐந்து வருடத்திற்கு ஆறாயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும்.
பொலிஸாரின் தொழில் ரீதியான ஆளுமைகளை மேம்படுத்துவதே பிரதான நோக்கமாகும். இந்த பொலிஸ் அகடமியை இதற்கு உச்ச அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
காளணி பல்கலைக்கழகத்துடன் இந்த பொலிஸ் அகடமியை இணைத்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

உலக வங்கி 100 மில்லியன் கடனுதவி

Tuesday, 27 April 2010
வடக்கின் புனரமைப்பு பணிகளுக்காக உலக வங்கி 100 மில்லியன் ரூபாவினை கடனுதவியாக வழங்கத் தீர்மானித்துள்ளது. தௌ்ளிப்பழை மற்றும் உடுவில் பிரதேசங்களில் 3000 குடும்பங்களை மீள் குடியேற்றுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
பலாலி உயர் பாதுகாப்பு வலயங்களை அண்மித்த பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர். வடிகாலமைப்பு திட்டங்களும் புனர்நிர்மாணம் செய்யப்பட உள்ளதாக வடக்கின் வசந்தம் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளா கே.விஸ்வலிங்கம் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு கடனுதவிகளும் வழங்கப்பட உள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது.

Monday, April 26, 2010

வவுனியாவில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பொலிஸாரினால் மீட்பு

Monday, 26 April 2010
வவுனியாவில் கடத்தப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும்போது, கடத்தப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், வவுனியா அலுவலக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கைதுசெய்யப்பட்ட குறித்த உறுப்பினர் வழங்கிய தகவலையடுத்தே, மேற்படி கடத்தப்பட்டிருந்த நபர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டார்.

ஜெனரலின் அடிப்படை உரிமை வழக்கு இன்று

Monday, 26 April 2010
கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதம நீதியரசர் அசோக என் டி சில்வா தலைமையில் காமினி அமரதுங்க, கே ஸ்ரீபவன் ஆகிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகளுக்குப் பதிலளிக்கும் முகமாக மனுதாரர் சார்பில் விடயங்களை முன்வைப்பதற்கு மூன்று வாரகால அவகாசம் வழங்குமாறு ஜெனரல் பொன்சேகா சார்பில் பிரசன்னமாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் உயர்நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
ஜெனரலைக் கடந்த சில நாட்களாகச் சந்திக்கமுடியாமல் போனதால் உரிய பதிலை வழங்கமுடியாமல் போனதாக ஜனாதிபதி சட்டத்தரணி உயர் நீதிமன்றில் தெரிவித்தார்.
இதற்கிணங்க ஜெனரல் பொன்சேகா சார்பில் விடயங்களை முன்வைப்பதற்காக மூன்றுவார கால அவகாசத்தை உயர்நீதிமன்றம் வழங்கியது.
சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே கூடிய விரைவில் தம்மை விடுவிக்குமாறு பொன்சேகா நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனுமீதான விசாரணை ஜூலை மாதம் 8 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பூட்டானில் எமது ஜனாதிபதிக்கு உற்சாகமான வரவேற்பு!

Monday, 26 April 2010
பூட்டான் தலைநகரான திம்புவில் நாளை மறுதினம் ஆரம்பமாகும் 16 ஆவது சாh;க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூக்கு பாரோ சா;வதேச விமன நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
பூட்டான் ஜனாதிபதி ஜிக்மி யோசா; தின்லேயூம் மற்றும் அமைச்சா;கள் பலரும் விமான நிலையம் வந்து ஜனாதிபதிக்கும் அவா; தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவூக்கும் உற்சாகமான வரவேற்பளித்தனா;.
பூட்டான் உச்சிமாநாட்டை பொறுப்பேற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும். சார்க் அமைப்பின் தலைமைப் பதவியை தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகித்து வருகின்றார என்பது குறிப்பிடத்தக்கது

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மீண்டும் கோத்தாபய ராஜபக்ஷ!

Monday, 26 April 2010
புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு செயலாளராக கோத்தாபய ராஜபக்ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாh;. நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கினாh;.
கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பா; மாதம் 25 ஆம் திகதி இவா; முதலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டாh;.
கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் சிறப்பாகப் பணிபுரிந்த இவா; இலங்கையில் மூன்று தசாப்தங்கள் நிலவிய பயங்கரவாதத்தை முறியடித்து புலிகளை தோற்கடிக்க முப்படைகளின் சேனாதிபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினாh;.

Sunday, April 25, 2010

ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கையின் பதில் தூதுவர் கலந்துரையாடல்


SUNDAY APRIL 25, 2010
ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கையின் பதில் தூதுவரும், vaanniசமரின்பூத்57வது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கிச் சென்றவருமான மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் அவர்களுக்கும் சுவிஸிலுள்ள தமிழ் சிங்கள மக்களுக்குமிடையிலான கலந்துரையாடல்நேற்றையதினம் சூரிச் மாநகரில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ,ஈ.பி.டி.பி,ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமிழ் சிங்களப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலை ஆரம்பித்துக் கருத்துரைத்த மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ், வன்னிப் போரின் போது தம்மால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்து விளக்கியதுடன். புலிகள் இயக்கம் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டுள்ள போதிலும் புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள புலி ஆதரவாளர்கள் நாடு கடந்த தமிழீழம், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று கூறிக்கொண்டு இறந்த புலிகளுக்கு உயிர் கொடுக்கலாமென்று கனவு காண்கின்றனர். இவ்வாறானவர்களின் எண்ணம் ஒருபோதுமே நிறைவு பெறாது என்று தெரிவித்தார். அத்துடன் நாடு கடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை தீர்மானம் என்று கூறிக் கொண்டு மக்களைக் குழப்பும் விதத்திலும் மக்களின் அவலத்தில் குளிர்காயும் செயற்பாடுகளிலும் ஈடுபடும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் தொடர்பிலான தகவல்களை எமக்கோ அல்லது தூதுவராலயக பிரதிநிதிகளுக்கோ அன்றில் உங்கள் அருகிலுள்ள நீங்கள் சார்ந்த சுவிஸ் ஜேர்மன் நாடுகளின் பொலீசாருக்கோ தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் கடத்தப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெயாந்;த நிலையில் காணாமற் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட தகவல்களை அறிய விரும்புவோர் என்னிடம் நேரடியாகவே அவர்கள் குறித்த தகவல்களை தரும்பட்சத்தில் அதுபற்றி உரிய கவனம் செலுத்தி அறிந்து அவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் புலிகளால் பலாக்காரமாகவும், சிறுவர் போராளிகளாகவும் இணைக்கப்பட்ட யாவரையும் முடிந்தவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு தெரிந்தவர்கள் எவரும் இவ்வாறான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் அதுகுறித்து உரியவிபரம் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அத்தகையவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென உத்தரவாதம் தருகிறேன் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இக்கலந்துரையாடலின் போது தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும், தீர்வினைப் பெற்றுக் கொள்ள எவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளலாம் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி சார்பில் மகேந்திரன், ராஜ்மோகன், பரந்தாமன், ஜோசெப், மற்றும் நேசன், ஈசன் போன்றவர்களும் இக்கலந்துரையாடலில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்போது கருத்துரைத்த ஈ.பி.டி.பி சார்பில் கலந்து கொண்ட மகேந்திரன், அன்று புலிகளுக்காக பிரச்சாரம் செய்து அவர்களுக்காவே நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததுடன் மற்றும் அரசுடன் நெருங்கி செயற்பட்டு வரும் தமிழ் அமைச்சரைப் புலிகளுடன் சேர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த பலரும்.. உதாரணமாக கனடாவின் வர்த்தக சங்கங்கள் போன்றோர் தற்போது ஜனாதிபதி ராஜபக்சவுடன் இணைந்து தாம் அரசுக்கு ஆதரவானவர்கள் என்று காட்டிக் கொண்டு அரசுடன் நெருங்கி செயற்பட்டு வருகின்றனர். இதுவரை காலமும் அரசுடன் இணைந்து செயலாற்றி வந்த எம்மையே இந்நடவடிக்கைகள் கேள்விக்குறியாக்கியுள்ளன என்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்துரைத்த மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ், இது தொடர்பில் தாங்கள் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும், குறித்த வர்த்தகர்கள் உண்மையாகவே மனம் விரும்பி, உண்மையில் மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு மக்களுக்காக சேவையாற்ற முன்வருவார்களாயின் நாம் அவர்களை அங்கீகரிக்க வேண்டுமென்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கருத்துரைத்த பாசல் நேசன், புலிகள் என்று கூறி எவரையும் ஒதுக்கிவிடக் கூடாதென்றும், யாராவது மனமுவந்து அரசுடன் இணைந்து செயற்பட முன்வரும் பட்சத்தில் அவர்களையும் இணைத்துக் கொண்டு பணிகளைச் செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டதுடன், உதாரணமாக கனகரத்தினம் எம்பியை அரசு இணைத்து செயற்படுவது போன்றதே இந்நடவடிக்கையும் என்று சுட்டிக் காட்டினார்.
இதனைத் தொடர்ந்து ஈ.பி.டி.பி மகேந்திரன் மேலும் கருத்துரைக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் உரியவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றங்கள் செய்யப்பட வேண்டுமென்றும் தெரிவித்ததுடன், இவ்விடயம் தொடர்பிலான பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்தார். இது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் குறிப்பிட்டார்.
கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த மற்றொருவர் கருத்துரைக்கையில், ஜீரிவி தீபம் போன்ற ஊடகங்கள் தற்போது புலிசார்பான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஊடகங்களை ஏன் தடை செய்யக் கூடாதென்று? கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த மேஜர் ஜெனரல், அவர்கள் புலிகளுக்காகத் தான் செயற்படுகிறார்கள் என்கிற விடயம் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் பட்சத்தில் நாம் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வோம். தவிர ஆதாரமில்லாத பட்சத்தில் இவ்விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதென்பது மிகவும் கடினமான விடயமாகும் என்று தெரிவித்தார். ஈ.பி.டி.பியின் ராஜ்மோகன் கருத்துரைக்கையில், கீரிமலையில் உள்ள பாதுகாப்பு தரப்பினரின் கடல்கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும். யாழ். வர்த்தகர்களுக்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்விடயம் தொடர்பிலும் தான் கூடிய கவனம் செலுத்துவதாக மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தினை நிறைவுசெய்யுமுன் தனது கருத்தினை வெளியிட்ட மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் அவர்கள், வெளிநாடுகளில் தொடர்ந்தும் சிலர் புலிகளுக்கு உயிரூட்டுவதாக எண்ணி தங்கள் அறிவீனமான செயற்பாடுகளை தொடர்கின்றனர். அவர்களுக்கு உண்மை நிலைமைகளை தெளிவுபடுத்தி அவர்களையும் சமூக அக்கறையுடனான செயற்பாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுவரை காலமும் எம்மோடு இணைந்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் செயற்படும் அனைவருக்கும் எனது நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ_க்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது. மற்றும் மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ், தம் வருகையை நினைவுபடுத்தும் விதமாக தமிழ்ப் பாடப் புத்தங்கள் சிலவற்றையும் கையளித்தார். இதனைத் தமிழ் மக்கள் சார்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் ராஜன் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மேற்படி கலந்துரையாடல் சுமுகமாக நிறைவுபெற்றது..!!!

மாறுபட்ட கருத்துகளுடைய தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தையில்.

SUNDAY APRIL 25, 2010
தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை மற்றும் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் வடக்கு கிழக்கில் வெவ்வேறு கருத்துகளுடைய பிரதான கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளுக்கான சமிக்ஞைகள் உருவாகியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஒற்றுமை அவசியப்படுவதாக தமிழ் பேசும் மக்களிடையே கருத்துகள் நிலவி வருகின்றன. இதனால் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும்பொருட்டு மாறுபட்ட கருத்துகளுடைய தமிழ்க் கட்சிகளின் தலைமைத்துவங்கள் எதிர்வரும் வாரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜி.எல்.பீரிஸ் பூட்டான் விஜயம்

SUNDAY APRIL 25, 2010
புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.எல்.பீரிஸ் 7 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பூட்டான் செல்லவுள்ளார்.
இவர் நாளைய தினம் பூட்டான் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பூட்டானில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அங்கு செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரோமேஷ் ஜயசிங்க மற்றும் இலங்கைக்கான சார்க் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் பூட்டான் செல்கின்றனர்.
ஜி.எல்.பீரிஸ் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவரது முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஆறுமுகன் தொண்டமான் இன்று அல்லது நாளை அமைச்சர் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தகவல்

SUNDAY APRIL 25, 2010 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஆறுமுகன் தொண்டமான் எம். பி இன்று அல்லது நாளை அமைச்சுப் பதவி ஏற்கவுள்ளாரெனத் தெரியவருவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் இது தொடர்பில் இன்னமும் முடிவுகள் எட்டப்படவில்லையெனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த அமைச்சரவையில் வகித்த அமைச்சுப் பொறுப்புகள் இந்தமுறை எவருக்கும் மீள வழங்கப்படாததால்,இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அமைச்சைப் பெறுவது சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆறுமுகன் தொண்டமான் எம். பிக்குக் கால் நடை அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்ட போதிலும் அதனை அவர் ஏற்கவில்லையெனத் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

Saturday, April 24, 2010

'மஹிந்த சிந்தனை' கீழ் இவ்வருடம் 20,000 குடும்பங்களுக்கு வீடு

SATURDAY, APRIL 24, 2010
மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டத்துக்கு அமைவாக 2010 ஆம் ஆண்டில் மேலும் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
கடந்த நான்கு வருட காலத்தில் 91 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் இதற்காக 4,127 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு வீட்டுக்கு அதிகபட்ச நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் இதற்குப் புறம்பாக 2010 ஆம் ஆண்டு 'நகரத்தைக் கட்டி எழுப்புவோம்' திட்டத்தின் கீழ் 1500 அடுக்குமாடி வீடுகளை அமைக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரணில் இருக்கும்வரை ஐதேமுவுடன் தொடர்பில்லை : மனோ கணேசன்

SATURDAY, APRIL 24, 2010
ஐக்கிய தேசிய முன்னணியில் ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை தாம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் எது வித தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து தாம் முற்றாக விலகியுள்ளதுடன்' இனி வரும் காலங்களில் தொடர்ந்து தனித்து செயற்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று மலை 5.00 மணிக்கு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற இருக்கும் மத்திய குழு கூட்டத்தின் போது' இவ்விடயம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து' மனோ கணேசனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே எமது இணையத் தளத்திடம் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்

பதவியை எதிர்பார்க்காமல் ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் உதவி - போகொல்லாகம

SATURDAY, APRIL 24, 2010
பதியிடம் தாம் எந்தப்பதவியையும் கேட்கப்போவதில்லை என முன்னாள் வெளிவிவகார
அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாகவும்,தேசத்தை கட்டியெழுப்புவதில் ஜனாதிபதிக்கு தாம் முழு உதவிகளையும் வழங்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியிடம் ஏதாவது பதவிகளை கேட்பீர்களா என்று போகொல்லாகமவிடம் வினவியது.
தன்னுடைய வாழ்க்கையில் யாரிடமும் தாம் பதவிகளை கேட்டதில்லை என்று போகொல்லாகம இதற்கு பதிலளித்தார்.
எனினும்,தாம் மக்களிடம் வாக்குகளை மாத்திரம் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Friday, April 23, 2010

ஜனாதிபதி பூட்டானிற்கு விஜயம்

Friday, April 23, 2010
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பூட்டானுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவிருக்கின்றார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பூட்டானில் நாளை 23ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற 16ஆவது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அங்கு செல்லவிருக்கின்றார்.
2008ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற 15ஆவது சார்க் உச்சி மாநாட்டின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பொறுப்புக்களை பூட்டான் பிரதமரிடம் இந்த மாநாட்டின்போது ஒப்படைப்பார். 16ஆவது சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது

ஜனநாயக மக்கள் முன்னணி ஐ.தே முன்னணியிலிருந்து விலகுகிறது?

Friday, April 23, 2010
ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகுவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி ஏற்கனவே வழங்கியிருந்த உறுதிமொழிக்கமைய தேசியப் பட்டியலில் ஆசனமொன்றைத் தமது கட்சிக்கு வழங்காமையே இதற்கான காரணமென அவர் சொன்னார்.
இவ்வாறான இணக்கப்பாடொன்றின் அடிப்படையிலேயே மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டதாகவும் ஆனால் இணக்கப்பாட்டிற்கு அமைய ஐக்கிய தேசிய முன்னணி நடந்துகொள்ளாமையினால் தமது கட்சி இந்த முன்னணியிலிருந்து விலகி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டே சுயாதீனமாக இயங்கவுள்ளதாக அவர்எமக்குத் தெரிவித்தார்.
இதேவேளை நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொழிலாளர் தேசிய முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளார்.
சில விடயங்களைக் கவனத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகப் பாராளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் கூறினார்.

இலங்கையை வழமைக்குக் கொண்டுவர, அரசாங்கம் தனக்குக் கிடைத்த ஆணையைச் சரியாகப் பயன்படுத்தவேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Thursday, 22 April 2010
இலங்கையை வழமைக்குக் கொண்டுவர, அரசாங்கம் தனக்குக் கிடைத்த ஆணையைச் சரியாகப் பயன்படுத்தவேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்காகத் தமது நாடு இலங்கையைத் தொடர்ந்தும் ஊக்குவிக்குமென அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் பிலிப் ஜே க்ரோலி கூறினார்.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Thursday, April 22, 2010

ருக்மன் ஐதேகவிலிருந்து விலகுவது குறித்து அறிவிக்கப்படவில்லை : திஸ்ஸ

ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான ருக்மன் சேனாநாயக்க பதவி விலகுவது தொடர்பில் உத்தியோகபூர்வமாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
.தே.கவின் தேசியப்பட்டியலில் ருக்மன் சேனாநாயக்கவின் பெயர் உள்ளடக்கப்படாததையடுத்து அவர் பதவி விலகவுள்ளார் என்ற தகவல் வெளியானது.
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ருக்மன் சேனாநாயக்க பதவி விலகுவது தொடர்பாக பேசப்படுகின்ற போதிலும் உத்தியோகபூர்வமாக கட்சியின் தலைமைத்துவத்துக்கு அறிவிக்கப்படவில்லை என்றார்.
.தே.கட்சியின் உள்ளக வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவலின்படி ருக்மன் சேனாநாயக்க விரைவில் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

20வது பிரதமராக தி.மு பதவிப் பிரமாணம்


THURSDAY, APRIL 22, 2010- இலங்கையின் 20வது பிரதமராக தி. மு. ஜயரட்ன நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று மாலை 6.30 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதோடு புதிய பிரதமருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இதேவேளை, பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளுமென உத்தியோகபூர்வ வட்டாரங்கள் கூறின.
40 பேரைக் கொண்ட இந்த அமைச்சரவை ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் வரை இருக்குமென சு.க. செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்கிடையில், இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 8.45க்கு ஆரம்பமாகிறது.
இலங்கையின் 20வது பிரதமராக பதவியேற்றுக்கொண்ட டி. எம். ஜயரட்ன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட 225 உறுப்பினர்களும் இன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர். அதற்கு முன்னதாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும். சபாநாயகராக தெரிவு செய்யப்படும் உறுப்பினர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இடம்பெறும்.
குழுக்களின் பிரதித் தலைவர், ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு பிரதம கொரடா, அவைத் தலைவர் போன்றோரின் தெரிவுகளும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும். நடந்து முடிந்த பொதுத் தேர்தல்மூலம் ஏழாவது பாராளுமன்றத்துக்கு தெரிவான 196 உறுப்பினர்களும், தேசியப் பட்டியல் மூலம் தெரிவான 29 உறுப்பினர்களுமாக 225 பேரும் இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளனர்.
குறிப்பாக ஐ.ம.சு.மு., ஐ.தே.க., ஐ.தே.கூ., இ. தமிழரசுக் கட்சி ஆகியவற்றில் புது முகங்களாக சுமார் 70 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8.45க்கு நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் சபை எதிர்வரும் மே 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படவுள்ளது.

