Saturday, April 24, 2010

'மஹிந்த சிந்தனை' கீழ் இவ்வருடம் 20,000 குடும்பங்களுக்கு வீடு

SATURDAY, APRIL 24, 2010
மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டத்துக்கு அமைவாக 2010 ஆம் ஆண்டில் மேலும் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
கடந்த நான்கு வருட காலத்தில் 91 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் இதற்காக 4,127 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு வீட்டுக்கு அதிகபட்ச நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் இதற்குப் புறம்பாக 2010 ஆம் ஆண்டு 'நகரத்தைக் கட்டி எழுப்புவோம்' திட்டத்தின் கீழ் 1500 அடுக்குமாடி வீடுகளை அமைக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive