Thursday, May 27, 2010

வெள்ளாமுள்ளிவாய்க்காலில் வெடி மருந்துகள் ,

Thursday, 27 May 2010
முல்லைத்தீவு வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில் துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எல்.ரி.ரி.ஈயினரால் அமைக்கப்பட்ட பதுங்கு குழி ஒன்றில் இவை புதைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
தமோபரக் ரகத்தைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கிகளும், சி 90 ரக துப்பாக்கியொன்றும், ஐந்து ஆர்.பி.ஜி ரக கைக்குண்டுகள், உள்ளிட்ட துப்பாக்கி ரவைகளும் இவற்றுள் அடங்குகின்றன.
எல்.ரி.ரி.ஈயினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு குண்டுகள் மற்றும் ரி 56 ரக துப்பாக்கி என்பனவும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.

புலிகளுக்கு சார்பான பிரசாரங்களில் ஈடுபட்டதாக கிழக்கில் இருவர் கைது .

Thursday, 27 May 2010
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு சார்பான பிரசாரங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய இரு பிரதேசங்களையும் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதாகும் போது அவர்களிடமிருந்த கையடக்க தொலைபேசிகளில் விடுதலைப் புலிகளுக்குச் சார்பான வீடியோ காட்சிகள் இருந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
வடக்கின் பாண்டிருப்பு மற்றும் எருவில் போன்ற பிரதேசங்களைச் சொந்த இடமாகக்கொண்ட இவ்விருவர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடுத்தே இந்த கைது இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.
கடந்த வருடம் விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான பிரசாரங்களில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இவ்விருவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று வெசாக் பண்டிகை தினமாகும்! நாடெங்கிலும் கோலாகலம்,

Thursday, 27 May 2010
பௌத்த.மக்கள்.அனைவரும்.இன்று.வெசாக்.பண்டிகையைக் கொண்டாடுகின்றனா;.
புத்தபெருமானின் பிறப்பு இறப்பு மற்றும் ஞானம் பெறல் ஆகிய மூன்று சம்பவங்களும் ஒரே நாளில் சம்பவித்துள்ளதை நினைவூ கூறும் முகமாக பௌத்த மக்கள் இவ்வாறு அநுஷ்டிக்கின்றனா;.
பௌத்த நாடான இலங்கை வாழ் பௌத்த மக்கள் அனைவரும் மிக விமா;சையாக இன்றைய தினத்தை கொண்டாடுகின்றா;.
நாடெங்கிலும் பௌத்த வரவாற்றை சித்தாpக்கும் ஓவியங்களுடனான வண்ண விளக்குளாலான அலங்காரப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறை கொழும்பில் எட்டு அலங்காரப் பந்தல்கள் காட்சிக்கு உள்ளன. மேலும் அலங்கார வெசாக் கூடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு நகாpலும்; மூன்று வெசாக் வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் அலங்கார கூடுகளுக்கான போட்டிகளை நடத்தவூம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடெங்கிலம் பரவலாக பக்தி கீதங்களை இசைக்கவூம் எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நாடு பூராவூம் நாளை மதல் அண்ணதானங்களை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன,

Followers

Blog Archive