அடைய முடியாத இலக்குகளை அடைய முயலும் த.தே கூட்டமைப்பு

THURSDAY, APRIL 22, 2010
மட்டக்களப்பு வாடி வீட்டில் இடம்பெற்ற கட்சியின் உயர் மட்டக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆற்றிய உரை.
காலங்காலமாக தமிழ் மக்களின் அரசியல் இருப்பின் சொந்தக்காரர்கள் என தங்களை இனங்காட்டிக் கொண்டு காலத்தை கடத்திய வரலாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்குரியது. அன்றும் சரி இன்றும் சரி இக்கூட்டமைப்பினது அரசியல் பிரவேசமானது தமிழ் தேசியத்தின் உருவாக்கமாகவே அமைந்திருந்தது. ஆனால் அது எமது தமிழ் மக்களுக்கு கற்பனைக்குக் கூட எட்டாத ஒன்றாக இருக்கின்றது.
அதனையே இவர்கள் அடைய முயற்சிக்கிறார்கள். போராட்ட காலங்களில் தனித் தமிbழம் என்றார்கள். இன்று வடக்கு கிழக்கு இணைப்பு என்கிறார்கள். இதே போன்று பல அடைய முடியாத இலட்சியங்களுக்காய் காலங் காலமாக குரல் கொடுப்பவர்கள்தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.
நடந்து முடிந்திருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக நாம் ஓர் விடயத்தினை தெளிவாக புரிந்துகொள்ளலாம். அதாவது தற்போது கூட்டமைப்பின் பிரசாரப் பீரங்கிகளாகச் செயற்படுகின்ற சில தமிழ் ஊடகங்கள் வடக்கு, கிழக்கு இணைப்பினை முதன்மை படுத்தி தமது பிரசாரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்களுக்கும் கூட்டமைப்பினருக்கும் நான் ஓர் விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
அதாவது நடந்து முடிந்த தேர்தலை ஓர் பரீட்சார்த்தமான தேர்தலாக நோக்குவோமாயின், அதாவது வடக்கு கிழக்கு இணைப்பிற்கான சர்வசன வாக்கெடுப்பு தேர்தலாக இதனை நோக்குவோமாயின் கூட மொத்தமாக கிழக்கு மாகாணத்திலே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக 995612 பேர் உள்ளனர். இதில் மட்டக்களப்பில் 333,644 பேரும், திருகோணமலையில் 241,133 பேரும், அம்பாறையில் 420,835 பேரும் இருக்கிறார்கள்.
இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலே 66235 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களையும் திருகோணமலையில் அண்ணளவாக 28892 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் (முழுமையான தேர்தல் முடிவு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) அம்பாறையில் 26895 வாக்குகளை பெற்று ஒரு ஆசனமாக மொத்தமாக ஐந்து ஆசனங்களை பெற்றிருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்திலே மொத்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற மொத்த வாக்குகள் 122022 ஆகும்.
எனவே கிழக்கில் இருக்கின்ற மொத்த தமிழர்களிலே இவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களை வைத்து ஒப்பிடும் போது கூட தெளிவாக விளங்குகின்றது. வடகிழக்கு இணைப்பு சாத்யமில்லை என்பது வடக்கு கிழக்கு இணைப்பிற்கான ஆணை இதுவென அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் விகிதாசார ரீதியாக ஒப்பிட்டு நோக்குகின்ற போது த. தே. கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கின்ற விகிதாசாரம் 12.25 ஆகும்.
எனவே இதனை அனைத்து சமூகமும் தெளிவாக சிந்தித்து பார்க்க வேண்டும். கிழக்கு மாகாணம் வட மாகாணத்தைப் போல் தனியான தமிழ் பிராந்தியம் அல்ல. மாறாக தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என மூவினத்தவர்களும் செறிந்து வாழ்கின்ற மாகாணம் ஆகும். ஆகவே மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற வாக்காளர்கள் தொகை 995612 பேராகும். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருக்கின்ற வாக்குகள் வெறுமனவே 122022 ஆகும். எனவே இந்த விகிதாசார அடிப்படையில் பார்த்தால் கூட அவர்கள் சொல்வதனைப் போன்று வட கிழக்கு இணைப்பிற்கான ஆணை கிடைக்கவில்லை.
இவர்கள் பல நெடுங்காலமாக இவ்வாறாக அடையமுடியாத இலக்குகளை அடைவதற் காக மக்களை பகடைக்காய்களாக பயன் படுத்திய வரலாறுகள் எமக்கு தெரிந்தவை களே. எனவே தற்போது முடிவடைந்திருக் கின்ற தேர்தல் முடிவினை வைத்துக் கொண்டு த.தே கூட்டமைப்பும் அவர்களுக்கு ஊதுகுழலாகச் செயற்படுகின்ற குறிப்பிட்ட சில தமிழ் ஊடகங்களும் வட கிழக்கு இணைப்பு தொடர்பாக கதைப்பதற்கு தகுதி அற்றவர்களே என்பதனை தெளிவாக நான் எடுத்துக் கூறுகின்றேன்.
ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வுகாண வேண்டும் எனக்கூறும் இத் தேசிய கூட்டமைப்பினர், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையே ஏற்காதவர்களாகச் செயற்படுகின்றமை மிகவும் வேதனையளிக் கின்றது. அதாவது வடக்கு கிழக்கு நிர்வாக ரீதியாக பிரிக்கப்படுகின்றது என்கின்ற தீர்ப்பினை வழங்கிய உயர் நீதிமன்ற தீர்ப்பினையே ஏற்காத இக் கூட்டமைப்பு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியிரசின் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு காண்பது என்பது எவ்வளவு வேடிக்கை என்பதனை அனைத்து அரசியல் ஆர்வலர்களும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்காக கிடைத்திருக்கின்ற குறைந்த பட்ச தீர்வு என்றால் அது மாகாண சபை முறைமைதான். மாகாண சபை முறைமை கிழக்கில் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. இதே போல் வடக்கிலும் ஏற்படுத்தப்படுமாயின் ஓர் தமிழர் முதலமைச்சராக வரமுடியும். எனவே அரசியல் ரீதியில் தமிழர்களின் பலம் ஓங்க இவை வழிவகுக்கும்.
இதான எல்லாம் விட்டு விட்டு வடக்கு கிழக்கு இணைப்புத்தான் இன்று எமது தமிழ் மக்களுக்கான தீர்வு என இக் கூட்டமைப்பினர் கூறுவது ஒருபுறம் வேதனையளித்தாலும், அது இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் நடக்க முடியாத ஒன்றாகும். நான் ஏற்கனவே கூறியது போல கிழக்கில் சர்வசன வாக்கெடுப்பு நடந்தால் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற வாக்குகளின் பிரகாரம் பார்க்கின்ற போது அது நடக்க முடியாத ஒன்றாகும்.
இவர்களது இவ்வாறான பேச்சுக்கள் மூலம் ஒன்று மட்டும் புலனாகின்றது அதாவது தாங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மக்களின் அரசியல் ஏக பிரதிநிதிகளாக காலங் காலமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களினது எண்ணப்பாடாகும். கிழக்கில் நிலையான அரசியல் தலைமை உருவாவதனை அவர்கள் விரும்பவில்லை என்பது எனது எண்ணப்பாடாகும். இதனூடாக நான் பிரதேசவாதம் பேசவில்லை. காலங்காலமாக எமது மக்களை இவ்வாறாகத்தான் இந்த த. தே. கூட்டமைப்பினர் வழி நடத்தியிருக் கின்றார்கள். இதனை எல்லாம் இனிவரும் காலங்களிலாவது குறிப்பாக எமது கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்து கொள்வார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
எனவே இத் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளுக்கும் அவ் அரசியல் தலைமைகளுக்கும் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இவ்வளவு காலமும் எமது தமிழ் மக்கள் பட்ட அவலங்கள் போதும். இனிவரும் காலங்களிலாவது அவர்கள் நிம்மதியாக வாழ வழி சமைத்துக் கொடுங்கள். ஏலவே 22 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து எதையுமே சாதிக்கவில்லை தற்போது 14 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து ஏதாவது செய்ய முயற்சியுங்கள்.
thinakaran

Wednesday, April 21, 2010

கிழக்குப் பல்கலை திருமலை மாணவரை வெளியேற உத்தரவு

Wednesday, 21 April 2010
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலைக் கட்டடத்திலிருந்து, மாணவரை இன்று மாலை 4 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும் மாணவருக்குமிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கட்டிடத்தில் நீர் வசதிகள் உட்பட பல வசதியீனங்கள் மத்தியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டுள்ளதாக மாணவர் சங்கத்தின் தலைவர் புத்திக திசாநாயக்க தெரிவித்தார்.
பல்கலைக்கழக அதிகாரி ஒருவரிடம் இது தொடர்பாக வினவியபோது பல்கலைக்கழகத்தில் தண்ணீர்ப் பிரச்சனை இருப்பதை ஏற்றுக்கொண்டார்.
நேற்று ஏற்பட்ட அமைதியின்மையின்போது மாணவர்கள் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர்மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் சொன்னார்.

வவுனியாவில் சிறுமி கொலை

Wednesday, 21 April 2010
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் 9 வயதான சிறுமியொருத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
புகுந்து கொள்ளையிட்ட சிலர் இந்தக் கொலையைப் புரிந்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்

பொதுத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு 144 ஆசனங்கள்

Wednesday, 21 April 2010
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் ஆசனங்களுடன் மொத்தம் 144 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.

ரத்துச் செய்யப்பட்டிருந்த திருகோணமலை - கும்புறுப்பிட்டி, நாவலப்பிட்டி தேர்தல் பிரிவுகளின் முடிவுகள் நேற்று இரவும் இன்று காலையும் அறிவிக்கப்பட்டதையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடெங்கிலுமிருந்து மொத்தமாக 4,846,388 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அது இம்முறை வாக்காளர் அளித்த மொத்த வாக்குகளில் 60.33 சதவீதமாகும்.

இந்த வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, வாக்களிப்பின் மூலம் 127 பாராளுமன்ற ஆசனங்களும், தேசியப் பட்டியலின் மூலம்17 ஆசனங்களுமாக மொத்தம் 144 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

2,557,057 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்களிப்பின் மூலம் 51 ஆசனங்களும் தேசியப்பட்டியல் மூலம் 9 ஆசனங்களுமாக மொத்தம் 60 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இவ்விரு கட்சிகளைத் தவிர ஆசனங்கள் அடிப்படையில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி 233,190 வாக்குகளைப் பெற்றுள்ளது.

வாக்களிப்பின் மூலம் அக்கட்சி 13 ஆசனங்களையும் தேசியப் பட்டியல் மூலம் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 441,261 வாக்குகளைப் பெற்றிருந்தாலும் அக்கட்சிக்கு வாக்களிப்பின் மூலம் 5 ஆசனங்களும்தேசியப் பட்டியல் மூலம் 2 ஆசனங்களுமாக மொத்தம் 7 ஆசனங்களே கிடைத்துள்ளன.

கிளிநொச்சி கிழக்குக்கான மீள்குடியேற்றப் பணிகளை அடுத்துவரும் ஒரு வாரகாலத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அத

WEDNESDAY, APRIL 21, 2010
மோதல்களின்போது இடம்பெயர்ந்தவர்கள் இதுவரை கிளிநொச்சி மேற்கிலேயே குடியமர்த்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதற்தடவையாக எதிர்வரும் ஒரு வார காலப்பகுதியினுள் கிளிநொச்சி கிழக்கிலும் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்பட விருப்பதாக அவர் கூறினார். கிளிநொச்சி கிழக்கில் ஒரு மாத காலப்பகுதிக்குள் ஆகக்குறைந்தது 2,900 குடும்பங்களை மீளக் குடியேற்றும் வகையில் அதற்கான ஒழுங்குகளை அரசாங்க அதிபர் அலுவலகம் முன்னெடுத்து வருகிறது.
தற்போது அப்பகுதியில் திருவையாறு, கனகாம்பிகை குளம், ரத்தினபுரம் மற்றும் மருத நகர் ஆகிய இடங்களில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்துக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா நிவாரணக் கிராமத்தில் தங்கியிருக்கும் கிளிநொச்சி கிழக்கைச் சேர்ந்தவர்கள் தொடர்பான பெயர் விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஒரு வார காலப்பகுயினுள் அவர்கள் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவரெனக் கூறிய அரச அதிபர் ஏனைய பகுதிகளில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்

வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு 10 கோடி ரூபா ஒதுக்கீடு!


WEDNESDAY, APRIL 21, 2010 இடம் பெயHந்த மக்கள் வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் 10 கோடி ரூபாவை ஒதுக்கியூள்ளதாக வட மாகாண ஆளுநா; மேஜா; ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தாh;.
தெரிவூ செய்யப்பட்ட 50 மீனவா;களுக்கு இந்த நிதி வழங்கப்படவூள்ளதாகவூம் அவா; கூறினாh;.
முல்லைத்தீவூ மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயா;ந்தவா;களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனவூம் மீன்பிடிப் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் இவா;களுக்கு இலகுக் கடன் அடிப்படையில் வழங்கப்படவூள்ளதாகவூம் அவா; மேலும் தெரிவித்தாh
WEDNESDAY, APRIL 21, 2010
திருகோணமலை தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சி 20,578 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சற்றுநேரத்துக்கு முன்னர் வெளியிடப்பட்ட முடிவின்படி திருகோணமலைத் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10,961 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 8,718 வாக்குகளையும் பெற்றுள்ளன.

