Thursday, May 27, 2010

வெள்ளாமுள்ளிவாய்க்காலில் வெடி மருந்துகள் ,

Thursday, 27 May 2010
முல்லைத்தீவு வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில் துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எல்.ரி.ரி.ஈயினரால் அமைக்கப்பட்ட பதுங்கு குழி ஒன்றில் இவை புதைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
தமோபரக் ரகத்தைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கிகளும், சி 90 ரக துப்பாக்கியொன்றும், ஐந்து ஆர்.பி.ஜி ரக கைக்குண்டுகள், உள்ளிட்ட துப்பாக்கி ரவைகளும் இவற்றுள் அடங்குகின்றன.
எல்.ரி.ரி.ஈயினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு குண்டுகள் மற்றும் ரி 56 ரக துப்பாக்கி என்பனவும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive