Thursday, December 23, 2010

53 வது பிறந்த நாள் நினைவு தினம் அமரர் றொபேட் தம்பிராசா சுபத்திரன் மத்திய குழு உறுப்பினர்- பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்

Thursday, December 24, 2010
அமரர் தோழர் றொபேட்
தம்பிராசா சுபத்திரன்
(ஈ.பிஆர்.எல்.எவ் மத்திய குழு உறுப்பினர்
முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்)

தேச விடுதலையை நேசித்து

மானிட தர்மத்தை மதித்து நின்றதால்
ஏக பிரதிநிதித்துவத்தின் எதிரியானாய் -

இடர்களின் நடுவேயும்
தஞ்சமென மண்டியிடாது

தலைநிமிர்ந்து நின்று வீர காவியமானாய்
காற்றில் கலந்த போதும்

சாய்ந்துவிட்ட வல்லாதிக்கம் - உன்
கருத்தின் வலிமையை பறைசாற்றி நிற்கின்றது.
இனி நிமிர்ந்தெழும்

நீ உயர்த்திப் பிடித்த மானிட தர்மம்.

கண்டி இந்திய துணை தூதரக அலுவல்களை இலகுபடுத்த நடவடிக்கை.

Thursday, December 23, 2010
கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பணிகளை இலகுவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோபியோ’ (வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினருக் கான அமைப்பு) பிரதிநிதிகள் குழு இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவுடன் கொழும்பில் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்டி துணைத் தூதரகத்திற்கு அலுவல்களுக்காகச் செல்லும் பொது மக்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளாகுவதாக ‘கோபியோ’ பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து துணைத் தூதரகத்தின் செயல்பாடுகளை வினைதிறன்மிக்கதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ‘தினகரனு’க்குத் தெரிவித்தார். வீசா பெற்றுக்கொள்ள முடியாமலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களிலும் நெருக்கடிகளை எதிர்நோக்குவோரின் பிரச்சினையை ‘கோபியோ’ அமைப்பின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம் காணப்பட்டு ள்ளது.

வீசாவைப் பெறுவதற்கான நியாயமாக காரணம் உள்ளதாக ‘கோபியோ’ பரிந்துரைக்கும் பட்சத்தில் அதனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Followers

Blog Archive