திருகோணமலைத் தொகுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 59,784 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 39,691 வாக்குகளையும் இலங்கைத் தமிழரசுக்கட்சி 33,268 வாக்குகளையும்பெற்றுள்ளன.

இதற்கிணங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 1 ஆசனத்தையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளதாக தகவல் திணைக்களத்தின் இணையத்தளம் தெரிவிக்கிறது..

பொன்சேகாவுக்கு எதிரான 2வது இராணுவ நீதிமன்றத்தின் விசாரணை மே 4க்கு ஒத்திவைப்பு

WEDNESDAY, APRIL 21, 2010
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் அடுத்த விசாரணை எதிர்வரும் மே மாதம் 4ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு ள்ளது.
‘இரு தரப்பினரும் தமது வாதங்களை எழுத்து மூலம் எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு நேற்று கூடிய இராணுவ நீதிமன்றம் கோரியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் நேற்றைய தினமும் கூடிய 2வது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை நடத்தியது.
காலை 11.00 மணியளவில் கூடிய இந்த நீதிமன்றத்தின் அமர்வு பிற்பகல், 1.30 மணிவரை நடைபெற்றுள்ளது.
இரண்டு இராணுவ நீதிமன்றத்தின் நீதவான் அட்வகேட்டாக செயற்படும் ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னாண்டோவிடம் இரு தரப்பினரினதும் எழுத்து மூல வாதங்களைச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு அடுத்த நீதிமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை என்ற அடிப்படையில் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தவே நேற்றைய தினமும் இந்த இராணுவ நீதிமன்றம் கூடியது.

ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை

WEDNESDAY, APRIL 21, 2010
இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நாளை காலை 9.30க்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகிறது. சபையின் முதலாவது நடவடிக்கையாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும். சபாநாயகராகத் தெரிவு செய்யப்படும் நபர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஏழாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 225 உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர்.
இதனைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு, ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு பிரதம கொரடா, அவைத்தலைவர் தெரிவுகள் இடம்பெறும். நாவலப்பிட்டி மற்றும் திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதிகளில் நடைபெற்ற மீள் வாக்குப் பதிவுகளின் பின்னர் இன்று வெளியிடப்படும் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு, மற்றும் தேசியப் பட்டியல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள 225 உறுப்பினர்களும் நாளை பாராளுமன்றம் செல்கின்றனர்.
இவர்களுள் சுமார் 70 பேர் வரையில் புது முகங்களாக உள்ளனர்.
இதுவரை கிடைத்துள்ள தேர்தல் முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் இன்று தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.
தமக்குக் கிடைத்த வாக்குகளின் படி கிடைக்கவுள்ள தேசியப்பட்டியல் தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாகக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார்.
எனினும், ஐ. தே. க. தேசியப் பட்டியல் விவகாரத்தில் இழுபறி நிலையிலேயே உள்ளது. அத்துடன் ஐ. தே. க.- ஜனநாயக தேசியக் கூட்டமைப்புக்கு இடையே எதிர்க்கட்சித் தலைமை பொறுப்பு ஏற்பது தொடர்பாக இழுபறி நிலை தொடர்கிறது. (ள)

Monday, April 19, 2010

மறவன் புலத்தில் 256 வீடுகள்முதல் வீடு நேற்று கையளிப்பு

MONDAY, APRIL 19, 2010
சுவிஸ் நாட்டின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான முகவர் அமைப்பின் நிதியுதவியுடன் யாழ். மறவன் புலத்தில் அமைக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தின் முதல் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை உரிமையாளருக்கு கையளிக்கும் வைபவம் நேற்று இடம்பெற்றது.
அமைப்பின் பிரமுகரான மாட்டின் ஸ்ரீயூடர் புதிய வீட்டின் வாயிலை சம்பிரதாய முறைப்படி நாடாவெட்டி திறந்து வைத்து உரிமையாளரிடம் கையளித்துள்ளார்.
மேற்படி சுவிஸ் நாட்டின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான முகவர் நிலையமானது சாவகச்சேரி பிரிவில் உள்ள மறவன்புல கிராமத்தில் 256 வீடுகளை கட்டிவருகிறது.

நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டி மீள் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

MONDAY, APRIL 19, 2010
நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டி மீள் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி
பாதுகாப்பு பணியில் 2000 பொலிஸ், இராணுவம்; விசேட அதிகாரிகள் குழு நாவலப்பிட்டி விரைவு
நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டிய மீள்தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று கூறியது. தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நேற்று முன்தினம் (17) நள்ளிரவு பூர்த்தியடைந்ததோடு தேர்தல்கள் நாளை நடைபெறவுள்ளன.

பாதுகாப்புக் கடமைகளில் சுமார் இரண்டாயிரம் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் இன்று முதல் (19) வாக்கு நிலையங்களுக்கு செல்ல உள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வாக்குப் பெட்டிகளும் இன்று (19) வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.

நாவலப்பிட்டியிலும் கும்புறுப்பிட்டியிலும் அமைதியான தேர்தல்களை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது. விசேட அதிகாரிகள் குழு இன்று (19) நாவலப்பிட்டிக்கு செல்கிறது எனவும் திணைக்கள உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

மக்கள் எதுவித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் உச்ச பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான பாதுகாப்பு அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன கூறினார். 1200 இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு தேர்தல் தினத்தில் மேலும் 800 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை விடுமுறை தினமான நேற்று (18) விசேட வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெற்றதோடு இன்றும் (19) வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் கூறியது.

நாவலப்பிட்டியவில் 37 வாக்களிப்பு நிலையங்களிலும் கும்புறுப்பிட்டியவில் ஒரு வாக்களிப்பு நிலையத்திலும் மீள் தேர்தல் நடைபெறுகிறது.

நாவலப்பிட்டிய வாக்குகள் கண்டி மாவட்ட செயலகத்திலும் கும்புறுப்பிட்டிய வாக்குகள் திருகோணமலை கச்சேரியிலும் எண்ணப்படவுள்ளன. கும்புறுப்பிட்டிய வாக்குகள் அதே வாக்களிப்பு நிலையத்தில் எண்ணுவதற்கே முன்னர் தீர்மானிக்கப் பட்டிருந்தது

இந்திய விஸா நிலையம் மே 5 முதல் யாழில் இயங்கும்

MONDAY, APRIL 19, 2010
இந்திய விஸா நிலையமொன்று எதிர்வரும் மே மாதம் முதல் யாழ் ப்பாணத்தில் இயங்கவுள்ளது.

இந்த நிலையம் மே மாதம் 5ம் திகதி திறந்து வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியாவின் தூது வர் அசோக் கே. காந்த் நேற்று தெரி வித்துள்ளார்.

யாழ்ப்பாணம், மத்திய கல்லூரி யில் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ். குடா நாட்டு மக்கள் இந்த நிலையத்தில் விஸா விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ள வும், அவற்றைக் கையளிக்கவும் முடியும்.

இதன்படி விஸாவைப் பெற்றுக் கொள்ள மாத்திரமே கொழும்பி லுள்ள இந்திய உயர் ஸ்தானிகரால யத்திற்கு செல்ல வேண்டும் என்று தூதரக அதிகாரி ஒருவர் தெரிவி த்தார்.

Saturday, April 17, 2010

மீள் வாக்களிப்புக்கு நாவலப்பிட்டியில் தயார் நிலை

Saturday, 17 April 2010
நாவலப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட 400 அதிகாரிகள் நாளை மறுதினம் 19 ஆம் திகதி கொழும்பில் இருந்து மீள் வாக்களிப்பு இடம் பெறவுள்ள பகுதிகளுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் 37 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெற்று, வாக்கு எண்ணும் பணிகள் கண்டி மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

மீள் வாக்களிப்பு இடம்பெறவுள்ள பகுதிகளில் வாக்காளர் அட்டைகள் வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

நாவலப்பிட்டி தொகுதியில் 37 வாக்குச்சாவடிகளில் 50 ஆயிரத்து 837 பேர் வாக்களிக்க உள்ளனர். நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் பின்வரும் வாக்களிப்பு நிலையங்களில் மீள் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.

பார்கேப்பல் தமிழ் வித்தியாலயம் ,வெஸ்டோல் தமிழ் வித்தியாலயம், டெம்பல்ஸ்டன் தமிழ் வித்தியாலயம், நாவலப்பிட்டி மத்திய கல்லூரி பிரிவு – 1 ஆண்கள் , நாவலப்பிட்டி மத்திய கல்லூரி பிரிவு – 2 பெண்கள் ,தொலஸ்பாகை கனிஷ்ட வித்தியாலயம் ,அலுகொல்ல கனிஷ்ட வித்தியாலயம் ,படிதலாவ கனிஷ் கனிஷ்ட வித்தியாலயம், சேனாதிகாரி தேசிய பாடசாலை ,கெமுனுபுர கனிஷ்ட வித்தியாலயம் , வட்டபாத்த கனிஷ்ட வித்தியாலயம் ,இவல் கொல்ல கனிஷ்ட வித்தியாலயம் , பெல்லப்பிட்டிய கனிஷ்ட வித்தியாலயம் பிரிவு – 1 – 2 , பெல்லப்பிட்டிய கனிஷ்ட வித்தியாலயம் பிரிவு – 11 ,கிராவுல்ல மகா வித்தியாலயம் பிரிவு - 1, கிராவுல்ல மகா வித்தியாலயம் பிரிவு – 11 ,தெலி உன்ன ஜனபதய கனிஷ்ட வித்தியாலயம் ,தெனி உன்ன கனிஷ்ட வித்தியாலயம் ,எம்.எஸ்.அலுத்கமகே மகா வித்தியாலயம் ,ஹலாகம தொழிற்பயிற்சி நிறுவனம் ,உலப்பனை மத்திய கல்லூரி ,பத்துனுபிட்டிய மகா வித்தியாலயம் ,வெரலுகஸ் இன்ன கனிஷ்ட வித்தியாலயம் ,வரக்காவ கனிஷ்ட வித்தியாலயம் ,கடுகஞ்சேனை கனிஷ்ட வித்தியாலயம் ,றொசல்ல ஹைட்றி கனிஷ்ட வித்தியாலயம் ,மீப்பிட்டி தொழிற்பயிற்சி நிலையம் ,அலுத்கம பௌத்த ஆலய மண்டபம் ,ஸ்ரீதர் தர்மரத்ன வித்தியாலயம் ,கலபொட தமிழ் வித்தியாலயம் ,இங்குறு ஓயா கனிஷ்ட வித்தியாலயம் ,கதிரேசன் மத்திய கல்லூரி ,அனுருத்த மகா வித்தியாலயம் ,நாவலப்பிட்டி பெண்கள் கனிஷ்ட வித்தியாலயம் பிரிவு - 1 , நாவலப்பிட்டி பெண்கள் கனிஷ்ட வித்தியாலயம் பிரிவு - 11 .
இந்த வாக்களிப்பு நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Tamils have rejected politics of suppression

Saturday, 17 April 2010
Former North East Province Chief Minister Varadaraja Perumal and one of the key Leaders of the EPRLF in an interview with the Daily News expresses his views on a number of issues including the recently concluded elections, the dawn of peace and hope in the North and East, influence of the Tamil Diasphora and his controversial days in the office of Chief Minister, North East Province (1988 - 1990).
Rasika SOMARATHNA
Q: The first post-conflict Parliamentary polls in the country has just concluded. What are your impressions on the elections in general and specially of the verdict delivered by the people in the North and East?
Former North East Province Chief Minister Varadaraja Perumal. Picture by Saman Sri Wedage
A: The people as a whole has reiterated their trust and confidence in the present regime ably led by President Mahinda Rajapaksa. They have given a very clear mandate, a near two-thirds majority. In relation to the results in the North and East and specially the verdict of the Tamil people has been very encouraging. If you take the results in the Tamil dominated Jaffna, Vanni and Batticaloa districts you could see that more than 50 percent of the voters has rejected the TNA formed by the LTTE in 2004. Thus a majority has rejected the politics of suppression.
Q: But the voter turn out has been very low in these areas?
A: This could be attributed to several facts such as the lingering fear which yet exists in the minds of a community which was oppressed by a terrorist organisation for nearly three decades. People are not yet fully settled and their economy is in disarray. Also their confidence in the political leadership is yet to blossom. But these are slowly gaining momentum. However it would take some time, the change is already in the air.
Q: What could the Government do to accelerate the process?
A: The larger responsibility in this regard lies with the Government to heal the wounds, build trust and provide basic needs to the affected people. As I see the three R’s Relief, Rehabilitation and Reconstruction should go hand in hand and should be productive and this would no doubt pave way for sustainable reconciliation. In addition the people need a fully equipped civil administration structure. Illegal weapon carriers (if there are any) should be disarmed. People want the complete rule of law. Also the Security Forces presence in the areas should be reduced. The devolution of powers to the provinces (what is possible) should take place. The amount of power devolved could be discussed later but Government should provide first what is possible.
Q: Who should be the major players in this exercise?
A: Of course the President and the Government should play the lead role. The UNP too should give due priority and join hands with the Government in resolving the national issue without engaging in petty politics. Eligible Tamil representatives too should make their contribution in an effective manner. If the two major political powers in the country get-together in resolving the national issue it would give the much needed confidence to the Tamil people.
Q: What about India?
A: The Government of India is doing everything possible to extend help to the Sri Lankan Government and the Tamils. The pre-1990 and post-1990 relations between the two countries are different now. They have a genuine commitment towards Sri Lanka. We have to understand that the conflict affected India too. So India wants peace, harmony and development in Sri Lanka.
We also need their help in many spheres such as technical, industrial, investment development etc. Specially in Tamil Nadu the situation has improved much. The recent visit to the country by Tamil Nadu politicians has gone a long way in bridging the gap. This is a good beginning we should nurture and develop this newfound friendship.
Q: You were Chief Minister of the North and East in 1988-90. What was your experience on the question of devolution of power and other matters?
A: At that time Premadasa was the President of Sri Lanka. At that period I was not Chief Minister of the North and East with the powers that the Chief Ministers enjoy. I was a Chief Minister striving for devolution of power. I presented a 19-point agenda which had proposals which came under the provisions of the existing Constitution.
The proposals did not even consider federalism but came under the limits of the existing PC system. However, the regime at that time did not give due consideration. If they had done so the country would not have faced such a disastrous situation. Since 1990 over 150,000 people have been killed. This includes more than 40,000 Tamil youth and an equal number of soldiers in addition to civilians. Another 60,000 women in North East alone have been widowed, not to mention the rest of the country.
The cream of the Tamil society was murdered by the LTTE. The then Government helped LTTE. The Premadasa regime did not even wont the PC. We had to sacrifice the lives of 3,000 EPRLF cadres at that time.
Q: But you were accused of hoisting the Eelam flag?
A: This is totally false. It was a malicious campaign against me at that time. In fact I hoisted only two flags during my tenure as Chief Minister. The first occasion was the Independence day on February 4, 1988 when I hoisted the National flag. The second one I hoisted was the North-East Provincial Council flag, which was used until 2007. I am not even familiar with the so-called Eelam flag. I am ready for any challenge on the issue.
Q: The LTTE was a force to reckon with for a long time?
A: We should not harbour the misconception that the LTTE had been so far giving leadership to the Tamil people of Sri Lanka. It is a terrorist group which destroyed the Sri Lankan Tamil leadership starting from the killing of Srisabaratnam (TELO) in 1986 followed by the liquidation of Amrithalingam (TULF), Padmanabha (EPRLF), Neelan Thiruchelvam (TULF), Keetheswaran (EPRLF).
The LTTE under Prabhakaran suppressed any intellectual opinion. Prabha wanted to be the only leader. There was no democracy.
Q: But there are moves to revive the LTTE by the Diaspora through the concept of a Trans-National Tamil Eelam?
A: As far as the Tamil Diaspora is concerned they are controlled by a few individuals with vested interest. Most of these Diaspora leaders are commission earning money collectors. They earn as much as Euros 12,000-15,000 a month as commission from the money which is extorted from innocent Tamils abroad by force. Now they have nothing to sell and as a result they have lost their income earning avenues. So they are trying to create something. This would not sell. Everybody including the Tamil people, their countries of residence and all are fed up with the culture of violence. It is over.
Q: How did President Mahinda Rajapaksa achieve the stupendous task of defeating the LTTE whereas all his predecessors had failed?
A: He was driven by singleminded purpose of eliminating the source of LTTE’s terror. Many other things also fell into place such as the defection of key LTTE leaders. International community getting fed up with LTTE atrocities etc. Also the Mahinda Rajapaksa regime never gave any breathing space which they got during tenures of former leaders such as Premadasa, Kumaratunga and Ranil Wickremesinghe.
Q: Finally do you have any political ambitions?
A: I have no interest in positions or perks. But I wish to work among the people and for the benefit of the people.
I can derive strength from my vast experience to work towards the benefit of the people. Don’t forget that I was the Chief Minister of North Eastern Province from1988-1990. Tamils now realise they missed a golden opportunity at that time. I also stayed in India for almost 20 years and have studied their form of governance extensively. I also enjoy a very good relationship with political leaders from both India and Sri Lanka (both North and South). So with this experience to count, I am hopeful that I would be able to work with the progressive forces and contribute my share to development, a lasting political settlement and reconciliation.

ஆறு கிராமசேவகர் பிரிவுகளில் 1500 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

Saturday, 17 April 2010
வுனியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இம்மாத இறுதிக்குள் 1500 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

பாலமோட்டை, மருதம்குளம், மருதமடு, பன்றிக்கேதகுளம், சேமமடு, ஆறுமுகத்தான் புதுக்குளம், ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் நிவா ரணக் கிராமங்களில் திரட்டப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து உற வினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் இடம் பெயர்ந்தோ ரையும் மேற்படி ஆறு கிராம சேவ கர் பிரிவுகளில் மீளக் குடியமர்த்தத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அரச அதிபர் சார்ள்ஸ் கூறினார்.

ஊவா மாகாணப் பாடசாலைகளில் தமிழ்மொழிப்

Saturday, 17 April 2010
கிழக்கு மற்றும் ஊவா மாகாணப் பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடத்துறையினை மேம்படுத்துவதற்குக் கல்வியமைச்சின் தமிழ் மொழிப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ் மொழி பாட போதனையின்போது தற்போது எதிர்நோக்கப்படும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதன்மூலம் பாடத்துறையினை விருத்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாகாண மற்றும் வலையங்களின் தமிழ்மொழிக் கல்விப் பணிப்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாகக் கல்வியமைச்சின் தமிழ்ப்பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

பாடசாலை நூலகங்களைத் தமிழ் மொழி விருத்திக்காகப் பயன்படுத்துதல், மாணவர்களின் வாசிப்புத் திறனை விருத்தி செய்தல், தமிழ் மொழி மற்றும் இலக்கியச் செயற்பாடுகள் என்பவை தொடர்பாக இந்தக் கூட்டத்தின்போது ஆராயப்படவுள்ளது.

க.பொ.த உயர்தர மாணவர்கள் தமிழ்மொழியைத் தெரிவுசெய்யும் முறைபற்றியும், தமிழ் மொழித் தினப் போட்டி நிகழ்ச்சிகளில் பாடசாலைகளின் பங்களிப்பினை அதிகரிப்பது தொடர்பாகவும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

தேர்தல் பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவூடன் நிறைவூ!

Saturday, April 17, 2010
தேர்தல் பிரசாரப் பணி கள் இன்று (17) நள்ளிரவூடன் நிறைவடைவ தனால் நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப் பிட்டி தேர்தல் தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன சுட்டிக்காட்டினார்.
வாக்களிப்பு தினமான எதிர்வரும் 20ம் திகதி வாக்குச் சாவடிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படுமெனவூம் மோசடிகள் அசம்பாவிதங்கள் இடம்பெறும் பட்சத்தில் பாரபட்சமின்றி சம்பந்தப்பட்ட அனைவரையூம் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் பொலிஸ் நிலையங்கள் உசார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவூம் அவர் மேலும் கூறினார்.

மீள்வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் நடவடிக்கைகளை கவனிக்கவென கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று அப்பிரதேசங்களுக்கு அனு ப்பிவைக்கப்படவூள்ளன. வாக்குச் சாவடி களில் பணியாற்றுவதற்காக 380 உத்தி யோகத்தர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவூம் வாக்கு எண்ணுவதற்கு 650 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவிருப்பதாகவூம் தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்

அமெரிக்காஇ இலங்கை படைகள் மனிதாபிமான கூட்டு செயற்பயிற்சி!

Saturday, April 17, 2010
அமெரிக்கக் கடற்படையூம் இலங்கை இராணுவமும் கூட்டு மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. திருகோணமலைத் துறைமுகத்தில் இதற்கான பயிற்சிகள் முன்னெடுக்கப்பட் டதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இடர் முகாமைத்துவ நிலையம்இ சுகாதார அமைச்சு ஆகியவற்றிலிருந்து சிவிலியன்களும் இந்த செயற்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மனிதாபிமான பயிற்சிகள் வழங்கப்பட்டு 27 கிராமங்களுக்கு அனுப்பப்படுவார்கள். அதேநேரம்இ 700க்கும் மேற்பட்ட குடும்பங்க ளுடன் தொடர்பு கொள்ள வைக்கப்படுவார்கள்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த லெப். கேர்ணல் லறி சிமித்; மனிதாபிமான செயற் திட்டம்இ மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதற்கு வாய்ப்பாக அமையூம் என்றார்.

Friday, April 16, 2010

அணுசக்தி உபயோகத்தைச் சிங்கப்பூர் தொடர்ந்து பரிசீலிக்கும்: பிரதமர் லீ

FRIDAY, APRIL 16, 2010

அணுவாயுதப் பாதுகாப்பைப் பலப் படுத்தும் உலகளாவிய முனைப்பால், சிங்கப்பூரின் அணுசக்தி உபயோகப் பரிசீலனையில் மாற்றமேதும் இருக்காது என்று பிரதமர் லீ சியன் லூங் வாஷிங்டனில் கூறியிருக்கிறார். அங்கு நடைபெற்ற இரண்டு அணுவாயுதப் பாதுகாப்பு மாநாட்டுக்குப் பின் திரு லீ, சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்நடவடிக்கைகளால், அணுசக்தியை எரிபொருளாகப் பயன்படுத்தும் சிங்கப் பூரின் திட்டம் பாதிக்கப்படுமா என்று பிரதமர் லீயிடம் கேட்கப்பட்டது.
“இல்லை, எந்தப் பாதிப்பும் கிடையாது. பல நாடுகள் அணுசக்தியைப் பயன் படுத்துகின்றன, மேலும் பல நாடுகள் அணுசக்தியைப் பயன்படுத்தும் சாத்தியத்தை ஆராய விரும்புகின்றன. ஆனால், அணுசக்தி உலைகள் எவ்வாறு செயல்படுகின்றன, மூலப்பொருட்கள் எவ்வாறு பெறப்படுகின்றன, எத்தகைய பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நிர்ணயிக்க முறையான பாதுகாப்பு விதிகள் இருக்கவேண்டும்.
உதாரணமாக, அணு உலைகள், மூலப் பொருட்கள் போன்றவற்றைச் சேகரித்து வைப்பதிலும் கையாளுவதிலும் மிகுந்த கவனம் தேவை.
“எனவே, இவையனைத்தையும் நாம் கவனமாகப் பரிசீலிக்கவேண்டும். ஆனால் இக்காரணங்களால் திட்டத்தில் மாற்றம் ஏதும் இருக்காது,” என்றார் பிரதமர் லீ.
FRIDAY, APRIL 16, 2010
ஏழாவது நாடாளுமன்றத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தெரிவான சகல உறுப்பினர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவிருக்கின்றார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருக்கின்ற இந்த சந்திப்பிற்கான அழைப்பிதழ் சகல உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த அமைச்சரவை தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்கே ஜனாதிபதி அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்th தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவான உறுப்பினர்களும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒன்றுகூடி கலந்துரையாடவிருக்கின்றனர்.

இலங்கையில் சமாதானம்-ஆஸி. பிரதமர்

Friday, 16 April 2010
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தற்போது சமாதானம் நிலவுவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ருட் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புகலிடம் கோரி விண்ணப்பிப்பிக்கும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் நிலைமைகள் கவனத்திற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு நிலைமைகள் முன்னேற்றமடைந்திருக்கும் நிலையில், அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் கெவின் ருட் குறிப்பிட்டார்.

இலங்கையில் பெரும்பாலான இடங்களில் தற்போது பாதுகாப்பு சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், அண்மையில் ஜனநாயகத் தேர்தல் நடைபெற்றிருப்பதாகவும் கெவின் ருட் சுட்டிக்காட்டினார்.

வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணும் பணி!

FRIDAY, APRIL 16, 2010
வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்கு எண்ணும் பணி எதிh;வரும் 20 ஆம் திகதி நடைபெறவூள்ள மீள் வாக்குப் பதிவூ நிலையத்தில் இடம்பெறவூள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி மீள் வாக்களிப்பு திருகோணமலை கும்புறுப்பிட்டியலில் உள்ள வாக்குச்சாவடியில் மட்டும் நடைபெற உள்ளதோடு அந்த வாக்குகளை எண்ணும் பணிகளும் அதே இடத்திலேயே நடத்தப்பட உள்ளதாக திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளர் எச்.எம்.என். தெனிபிரிய
கும்புறுபிடியவிலுள்ள ஒருவாக்குச் சாவடியின் வாக்குகள் மோசடிகள் இடம்பெற்றதையடுத்து ரத்துச் செய்யப்பட்டு மீள வாக்களிப்பு நடைபெற உள்ளது.
இங்கு 977 பேரே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான வாக்களிப்பு ஒரே வாக்களிப்பு நிலையத்தில் நடைபெற்று அதே நிலையத்தில் வாக்குகளை எண்ணவூம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வாக்களிப்பு நிலையத்திற்கும் வாக்குகள் எண்ணும் பணிகளுக்கும் 50ற்கும் குறைவான உத்தியோகத்தர்களே ஈடுபடுத்தப்படவூள்ளனர்

Wednesday, April 14, 2010

தமிழ்-சிங்கள பாரம்பரியங்கள் இரண்டறக் கலந்த புத்தாண்டு

Wednesday, April 14, 2010
குயில்கள் கூவும் சத்தங்களுடன், பூத்துக் குலுங்கும் மரங்களின் மீது பறவைகளின் கீச்சிடும் சத்தங்களுடன் சித்திரை வசந்த காலம் உதயமாகிறது. இந்த வசந்த காலத்துடன் இன ஒற்றுமையை வலியுறுத்தும் தமிழ், சிங்கள புத்தாண்டு ஆரம்பமாகிறது.

முப்பது வருட காலம் யுத்த சூழ்நிலையினால் மக்களுக்கு ஏற்பட்டிருந்த துன்ப, துயர அனுபவங்கள், கஷ்டங்கள் நீங்கிய நிலையில் சமாதானமும், அமைதியும் கொண்ட சூழ்நிலையில் 2010ஆம் ஆண்டு புதுவருடம் பிறந்துள்ளது.

பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டு எமது நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் சாந்தியும், சமாதானமும் நிறைந்த ஆண்டாகிறது. அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது.

இந்து, பெளத்த மத பாரம்பரிய கலாசார கொண்டாட்டமாக இலங்கையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் காணப்படுகின்றன. இவ்விரு சமூகமும் புரிந்துணர்வு, ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து இதனைக் கொண்டாடுகின்றன. இரு சமூகங்களுக்கிடையிலும் வித்தியாசமான பாரம்பரிய கலாசார நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இந்துக்கள் மருத்து நீர் வைத்து முழுகி, பொங்கிப் படைத்து, புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபட்டு, முதியோரை வணங்கி ஆசிர்வாதம் பெறுவர். கைவிசேடம் வழங்கி, வர்த்தக கொடுக்கல், வாங்கல் செய்து குடும்பத்தினர் ஒன்றிணைந்து உண்டு மகிழ்ந்து கொண்டாடுவர்.

இதுபோல சிங்கள மக்களும் புத்தாண்டு உணவுண்பதில் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கின்றனர். நல்ல நேரம் பார்த்து அடுப்பேற்றி சமைத்து, உணவுண்பர். தலைக்கு சுப நேரத்தில் வயதில் மூத்த ஒருவர் மூலம் அல்லது மதகுரு ஒருவர் மூலம் எண்ணெய் தேய்ப்பர்.

உற்றார், உறவினருக்கு பலகாரங்கள் பரிமாறி, பட்டாசு கொளுத்தி, கணக்குத் தொடங்கி வைத்து செய்யும் தொழிலினை ஆரம்பித்து கொண்டாடுகின்றனர். இதற்கு ஏற்ற வகையில் வர்த்தக வங்கிகள் கொடுக்கல், வாங்கல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றன.

இரு சமூகங்களும் புதுவருடத்தில் உறவினர் வீடுகளுக்கு சென்று குசலம் விசாரித்து, பலகாரம் உண்டு, தேநீர் அருந்தி மகிழ்வுறும் நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

புதுவருடத்துடன் கிராமங்களில் விளையாட்டுகள் ஆரம்பிக்கின்றன. இளைஞர்கள், யுவதிகள் ஒன்றிணைந்து இந்த வசந்தகால புதுவருட கலாசார நிகழ்வில் பங்கேற்பர். முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இவை சமாதானத்திற்கும், ஒற்றுமைக்கும் வழிகோலுகின்றன.

மாட்டு வண்டி சவாரி, பட்டம் விடுதல், மரதன் ஓட்டம், சைக்கிள் ஒட்டம் ஊஞ்சலாட்டம், சடுகுடு, போர்த் தேங்காய் அடித்தல், கொம்புடைத்தல், கும்மியடித்தல், ரபான் அடித்தல், சவுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், பல்லாங்குழி விளையாடுதல், தலையணைச் சண்டை, முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், விநோத உடை, ஓட்டப் போட்டிகள் ஆகியன நடத்தப்படுகின்றன.

வருடா வருடம் புதுவருடம் பிறக்கும், நம் வாழ்வில் எத்தனையோ கொண்டாட்டங்கள் வரும். ஆனால் ஒவ்வொரு புத்தாண்டிலும் சலித்துப் போகாமல் பழைய கொண்டாட்டங்களிலேயே மீண்டும் மீண்டும் ஈடுபட்டு மகிழ்ச்சியையே பெறுகின்றனர்.

கடந்த 30 வருடமாக எமது இலங்கை மக்கள் ஈடுசெய்ய முடியாத இழப்புகளை சந்தித்துள்ளனர். விலைமதிக்க முடியாத உயிர்களையும், சொத்துக்களையும் இழந்துள்ளனர். இனியும் இழக்க முடியாது. இழக்க ஒன்றுமேயில்லை. கொடிய யுத்தம் முடிவுபெற்றுள்ளது. புதிய சுகவாழ்வுக்கான காலம் உதயமாகியுள்ளது. சகல இன மக்களிடத்தும் வாழ்வில் புது விடியல் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் ஒற்றுமையுடன் ஒன்றிணையும் காலம் தோன்றியுள்ளது. புது வருடப் பிறப்பில் புத்தாடைகளை மட்டுமல்ல, புது உறவுகளையும் பெறுவோம்.

30 வருட யுத்தத்தின் பின் ஏற்பட்டுள்ள இந்தச் சூழல் அற்புதமானது. மீண்டும பழைய ஒற்றுமைக்கு சென்று இனங்கள் ஒன்றிணைந்து இப் புது வருடத்தினை கொண்டாட வேண்டும்.

Tuesday, April 13, 2010

TUESDAY, APRIL 13, 2010

வாக்காளர்களுக்கு நன்றி – பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

வாக்காளர்களுக்கு நன்றி
எமதன்புக்குரிய வாக்காளப் பெருமக்களே! நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சியின் சின்னமான மெழுகுதிரிக்கு வாக்களித்து எம்மை ஊக்கப்படுத்தியுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். அத்துடன் எமது கட்சிக்காக இத்தேர்தலில் கடுமையாக உழைத்த எமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அனுதாபிகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தத் தேர்தலில் நாம் பல கட்சிகளுடன் இணைந்து ஓரணியாக நின்று போட்டியிடவே விரும்பினோம். ஆனால் அதற்கான ஒத்துழைப்பைத் தருவதில் பல கட்சிகள் தயக்கம் காட்டின. ஒற்றுமைக்கான எமது முயற்சிகளையும் புறக்கணித்தன. இருப்பினும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் எமது கட்சியும் ஒற்றுமையாகச் செயல்படுவது என தீர்மானித்தோம். அதனடிப்படையில் எமது கட்சியின் பெயரில் நாம் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டோம். இதில் மூன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரும் இணைந்து கொண்டனர். அதே நேரம் வன்னியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எமது தோழரொருவரையும் இணைத்துக்கொண்டு போட்டியிட்டது. மேலும் எமது கட்சி திருகோணமலையிலும் போட்டியிட்டது.
இந்த மூன்று மாவட்டங்களிலும் மக்கள் எம்மீது காட்டிய அக்கறையும் ஈடுபாடும் எம்மை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்னும் சிறிது காலங்களில் மக்களின் ஒரு சக்திமிக்க இயக்கமாகப் பரிணமிக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பிரமுகர்கள் கூட்டுக் கட்சியல்லää மாறாக மக்கள் புரட்சிகர இயக்கம். வடக்கு கிழக்கு மாகாண ஆட்சிக்கு உயர்ந்தபட்ச அதிகாரப் பகிர்வுக்காகவும்ää மக்களின் ஜனநாயக சுதந்திரங்களுக்காகவும்ää சமூக நீதிக்காகவும்ää பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராகவும்ää சாதிப்பாகுபாடுகளற்ற சமத்துவத்திற்காகவும் போராடும் இயக்கத்தை வழிநடத்தும் அரசியல் தலைமையே எமது கட்சி.
எமது கட்சி வெற்றிகளைக் கண்டு பெருமிதங் கொண்டதுமில்லை. தோல்விகளைக் கண்டு துவண்டதுமில்லை. கடந்த முப்பது ஆண்டுகளில் எமது கட்சி பல ஆயிரம் தோழர்களையும்ää மிகச் சிறந்த தலைவர்களையும் தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் தியாகம் செய்திருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எமது சொந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் அரசியல் உறவுகொள்ள முடியாத அளவுக்கு பெரும் இக்கட்டான சூழல்களைக் கடந்து வந்திருக்கின்றது.
இப்போது ஏற்பட்டிருக்கும் பயங்கரவாதம் மற்றும் யுத்த ஆபத்துக்கள் அற்ற சூழலின் காரணமாக எமது கட்சியினர் மக்கள் மத்தியில் சுதந்திரமாகச் சென்று கட்சியின் கொள்கைளையும் திட்டங்களையும் விளக்குவதற்கான நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னமும் மக்கள் மத்தியில் இருந்து முற்றாக பயப்படும் போக்குகள் நீங்கவில்லை. மக்கள் மத்தியில் தமது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனங்களும் விரக்திகளும் பரவலாகக் காணப்படுகின்றன. அதிகாரப் பகிர்வு தொடர்பாக மக்கள் மத்தியில் அரசாங்கம் பற்றிய சந்தேகங்கள் உள்ளன.
மக்கள் மத்தியில் நிலவும் எதிர்மறையான உணர்வுகளையும் எண்ணப்பாடுகளையும் நாம் எதிர்வரும் காலங்களில் நீக்கவேண்டும். எமது கட்சி மக்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை வளர்ப்பதிலும் எதிர்கால முன்னேற்றமான போக்குகளை நோக்கி மக்களை அணிதிரட்டுவதிலும்ää அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான ஓர் இயக்கத்தை நடாத்துவதிலும் முன்னணி வகிக்கும். மக்கள் அமைப்புக்களை பரவலாகக் கட்டியெழுப்பி பரந்துபட்ட மக்கள் கட்சியாக எழுச்சிபெறும் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தேர்தல் என்னும் குறுகிய நோக்கம் கொண்ட கட்சியல்லää மாறாக இது ஒரு சமூக அரசியல் இயக்கம். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோடு இணைந்து ஒரு புரட்சிகர இலட்சிய இயக்கத்தை வலுவாக முன்னெடுக்க முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
சுதந்திரம்ää ஜனநாயகம்ää சகோதரத்துவம்ää சமூகப் பொருளாதார முன்னேற்றம் என்பவையே எமது இலட்சியங்கள். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான விடுதலையே எமது குறிக்கோள்.

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ,ஈபிஆர்எல்எவ்

TUESDAY, APRIL 13, 2010


புத்தாண்டு அனைத்து வழிகளுக்குமான புதிய ஆரம்பமாக அமைய வேண்டும்!
முப்பதாண்டுகளுக்குப் பின்னர் முழு இலங்கையிலும் தமிழ், சிங்கள மக்கள் இணைந்து சுதந்திரமாகக் கொண்டாடும் இப்புத்தாண்டானது அனைத்து வழிகளு க்குமான புதிய ஆரம்பமாக அமையுமென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தமது புத்தாண்டு செய்தியில் தெரிவித்து ள்ளார்.
தமிழ்- சிங்கள புது வருடப் பிறப்பை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
சிங்கள, தமிழ் புத் தாண்டு என்பது ஒவ் வொரு ஆண்டும் உதய மாகின்ற போதிலும் கூட இலங்கை வாழ் மக்கள் அந்த தினத்தை புதிதாக பிறக்கின்ற ஒரு வருடமாகவும், புதிய ஆரம்பம் ஒன்றினை குறிப்பிடும் ஒரு நாளாகவும் கருதியே செயற்படு கின்றனர்.
இந்த முக்கிய தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பழக்க வழக்கங்கள் எமது கலாசாரமாக மாற்றம் பெற்றுள்ளமை மூலம், புது வருடப் பிறப்புடன் எமது சமூகத்திலே புத்துணர்ச்சி யொன்று ஏற்படு வதை எடுத்துக் காட்டுகின்றது.
சிங்களவர்களின் பழக்க வழக்கங்களை பேணிப்பாதுகாத்து பழைய கோபதாப ங்களை மறந்து புதிய உணர்வுடன் பணியாற்றுவதற்காக இந்த தினம் உதயமாகும் வகையில் முதியவர்கள், சிறார்கள் என்ற அனைவரும் 365 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
புத்தாடைகள் அணிந்து சுப முகூர்த்தங்களுக்கு முன்னுரிமையளித்து நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே விடயத்தை மேற்கொள்ளும் புத்தாண்டானது, இலங்கை கலாசாரத்திலே ஒற்றுமையை எடுத்துக் காட்டும் சிறந்த காரணியாகும்.
இந்த பழக்க வழக்கங்களை நினைவு கூருவதற்குக் கூட சுதந்திரமொன்று காணப்படாத ஒரு யுகத்தை நாம் கழித்து வந்துள்ளோம். சாபத்திற்குள்ளான பயங்கரவாத கெடுபிடிகளை இல்லாதொழி த்து சுதந்திரத்தினைப் பெற்றுக்கொண்ட நாட்டிலே கொண்டாடப்படும் இந்த சிங்கள, தமிழ் புத்தாண்டானது, முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு வெகு விமரிசையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
30 ஆண்டுகளின் பின்னர் முழு இலங்கையிலும் சிங்கள, தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இலங்கை முழுவதிலும் சுதந்திரமாகக் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டானது அனைத்து வழிகளிலும் புதிய ஆரம்பமொன்றினை பிரதிபலிக்கச் செய்யும் ஒரு நாளாகக் காணப்படுகின்றது.
உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எனவும் பிரதமர் தமது வாழ்த்துக் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

TUESDAY, APRIL 13, 2010

ராய்ட்டர்ஸ் புகைப்படக்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார்
பேங்காக்
தாய்லாந்து ராணுவப் படையினருக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர் களுக்கும் இடையில் சனிக்கிழமை நடந்த கடுமையான மோதலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தொலைக் காட்சிப் புகைப்படக்காரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜப்பானிய நாட்டவரான 43 வயது ஹிரோ முராமோட்டோ நெஞ்சில் சுடப்பட்டிருந்தார். கிளாங் மருத்துவமனைக்கு அவர் கொண்டுவரப்பட்டபோது நாடித்துடிப்பு இல்லை என்று மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பிச்சாயா நக்வட்சாரா தெரிவித்தார்.
தோக்கியோவிலுள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் 15 ஆண்டு களுக்கும் மேலாக வேலை செய்துவரும் முரா மோட்டோவுக்கு மணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
“பேங்காக் மோதலில் எங்களது சக ஊழியர் ஹிரோ முராமோட்டாவை இழந்ததில் பெருந்துயரம் அடைகிறேன். செய்தித்துறை மிகவும் ஆபத்தான தொழி லாகும். ராய்ட்டர்ஸ் குடும்பம் முழுவதும் இத்துயரத்தை நினைத்து வேதனைப்படுகிறது” என்று ராய்ட்டர்ஸின் தலைமை ஆசிரியர் டேவிட் ஷ்லிசிங்கர் கூறினார்.
ராஜ்தம்னோன் சாலை யில் ராணுவப் படைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த சண்டையை முரா மோட்டோ படமெடுத்துக் கொண்டிருந்தபோது, ராணுவத்தினர் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி சுட்டதோடு, உண்மையான தோட்டாக்களை விண்ணை நோக்கியும் சுட்டனர்.
முராமோட்டோவின் நெஞ்சில் பாய்ந்த தோட்டா அவரது முதுகின் வழி வெளியேறிவிட்டது. அதனால் அவரைத் தாக்கியது எந்த வகை தோட்டா என்பது தெரியவில்லை என மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் துப்பாக்கிகள் வைத்திருந்த தாகவும், பெட்ரோல் குண்டுகளையும் கையெறி குண்டுகளையும் ராணுவத் தினர் மீது வீசியதாகவும் ராணுவப் பேச்சாளர் கூறினார்.

TUESDAY, APRIL 13, 2010

காலாவதியான உணவுப் பொருள் விற்பனை; கண்டுபிடிக்க தேடுதல்

பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ஹோட்டல்களை கண்டு பிடிக்க தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை பொது சுகாதார பிரிவு தெரிவித்தது. புறக்கோட்டை மற்றும் கொழும்பிலுள்ள பிரதான இடங்களில் இத்தகைய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொது சுகாதாரப் பரிசோதகர் டபிள்யூ. ரி. கருணாதிலக கூறினார்.
பண்டிகைக் காலத்தில் அதிகமாக காலாவதியான மற்றும் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கூடுதலாக விற்கப்படுவதனால் தேடுதல் நடவடி க்கைகளை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுவரை 20ற்கும் அதிகமான விற்பனை நிலையங்கள் பிடிப்பட்டுள்ளன. அங்கு விற்கப்பட்ட பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கேக், பிஸ்கட், குளிர்பானங்கள் என்பன காலாவதியான பின்னரும் விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

TUESDAY, APRIL 13, 2010


கொழும்பிலிருந்து விசேட கண்காணிப்பு குழுவை அனுப்ப ஏற்பாடு; 380 உத்தியோகத்தர்கள் கடமையில்
கண்டி, திருகோணமலை மாவட்டங்களி லுள்ள 38 வாக்களிப்பு நிலையங்களில் மோசடி இடம்பெற்றதனால் அப்பகுதிகளு க்கான மீள் வாக்களிப்பு எதிர்வரும் 20 ம் திகதி நடைபெறவுள்ளது. மீள் வாக்குப் பதிவை கண்காணிப்பதற்காக கொழும்பிலி ருந்து விசேட குழுவொன்றை அனுப்புவத ற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை மீள்வாக்குப் பதிவுக்கென வாக்காளர்களுக்கு புதிதாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி ஆரம் பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 19ம் திகதிக்கு முன்னர் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு விடும் எனவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 37 வாக்க ளிப்பு நிலையங்களுக்கும் திருமலை மாவ ட்டத்தின் கும்புறுபிட்டியிலுள்ள வாக்களிப்பு நிலையத்துக்குமே எதிர்வரும் 20 ம் திகதி மீள்வாக்குப் பதிவு நடத்தப்படவு ள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேற்படி வாக்களிப்பு நிலையங்களில் மீள்வாக்குப் பதிவை நடத்த தேர்தல்கள் திணைக்களம், திட்டமிட்டுள்ளதுடன் எதிர்வரும் 20ம் திகதி தேர்தல் கடமையில் ஈடுபடுவதற்காக 380 உத்தியோகத்தர்களை நியமித்திருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

Monday, April 12, 2010

பாராளுமன்றம் 22ம் திகதி கூடியதும் சபாநாயகர் தெரிவு

Sunday, 11 April 2010

புதிய அமைச்சரவை எதிர்வரும் 22ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும். அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலையில் திட்டமிட்டபடி 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார்.

தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் மற்றும் கண்டி, திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் அடங்கலாக ஐ. ம. சு. முன்னணிக்கு 143 ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. அவர் மேலும் கூறியதாவது,

நாவலப்பிட்டியிலும் திருகோணமலையிலும் 20ஆம் திகதி மீளத் தேர்தல் நடைபெறுவதால் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரமடங்கிய வர்த்தமானி அறிவித்தல் தாமதமடைகிறது. தேசியப் பட்டியல் எம். பிக்களின் நியமிப்பும் தாமதமாகியுள்ளது- 21ஆம் திகதி இரு மாவட்ட முழு முடிவுகளும் வெளியிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் தேர்தல் ஆணையாளரினால் அன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அமைச்சரவை நியமிப்பது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து வருகிறார். அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலையிலே புதிய பாராளுமன்றம் கூடும்.

தேசியப் பட்டியலின் மூலம் எமக்கு 17 ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். சபாநாயகராக யாரை நியமிப்பது என ஆளும் கட்சி எம்.பி.க்கள் கூடி முடிவு செய்வர் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளர் மைத்திரிபால சிரிசேன கூறியதாவது,

பிரதமராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஜனாதிபதி முடிவு செய்வார். கட்சியில் இதற்குத் தகுதியானவர்கள் பலர் உள்ளனர்.

அவர்களில் மிகவும் தகுதியானவரை ஜனாதிபதி நியமிப்பார்.

அமைச்சரவையை 35 ஆக மட்டுப்ப டுத்தவே திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டுக்கு சுமையற்றவாறு அமைச்சர் தொகை முடிவு செய்யப்படும். இம்முறை அமைச்சரவையில் புது முகங்களுக்கும் இடமளிக்கப்படும் என்றார்.

டலஸ் அலஹப்பெரும கூறியதாவது:

வரலாற்றில் முதற் தடவையாக ஐ.தே.க. வின் வாக்குப்பலம் 29 வீதமாக குறைந்துள்ளது. 1977 தேர்தலில் சு.க.வுக்கு 8 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் சு.க. 30 வீத வாக்குகளைப் பெற்றது என்றார்.

வாக்காளர்களுக்கு நன்றி

Sunday, 11 April 2010

வாக்காளர்களுக்கு நன்றி
எமதன்புக்குரிய வாக்காளப் பெருமக்களே! நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சியின் சின்னமான மெழுகுதிரிக்கு வாக்களித்து எம்மை ஊக்கப்படுத்தியுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். அத்துடன் எமது கட்சிக்காக இத்தேர்தலில் கடுமையாக உழைத்த எமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அனுதாபிகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தத் தேர்தலில் நாம் பல கட்சிகளுடன் இணைந்து ஓரணியாக நின்று போட்டியிடவே விரும்பினோம். ஆனால் அதற்கான ஒத்துழைப்பைத் தருவதில் பல கட்சிகள் தயக்கம் காட்டின. ஒற்றுமைக்கான எமது முயற்சிகளையும் புறக்கணித்தன. இருப்பினும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் எமது கட்சியும் ஒற்றுமையாகச் செயல்படுவது என தீர்மானித்தோம். அதனடிப்படையில் எமது கட்சியின் பெயரில் நாம் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டோம். இதில் மூன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரும் இணைந்து கொண்டனர். அதே நேரம் வன்னியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எமது தோழரொருவரையும் இணைத்துக்கொண்டு போட்டியிட்டது. மேலும் எமது கட்சி திருகோணமலையிலும் போட்டியிட்டது.
இந்த மூன்று மாவட்டங்களிலும் மக்கள் எம்மீது காட்டிய அக்கறையும் ஈடுபாடும் எம்மை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்னும் சிறிது காலங்களில் மக்களின் ஒரு சக்திமிக்க இயக்கமாகப் பரிணமிக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பிரமுகர்கள் கூட்டுக் கட்சியல்லää மாறாக மக்கள் புரட்சிகர இயக்கம். வடக்கு கிழக்கு மாகாண ஆட்சிக்கு உயர்ந்தபட்ச அதிகாரப் பகிர்வுக்காகவும்ää மக்களின் ஜனநாயக சுதந்திரங்களுக்காகவும்ää சமூக நீதிக்காகவும்ää பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராகவும்ää சாதிப்பாகுபாடுகளற்ற சமத்துவத்திற்காகவும் போராடும் இயக்கத்தை வழிநடத்தும் அரசியல் தலைமையே எமது கட்சி.
எமது கட்சி வெற்றிகளைக் கண்டு பெருமிதங் கொண்டதுமில்லை. தோல்விகளைக் கண்டு துவண்டதுமில்லை. கடந்த முப்பது ஆண்டுகளில் எமது கட்சி பல ஆயிரம் தோழர்களையும்ää மிகச் சிறந்த தலைவர்களையும் தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் தியாகம் செய்திருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எமது சொந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் அரசியல் உறவுகொள்ள முடியாத அளவுக்கு பெரும் இக்கட்டான சூழல்களைக் கடந்து வந்திருக்கின்றது.
இப்போது ஏற்பட்டிருக்கும் பயங்கரவாதம் மற்றும் யுத்த ஆபத்துக்கள் அற்ற சூழலின் காரணமாக எமது கட்சியினர் மக்கள் மத்தியில் சுதந்திரமாகச் சென்று கட்சியின் கொள்கைளையும் திட்டங்களையும் விளக்குவதற்கான நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னமும் மக்கள் மத்தியில் இருந்து முற்றாக பயப்படும் போக்குகள் நீங்கவில்லை. மக்கள் மத்தியில் தமது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனங்களும் விரக்திகளும் பரவலாகக் காணப்படுகின்றன. அதிகாரப் பகிர்வு தொடர்பாக மக்கள் மத்தியில் அரசாங்கம் பற்றிய சந்தேகங்கள் உள்ளன.
மக்கள் மத்தியில் நிலவும் எதிர்மறையான உணர்வுகளையும் எண்ணப்பாடுகளையும் நாம் எதிர்வரும் காலங்களில் நீக்கவேண்டும். எமது கட்சி மக்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை வளர்ப்பதிலும் எதிர்கால முன்னேற்றமான போக்குகளை நோக்கி மக்களை அணிதிரட்டுவதிலும்ää அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான ஓர் இயக்கத்தை நடாத்துவதிலும் முன்னணி வகிக்கும். மக்கள் அமைப்புக்களை பரவலாகக் கட்டியெழுப்பி பரந்துபட்ட மக்கள் கட்சியாக எழுச்சிபெறும் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தேர்தல் என்னும் குறுகிய நோக்கம் கொண்ட கட்சியல்லää மாறாக இது ஒரு சமூக அரசியல் இயக்கம். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோடு இணைந்து ஒரு புரட்சிகர இலட்சிய இயக்கத்தை வலுவாக முன்னெடுக்க முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
சுதந்திரம்ää ஜனநாயகம்ää சகோதரத்துவம்ää சமூகப் பொருளாதார முன்னேற்றம் என்பவையே எமது இலட்சியங்கள். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான விடுதலையே எமது குறிக்கோள்.

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

Saturday, April 10, 2010

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கு மக்கள் மீண்டும் மீண்டும் அங்கீகாரம்


SATURDAY, APRIL 10, 2010
வரலாற்றுப் புகழ்மிக்க இத் தேர்தல் வெற்றியானது ‘மஹிந்த சிந்தனை’ வேலைத் திட்டத்திற்கு மக்கள் மீண்டும் மீண்டும் வழங்கியுள்ள அங்கீகாரமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தம் மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் கெளரவத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, சிறுவர் பரம்பரைக்காக சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஏழாவது பாராளுமன்றத் தேர்தலில் ஈட்டிக் கொண்டுள்ள மகத்தான வெற்றியையடுத்து விடுத்துள்ள செய்தியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது:-
தாய் நாட்டுக்கு எதிரான எத்தகைய சக்திகளையும் எதிர்கொண்டு தோல்வியுறச் செய்யக் கூடிய வகையிலான பலம்மிக்க பாராளுமன்றத்தைப் பெற்றுத்தருமாறு இலங்கை மக்களாகிய உங்களிடம் நான் கோரினேன். அதற்கிணங்க மூன்று தசாப்த விகிதாசாரத் தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பெற்றுக்கொடுத்துள்Zர்கள். பெற்றுக்கொண்டுள்ள இம் மாபெரும் வெற்றியானது மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்துக்கு மீண்டும் மீண்டும் நீங்கள் வழங்குகின்ற அங்கீகாரமென்றே நான் கருதுகின்றேன்.
இதன் மூலம் இலங்கை மக்களாகிய நீங்கள் தாய் நாட்டுக்கான புனிதமான பொறுப்பினை நிறைவேற்றியுள்Zர்கள். அத்துடன் என் மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதும் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கெளரவத்தையும் பாதுகாப்பதற்கு நாம் கடமைப்பட் டுள்ளதுடன் இவ்வரலாற்று மக்கள் ஆணையை உலகின் முன்மாதிரியான நாடாக இலங்கையைக் கட்டியெ ழுப்புவதற்கான உன்னதமான பயணத்தின் முக்கியம் வாய்ந்ததொன்றாகவும் நான் கருதுகின்றேன்.
இலங்கையின் சிறுவர் பரம்பரைக்காக சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்புவதே இவ்வெற்றியின் மூலம் தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய பொறுப்பாக வேண்டும். அத்தகைய உன்னதமான நோக்கத்திற்காக கைகோர்க்குமாறு சகல அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
அத்தோடு தோல்வியடைந்தவர்க ளின் மனதைப் புண்படுத்தாது ஈட்டி க்கொண்டுள்ள வெற்றியை அமைதி யுடன் கொண்டாடு மாறும் கேட்டு க்கொள்கின்றேன்.
இத்தகைய வரலாற்று வெற்றியினைப் பெற்றுத் தந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த தேர்தல் ஆணையாளருக்கும் சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கும் தேர்தலில் போட்டியிட்ட சகல கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கும் பொறுப்புடன் செயற்பட்ட சகல ஊடகங்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரி வித்துள்ளார்.

Followers

Blog Archive